Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-185.jpg?resize=750%2C375&ssl

உக்ரேன் போர் நிறுத்தம்; அமெரிக்காவின் முன்மொழிவுக்கு புட்டின் ஆதரவு!

உக்ரேனில் போர் நிறுத்தம் செய்வதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை மொஸ்கோ கொள்கையளவில் ஆதரிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வியாழக்கிழமை (13) தெரிவித்தார்.

இருந்த போதிலும், மோதலை விரைவாக நிறைவுக்குக் கொண்டுவருவதற்கான பல விளக்கங்களையும் நிபந்தனைகளையும் அவர் கோரினார்.

2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று, காயடையச் செய்தது.

மேலும், மில்லியன் கணக்கான மக்களை இடம்பெயரச் செய்ததுடன், நகரங்களை இடிபாடுகளாக மாற்றியது மற்றும் மொஸ்கோவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக மிகக் கடுமையான மோதலைத் தூண்டியது.

இந்த நிலையில், அமெரிக்க போர் நிறுத்த திட்டத்திற்கு புட்டினின் பெரிதும் தகுதிவாய்ந்த ஆதரவு, வொஷிங்டனுக்கு நல்லெண்ணத்தை சமிக்ஞை செய்வதற்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் மேலும் பேச்சுவார்த்தைகளுக்கான கதவைத் திறப்பதற்குமான வாய்ப்பாக தோன்றியது.

ஆனால், பல முக்கியமான விவரங்கள் வரிசைப்படுத்தப்பட வேண்டும் என்றும் எந்தவொரு ஒப்பந்தமும் மோதலின் மூல காரணங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் புட்டின் வியாழக்கிழமை கூறினார்.

மேலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் நன்றி தெரிவித்தார்.

புட்டினின் கருத்துக்களுக்குப் பின்னர் வெள்ளை மாளிகையில் பேசிய ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப், ரஷ்யத் தலைவரைச் சந்திப்பதில் “ஆசப்படுகிறேன்” என்றும், மொஸ்கோ “சரியானதைச் செய்யும்” என்றும், முன்மொழியப்பட்ட 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளும் என்றும் நம்புவதாகவும் கூறினார்.

சவுதி அரேபியாவில் இந்த வாரம் தொடக்கம் அமெரிக்கா-உக்ரேன் இடையே நடந்த ஒரு நாள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அமெரிக்கா முன்மொழிந்த ரஷ்யாவுடன் உடனடியான 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக கெய்வ் தெரிவித்துள்ளது.

ஜெட்டாவில் செவ்வாயன்று (11) நடந்த பேச்சுவார்த்தை, ஓவல் அலுவலகத்தில் ஜெலென்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான முன்னதாக நடந்த சந்திப்பின் அசாதாரண மோதலுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பாகும்.

பேச்சுவார்த்தையின் பின்னர், வொஷிங்டன் நிறுத்தி வைத்திருந்த உக்ரேனுக்கான உளவுத்துறை பகிர்வு மற்றும் பாதுகாப்பு உதவியை உடனடியாக மீண்டும் தொடங்குவதாக அறிவித்தது.

2022 பெப்ரவரியில் ரஷ்யா, உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது.

இப்போது உக்ரேன் பிரதேசத்தில் சுமார் 20% ஐக் கட்டுப்படுத்துகிறது.

ரஷ்ய இராணுவத்திற்காகப் போராடும் 95,000 க்கும் மேற்பட்டோர் போரில் இறந்துள்ளனர்.

உக்ரேன் தனது உயிரிழப்பு புள்ளிவிவரங்களை கடைசியாக 2024 டிசம்பரில் புதுப்பித்தது, அப்போது ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் 43,000 உக்ரேனிய இறப்புகளை ஒப்புக்கொண்டார்.

மேற்கத்திய ஆய்வாளர்கள் இந்த எண்ணிக்கையை குறைத்து மதிப்பிடுவதாக நம்புகின்றனர்.

ரஷ்யா, தனது 2022 படையெடுப்பை உக்ரேனை “நாசியை அழிக்க” மற்றும் நேட்டோவின் விரிவாக்கத்தை நிறுத்த வடிவமைக்கப்பட்ட “சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்று வர்ணித்துள்ளது.

மெஸ்கோவும், வொஷிங்டனும் இப்போது இந்த மோதலை மூன்றாம் உலகப் போராக விரிவடையக்கூடிய ஒரு கொடிய மறைமுகப் போராக சித்தரிக்கின்றன.

https://athavannews.com/2025/1425112

  • கருத்துக்கள உறவுகள்

‘போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம், ஆனால்…. : புதின் விதித்த நிபந்தனைகள்….

