Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா இராணுவம் சர்வதேச பயங்கரவாதிகளா ஜநா தலையங்கியில்

Featured Replies

Breaking Newள

கெயிட்டியில் ஜநா அமைதிப்படை சேவையில் ஈடுபட்டிருக்கும் சிறீலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்புணர்வு நடத்தைகளில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு பற்றலியன் சிறீலங்கா படையினர் நாளை திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.

சம்பந்தப்பட்டது

http://www.sfgate.com/cgi-bin/article.cgi?...MNGRLN47IA1.DTL

என்ர அம்போ அரோகரா ??????

ஐ-நா படையிலுள்ள சிறீலங்காப் படையினரின் பாலியல் விவகாரம் - நாளை திருப்பி அனுப்பப்படுகின்றனர்

ஐக்கிய நாடுகள் சபையில் இணைத்துக் கொள்ளப்பட்ட சிறீலங்காப் படையின் முதலாவது அணியினர் ஹெயிட்டியில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சற்று முன்னர் செய்தி வெளியிட்டுள்ள பி.பி.சி உலகசேவை, நாளை சிறீலங்காப் படையினர் தமது நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட இருப்பதாக அறிவித்துள்ளது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

இது விடுதலைப் புலிகளின் சதி :icon_idea:

ஐக்கிய நாடுகள் சபையில் இணைத்துக் கொள்ளப்பட்ட சிறீலங்காப் படையின் முதலாவது அணியினர் ஹெயிட்டியில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சற்று முன்னர் செய்தி வெளியிட்டுள்ள பி.பி.சி உலகசேவை, நாளை சிறீலங்காப் படையினர் அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட இருப்பதாக அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தமது படைகளை இணைப்பதாகப் பெருமையாகக்கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்ட சிறீலங்காப் படையினர், அங்கு பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பான முறைப்பாடு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், விசாரணைகள் இடம்பெற்று சிறீலங்காப் படையினர் புரிந்த பாலியல் துன்புறுத்தல்கள் இன்று நீரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் நாளை நாடு கடத்தப்படுகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் படையிலுள்ளவர்கள் இவ்வாறான ஈனச் செயல்களில் ஈடுபடுவது மிகக்குறைவு என்ற அடிப்படையில் சிறீலங்காப் படையினரின் இந்த பாலியல் துன்புறுத்தல் அனைத்துலகில் சிறீலங்கா படைகள் தொடர்பாக தோலுரித்துக் காட்டியுள்ளது.

பதிவு

அன்று

UN decorates 200 Sri Lankan peacekeepers - Haiti

20070403_06.jpg

http://www.defence.lk/new.asp?fname=20070403_07

இன்று

http://www.iht.com/articles/ap/2007/11/02/...xploitation.php

சிங்களவர் இப்படிதான் தமிழ் மண்ணில் நடக்கிறார்கள் என்பதற்கு இதை விட வேறு ஒரு சாட்சியம் தேவை இல்லை.

உலகம் தான் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது.

Edited by இணையவன்

பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அமைதிப் படையில் இடம்பெற்றிருந்த 950 சிறிலங்காப் படையினரில் 108 பேரை சிறிலங்காவுக்கு ஐ.நா. திருப்பி அனுப்பியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

உலகம் இனியாவது வட கழக்கு பகுதியில் நடக்கும் கொடுமைகளின் உன்மைநிலையை புரிந்து கொள்ளுமா?

ஒரு சில மாதங்களுக்கு முன்னர்; ஐனா அமைதிகாக்கும் படையில் சுய லாபம் கருதி பெருமிதத்தோடு தானும் ஒரு பங்காளியாக இருக்கேன் என்று காட்டுவதற்காக சிறிலங்கா இராணுவத்தை இணைத்துக்கொண்டது சிறிலங்கா அரசாங்கம். தனது இரணுவத்தின் உன்மையான மனனிலை புரியாத மகிந்த அரசாங்கம் பாவம் இன்று வெட்கித் தலை குனிவான ஒரு நிலையை சந்தித்து நிக்கின்றது. எமது மக்களின் எதிரிகள் என்று பாத்தாலும் அந்த 108 இராணுவமு ஏதோ ஒரு வகையில் எமது மக்களுக்கு இளைக்கப்பட்ட அனிதிகளின் ஒரு வடிவத்தை உலகுக்கு எடுத்து சொல்லிவிட்டு இன்று தங்கள் நாடான சிறிலங்காவுக்கு வருகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

ஏனெனில் உலகின் எல்லா அம்சங்களும் நல்ல முறையில் நிறைவேற்ரப்பட வேண்டும் என்று உருவாக்கப்பட்ட ஐனா அமைதிகாக்கும் படையில் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் இணைத்துக்கொள்ளப்பட்ட 950 இராணுவத்தில் 108 இராணுவம் பாலியல் குற்றத்தை ஒர்; இரு மாதங்களின் செய்து இருக்கின்றார்கள் என்றால் எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு எமது ரத்த உறவுகள் எத்தனை எத்தனை ஆயிரம் பேர்; சிங்கள காடையர்களின் பசிக்கு இரையாகிப்போனர்கள் இன்னும் எத்தனை போர் தங்கள் கற்பை இளந்து மனநோயாளியாக உனச்சியற்றுக்கிடற்கின்றார்

உலகத்திலே ஒழுக்கம் மிக்க படை என்றால் அது இலங்கையின் முப்படைகள் தான்.

இது நேற்று முன்தினம் சீனி மோதரை என்ற இடத்தில் இராணுவ கிராமம் ஒன்றைத் திறந்து வைத்து பயங்கரவாத அரசுத் தலைவரின் பேச்சின் ஒரு சிறு துளி

மிகச் சிறந்த நகைச்சுவை. நேற்று கட்டுநாயக்காவில் வந்திறங்கிய 114 படையினரின் ஒழுக்கத்திற்குப் பரிசாகத் தான் திருப்பியனுப்பப்பட்டனர். அப்பாவி தமிழ்ப் பெண்களை வல்லுறவு புரிந்து அவர்களது உடலில் கிரனைட் வைத்த அரகர்களின் ஒழுக்கத்தை என்னவென்று சொல்வது. நாம் கூக்குரலிட்டதை எவரும் செவிமடுக்கவில்லை. ஹெய்டியின் சமாதானப் படை திருப்பியனுப்பியதின் காரணம் இப்போது வெட்ட வெளிச்சம். உலகம் புரிந்து கொண்டிருக்கும்.

இலங்கை படைகளை பாலியல் பயங்கரவாதிகள் எண்ட அடை மொழியையும் சேர்த்து சொல்லலாமோ...??

துர்நடத்தையில் ஈடுபட்டதற்க்காக இலங்கை அமைதி கெடுக்கும் படையை கெயிற்றியிலிருந்து நாடுகடத்தும் பொறுப்புள்ள ஐக்கிய நாடுகள் சபை தமிழர் விடயத்தில் மட்டும் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வது ஏன்?

இலங்கையில் தமிழர் மனித உரிமைகளைக் கண்காணிக்க ஐநாவால் இன்னும் முடியவில்லை.

வெட்டிக் கொல்லப்படுவதற்க்கு முன் கத்தும் ஆட்டுக்குட்டியிடம் போய் "கசாப்புக்கடைக்காரனின் அனுமதி கிடைத்தால்தான் காப்பாற்ற முயற்சிக்கலாம்" என்று குழந்தைத்தனமாக ஐநா பேசுவது ஐநா அமைக்கப்பட்டதன் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.