Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானின் அலுவலகத்தில் கடும்சோதனை

Editorial   / 2025 ஜூலை 27 , மு.ப. 10:10

image_17660b1531.jpg

பாறுக் ஷிஹான்


யுத்தம் நிலவிய காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து2004 ஆண்டு  பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீ.எம்.வி.பி) அமைப்பு  என  கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் மற்றும்அதன் முக்கியஸ்தராக செயற்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரைசந்திரகாந்தன்  தலைமையில் பலர் செயற்பட்டிருந்தனர்.

இதில்  அம்பாறை மாவட்டத்தில் அக்கால கட்டத்தில்  பொறுப்பாளராக செயற்பட்டஇனிய பாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்   கே. புஷ்ப குமார்  பயன்படுத்திய அலுவலகங்கள் மற்றும் முகாம்கள் இன்றுபயங்கரவாத  புலனாய்வு பிரிவு  மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு  அணியினர்சோதனை மேற்கொண்டிருந்தனர்.

இதனடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஏலவே கைது செய்யப்பட்டுதடுத்து  வைக்கப்பட்டிருந்த   சந்தேக நபர்கள்    வெள்ளை நிற ஆடை அணிந்துஅவ்விடத்திற்கு இரண்டு வெவ்வேறு ஜீப் வண்களில்  அழைத்துவரப்பட்டிருந்தனர்.

 

அந்த நபர்கள்   இனங்காட்டியமைக்கு அமைய கடந்த காலத்தில் தமிழ் மக்கள்விடுதலைப் புலிகளின்  அலுவலகம் மற்றும் பிரதான முகாமாக செயற்பட்டகல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள தாளவெட்டுவான்சந்திக்கு அருகாமையில் உள்ள  பாரிய வீடு   சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்களுடன் நீண்டநேரமாக குறித்த வீட்டில் தரித்து நின்ற  புலனாய்வு பிரிவினர்  சோதனைமேற்கொண்ட  பின்னர் அங்கிருந்து அவர்கள் வெளியேறி சென்றதாக நேரில்கண்டவர்கள் குறிப்பிட்டனர்.

தற்போது குறித்த வீட்டின் முன்பகுதி உணவகம் ஒன்றிற்கு வாடகைஅடிப்படையில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு  கல்முனைவேப்பையடி மத்தியமுகாம் சொறிக்கல்முனை சம்மாந்துறை சேனைக்குடியிருப்புஅக்கரைப்பற்று திருக்கோவில் விநாயக பரம்  காரைதீவு 40 ஆம் கட்டை தம்பட்டைபொத்துவில் கோமாரி காஞ்சிரங்குடா ஊரணி கஞ்சிகுடிச்சாறு என பலமுகாம்களும் அலுவலகங்களும் செயற்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

https://www.tamilmirror.lk/செய்திகள்/பிள்ளையானின்-அலுவலகத்தில்-கடும்சோதனை/175-361798

  • கருத்துக்கள உறவுகள்

today-3.jpeg?resize=750%2C375&ssl=1

பிள்ளையான் குழுவின் அலுவலகமாக செயற்பட்ட பாரிய வீட்டில் சோதனை முன்னெடுப்பு!

அம்பாறை மாவட்டத்தில் யுத்தம் நிலவிய காலங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பொறுப்பாளராக செயற்பட்ட இனிய பாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே. புஷ்பகுமார் பயன்படுத்திய அலுவலகங்கள் மற்றும் முகாம்கள் நேற்று பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அணியிரால் சோதனை மேற்கொண்டிருந்தனர்.

இதனடிப்படையில் நேற்று இரு வேறு ஜீப் வண்டியில் குற்றப் புலனாய்வு பிரிவினரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிந்த சந்தேக நபர்கள் அவ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

குறித்த நபர்கள் இனங்காட்டியதற்கு அமைய கடந்த காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகம் மற்றும் பிரதான முகாமாக செயற்பட்ட கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள தாளவெட்டுவான் சந்திக்கு அருகாமையில் உள்ள பாரிய வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்களுடன் நீண்ட நேரமாக குறித்த வீட்டில் தரித்து நின்ற புலனாய்வு பிரிவினர் சோதனை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து அவர்கள் வெளியேறி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

file-p-1.jpg?resize=600%2C338&ssl=1

file-p-2.jpg?resize=600%2C338&ssl=1

https://athavannews.com/2025/1440773

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி ஆய்வுக்காக வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஜி.பி.ஆர் (Ground Penetrating Radar)என்ற நவீன கருவியை பிள்ளையானின் அலுவலக காணிக்குள்ளும் கொஞ்சம் ஓட்டிபார்த்தால் உண்மை தெரிந்துவிடும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.