March 14, 2025

“30 நாட்கள் போர் நிறுத்தம் என்ற அமெரிக்காவின் பரிந்துரையை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், அதற்கு முன்னர் சில பிரச்சினைகளைக் களைய வேண்டும்.” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சவுதி அரேபியாவில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அந்நாடு முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக் கொண்டது. ரஷ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் உக்ரைன் சம்மதம் தெரிவித்திருந்தது. இந்த போர்நிறுத்த ஒப்பந்தம், நிலம், கடல் மற்றும் வான்வழித்தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்நிலையில் இந்த போர் நிறுத்தத்துக்கு ரஷ்ய அதிபர் புதினும் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார் புதின். அப்போது அவர், “ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்தத்துக்காக முயற்சிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் அதிபர் லூலா டிசில்வா ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் உன்னத இலக்கு வெறுப்பை, உயிரிழப்புகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக உள்ளது. சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க அழுத்தத்தின் பேரில் உக்ரைன் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் தெரிவித்தது போல் வெளித்தோற்றத்துக்கு புலப்படலாம். ஆனால் உண்மையில், உக்ரைன் தான் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர அமெரிக்க தரப்பிடம் வலியுறுத்தியிருக்க வேண்டும். கள நிலவரம் அவர்கள் அப்படிக் கோருவதற்கான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது.

30 நாட்கள் போர் நிறுத்தம் என்ற அமெரிக்காவின் பரிந்துரையை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், அதற்கு முன்னர் சில பிரச்சினைகளைக் களைய வேண்டும். இது குறித்து அமெரிக்காவும், எங்கள் கூட்டாளிகளுடன் நாங்கள் விவாதிக்க வேண்டும். விரைவில் இவ்விவகாரம் பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் ஒரு தொலைபேசி உரையாடலை எதிர்நோக்கியுள்ளேன். இந்தப் போர் நிறுத்தம் என்பது நீண்ட கால அமைதிக்கு வித்திடுவதாக இருக்க வேண்டும்.

உக்ரைன் படைகள் ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ளனர். இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் அமலாவதற்கு முன்னதாக, அங்கிருக்கும் படையினர் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும். அதேபோல் அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்கான வலுவான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். மொத்தத்தில் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தமானது பிரச்சினையின் வேரை நாடி சிக்கலைத் தீர்ப்பதாக அமைய வேண்டும்.” என்றார்.

https://www.ilakku.org/we-agree-to-a-ceasefire-but-putins-conditions/

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேன் போர் நிறுத்தத்துக்கு புதின் முன்வைத்துள்ள நிபந்தனைகள் என்ன?

புதின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜேம்ஸ் லாண்டேல், கேப்ரியலா போமராய்

  • பதவி, பிபிசி

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

யுக்ரேனில் போர்நிறுத்தம் குறித்த யோசனையுடன் உடன்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

எனினும், அவர் பல கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளதால் போர்நிறுத்தத்தின் தன்மை குறித்து "கேள்விகள்" எழுந்துள்ளன.

அமெரிக்காவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு, யுக்ரேன் இந்த வாரத் தொடக்கத்தில் ஒப்புக் கொண்ட 30 நாட்கள் போர்நிறுத்தத் திட்டம் பற்றி பேசும்போது, புதின் இந்த கருத்தை கூறியுள்ளார்.

போர் நிறுத்த திட்டம் குறித்து, புதின் கூறிய கருத்தை "சூழ்ச்சி" என்று விவரித்த யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு மற்றும் வங்கித் துறைகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

வியாழன் அன்று மாஸ்கோவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய புதின், "இந்த யோசனை சரியானது. நாங்கள் அதை ஆதரிக்கிறோம், ஆனால் நாங்கள் விவாதிக்க வேண்டிய கேள்விகள் உள்ளன "என்று போர்நிறுத்தம் குறித்து கூறினார்.

போர்நிறுத்தம், "நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும். இந்த நெருக்கடியின் மூல காரணங்களை அகற்றவும் வேண்டும்" என புதின் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "எங்களது அமெரிக்க நண்பர்கள் மற்றும் கூட்டணிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்றும் "ஒருவேளை நான் டொனால்ட் டிரம்புடன் பேசலாம்''' என்றும் கூறினார்

மேலும், "யுக்ரேன் தரப்பு 30 நாள் போர் நிறுத்தத்தை எட்டுவது நல்லது. நாங்கள் அதற்கு ஆதரவாக இருக்கிறோம், ஆனால் அதில் சில நுணுக்கங்கள் உள்ளன" என்றும் புதின் தெரிவித்தார்.

