Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் - ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு!

%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+-+%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21+

தெற்கு காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

காசா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடங்கி நடத்தி வருகிறது. 

ஜனவரி மாதம் ஆரம்பமான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. 

இஸ்ரேல் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாகப் பாலஸ்தீன சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் அலுவலகத்தில் உறுப்பினராக இருக்கும் பர்தவீலுடன் சேர்ந்து அவரது மனைவியும் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதே செய்தியை ஹமாஸ் ஆதரவு ஊடகங்களும் வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

https://www.hirunews.lk/tamil/400821/இஸ்ரேலின்-வான்வழி-தாக்குதல்-ஹமாஸ்-அரசியல்-தலைவர்-உயிரிழப்பு

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸின் மூத்த அரசியல் தலைவர்

ஹமாஸ், காஸா , இஸ்ரேல்,  போர் நிறுத்தம், சலா அல்பர்தாவீல் , ரஃபா,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

காஸாவின் கான் யூனுஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் மூத்த அரசியல் தலைவர் சலா அல்-பர்தாவீல் கொல்லப்பட்டதாக, ஹமாஸ் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸின் உயர்நிலை அரசியல் தலைவரான பர்தாவீல் மற்றும் அவரது மனைவி என இருவருமே கொல்லப்பட்டதாக உள்ளூர் நபர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய அதிகாரிகள் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

கான் யூனிஸ் மற்றும் தெற்கு ரஃபாவில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

காஸாவில் மீண்டும் தீவிர தாக்குதல்களை இந்த வாரத்தில் இஸ்ரேல் தொடங்கியது. சுமார் 2 மாதங்களாக நடைமுறையில் இருந்த முதல் கட்ட போர் நிறுத்தம் இதனால் முடிவுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்கும் அமெரிக்காவின் முன்மொழிவை ஹமாஸ் ஏற்க மறுத்ததாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.

மற்றொருபுறம் கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட உண்மையான உடன்படிக்கையை இஸ்ரேல் மீறிவிட்டதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த உடன்படிக்கையின்படி, இஸ்ரேலிய படைகளை திரும்ப பெறுவது, இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலத்தீன சிறைக்கைதிகளை படிப்படியாக விடுவிப்பது, போரை முழுவதுமாக நிறுத்தி காஸாவை மறு கட்டமைப்பு செய்வது போன்றவை திட்டமிடப்பட்டிருந்தது.

இந்திய மருந்துகள் மீது டிரம்ப் வரி விதிப்பது அமெரிக்க மக்களுக்கே சுமையாக மாறும் அபாயம்

ஐரோப்பாவின் பரபரப்பான ஹீத்ரோ விமான நிலையத்தை ஒரே ஒரு தீ விபத்து முடக்கியது எப்படி?

அகதிகள் முகாமில் பிறந்தவர்

ஹமாஸ், காஸா , இஸ்ரேல்,  போர் நிறுத்தம், சலா அல்பர்தாவீல் , ரஃபா,

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஞாயிற்றுக்கிழமையன்று ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலின் ஏவுகணை தாக்கிய போது பர்தாவீல் மற்றும் அவரது மனைவி தங்களின் கூடாரத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

8 குழந்தைகளின் தந்தையான பர்தாவீல் ஹமாஸின் பிரபலமான அரசியல் ஆளுமையாக உள்ளார்.

கான் யூனிஸின் அகதிகள் முகாமில் பிறந்த இவர், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாருக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார். ஹமாஸ் அமைப்பை நிறுவியவர்களை அடுத்து இரண்டாம் தலைமுறை தலைவர்களில் ஒருவராகவும் இவர் கருதப்பட்டார்.

ஹமாஸின் அரசியல் பிரிவுக்கு 2021-ஆம் ஆண்டு இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்

போரில் சின்வார் மற்றும் ராவி முஷ்டாஹா கொல்லப்பட்ட பின்னர், பர்தாவீல் ஹமாஸின் உயர்நிலை அரசியல் தலைவராக கருதப்பட்டார்

ஹமாஸ், காஸா , இஸ்ரேல்,  போர் நிறுத்தம், சலா அல்பர்தாவீல் , ரஃபா,

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த செவ்வாய்க்கிழமை போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர் தெற்கு காஸாவில் தொடர்ச்சியான தீவிர குண்டு வீச்சுக்கள் நிகழ்ந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நடந்த வான்வழித் தாக்குதலில்தான் பர்தாவீல் கொல்லப்பட்டுள்ளார்.

