Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தந்தை செல்வநாயகத்தின் உண்மையான கொள்கைகளுக்கு தமிழ் அரசுக் கட்சி நேர்மையாக பயணிக்க முன்வந்தால் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

02 MAY, 2025 | 05:10 PM

image

தமிழ் அரசுக் கட்சி தவறான கொள்கையைக் கைவிட்டு அந்தக் கட்சியை நிறுவிய தந்தை செல்வநாயகத்தின் கொள்கையின்படி நேர்மையாக பயணிக்க முன்வந்தால்  நாம் நிச்சயமாக அவர்களுடன் பேச்சு நடத்தி பொது இணக்கப்பாட்டுக்கு வந்து இணைந்து பயணிப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

அல்வாய் மாலுசந்தி மைக்கேல் விளையாட்டுக்கழக மைதானத்தில் தமிழ்த் தேசிய பேரவை வியாழக்கிழமை (01) இரவு நடத்திய மே தினக் கூட்டத்தில் உரையாற்றியபோதே  இதனை தெரிவித்தார். 

இக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடர்ந்து உரையாற்றுகையில், 

இந்த உள்ளூராட்சி சபைகள் தேர்தலில் தமிழ் மக்கள் மிகத் தெளிவாக - ஆணித்தரமாக தங்கள் வாக்குகளை செலுத்தாது விட்டால் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கைவிட்டுவிட்டார்கள் என்று சந்தேகிக்கப்படுவது உறுதியானதாகி விடும்.

 ஒரு முறை மாறிப் போடலாம். அதை நியாயப்படுத்தலாம். அடுத்ததடுத்த தேர்தல்களிலும் இவ்வாறு நடந்தால் அதனை நியாயப்படுத்த முடியாது. அந்த வகையில் இது சாதாரண உள்ளூராட்சி தேர்தல் அல்ல. 

முகங்களுக்கு வாக்களிக்கும் இந்தத் தேர்தல்தான் தமிழ் மக்கள் தங்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் தேர்தலாக மாறியுள்ளது. 

இது கஷ்ட காலமாகும். எனவே, எமது மக்கள் ஆழமாக சிந்தித்து எமது வாக்குகளை செலுத்த வேண்டும். தமிழ்த் தேசத்தைப் பொறுத்தவரையில் இன்று இரு முக்கியமான விடயங்கள் உள்ளன. 

ஒன்று இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூறல் மற்றது இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணுதலாகும். இந்த விடயங்களில், ஜே. வி. பி. என்ற தேசிய மக்கள் சக்திக்கும் இதற்கு முன்னர் ஆட்சி செய்த இனவாத கட்சிகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை.

நாம் தமிழ் அரசுக் கட்சிக்கு எதிரானவர்கள் அல்லர். 2010இல் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியே வந்தபோது தலைமைத்துவம்தான் பிரச்னை என்று கூறினோம். 

தலைமைத்துவத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்பதால்தான் அப்போது, திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் மட்டும் போட்டியிட்டோம்.

 இன்றும் நாம் சொல்கிறோம். தமிழ் அரசுக் கட்சியின் தலைமைத்துவம்தான் இன்றும் பிரச்னை. தலைமைத்துவம் தவறாக நடப்பதால் ஒட்டுமொத்த கட்சியும் தவறான பாதையில் கொண்டு செல்லும் நிலைமைதான் இன்றுள்ளது. 

அந்தக் கட்சிக்குள் இருக்கும் நேர்மையானவர்கள் சரியான முடிவை எடுக்க இந்தத் தேர்தல் ஒரு சந்தர்ப்பமாக இருக்க வேண்டுமானால் கட்சிக்குள் இருக்கும் அவர்கள் விவாதத்தை உருவாக்க வேண்டுமானால் எந்தளவுக்கு தேசிய மக்கள் சக்தியை ஓரங்கட்ட வேண்டுமோ அதேயளவுக்கு தமிழ் அரசுக் கட்சியையும் ஓரங்கட்டவேண்டும்.

அப்படி ஒரு தெளிவான பாடம் கற்பித்தால் மட்டும்தான் தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக்கூடிய நேர்மையான உறுப்பினர்கள் மேலோங்க முடியும். தவறான தலைவர்களை வெளியேற்ற முடியும்.

இது தமிழ் அரசுக் கட்சியை தோற்கடித்து - முற்றுமுழுதாக ஓரங்கட்டும் செயல்பாடு அல்ல. அப்படி செய்ய முடியாது - செய்யவும் கூடாது. 

