Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த மத்திய மாகாண சபை 100 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

கண்டி மாவட்ட செயலகத்தில் கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமானது விவசாய நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்திலுள்ள குரங்குகளை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் திட்டத்தின்படி, ரந்தெனிகல நீர்த்தேக்கப் பிரதேசத்தை அண்மித்த தீவுப் பகுதியில் மேற்படி குரங்குகள் கொண்டு போய் விடப்படவுள்ளன.

இதற்காக குரங்குகளைப் பிரித்தல், அவற்றை கூடுகளில் அடைத்து எடுத்துச் செல்லல் மற்றும் அவை விடப்படும் இடங்களில் தேவையான மின்சார வேலிகள் போன்றவற்றை அமைத்தல் முதலான பல்வேறு பணிகளுக்காக இந் நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குரங்குகளை ரந்தெனிகல நீர்த்தேக்க தீவில் விட 100 இலட்சம் ரூபா ஒதுக்கீடு - கே.டி.லால்காந்த | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

குரங்குகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த மத்திய மாகாண சபை 100 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

குரங்குகளுக்கு தனிநாடு(தீவு,மாகாணம்,மாவட்டம் எப்படியும் எடுத்துகொள்ளலாம்) எல்லாம் கொடுக்கிறீயல் ...அதுவும் ஆட்சிக்கு வந்து 4 மாதத்தில் பல லட்சம் ரூபா செலவில் அவர்களுக்கு எல்லைகள் போட்டு மின்சார வேலி பாதுகாப்பு ,வீடுகள் எல்லாம் அமைத்து கொடுக்கிறீயல் ....

குரங்கு இனம் அழிந்து போக கூடாது என்பதற்காக இவ்வளவு புண்ணியமான,பஞ்சசில கொள்கைகளை நடைமுறை படுத்துகின்றீர்கள் ..ஏன் ஏனைய தேசிய இனங்களை அழிக்கின்றீர்கள்..🥲

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

குரங்குகளுக்கு தனிநாடு(தீவு,மாகாணம்,மாவட்டம் எப்படியும் எடுத்துகொள்ளலாம்) எல்லாம் கொடுக்கிறீயல் ...அதுவும் ஆட்சிக்கு வந்து 4 மாதத்தில் பல லட்சம் ரூபா செலவில் அவர்களுக்கு எல்லைகள் போட்டு மின்சார வேலி பாதுகாப்பு ,வீடுகள் எல்லாம் அமைத்து கொடுக்கிறீயல் ....

அங்கும் பெரும்பான்மையின குரங்குகள் ஆட்சிஅமைக்கும்...மாகாணசபை எலக்கசன் வைத்தால் ..முசுலிம் என்பிபி..ஒருசபையையும்...தமிழ் என்பி பி ஒருசபையையும் கைப்பற்றும்...ஊராட்ட்சி சபை தேர்தலும் நடக்கலாம் ..அதில் சுமந்திரனின் ஆட்கள் சிங்களத்துக்கு ..ஊர் நமகென்றூ.. கேட்பினமோ..

குரங்குக்கு எல்லை போட்டுக்குடுக்கிற இனம் என்பதை வரலாறும் பதிவு செய்யும்...என்ன் அவர்களுக்கு மாற்றுடுப்பு..எடுத்துக் கொடுக்கவில்லையோ...அல்லது பின்னர் ஒரு கோடி ஒதுக்குவினமோ..

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, alvayan said:

.என்ன் அவர்களுக்கு மாற்றுடுப்பு..எடுத்துக் கொடுக்கவில்லையோ...அல்லது பின்னர் ஒரு கோடி ஒதுக்குவினமோ..

நிர்வாணம் அடைந்த விட்டதாக சொல்லுவினம் உடுப்பு போடதேவையில்லை ....ஆஞ்சநேயர் தங்களுடை வம்சம் என குரல் கொடுப்பினம்

சுமத்திரன் வாதட போனால் இவர்களின் நீதிமன்றில் எப்படி வாதிடுவார் என நினைத்து பார்த்தேன் சிரிப்பு வருகிறது

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

சுமத்திரன் வாதட போனால் இவர்களின் நீதிமன்றில் எப்படி வாதிடுவார் என நினைத்து பார்த்தேன் சிரிப்பு வருகிறது

அவரின் தற்போதைய பொலிசி இதுதானே...இதை வைத்தே அடித்து நொறுக்கிடுவார்

நாடு எவரோடும் இருந்திட்டு போகட்டும்.

தமிழர் தேசம் என்றும்

தமிழரசோடு இருக்கட்டும்!

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, alvayan said:

நாடு எவரோடும் இருந்திட்டு போகட்டும்.

தமிழர் தேசம் என்றும்

தமிழரசோடு இருக்கட்டும்!

அதற்கும் இந்த தமிழ் இடதுசாரிகள் ஆப்பு வைத்து விடுவார்களோ ? என்ற பயம் வருகிறது

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் குரங்குகளை வேறு ஒரு தீவில் விடுவது என்று போக்குக் காட்டி, சீனாவுக்கு ஏற்றுமதி செய்கிறார்களோ… யார் கண்டது.

மாட்டு இறைச்சி உண்டால் ஆளையே கொல்கின்ற இந்தியாவில் இருந்துதான்… உலகிலேயே பெரும்பாலான மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்கின்றார்கள்.

தென் கிழக்கு ஆசிய நாட்டவர்களின் சொல்லுக்கும்… செயலுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதில்லை.

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.