பிபிசியிடம் பேசிய பாலத்தீனிய செம்பிறை சங்க செய்தி தொடர்பாளர் ஒருவர், ரஃபாவில் குண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அணுக முயன்ற அந்த அமைப்பின் பல ஆம்புலன்ஸ்களை இஸ்ரேலிய படைகள் சுற்றி வளைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

துணை மருத்துவப் பணியாளர்களில் பலர் காயமடைந்துள்ளதாகவும், காஸாவினுள் சிக்கியிருக்கும் மருத்துவக்குழு ஒன்றுடன் தொடர்பு பல மணி நேரம் துண்டிக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேற்கு ரஃபாவில் உள்ள டெல் அல் சுல்தான் பகுதியில் கடுமையான ஷெல் தாக்குதல் மற்றும் தரைவழித் தாக்குதல் நடத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் வெளியேறுமாறு இஸ்ரேலிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

தரைவழியாகவும் தாக்குதல்

ஹமாஸ், காஸா , இஸ்ரேல்,  போர் நிறுத்தம், சலா அல்பர்தாவீல் , ரஃபா,

பட மூலாதாரம்,GETTY IMAGES

எகிப்து எல்லையிலுள்ள ஃபிலாடெல்ஃபி பாதையில் நிலைத் நிறுத்தப்பட்டுள்ள இஸ்ரேலிய படைகளால் கவசவாகன (Tank) தாக்குதல்கள், மற்றும் ஹெலிகாப்டர் தாக்குதலும் நடத்தப்படுகிறது.

அப்பகுதியின் அருகே வசிக்கும் அலா அல்-தின் சபா பிபிசியிடம் குரல் பதிவு தகவல் மூலம் அளித்த தகவலின்படி,"மழை பொழிவது போன்று தோட்டாக்கள் பொழிகின்றன. ஒரு பெண்ணுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவரை ஆம்புலன்ஸ் அணுக முடியவில்லை" என்றார்.

"துணை மருத்துவப் பணியாளர் ஒருவர் தரையில் விழுந்து கத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்" என்றும் அவர் கூறினார்.

2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் 1200 பேரைக் கொன்றனர், 251 பேரை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக தகர்க்கும் முனைப்புடன் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதுவரையிலான தாக்குதல்களில் 49,500 பாலத்தீனியர்கள் காஸாவில் கொல்லப்பட்டதாக ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கும் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c337k1p04d6o

  • கருத்துக்கள உறவுகள்+

இஸ்ரேலியர்களுக்கு வாழ்த்துக்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தலைவர்களை கொல்வது கண்டிக்கத்தக்கது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஸ்ரேல் தார்மீக நாடும் அல்ல. மனித உரிமைகளை மதித்த,மதிக்கும் நாடும் அல்ல.

பாவப்பட்ட பலஸ்தீனம். ஆயுத போராட்டமும் ,சமாதானமும் ,அரசியல் பேச்சுவார்தைகளும் என ஏமாற்றப்பட்ட இனம். இன்று கேட்பாரற்று,நாதியற்று அழிவுகளுடன் சிக்கி தவிக்கின்றது.

இஸ்ரேல் செய்வதெல்லாம் சரியென வாதிடுபவர்கள்.......சிங்களம் தமிழர்களுக்கு செய்வதும் சரியென வாதிட அதிக நேரம் செல்லாது.

கமாஸ் இயக்க தலைவர்களை தேடித்தேடி அழிக்கும் இஸ்ரேலுக்கு தமது மக்களை எங்கு பயணக்கைதிகளாக வைத்திருக்கின்றார்கள் என தெரியாமல் இருப்பது அபூர்வமாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நன்னிச் சோழன் said:

இஸ்ரேலியர்களுக்கு வாழ்த்துக்கள்....

2 hours ago, குமாரசாமி said:

கமாஸ் இயக்க தலைவர்களை தேடித்தேடி அழிக்கும் இஸ்ரேலுக்கு தமது மக்களை எங்கு பயணக்கைதிகளாக வைத்திருக்கின்றார்கள் என தெரியாமல் இருப்பது அபூர்வமாக இருக்கின்றது.

எந்த தொழில் நுட்பத்தாலும் (இஸ்ரேலால்) பணய கைதிகளை கண்டு பிடிக்க முடிமாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இஸ்ரேலின் பொட்டுக்கேடும் இது தான்.

அயன் டோம் அடுத்த தோல்வி.

எத்தனை ஊடகங்களை தடை செய்தாலும் உண்மைகள் வெளிவந்த வண்ணமே உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வனும் வான்வழி தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். அவர் தனது சகாக்களுடன் உறக்க நிலையில் இருந்தபோது பங்கர் பஸ்டர் மூலம் தாக்குதலுக்கு உள்ளாகியதாக விக்கி கலைக்களஞ்சியத்தில் பதியப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்+
17 minutes ago, நியாயம் said:

விடுதலை புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வனும் வான்வழி தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். அவர் தனது சகாக்களுடன் உறக்க நிலையில் இருந்தபோது பங்கர் பஸ்டர் மூலம் தாக்குதலுக்கு உள்ளாகியதாக விக்கி கலைக்களஞ்சியத்தில் பதியப்பட்டுள்ளது.

உறக்க நிலையிலா? ... கதாசிரியர் யாரென்று போய்ப் பார்த்தால் நம்மள் டி.பி.எஸ் ஜெயராஜ் 🤣🤣...

சிங்களவன் 5 ரூபாய்க்கு எழுதச் சொன்னால் 500 ரூபாய்க்கு எழுதுவான்... இப்படி எழுதுவதற்கும் ஒரு கற்பனைத் திறம் வேண்டும்!!

