Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

15 MAR, 2025 | 05:06 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர்  லண்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட  பயணத்துக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு 160 இலட்சம் ரூபாவை செலவழித்துள்ளது. 

அதற்காக அவர்கள் இவர்கள் வெட்கப்பட வேண்டும். வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் இந்த நிதி குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு சபைக்கு உண்மையை அறிவிக்க வேண்டுமென  சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க வெளிவிவகாரத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15)  நடைபெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான  வரவு, செலவுத் திட்டத்தின்   வெளிவிவகாரம்,  வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்  மற்றும்  சுற்றுலாத்துறை அபிவிருத்தி  அமைச்சு மீதான விவாதத்தில்  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

வெளிவிவகார அமைச்சினால் வழங்கப்படும் சேவைகளுக்காக நாட்டு மக்களின் வரிப்பணம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஏனைய அமைச்சுக்களில் காணப்படும் ஊழல் மோசடி மற்றும்  நிதி வீண்விரயம்   வெளிவிவகாரத்துறை அமைச்சினையும் விட்டுவைக்கவில்லை.  

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்  22 மற்றும் 23 ஆம் திகதிகளில்  லண்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயம் தொடர்பிலான ஆவணங்களை   சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.

இந்த தனிப்பட்ட விஜயத்துக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு செலவழித்துள்ளது. இந்த தனிப்பட்ட விஜயத்தில் ரணில் விக்கிரமசிங்கவின்  பாரியார்,  சேனாநாயக்க திசாநாயக்க, சந்திரா  பெரேரா உட்பட 10 பேர்  கலந்துக்  கொண்டுள்ளனர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது மனைவியின் தனிப்பட்ட லண்டன்  பயணத்துக்கு  வெளிவிவகாரத்துறை அமைச்சு 160 இலட்சம் ரூபாவை  செலவழித்துள்ளது. 

ஆரம்பத்தில் தனிப்பட்ட  பயணம் என்று  குறிப்பிடப்பட்ட நிலையில்  பயணத்தின் பின்னர்  அரசமுறை  பயணம்  என்று  ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த பயணத்துக்கான செலவுகள் தொடர்பான ஆவணங்களை    சபைக்கு சமர்ப்பிக்கிறேன். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் வங்குரோத்து நிலைக்கு மத்தியில் மக்களின் நிதியை இவ்வாறு வீண்விரயமாக்கியுள்ளார்கள். உண்மையில் வெட்கப்பட வேண்டும். 

வெளிவிவகாரத்துறை அமைச்சு இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு சபைக்கு உண்மையை அறிவிக்க வேண்டும் என்றார்.

வெளிவிவகார அமைச்சினால் வழங்கப்படும் சேவைகளுக்காக நாட்டு மக்களின் வரிப்பணம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. 

ஏனைய அமைச்சுக்களில் காணப்படும் ஊழல் மோசடி மற்றும்  நிதி வீண்விரயம்   வெளிவிவகாரத்துறை அமைச்சினையும் விட்டுவைக்கவில்லை.  

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்  22 மற்றும் 23 ஆம் திகதிகளில்  லன்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயம் தொடர்பிலான ஆவணங்களை   சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.

இந்த தனிப்பட்ட விஜயத்துக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு செலவழித்துள்ளது. இந்த தனிப்பட்ட விஜயத்தில் ரணில் விக்கிரமசிங்கவின்  பாரியார்,  சேனாநாயக்க திசாநாயக்க, சந்ரா  பெரேரா உட்பட 10 பேர்  கலந்துக்  கொண்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது மனைவியின் தனிப்பட்ட லன்டன்  பயணத்துக்கு  வெளிவிவகாரத்துறை அமைச்சு 160 இலட்சம் ரூபாவை  செலவழித்துள்ளது.

ஆரம்பத்தில் தனிப்பட்ட  பயணம் என்று  குறிப்பிடப்பட்ட நிலையில்  பயணத்தின் பின்னர்  அரசமுறை  பயணம்  என்று  ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த பயணத்துக்கான செலவுகள் தொடர்பான ஆவணங்களை    சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் வங்குரோத்து நிலைக்கு மத்தியில் மக்களின் நிதியை இவ்வாறு வீண்விரயமாக்கியுள்ளார்கள். 

உண்மையில் வெட்கப்பட வேண்டும். வெளிவிவகாரத்துறை அமைச்சு இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு சபைக்கு உண்மையை அறிவிக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/209308

  • கருத்துக்கள உறவுகள்

அணிலாருக்கு சனி உச்சம்போல...

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, alvayan said:

அணிலாருக்கு சனி உச்சம்போல...

அணிலார்…. நசுக்கிடாமல் பல அலுவல் பார்த்திருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அணிலார்…. நசுக்கிடாமல் பல அலுவல் பார்த்திருக்கின்றார்.

அவரிட நடையிலை தெரியவில்லையே ஆள் எப்படியான அமசடக்கி என்று

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, alvayan said:

அவரிட நடையிலை தெரியவில்லையே ஆள் எப்படியான அமசடக்கி என்று

ஓம்…. அணிலின் நடை வித்தியாசமானது. 😂

பொதுவாக… வண்ணத்துப் பூச்சிகளின் நடை அப்படித்தான் இருக்கும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

ஓம்…. அணிலின் நடை வித்தியாசமானது. 😂

பொதுவாக… வண்ணத்துப் பூச்சிகளின் நடை அப்படித்தான் இருக்கும். 🤣

நல்ல காலம் ரணிலுக்கு வயசு போய்விட்டது இல்லையென்றால் சிறியர் பார்வையினால்...🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும் செல்லவில்லை ; ரணில் தரப்பு விளக்கம்

18 MAR, 2025 | 09:40 PM

image

(எம்.மனோசித்ரா)

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணங்களையும்  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  மேற்கொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியார் பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவும் 2023 ஆம் ஆண்டில், அரச செலவில் லண்டன் சென்றதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும்.

2023ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று  சந்தர்ப்பங்களில் லண்டன் சென்றுள்ளார். மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்குப்பற்றுவதற்காக 2023 மே மாதம் 9ஆம் திகதி லண்டனுக்கான முதலாவது பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

பாரிஸ் மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் சர்வதேச ஜனநாயக சங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான அமர்வில் கலந்துகொள்வதற்கான இரண்டாவதாக லண்டன் சென்றிருந்தார்.

அதனையடுத்து  ஹவானாவில் நகரத்தில் இடம்பெற்ற  G77 உச்சி மாநாட்டில் கலந்து கொண்தன் பின்னர், நியூயோர்க்கிற்கும் பின்னர் லண்டனுக்கும் பயணித்திருந்தார். 

மைத்ரி விக்ரமசிங்கவுக்கு பிரித்தானியாவின் வல்வர்ஹெப்டன் பல்கலைக்கழகத்தினால் பேராசிரியர் பதவி வழங்கும் நிகழ்வு அந்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்றது.

அந்த நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், நியூயோர்க்கிற்குச் சென்று வரும் வழியில் அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

இந்த பயணங்களின்போது அவர் பல அரச தலைவர்களை சந்தித்திருந்ததுடன், பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க சர்வதேச மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்கள் மற்றும் மாநாடுகளிலும் பங்கேற்றிருந்தார்.

https://www.virakesari.lk/article/209586

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.