தமிழ் அரசுக் கட்சி தவறான கொள்கையை கைவிட்டு அந்தக் கட்சியை நிறுவிய தந்தை செல்வநாயகத்தின் கொள்கையின்படி நேர்மையாக பயணிக்க முன்வந்தால் அந்தக் கட்சியின் தவறான தலைமைத்துவத்தை மாற்றி 

திருத்தி சரியான பாதைக்கு அவர்கள் வருவதாக இருந்தால் நாம் நிச்சயமாக அவர்களுடன் பேச்சு நடத்தி பொது இணக்கப்பாட்டுக்கு வந்து இணைந்து பயணிப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/213520

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

02 MAY, 2025 | 05:10 PM

image

தமிழ் அரசுக் கட்சி தவறான கொள்கையைக் கைவிட்டு அந்தக் கட்சியை நிறுவிய தந்தை செல்வநாயகத்தின் கொள்கையின்படி நேர்மையாக பயணிக்க முன்வந்தால்  நாம் நிச்சயமாக அவர்களுடன் பேச்சு நடத்தி பொது இணக்கப்பாட்டுக்கு வந்து இணைந்து பயணிப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

அல்வாய் மாலுசந்தி மைக்கேல் விளையாட்டுக்கழக மைதானத்தில் தமிழ்த் தேசிய பேரவை வியாழக்கிழமை (01) இரவு நடத்திய மே தினக் கூட்டத்தில் உரையாற்றியபோதே  இதனை தெரிவித்தார். 

இக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடர்ந்து உரையாற்றுகையில், 

இந்த உள்ளூராட்சி சபைகள் தேர்தலில் தமிழ் மக்கள் மிகத் தெளிவாக - ஆணித்தரமாக தங்கள் வாக்குகளை செலுத்தாது விட்டால் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கைவிட்டுவிட்டார்கள் என்று சந்தேகிக்கப்படுவது உறுதியானதாகி விடும்.

 ஒரு முறை மாறிப் போடலாம். அதை நியாயப்படுத்தலாம். அடுத்ததடுத்த தேர்தல்களிலும் இவ்வாறு நடந்தால் அதனை நியாயப்படுத்த முடியாது. அந்த வகையில் இது சாதாரண உள்ளூராட்சி தேர்தல் அல்ல. 

முகங்களுக்கு வாக்களிக்கும் இந்தத் தேர்தல்தான் தமிழ் மக்கள் தங்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் தேர்தலாக மாறியுள்ளது. 

இது கஷ்ட காலமாகும். எனவே, எமது மக்கள் ஆழமாக சிந்தித்து எமது வாக்குகளை செலுத்த வேண்டும். தமிழ்த் தேசத்தைப் பொறுத்தவரையில் இன்று இரு முக்கியமான விடயங்கள் உள்ளன. 

ஒன்று இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூறல் மற்றது இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணுதலாகும். இந்த விடயங்களில், ஜே. வி. பி. என்ற தேசிய மக்கள் சக்திக்கும் இதற்கு முன்னர் ஆட்சி செய்த இனவாத கட்சிகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை.

நாம் தமிழ் அரசுக் கட்சிக்கு எதிரானவர்கள் அல்லர். 2010இல் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியே வந்தபோது தலைமைத்துவம்தான் பிரச்னை என்று கூறினோம். 

தலைமைத்துவத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்பதால்தான் அப்போது, திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் மட்டும் போட்டியிட்டோம்.

 இன்றும் நாம் சொல்கிறோம். தமிழ் அரசுக் கட்சியின் தலைமைத்துவம்தான் இன்றும் பிரச்னை. தலைமைத்துவம் தவறாக நடப்பதால் ஒட்டுமொத்த கட்சியும் தவறான பாதையில் கொண்டு செல்லும் நிலைமைதான் இன்றுள்ளது. 

அந்தக் கட்சிக்குள் இருக்கும் நேர்மையானவர்கள் சரியான முடிவை எடுக்க இந்தத் தேர்தல் ஒரு சந்தர்ப்பமாக இருக்க வேண்டுமானால் கட்சிக்குள் இருக்கும் அவர்கள் விவாதத்தை உருவாக்க வேண்டுமானால் எந்தளவுக்கு தேசிய மக்கள் சக்தியை ஓரங்கட்ட வேண்டுமோ அதேயளவுக்கு தமிழ் அரசுக் கட்சியையும் ஓரங்கட்டவேண்டும்.

அப்படி ஒரு தெளிவான பாடம் கற்பித்தால் மட்டும்தான் தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக்கூடிய நேர்மையான உறுப்பினர்கள் மேலோங்க முடியும். தவறான தலைவர்களை வெளியேற்ற முடியும்.

இது தமிழ் அரசுக் கட்சியை தோற்கடித்து - முற்றுமுழுதாக ஓரங்கட்டும் செயல்பாடு அல்ல. அப்படி செய்ய முடியாது - செய்யவும் கூடாது. 

