Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 23ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி ஆரம்பிக்கப்பட்ட அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளாக நேற்றைய தினம் பெருந்திரளான மக்களின் வருகையுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த, அணையா விளக்கு போராட்டத்தில் பங்கேற்பதற்காக போராட்ட களத்திற்கு சென்ற, அமைச்சர் சந்திரசேகரன், இரா.சாணக்கியன் மற்றும் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் மக்களால் அடித்து துரத்தப்பட்டனர்.

அத்துடன், செம்மணியில் நேற்று இடம்பெற்ற அணையா விளக்கு போராட்ட இடத்திற்கு வருகைதந்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனையும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து விரட்டியடித்தனர்.

இது தொடர்பில் இளங்குமரன் எம்.பி இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதுடன் செம்மணியில் குழப்பத்தை ஏற்படுத்திய ஒருவரையும் விட்டு வைக்க மாட்டேன் என பகிரங்க எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

https://tamilwin.com/

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரர்கள், இளங்குமரனை மட்டும் துரத்தவில்லை. அரசியல், அரசியல்வாதிகள் வேண்டாம் என்று அனைவரையுமே விரட்டினார்கள். காரணம், அவர்கள் செய்வார்கள் என்று மக்கள் காத்திருந்து களைத்ததினாலேயே வேறு வழியின்றி தாமாக போராட வெளிக்கிட்டனர். அதுவரை வேடிக்கை பார்த்தவர்கள், காணாமல் இருந்தவர்கள், இன்று மனித உரிமையாளர் வருகிறார் என்றவுடன் தம்மை பிரபல்யப்படுத்தி மக்களின் போராட்டத்தை திசை திருப்ப முயல்வது வெட்கக்கேடானது. இதில பழிவாங்கப்போறாராம். நேற்று பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் இவர். முதலில் மக்களுக்கு என்ன விமோசனம் பெற்றுக்கொடுத்தார்? அதை முதலில் செய்யுங்கள், மக்கள் உங்களை அழைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

போராட்டக்காரர்கள், இளங்குமரனை மட்டும் துரத்தவில்லை. அரசியல், அரசியல்வாதிகள் வேண்டாம் என்று அனைவரையுமே விரட்டினார்கள். காரணம், அவர்கள் செய்வார்கள் என்று மக்கள் காத்திருந்து களைத்ததினாலேயே வேறு வழியின்றி தாமாக போராட வெளிக்கிட்டனர். அதுவரை வேடிக்கை பார்த்தவர்கள், காணாமல் இருந்தவர்கள், இன்று மனித உரிமையாளர் வருகிறார் என்றவுடன் தம்மை பிரபல்யப்படுத்தி மக்களின் போராட்டத்தை திசை திருப்ப முயல்வது வெட்கக்கேடானது. இதில பழிவாங்கப்போறாராம். நேற்று பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் இவர். முதலில் மக்களுக்கு என்ன விமோசனம் பெற்றுக்கொடுத்தார்? அதை முதலில் செய்யுங்கள், மக்கள் உங்களை அழைப்பார்கள்.

இவர்கள் கூட்டமாக செல்ல எத்தனையோ பிரச்சினைகள் தமிழ் மக்களிடம் உள்ளது.

இவர்கள்... தமது இருப்பை காட்ட வேண்டும் என்று நினைத்தால்....

தையிட்டி விகாரைக்குப் போய், தமது எதிர்ப்பை பதிவு செய்யச் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி போராட்டத்திற்குள் புகுந்த விசமிகள்

General27 June 2025

செம்மணியில் இடம்பெற்ற போராட்டத்தில் அரசியல் இலாபங்களை பெறுவதற்காகவே சிலர் குழப்பங்களை விளைவித்திருந்ததாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நியாயமானது எனவும் அதனை திட்டமிட்டு குழப்புவதற்காக கிளிநொச்சியிலிருந்து குழுவொன்று செம்மணிக்கு அழைத்துவரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

இவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மிக விரைவில் எடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

https://hirunews.lk/tm/408516/foreigners-who-entered-the-chemmani-struggle#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

கிளிநொச்சியிலிருந்து குழுவொன்று செம்மணிக்கு அழைத்துவரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

இவர் மறைமுகமாக ஸ்ரீதரனை சாடியுள்ளார். குழப்பம் விளைவித்தவர்கள் கள்ளக்காணி பிடித்தவர்கள், வட்டிக்கு கொடுப்பவர்கள் என்று பல குற்றச்சாட்டுக்களை அடுக்கி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றுள்ளார். இவரை மக்களின் போராட்டத்துக்குள் புகுந்து தன்னை பிரபல்யப் படுத்த விட்டிருந்தால் இது ஒன்றும் அவருக்கு தெரிய வந்திருக்காது. இவ்வளவு குற்றமுள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் ஏன் காலத்தை கடத்தினார்? நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்தவர்கள், கொலை கொள்ளை செய்த பிரபலங்களுக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுங்கள், பிறகு உங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுங்கள். மக்கள் எத்தனை ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கிறார்கள், அப்போவெல்லாம் எங்கே போயிருந்தீர்கள் அவர்களுடன் சமூகமளிக்காமல்? தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை பழிவாங்கப்போறாராம். அடுத்த தேர்தலில் இவர் தொடர்ந்து இருப்பாரா என்பதே இவரறியா கேள்வி, பதவி வந்தவுடன் பதவிக்கு மீறிய அதிகாரம் வந்துவிடும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.