Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான போக்குவரத்திற்காக புதிய ஏர்பஸ் A330-200 wide-body விமானம் நாளைய தினம் இலங்கைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

பிரான்ஸின் தலைநகரிலிருந்து வரும் இந்த விமானம், கொழும்பு மற்றும் கட்டுநாயக்கவில் மீது குறைந்த உயரத்தில் பறக்கும் இதன்போது பாரிய விமானத்தை பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை, சுமார் 1,500 அடி உயரத்தில் கொழும்பு கடற்கரையோரம், துறைமுக நகரத்தின் தெற்கு முனையிலிருந்து மொரட்டுவ வரை பறக்கும்.

புதிய விமானம்

பின்னர் அது கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்து, தரையிறங்குவதற்கு முன்பு விமான நிலையத்திற்கு மேல் குறைந்த உயரத்தில் மீண்டும் பறக்கும்.

பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வரும் பாரிய விமானம் - கொழும்பு மக்களுக்கு கிடைக்கும் விசேட வாய்ப்பு | New Airbus A330 200 Aircraft To Arrive Sri Lanka

இலங்கையை உலகத்துடன் இணைக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் நீண்ட தூர மற்றும் குறுகிய தூர விமானக் குழுவில் சேரும் இந்த விமானத்தின் முதல் வருகையை விமான ஆர்வலர்கள் மற்றும் பார்வையாளர்கள் காண இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamilwin.com/article/new-airbus-a330-200-aircraft-to-arrive-sri-lanka-1748921410

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

பிரான்ஸின் தலைநகரிலிருந்து வரும் இந்த விமானம், கொழும்பு மற்றும் கட்டுநாயக்கவில் மீது குறைந்த உயரத்தில் பறக்கும் இதன்போது பாரிய விமானத்தை பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

காட்டுவாசிகளுக்கு சொல்வது போல இருக்கே?

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஈழப்பிரியன் said:

காட்டுவாசிகளுக்கு சொல்வது போல இருக்கே?

தமிழ்வின்னுக்கு அரசியல் ஆய்வுமுதல் சாதாரண செய்திகள்வரை குசும்பு கூடி ஆடுகிறது.

இவர்கள் இப்போது 'பரபரப்பு,அதிர்ச்சி,வாய்ப்பு' இப்படித் தலைப்புகளைப்போட்டுத் தமது பார்வையாளர்களைக் கூட்டும் தந்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

காட்டுவாசிகளுக்கு சொல்வது போல இருக்கே?

விமானத்தை விட வேகமாக பறக்கும் மக்கள் புதுப் பணியாளர்கள் இப்போ இருக்கிறார்கள் .மேற் கொண்டு எழுதினால் கருத்துக் காணாமல் போயிடும் வேணாம்...🤭

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

03 Jun, 2025 | 01:22 PM

image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய ஏர்பஸ் A330- 200 விமானம் நாளை 4 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது.

பிரான்ஸிலிருந்து வரும் இந்த விமானம், கொழும்பின் கடற்கரையோரப் பகுதியில் 1,500 அடி உயரத்தில் தாழ்வாக பறந்து தரையிறங்கவுள்ளது. 

மொரட்டுவை கடற்கரைப் பகுதியில் இருந்து கொழும்பு போர்ட் சிட்டியின் தெற்கு முனையம் வரை, காலை 8 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் குறுித்த விமானம் தாழ்வாகப் பறக்கும் காட்சிகளை அவதானிக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிட்டியுள்ளது. 

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவையை வலுப்படுத்தும் மற்றும் ஆதரிக்கும் முகமாக புதிய விமானம்  உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாழ்வாகப் பறந்து இலங்கையில் தரையிறங்கவுள்ள புதிய ஏர்பஸ் விமானம் ! | Virakesari.lk

  • இணையவன் changed the title to பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வரும் பாரிய விமானம் - கொழும்பு மக்களுக்கு கிடைக்கும் விசேட வாய்ப்பு
  • கருத்துக்கள உறவுகள்

முன்னூற்றுக்கு மேற்பட்ட பயணிகளையும், பொதிகளையும் ஏற்றிக்கொண்டு 45,000 அடி உயரத்தில் பறக்கக்கூடிய விமானத்தை கடலுக்கு மேலால் 1,500 அடி உயரத்தில் பாணந்துறை தொடக்கம் கட்டுநாயக்கா வரை பறப்பது புத்திசாலித்தனமான ஒரு செயலா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய விமானம் குத்தகை அடிப்படையில் பெறப்பட்டது - அமைச்சர் பிமல் சபையில் விளக்கம்

05 JUN, 2025 | 05:10 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இலங்கை விமான சேவைக்கு புதிதாக கொண்டுவரப்பட்டிருக்கும் எயார்  பஸ் விமானம் குத்தகை அடிப்படையிலானது. 8 வருடங்களில் அதனை மீண்டும் திருப்பிக்கொடுக்க வேண்டுமென போக்குவரத்து, விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில்  எதிர்க்கட்சி உறுப்பினர்  கில்ஸ் நெல்சன் உரையாற்றுகையில், விமான சேவைக்கு அரசாங்கம்  புதிதாக கொண்டுவந்திருக்கும் விமானத்தின் தரம், அதன் வசதி வாய்ப்புக்கள், அது பழைய விமானம் என்றாலும் அதன் மறுசீரமைப்பின் தரம் தொடர்பில் தெரிவிக்க வேண்டும் என கேண்டுக்கொண்டார். அதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் பிரமல் ரத்நாயக்க தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை விமான சேவைக்கு புதிதாக கொண்டுவந்திருக்கும் எயார் பஸ் விமானம், மாதத்துக்கு 1000 டொலர் என்ற அடிப்படையில் குத்தகைக்கே கொண்டுவந்திருக்கிறோம். 8 வருடங்களில்  அதனை மீண்டும் குறித் கம்பனிக்கு  திருப்பிக்கொடுக்க வேண்டும்.

 இந்த விமானம் இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்டது என்பது  உண்மை. புதிய விமானம் கொள்வனவு செய்வதற்கு இப்போதைக்கு எங்களுக்கு முடியாது. புதிய விமானம் கொள்வனவு செய்ய 1.3 மில்லியன் ரூபா செலுத்த  வேண்டும்.

தற்போது நாங்கள் கொண்டுவந்திருக்கும் விமானம்  மிகவும்  நல்ல முறையில் மறுசீரமைத்தே கொண்டுவந்திருக்கிறோம். விமானத்தின் பாகங்கள்,இன்ஜின் மிகவும் முறையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. விமானத்தின் தரம் தொடர்பில்  எந்த பிரச்சினையும் இல்லை.

நாங்கள் இந்த  விமானத்துக்கான குத்தகையை நல்லமுறையில் செலுத்தி,  8 வருடங்களில் மீள ஒப்படைக்க இருகிறோம். எதிர்காலத்தில் மேலும்  விமானங்களை கொண்டுவந்து இந்த சேவையை அபிவிருத்தி செய்யவே திட்டமிட்டிருக்கிறோம். அதனால்  இந்த  விமானம் தொடர்பில் தரம் குறைவாக கதைப்பது நல்லதில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/216691

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் கூறும் கருத்துக்களும் விளக்கங்களும் ஏற்புடையவையாக இருக்கின்றன ......... பறக்கட்டும் பார்க்கலாம் . ........ ! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.