இரு தரப்பும் கடுமையாக முரண்படும் விஷயங்களில் ஒன்று, மேற்கு ரஷ்யாவில் உள்ள குர்ஸ்க் பிராந்தியம்.

கடந்த ஆண்டு யுக்ரேன் அங்கு ராணுவ ஊடுருவலைத் தொடங்கி சில பகுதிகளை கைப்பற்றியதாக அவர் குறிப்பிட்டார்.

குர்ஸ்க் பிராந்தியத்தின் முழு கட்டுப்பாட்டையும் ரஷ்யா மீட்டுள்ளதாகவும், அப்பகுதியில் உள்ள யுக்ரைன் படைகள் "தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்" அவர் தெரிவித்துள்ளார்.

"அவர்கள் வெளியேற முயற்சிக்கிறார்கள், ஆனால் கட்டுப்பாடு எங்களிடம் உள்ளது. அவர்களின் ஆயுதங்கள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளன."

"குர்ஸ்கில் யுக்ரேனியர்களுக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. ஒன்று சரணடைவது அல்லது இறப்பது" என்றார்.

அதனைத் தொடர்ந்து, "அந்த 30 நாட்கள் எவ்வாறு பயன்படுத்தப்படும்? யுக்ரேன் மீண்டும் படைகளை திரட்டி ஆயுதங்களைச் சேகரிப்பதற்கா? படைக்குப் பயிற்சி அளிக்கவா? அல்லது இவற்றில் எதுவும் இல்லையா? அப்படி என்றால், இதை எவ்வாறு கண்காணிப்பது?" என புதின் கேள்வி எழுப்பினார்.

''சண்டை நிறுத்த உத்தரவை விடுப்பது யார்? 2,000 கிலோமீட்டருக்கு மேலான எல்லையில் யார் போர்நிறுத்த உடன்பாட்டை மீறியது என முடிவெடுப்பது யார்? இந்த கேள்விகளுக்கெல்லாம் இரு தரப்பும் மிகுந்த கவனத்துடன் திட்டமிடுதல் அவசியம். இதை கண்காணிக்கப்போவது யார்?"என்கிறார் புதின்.

புதின் "நேரடியாக இல்லையென்று சொல்லவில்லை, ஆனால் உண்மையில் அவர் மறுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்"என யுக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி தனது வீடியோ உரையில் கூறினார்.

"நிச்சயமாக, புதின் இந்த போரைத் தொடர விரும்புவதையும், யுக்ரேனியர்களைக் கொல்ல விரும்புவதையும் அதிபர் டிரம்புக்கு நேரடியாகச் சொல்ல பயப்படுகிறார்" என்றார் ஸெலன்ஸ்கி.

மேலும், ''புதின் பல முன்நிபந்தனைகளை விதித்ததால் எதுவுமே நடக்காது" என்றும் கூறினார்

புதினின் கருத்துகளுக்கும் ஸெலன்ஸ்கியின் பதிலுக்கும் பிறகு, இரு தரப்புகளின் நிலைப்பாடுகளுக்கு இடையில் இப்போது தெளிவான பிளவு இருப்பது தெரிகிறது.

டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரஷ்யா "சரியானதைச் செய்யும்" என்று தான் நம்புவதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

யுக்ரேன் இரண்டு கட்ட செயல்முறையை விரும்புகிறது. முதலில் விரைவான போர்நிறுத்தம், அதன் பிறகு நீண்டகால அமைதி உடன்படிக்கையைப் பற்றிய பேச்சுவார்த்தைகள்.

ரஷ்யா இரண்டு செயல்முறைகளாக பிரிக்க முடியாது என்றும், அனைத்து பிரச்னைகளும் ஒரே உடன்படிக்கையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறது.

யுக்ரேன், ரஷ்யாவை அமைதியை விரும்பாத நாடாக சித்தரித்து, அதன் மீது அழுத்தத்தை அதிகரிக்கலாம் என கருதுகிறது.

மறுபுறம், நேட்டோ விரிவாக்கம் மற்றும் யுக்ரேனின் இறையாண்மை குறித்த கேள்விகளை எழுப்ப இப்போது ஒரு வாய்ப்பு இருப்பதாக ரஷ்யா நம்புகிறது.

ஆனால் இது டொனால்ட் டிரம்புக்கு ஒரு சிக்கலை அளிக்கிறது. சில நாட்களில் போரை முடிவுக்கு கொண்டு வர, விரைவான முடிவை விரும்புவதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தற்போது, புதின் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்பவில்லை என்பதை காட்டுகிறது.

