Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி வீதி திறப்பு – காங்கேசன்துறை வரை சிற்றூர்திகள் சேவையில்

adminApril 27, 2025

palali-road.jpg?fit=1170%2C659&ssl=1

எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து 764 வழித்தட சிற்றூர்திகள் (மினிபஸ்கள்) யாழ்ப்பாணத்திலிருந்து பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 769 வழித்தட சிற்றூர்திகளும்,  யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வீதியூடாக காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுபடும்.  கடந்த 10ஆம் திகதியன்று பலாலி வீதி கட்டுப்பாடுகளுடன் முழுமையாக திறக்கப்பட்ட நிலையில் குறித்த இரு வழித்தட சிற்றூர்திகளும் சேவையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/214749/

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி - காங்கேசன்துறை வரையிலான அரச பஸ் சேவை ஆரம்பம்!

Published By: DIGITAL DESK 2

29 APR, 2025 | 01:07 PM

image

35 வருடங்களின் பின்னராக பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையிலான அரச பஸ் சேவை செவ்வாய்க்கிழமை (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடந்த 1990ஆம் ஆண்டு கால பகுதி முதல் பலாலி உயர்பாதுகாப்பு வலயம் காணப்படுவதனால், யாழ்ப்பாணம் - பலாலி வீதி வசாவிளான் சந்தியுடன் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த 10ஆம் திகதி முதல் நிபந்தனைகளுடன் குறித்த வீதி முழுமையாக திறந்து விடப்பட்டுள்ளது.

அதனை அடுத்து, இன்றைய தினம்(29) முதல் குறித்த வீதியூடாக காங்கேசன்துறை வரையில் அரச பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நேர அட்டவணை தொடர்பாக பின்னர் அறியத்தருவதாக பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜா, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ஜீவக புரசிங்க, மற்றும் போக்குவரத்து சபை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேவேளை குறித்த வீதியூடாக ஒரு சில தினங்களில் தனியார் சிற்றூர்திகளும் தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_1296.jpeg

IMG_1294.jpeg

https://www.virakesari.lk/article/213242

  • கருத்துக்கள உறவுகள்

35 வருடங்களுக்கு பின்னர், பேருந்து சேவை

35 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை -  பலாலி இடையிலான அரச பேருந்து சேவை செவ்வாய்க்கிழமை (29) இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட குறித்த பகுதியூடாக பொதுமக்கள் நடமாட முடியாத சூழல் காணப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரை மாத்திரமே பயணம் செய்து வந்தனர்.

கடந்த 10ஆம் திகதி நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட   பலாலி வீதி வரை இன்றைய தினம் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

பேருந்து சேவை நேர அட்டவணை தொடர்பாக பின்னர் அறியத்தருவதாக பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜா, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ஜீவக புரசிங்க, மற்றும் போக்குவரத்து சபை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  நிதர்ஷன் வினோத்

image_e1897013f8.jpg

image_8acaeebc03.jpg

https://www.tamilmirror.lk/%E2%80%8B%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/35-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B5/386-356419

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.