Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

hrc-welcome-msg.png?resize=513%2C215&ssl

செம்மணி மனித புதைகுழி: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத் மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு தீர்மானித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் குறித்த பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த குழுவினர் செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளுடனும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான நிலையத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1441507

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

செம்மணி மனித புதைகுழி: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு.

ஊடங்களின் உசுப்பேத்தும் செய்தித் தலைப்புகளும், தமிழும் படும்பாடானது 21ஆம் நூற்றாண்டின் கொடுமை. திருந்தவேமாட்டார்கள் போலுள்ளது. ஆதவன் நியூசுக்கு என்ன அதிரடி இருக்குதோ!

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாள படுத்துத் தூங்கி விட்டு இப்போது போகும் இலங்கை மனித குழு அங்கு போவதில் என்ன அதிரடி இருக்கிறது. ஒரு வேளை கதையை மாற்றி சங்கிலியன் காலத்து படுகொலைகள் என்று வரலாற்றை திரித்து எழுதப் போகிறார்களோ? முதலில் மனித உரிமைகள் ஆணைககுழு என்ற ஒன்று இலங்கையில் இருக்கிறதா?இசயத்தித் தலைப்பை பொறுப்புணர்வோடு இடவேண்டும். இந்திய ஊடகங்களின் தாக்கம். இப்போது நம்மவர்களின் டஊடகங்களில் கொஞ்சம் தூக்கலாகவே தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணிக்கு மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளர்கள் விஜயம்

Published By: Digital Desk 2

04 Aug, 2025 | 02:33 PM

image

செம்மணி மனித புதைகுழிகள் அகழ்வு பணிகளை மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளர்கள் நேரில் பார்வையிட்டனர் மற்றும் மனித புதைகுழிகள் தொடர்பிலான  சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதற்கு ஆணைக்குழு தயார் என்று தெரிவித்துள்ளனர்.

மனித உரிமை ஆணைக்குழுவின் கலாநிதி ஜகன் குணத்திலாக, பேராசிரியர் தை. தனராஜ் மற்றும் பேராசியர் பாத்திமா பர்ஷான ஹனீபா ஆகியோர் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் உட்பட குழுவினர் சமீபத்தில் செம்மணி பகுதியில் அகழ்வு பணிகளை ஆய்வு செய்தனர்.

புதைகுழிகளை நேரில் பார்வையிட்டு ஊடகவியலர்களிடம் கருத்து தெரிவித்த ஆணையாளர்கள், அகழ்வு பணிகள் தொடர்பிலும் விசாரணைகள் தொடர்பிலும் தகவல் பெற்றுள்ளோம் என்று கூறினர்.

கிருஷாந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராஜபக்சே செம்மணி புதைகுழிகள் தொடர்பான சாட்சியங்களை வழங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, சிறையில் அவனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மனித உரிமை ஆணைக்குழு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என உறுதி தெரிவித்தனர்.

மேலும், 1996-97 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் விசாரணைகள் குறித்து 2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை மனித உரிமை ஆணைக்குழு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

IMG_6662.jpeg

https://www.virakesari.lk/article/221779

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1.jpg?resize=750%2C375&ssl=1

செம்மணி அகழ்வுப் பணிகளில் திருப்தி உள்ளது!- ஜகன் குணத்திலக.

 ”இதுவரை நடைபெற்ற செம்மணி  மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் திருப்தி உள்ளது” என மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் ஜகன் குணத்திலக தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழிகள், அமைந்துள்ள சித்துபாத்து மயானத்தினை இன்று நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் இன்று செம்மணிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

மேலும் செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருடனும் குறித்த குழுவினர் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளுடனும் மற்றும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான நிலையத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகள் இன்று இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் இது குறித்து  மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் ஜகன் குணத்திலக  கருத்துத் தெரிவிக்கையில்  ” செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டோம்.  அகழ்வு பணிகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டுள்ளோம்.  இன்று நாம் அவதானித்த விடயங்களை நாம் அறிக்கையாக வெளியிடுவோம். கொழும்பு சென்ற பின்னர் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவருடனும் ஏனைய ஆணையாளர்களுடன் கலந்துரையாடிய பின்னர்  இந்த வார இறுதிக்குள் செம்மணி தொடர்பான அறிக்கையை நாம் வெளியிடுவோம்.

இதுவரை நடைபெற்ற அகழ்வுப்பணிகளில் திருப்தி  உள்ளது. எனவே அதனை நாம் அறிக்கையில் சுட்டிக்காட்டவுள்ளோம். இங்கு நடைபெறுகின்ற வியடம் உணர்வு சார்ந்த விடயமாக காணப்படுகின்றது.

 எனவே ஊடகங்கள் இதனை அறிக்கையிடும்போது இதனை உணர்வு ரீதியாக அறிக்கையிடாது, யாதார்த்தமாக செய்திகளை அறிக்கையிடுமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.


யாழ்ப்பாணத்தில் 1996ஆம் ஆண்டு தொடக்கம் 1997 ஆம் ஆண்டு கால பகுதியில்  காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு  2003ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையை  மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணைத்தளத்தில்  பதிவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.

செம்மணி தொடர்பாக இதுவரையில் எம்மால் எந்த அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை.

எனவே மிக விரைவில் அனைத்து அறிக்கைகளையும் வெளியிடுவதற்கு நாம் தயாராகவுள்ளோம் ” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1441775

  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2025 at 17:47, புலவர் said:

இவ்வளவு நாள படுத்துத் தூங்கி விட்டு இப்போது போகும் இலங்கை மனித குழு அங்கு போவதில் என்ன அதிரடி இருக்கிறது. ஒரு வேளை கதையை மாற்றி சங்கிலியன் காலத்து படுகொலைகள் என்று வரலாற்றை திரித்து எழுதப் போகிறார்களோ? முதலில் மனித உரிமைகள் ஆணைககுழு என்ற ஒன்று இலங்கையில் இருக்கிறதா?இசயத்தித் தலைப்பை பொறுப்புணர்வோடு இடவேண்டும். இந்திய ஊடகங்களின் தாக்கம். இப்போது நம்மவர்களின் டஊடகங்களில் கொஞ்சம் தூக்கலாகவே தெரிகிறது.

செம்மணி புதைகுழிகளை உருவாக்கியது யார்………மூச்……. அது மிகவும் இரகசியமாகவே பாதுகாக்கப்படும்.🤫

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.