புதினின் கருத்துகளைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், ரஷ்யத் தலைவரைச் சந்திக்க விரும்புவதாகவும், ரஷ்யா "சரியானதைச் செய்யும்" என்றும், 30 நாள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளும் என்று நம்புவதாகவும் கூறினார்.

மேலும் "ரஷ்யாவிடம் இருந்து போர் நிறுத்தம் வருவதை நாங்கள் விரும்புகிறோம்," என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட் உடனான சந்திப்பின்போது, யுக்ரேனுடன் ஏற்கனவே குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றி விவாதித்ததாக செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார் டிரம்ப்.

"யுக்ரேனுடன் நிலம் குறித்து நாங்கள் விவாதித்து வருகிறோம். எந்த பகுதிகள் பாதுகாக்கப்படும், எவை இழக்கப்படும் என்பது குறித்தும் , இறுதி ஒப்பந்தத்தின் மற்ற அம்சங்கள் குறித்தும் விவாதித்து வருகிறோம்" என டிரம்ப் கூறினார்.

"இறுதி ஒப்பந்தத்தின் பல விவரங்கள் உண்மையில் விவாதிக்கப்பட்டுள்ளன."

மேலும், நேட்டோ ராணுவக் கூட்டணியில் யுக்ரேன் இணைவது குறித்து, "அதற்கான பதில் என்ன என்பது அனைவருக்கும் தெரியும்" என்றார் டிரம்ப்.

அமெரிக்க பரிவர்த்தனை முறைகளுக்கான அணுகலை டிரம்ப் நிர்வாகம் கட்டுப்படுத்தியதை தொடர்ந்து ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கு விதிக்கப்பட்ட புதிய தடைகள் அமல்படுத்தப்பட்டன. இதனால், பிற நாடுகள் ரஷ்ய எண்ணெயை வாங்குவது கடினமாகியுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவின் தூதர் ஸ்டீவ் விட்காஃப்டை ரஷ்ய அதிபர் புதின் மாஸ்கோவில் சந்தித்து பேசினார்.

யுக்ரேனில் போர்நிறுத்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புதன்கிழமை, ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்திற்குப் புதின் பயணம் செய்ததாகக் கூறும் வீடியோவை ரஷ்யா வெளியிட்டது. அந்த வீடியோவில், ரஷ்ய அதிபர் புதின் ராணுவ உடை அணிந்திருந்தார்.

2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் யுக்ரேன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது, இப்போது யுக்ரேனிய பகுதிகளில் சுமார் 20 சதவீதம் அதன் கட்டுப்பாட்டில் உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c05mvjz7r48o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

483523279_1060444952787143_5637446447739

  • கருத்துக்கள உறவுகள்

இரஸ்சிய ஏங்கில்ஸ் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக இணையத்தில் உலாவருகின்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், குறித்த விமான நிலையத்தில் ஏற்கனவே உள்ள அதே அளவு ஆயுதங்களுடன் மேலதிகமாக அதே அளவு ஆயுதம் வந்து சேர்ந்த போதே இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இரஸ்சியா ஒரு பெரும் தாக்குதலை திட்டமிட்டு வருவதாக அமெரிக்க உளவுத்துறையினூடாக குறித்த உளவுத்தகவல் உக்கிரேனுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இரஸ்சிய உக்கிரேன் போர்க்களம் உக்கிரேன் தரப்பில் சடுதியாக ஏற்படுகின்ற பின்னடைவை தடுத்து நிறுத்தி உக்கிரேன் தரப்பிற்கு ஒரு குறைந்த பட்ச நியாயமான தீர்வினை எட்ட மேற்கின் உதவிகள் அவசியமாக உள்ளது, ஆனால் ஆளணியில் பின்னடைவை சந்தித்துள்ள உக்கிரேன் தரப்பிற்கு தேவைப்படும் வீரர்களை திரட்டுவதில் உக்கிரேன் தரப்பு தன்னால் இயன்றளவில் வன்முறைகளை கூட பயன்படுத்துவதாக கடந்த காலத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு தற்போது தீவிரமடைந்துள்ளதாக கூறுகிறார்கள்.

ஆளணி பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் உக்கிரேனால் கோடைகால தாக்குதலை எதிர்கொள்ளமுடியாது என கூறப்படுகிறது, அதற்குள்ளாக ஒரு தீர்வு எட்டப்பட்டாக வேண்டிய கட்டாயத்தில் உலகுள்ளது.

இந்த போரின் முடிவில் போரிடும் இரு தரப்பிற்கும் இலாபம் இருக்க போவதில்லை, ஆனால் இழப்புகள் அதிகமாக இருக்கும் என்பதே உறுதி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.