Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 2

29 APR, 2025 | 04:27 PM

image

2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் நடைமுறைப்படுத்தலின் முன்னேற்றம் எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஒதுக்கப்பட்ட நிதியை ஒதுக்கிய திட்டங்களுக்கு உரிய காலப்பகுதிக்குள் செலவு செய்து முடிக்கவேண்டியது பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.

திட்டங்களை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தி முடிக்காமல் அதற்கு சாட்டுப்போக்குச் சொல்லவேண்டாம் எனவும் நா.வேதநாயகன் மேலும் தெரிவித்தார். 

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட மீளாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (29) ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், 

நடப்பு ஆண்டின் மூன்றிலொரு காலம் நிறைவடைந்துள்ள நிலையில் திட்டங்களின் முன்னேற்றம் எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லாமல் உள்ளது. எமது மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகச் செலவு செய்வதுடன் அடுத்த ஆண்டு அதிகளவு நிதியைக் கோரவேண்டும். அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களது தலைமைத்துவத்தில் தான் இந்தத் திட்டங்களின் நடைமுறையாக்கத்தின் வெற்றி தங்கியிருக்கின்றது.

கடந்த மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவித்ததைப்போல திட்டங்களின் நடைமுறையாக்கங்களை செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் நேரடியாகச் சென்று பார்வையிடுவதுடன், இரு வாரங்களுக்கு ஒரு தடவை மீளாய்வுக் கூட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும்.

திட்டங்களுக்கான ஒப்பந்தகாரர்களைத் தெரிவு செய்யும்போது அவதானம் தேவை. குறைந்த விலையில் கேள்விகூறலைச் சமர்பித்து ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் அதை நடைமுறைப்படுத்தாமல் விட்டுவிடுவார்கள். 

தவறிழைக்கும் ஒப்பந்தகாரர்களை கறுப்புப் பட்டியலில் உள்வாங்க வேண்டும் என்பதை பல தடவைகள் சொல்லியுள்ளேன். அதை நடைமுறைப்படுத்த வேண்டியது பிரதிப் பிரதம செயலாளர் - பொறியியல் சேவைகளின் பொறுப்பு. அதைச் செய்வதன் ஊடாகவே எதிர்காலத்திலாவது பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும், என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - நிதி எஸ்.குகதாசன், நிதி முன்னேற்றம் தொடர்பில் ஒவ்வொரு அமைச்சுக்கள், திணைக்களங்கள் ரீதியாக தெரியப்படுத்தினார். 

கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரிய அவர், கட்டுநிதி விடுவிப்புத் தொடர்பில் தாமதங்கள் ஏதுமில்லை எனக் குறிப்பிட்டார். 

அதேபோல மாகாணத்துக்கு எதிர்பார்க்கப்பட்ட வரி வருவாய் உரியவாறு காலாண்டுக்குரியது கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள நிலையான வைப்பு நிதியை அந்தப் பிரதேசங்களின் சிறிய அபிவிருத்தி வேலைகளுக்குப் பயன்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்திய ஆளுநர், வருமானம் குறைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாகாணத்தின் நிதியை வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கலாம் என்றும் குறிப்பிட்டார். நிரல் அமைச்சுக்கள் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்தால் நிதியை விடுவிக்கத் தயாராகவுள்ள நிலையில் தேவையான திட்;டங்களைச் சமர்பித்து நிதியைப்பெற்று நடைமுறைப்படுத்துமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.

இதன் பின்னர் திட்டங்களின் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - திட்டமிடல் எம்.கிருபாசுதன் ஒவ்வொரு அமைச்சுக்கள், திணைக்களங்கள் ரீதியாகத் தெளிவுபடுத்தினார்.

2025 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண சபையின் நிதிக்கூற்று அறிக்கை புத்தகம் இந்தக் கூட்டத்தில் வைத்து வடக்கு மாகாண ஆளுநரிடம், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளரால் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை இந்த முன்னேற்ற மீளாய்வுக்கூட்டத்தில், வடக்கு மாகாணத்தில் தற்போது முருங்கை மற்றும் மாம்பழச் செய்கையில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்கம் தொடர்பிலும் ஆராயப்பட்டது. 

அது தொடர்பில் ஆராய்ச்சிகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்த ஆளுநர், புதிய இனங்களை அறிமுகப்படுத்தும்போது பாரம்பரிய இனங்களை அழிவடையாமலும் பார்த்துக்கொள்வது விவசாயத் திணைக்களத்தின் பொறுப்பு எனக் குறிப்பிட்டார். 

IMG-20250429-WA0061.jpg

IMG-20250429-WA0054.jpg

IMG-20250429-WA0053.jpg

 IMG-20250429-WA0057.jpgIMG-20250429-WA0058.jpgIMG-20250429-WA0056.jpgIMG-20250429-WA0055.jpg

https://www.virakesari.lk/article/213270

  • கருத்துக்கள உறவுகள்

இவரும் அரசியல்வாதிகள் மாதிரி ....அரசாங்கா அதிகாரிகள் மீது குற்றத்தை வைக்கின்றார்...

ஜெ.வி.பி அரசியல்வாதிகள் எத்ற்கு எடுத்தாலும் முன்னாள் ஆட்சியாளர்களை குற்றம் சாட்டுவது போல..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.