ஆனால், அதையும் எமது வெளிநாடுவாழ் புலம்பெயர் தமிழர்கள் தூக்கி தூக்கி வாசிப்பார்கள்... அதைத்தான் உண்மை என்றும் தடவிக்கொடுப்பார்கள்... (உ+ம்: நமது யாழ் களமே அதற்கு சாட்சி... கேட்டால் எல்லாப் பக்கத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பர். இவர்களே, இவர் தரவழிக்கு பாலூத்தி வளர்போர் ஆவர்.)

55 minutes ago, nunavilan said:

எந்த தொழில் நுட்பத்தாலும் (இஸ்ரேலால்) பணய கைதிகளை கண்டு பிடிக்க முடிமாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இஸ்ரேலின் பொட்டுக்கேடும் இது தான்.

அயன் டோம் அடுத்த தோல்வி.

எத்தனை ஊடகங்களை தடை செய்தாலும் உண்மைகள் வெளிவந்த வண்ணமே உள்ளன.

நான் நினைக்கிறன் ஐயனே, பணையக் கைதிகளை மீட்காமல் சாட்டாக்க வைத்து பாலஸ்தீனத்தை மண்ணோடு மண்ணாக்கப் போகிறார்கள்... வேறொன்றும் இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நன்னிச் சோழன் said:

நான் நினைக்கிறன் ஐயனே, பணையக் கைதிகளை மீட்காமல் சாட்டாக்க வைத்து பாலஸ்தீனத்தை மண்ணோடு மண்ணாக்கப் போகிறார்கள்... வேறொன்றும் இல்லை...

இது இயலாக்கடைசியில் சொல்வது. இஸ்ரேலின் உகண்டா பணய கைதிகள் மீட்பு உலக புகழ் பெற்றது. கமாசிடம் ஆப்பிட்டால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். ஒரு இனத்தை அழித்த வரலாறை பலஸ்தீனியர்கள் வைக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் தொடர்ந்து போராடுகிரார்கள். அவர்களுக்கு உதவிகளும் உண்டு. உண்மையில் அழியும் இனம் நாம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/3/2025 at 20:18, நன்னிச் சோழன் said:

உறக்க நிலையிலா? ... கதாசிரியர் யாரென்று போய்ப் பார்த்தால் நம்மள் டி.பி.எஸ் ஜெயராஜ் 🤣🤣...

சிங்களவன் 5 ரூபாய்க்கு எழுதச் சொன்னால் 500 ரூபாய்க்கு எழுதுவான்... இப்படி எழுதுவதற்கும் ஒரு கற்பனைத் திறம் வேண்டும்!!

ஆனால், அதையும் எமது வெளிநாடுவாழ் புலம்பெயர் தமிழர்கள் தூக்கி தூக்கி வாசிப்பார்கள்... அதைத்தான் உண்மை என்றும் தடவிக்கொடுப்பார்கள்... (உ+ம்: நமது யாழ் களமே அதற்கு சாட்சி... கேட்டால் எல்லாப் பக்கத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பர். இவர்களே, இவர் தரவழிக்கு பாலூத்தி வளர்போர் ஆவர்.)

நான் நினைக்கிறன் ஐயனே, பணையக் கைதிகளை மீட்காமல் சாட்டாக்க வைத்து பாலஸ்தீனத்தை மண்ணோடு மண்ணாக்கப் போகிறார்கள்... வேறொன்றும் இல்லை...

சு.ப. தமிழ்செல்வன் தலைவரை சந்தித்துவிட்டு அதிகாலை இருப்பிடம் திரும்பினார். அந்நேர பொழுதுகளில் இரவு, பகலாக உளவு விமானங்கள் 24 மணிநேரமும் பறந்து தகவல் சேமித்தன.

வழமையில் போர் விமானங்கள் புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் நுழையும்போது போராளிகளால் எச்சரிக்கை தகவல் அனுப்பபடும்.

விமானத்தின் பிரசன்னம் அறிந்தவுடன் சு.ப. தமிழ்செல்வன் முகாமில் உள்ள பதுங்குகுழிக்குள் அங்குள்ளவர்கள் செல்கின்றார்கள். பதுங்குகுழி வாயிலில் குண்டு வீழ்ந்து வெடிக்கின்றது.

மிகவும் மெதுவாகவும், தாழ்வாகவும் பறந்து வந்த கிபீர் விமானம் ஒன்று இலக்கை தாக்கிவிட்டு வெளியேறுகின்றது.

சம்பவம் நடந்ததும் அந்தப்பகுதிக்கு எவரும் செல்லமுடியாதபடி தெருப்பகுதி தடை செய்யப்படுகின்றது. அவ்விடத்துக்கு உடனடியாகவே புலனாய்வு பொறுப்பாளர் பொட்டம்மான் வந்ததாக கூறப்படுகின்றது.

இது இந்த சம்பவம் நடைபெற்றபோது குறிப்பிட்ட விமானம் குண்டு வீசுவதை நேரில் கண்டவர் எனக்கு கூறிய தகவல் ஆகும்.

மெய்ப்பொருள் காண்பது அவரவரை பொறுத்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.