Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது, மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற நமது அனைத்து மக்களினது விடுதலையுடனும், ஒன்றிப்பிணைந்துள்ளது - சுவஸ்திகா அருளிங்கம்

Published By: RAJEEBAN 22 MAR, 2025 | 01:06 PM

image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது, மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற நமது அனைத்து மக்களினது விடுதலையுடனும், ஒன்றிப்பிணைந்துள்ளது எனவே அதனை நாங்கள் வேறாக பார்க்க முடியாது என சட்டத்தரணியும் சமூக அரசியல் செயற்பாட்டாளருமா சுவஸ்திகா அருளிங்கம் தெரிவித்தார்.

485696064_1045606317614032_2173890744744

கொழும்பில் அமெரிக்க தூதரகத்தின் முன்பாக சுதந்திர பலஸ்தீன இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

485309098_1045606374280693_1249961024455

யுத்த நிறுத்த உடன்பாட்டினை மீறி இஸ்ரேல் மீண்டும் தனது இனப்படுகொலையை ஆரம்பித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இஸ்ரேலின் வன்முறையையும் காசாவிற்கு எதிரான கூட்டு தண்டனையை நிறுத்தக்கோரியும், இனவெறி மற்றும் இனச்சுத்திகரிப்பு ஆகியவற்றிற்கு அமெரிக்கா நிதி வழங்குவது மற்றும் அதனுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளதை அம்பலப்படுத்தும் நோக்கத்துடனும் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுவஸ்திகா அருளிங்கம் மேலும் தெரிவித்ததாவது.

485282970_1045606537614010_3209325024757

பலஸ்தீனிய தேசத்திற்கும் மக்களிற்கும் ஆதரவாகவும் நாங்கள் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.

அதற்கு காரணம், போர் நிறுத்த உடன்படிக்கையொன்று ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் இந்த பயங்கரவாத இஸ்ரேலிய அரசு, பலஸ்தீனிய மக்கள் மீதும் நாட்டின் மீதும் இன்னமும் வன்முறையையும், இன ஒழிப்பையும் நடத்திக்கொண்டிருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரியும்.

எனவே அதனை கண்டிப்பதற்கும் மேலும் மேலும் பலஸ்தீனிய மக்கள் மீது வன்முறையை செலுத்தவேண்டாம் எனவும் போரை நிறுத்தவேண்டும் எனவும், பாலஸ்தீன மக்களிற்கு உரித்தான நிலங்களை விடுவிக்குமாறும் கோரி நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம்.

486180373_1045606660947331_4430281596448

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது, மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற நமது அனைத்து மக்களினது விடுதலையுடனும், ஒன்றிப்பிணைந்துள்ளது எனவே அதனை நாங்கள் வேறாக பார்க்க முடியாது.

அதனால்தான் பாலஸ்தீன நாட்டு மக்களிற்கு எதிராக நடத்தப்படுகின்ற, இனக்குற்றங்களிற்கு எதிராகவும், போர்குற்றங்களிற்கு எதிராகவும், கைதுகளிற்கு எதிராகவும், அவர்களுடைய காணிகளை கைப்பற்றுவதற்கு எதிராகவும் நாங்கள் இன்று இலங்கையிலிருந்து எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்.

485382656_10235782078670807_623342251506

இஸ்ரேலிற்கும் அந்த நாட்டிற்கு ஆயுதங்களை வழங்கிக்கொண்டிருக்கின்ற, முற்றுமுழுதாக உதவிகளை செய்துகொண்டிருக்கின்ற அமெரிக்காவிற்கு எதிராகவும், இந்த ஆர்ப்பாட்டத்தை நடாத்திக்கொண்டிருக்கின்றோம் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/209918

  • கருத்துக்கள உறவுகள்

3 hours ago, ஏராளன் said:

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது, மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற நமது அனைத்து மக்களினது விடுதலையுடனும், ஒன்றிப்பிணைந்துள்ளது - சுவஸ்திகா அருளிங்கம்

யுத்த நிறுத்த உடன்பாட்டினை மீறி இஸ்ரேல் மீண்டும் தனது இனப்படுகொலையை ஆரம்பித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இஸ்ரேலின் வன்முறையையும் காசாவிற்கு எதிரான கூட்டு தண்டனையை நிறுத்தக்கோரியும், இனவெறி மற்றும் இனச்சுத்திகரிப்பு ஆகியவற்றிற்கு அமெரிக்கா நிதி வழங்குவது மற்றும் அதனுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளதை அம்பலப்படுத்தும் நோக்கத்துடனும் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுவஸ்திகா அருளிங்கம் மேலும் தெரிவித்ததாவது.

உதிலை நிக்கிறா ஆட்கள்.. நமது இனம் அழிக்கப்பட்டபோது..இந்தக் பதாகைகள் பிடித்திருந்தால் ...இலங்கை இப்ப சிங்கப்பூர்..நம்ம ஆளுக்கும்(??) ..சேர்த்துத்தான் சொல்லியிருக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

அவர்களுடைய காணிகளை கைப்பற்றுவதற்கு எதிராகவும் நாங்கள் இன்று இலங்கையிலிருந்து எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்.

எந்த நாட்டிலிருந்து எந்த நாட்டின் நிலத்தை காப்பாற்ற குரல் கொடுக்கினம் பாருங்கோ ...தமிழர் பகுதியில் உள்ள‌ விகாரை நிலத்தை காப்பாற்ற ஆட்கள் இல்லை ஆனால் அமெரிக்கா தூதரகத்துக்கு முன்பு போராட்டம் ...அவ்வளவு ஜனநாயகம் சிறிலங்காவில் இருக்கிறதாம் என படம் காட்டியினம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

உதிலை நிக்கிறா ஆட்கள்.. நமது இனம் அழிக்கப்பட்டபோது..இந்தக் பதாகைகள் பிடித்திருந்தால் ...இலங்கை இப்ப சிங்கப்பூர்..நம்ம ஆளுக்கும்(??) ..சேர்த்துத்தான் சொல்லியிருக்கிறன்

அமெரிக்கன் பயங்கரவாத தடைச்சட்டம் போட்டு கொழும்பில் வந்து கைது செய்ய மாட்டான் என்ற துணிவில் தூதரகத்திற்கு முன் நின்று போராடுகின்றனர் .சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக சிங்களவர்கள் தான் குரல் கொடுக்க முடியும்...சிங்களவர்கள் சித்திரைவதைசெய்யப்பட்டு கொல்லப்படால் மட்டுமே சிறிலங்காவில் விசாரனை செய்யப்படும்...ஏனைய இனங்கள் அமைதி காக்க வேணும் ...அமெரிக்காவுக்கு எதிராக,பிரித்தானியாவுக்கு எதிராக ஏனைய இனங்கள் குரல் கொடுக்கலாம்...

"அமெரிக்கா இம்பிரியலிசம் " எங்கயோ கேட்ட குரல் ....

சிறுபான்மையினர் அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுக்க ,பெரும்பான்மயினர் ட்ரம்ப்பிடம் கடன் கேட்டு நாட்டை அபிவிருத்தி செய்வினம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.