தமிழ் அரசுக் கட்சி தவறான கொள்கையை கைவிட்டு அந்தக் கட்சியை நிறுவிய தந்தை செல்வநாயகத்தின் கொள்கையின்படி நேர்மையாக பயணிக்க முன்வந்தால் அந்தக் கட்சியின் தவறான தலைமைத்துவத்தை மாற்றி 

திருத்தி சரியான பாதைக்கு அவர்கள் வருவதாக இருந்தால் நாம் நிச்சயமாக அவர்களுடன் பேச்சு நடத்தி பொது இணக்கப்பாட்டுக்கு வந்து இணைந்து பயணிப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/213520

இந்த கொள்கைகளை சுமந்திரன் எங்கை ஒளித்து வைத்திருக்கிறாரோ தெரியாது...☹️

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமாரை சக தமிழ் தரப்போடு பேச்சு வார்த்தை மேசைக்குக் கொண்டுவரவே ஐ.நா சபை தலையிட வேண்டும் போல இருக்கிறது! இந்த இலட்சணத்தில், இவையெல்லாம் சிங்களத் தலைமையோடு பேசி தமிழர்களுக்கு தீர்வு...ஆகாசக் கோட்டை தான்😂!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

ஒரு முறை மாறிப் போடலாம். அதை நியாயப்படுத்தலாம். அடுத்ததடுத்த தேர்தல்களிலும் இவ்வாறு நடந்தால் அதனை நியாயப்படுத்த முடியாது.

நம்பி வாக்களித்த மக்களை ஒருமுறை ஏமாற்றலாம், எழுபத்தாறு வருடங்களாக ஏமாற்றி அவர்கள்மேல் சவாரி செய்தால் மக்கள்தான் என்ன செய்வார்கள்? தங்கள் நிலங்களை பறிகொடுத்து, உறவுகளை இழந்து, இனி இழப்பதற்கு ஒன்றுமேயில்லை எனும் இயலாமையில் இருக்கும் மக்களை குறைகூறுவதில் பயனில்லை. இந்த நிலையை மக்களுக்கு உருவாக்கியவர்களே தமிழ் அரசியல்வதிகளே! உங்களை திருத்துங்கள். ஆனாலும் காலம் கடந்துவிட்டது போல் தோன்றுகிறது. நிற்க, சுமந்திரன், கட்சியை தனது சொந்த அரசியலென நினைத்து சக உறுப்பினர்களுக்கு குடைச்சல் கொடுத்து, அவமானப்படுத்தி வெளியேற்றியபின், அவர்களுக்கு பதவி கொடுக்கவில்லை, அதனால் கட்சியை விட்டு வெளியேறி விட்டார்கள் என்று குற்றம் சுமத்தும் இவர், பதவி இல்லாவிட்டால் இவர் கட்சியில் இருப்பாரா? தானாகவே பதவிகளை உருவாக்கி கொள்கை, தர்மம் இல்லாமல் குந்திக்கொண்டு இருக்கிறார். ஆகவே இவர் சொல்லும் குற்றச்சாட்டு போலியானவை என நிரூபிக்கப்படும். தனது வழமையான குற்றச்சாட்டுக்கு இடமில்லை, சிறிதரனை மக்கள் தெரிந்தெடுத்துள்ளார்கள். ஆகவே அவர் பதவி இல்லாததால் விலகினார் என்கிற குற்றச்சாட்டு எடுபடாது. இருந்தும் அத்தனை அவமானங்களையும், குழிபறிப்புகளையும் தாங்கிக்கொண்டு நிற்கும் ஒருவரை, வலுக்கட்டாயமாக கட்சியிலிருந்து விலக்க முயற்சிக்கிறார். இப்போ சொல்லுங்கள் யார் பதவி ஆசை பிடித்தவர்கள் என்பதை? அவர்களாவது மானமுள்ளவர்கள், இந்த கரப்பான் பூச்சியின் குடைச்சல் தாங்காது விலகிச்சென்றார்கள். இவரோ, மற்றவரின் பதவிகளை பறிக்கிறார். இவர் சிறிதரனையும், மற்றவர்களையும் கட்சியிலிருந்து விலக்கினால்; தனக்கும், கட்சிக்கும் சாவுமணி அடித்தவராகிறார். இவரின் சுயநலமான முட்டாள்தனம் கட்சிக்கு நன்மையே பயக்கும். இவரை நம்பி இவருக்கு பின்னால் இழுபடும் தலையாட்டிகளை என்ன சொல்வது? 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து பயணிக்கத் தயார் M. A. Sumanthiran https://www.facebook.com/share/v/15npSu85Hc/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.