Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் உயிருடன் இல்லாவிட்டாலும் ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும் : இதுவே என்னுடைய ஒரே ஆசை - மஹிந்த ராஜபக்ஷ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

18 MAY, 2025 | 02:41 PM

image

நான்  உயிருடன் இல்லாவிட்டாலும்,  ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ்  இறையாண்மை கொண்ட  நாடாக இலங்கை இருக்க வேண்டும் . இதுவே என்னுடைய ஒரே ஆசை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மே 19 ஆம் திகதி போர் வெற்றி நாள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/215060

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

நான்  உயிருடன் இல்லாவிட்டாலும், 

உயிரோடு இல்லாத போது இது ஒரு வினோத ஆசை இவருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

உயிரோடு இல்லாத போது இது ஒரு வினோத ஆசை இவருக்கு. 

அவர் தான் இலங்கையில் வாழும் ஒரேயொரு மனிதன் ஆகையால் அவர் விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இவ‌னின் மூஞ்சையை பார்த்தால் என்னை அறியாம‌ கோவ‌ம் வ‌ந்து விடும்.....................இந்தியான்ட‌ உத‌வி இல்லை என்றால் இவ‌ரின் ஆட்சியும் எப்ப‌வோ க‌வுன்டு இருக்கும்..................அடிக்கு மேல் அடிய‌ எம்ம‌வ‌ர்க‌ள் அடித்து இருந்து நாடு ப‌டு பாதால‌த்தில் போய் இருந்தால் , சிங்க‌ள‌ ம‌க்க‌ளே இவ‌ரை ஆட்சியில் இருந்து வீட்டுக்கு அனுப்பி இருப்பின‌ம்.....................இல‌ங்கை அர‌சிசிய‌லில் ஊழ‌லில் இவ‌னும் இவ‌னின்ட‌ அண்ண‌னும் கொள்ளை அடிச்ச‌ மாதிரி வேறு எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளும் கொள்ளை அடிச்சு இருக்க‌ மாட்டின‌ம்..........................

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சியில் இருந்தபோது அதற்கான முயற்சியில் ஈடுபடவில்லையே ? பெரும்பான்மை இனத்தவரின் வெறுப்பு அரசியலில் நிர்ப்பந்திக்கப்படும் எந்தவொரு இனக்குழுவும் தனிநாடு கேட்டுப் போராடுவது உலக நியதிதானே ! சரி, தனிநாடு இல்லாவிட்டாலும் சுயாட்சி அதிகாரத்தோடு தனிமாநிலத்துக்கான நகர்வினை ஏற்படுத்தித் தமிழினம் தன் அடையாளத்தோடும் உரிமைகளோடும் வாழ வழி செய்திருக்கலாம். அதிகாரத்தை ஒன்றியத்தில் குவித்து மையப்படுத்தும் எதேச்சாதிகாரப் போக்கிற்கு எந்த நாடும் விதிவிலக்கில்லை போலும் - இலங்கை, இந்தியா, பழைய சோவியத் யூனியன் .....................

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஏராளன் said:

நான்  உயிருடன் இல்லாவிட்டாலும்,  ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ்  இறையாண்மை கொண்ட  நாடாக இலங்கை இருக்க வேண்டும் . இதுவே என்னுடைய ஒரே ஆசை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிங்க கொடியின் நிழலில் நாட்டை ஆள்வது முக்கியமல்ல. அனைத்து இனங்களும் தத்தமது பாதுகாப்பை உணரும் ஒரு அரசியல் பொறிமுறையை கொண்ட அரசியலமைப்பை உருவாக்காதது இவரது பாரிய தோல்வியாகும். இதுவே ஶ்ரீலங்கா நாட்டின் படிப்பினை. இப்போதைய ஆட்சியளர்கள் உணர வேண்டிய மிக முக்கிய விடயம். தமிழ் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் வெற்று கோஷங்களை விடுத்து இதை வலியுறுத்தி நடைமுறை சாத்தியமான அரசியலுக்கு வரவேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.