Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரி பேரணி

 image_1911567dc1.jpg

 எம்.எஸ்.எம்.நூர்தீன் 

கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் நீதி கோரி காத்தான்குடியில் கவனஈர்ப்பு பேரணி ஒன்று ஞாயிற்றுக்கிழமை(03) அன்று முன்னெடுக்கப்பட்டது.

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை இடம்பெற்று 35ஆவது வருட ஷுஹதாக்கள் தினம் ஞாயிற்றுக்கிழமை (03) அன்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், காத்தான்குடி முதலாம் குறிச்சி பிரதான வீதியில் இந்த கவன ஈர்ப்பு பேரணி நடத்தப்பட்டது. அதன் பின்னர் பிரகடனம் வெளியிடப்பட்டது.  

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளை தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கையில் கடந்த காலத்தில் நடைபெற்ற யுத்தத்தின்போது, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் நீதியும் நியாயமும் வேண்டி  கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் புதை குழிகள் தோண்டப்பட்டு அங்கிருந்து எடுக்கப்படும் ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பேரணியின்போது வலியுறுத்தப்பட்டது.பேரணியின் இறுதியில் ஷூஹதாக்கள் தின பிரகடனம் ஒன்றும் வாசிக்கப்பட்டது.

இதன்போது, சிறப்புரையை சம்மேளன தலைவரும் ஓய்வுபெற்ற அதிபருமான சத்தார் நிகழ்த்தினார் பிரகடனத்தை சம்மேளன செயலாளர் மௌலவி ரமீஷ் ஜமாலி வாசித்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு அனுப்பி வைக்கும் பொருட்டு இந்த பிரகடனம் காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜூத் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது, முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள் என்பதை வலியுறுத்தியும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தவும், முஸ்லிம்கள் இழந்த காணிகளை மீள வழங்கவும் வேண்டும் எனவும் விகிதாசாரப்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கான காணி பங்கீடு செய்யப்பட வேண்டும் எனவும் விகிதாசாரப்படி, அரசு உயர் பதவிகளில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் அமர்த்தப்பட வேண்டும் எனவும் இந்த பிரகடனத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பேரணியில், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளை பிரதிநிதிகள் தேசிய ஷுஹதாக்கள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

இதன்போது, கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களின்  புகைப்படங்களைத் தாங்கி நின்றனர்.

image_2f516bac74.jpgimage_4fe5eaf6c6.jpgimage_6854eb42ea.jpgimage_60b581c1e0.jpgimage_ee750091ce.jpgimage_a3be50c2ad.jpgimage_0608dcc542.jpg

https://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/கடத்தி-காணாமல்-ஆக்கப்பட்ட-முஸ்லிம்களுக்கு-நீதி-கோரி-பேரணி/46-362217

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் பேசாமல்தானே இருந்தனீங்கள்...என்ன இப்ப திடீரென்று..

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணியில் இராணுவத்தினரால் கொன்று புதைக்கப்பட்டிருக்கும் பல நூற்றுக்கணக்கான தமிழர்களின் உடல்களின் எச்சங்கள் இப்போது வெளிவர ஆரம்பித்திருப்பதனால் சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் இது பேசுபொருளாக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே, செம்மணி மனிதப் புதைகுழிகள் நீதிமன்ற விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுமிடத்து, தமது உறவுகளுக்கான நீதியும் கிடைக்கப்பெறலாம் என்கிற நம்பிக்கையிலேயே இதனை முஸ்லீம்கள் செய்யலாம். முஸ்லீம்கள் இதனைச் செய்வது செம்மணிக்கான முக்கியத்துவத்தை குறைப்பதற்காக என்று நான் நினைக்கவில்லை. தமக்கும் நீதி கிடைக்கவேண்டும் என்கிற நப்பாசையில்த்தான்.

அப்பாவிகளைக் கொன்று புதைத்தவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

செம்மணியில் இராணுவத்தினரால் கொன்று புதைக்கப்பட்டிருக்கும் பல நூற்றுக்கணக்கான தமிழர்களின் உடல்களின் எச்சங்கள் இப்போது வெளிவர ஆரம்பித்திருப்பதனால் சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் இது பேசுபொருளாக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே, செம்மணி மனிதப் புதைகுழிகள் நீதிமன்ற விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுமிடத்து, தமது உறவுகளுக்கான நீதியும் கிடைக்கப்பெறலாம் என்கிற நம்பிக்கையிலேயே இதனை முஸ்லீம்கள் செய்யலாம். முஸ்லீம்கள் இதனைச் செய்வது செம்மணிக்கான முக்கியத்துவத்தை குறைப்பதற்காக என்று நான் நினைக்கவில்லை. தமக்கும் நீதி கிடைக்கவேண்டும் என்கிற நப்பாசையில்த்தான்.

அப்பாவிகளைக் கொன்று புதைத்தவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

இப்படிக் கருத்முடியாது என்பது என் கருத்து...ஏனெனில் கடந்த கால அனுபவங்களின் மூலம் ...தமிழனுக்கு கிடைக்க வேண்டிய அற்ப சலுகைகளைகூட ..தட்டி வீழ்த்தி குழப்பியடித்தவர்கள்... இதுவும் அவ்வாறான செயல்பாடுதான்...குழப்பியடிப்பதன்மூலம் அரசிய ல் இலாபம் தேடுவதே ..செயல்பாடு

  • கருத்துக்கள உறவுகள்
Just now, alvayan said:

கடந்த கால அனுபவங்களின் மூலம் ...தமிழனுக்கு கிடைக்க வேண்டிய அற்ப சலுகைகளைகூட ..தட்டி வீழ்த்தி குழப்பியடித்தவர்கள்

நீங்கள் கூறுவது புரிகிறது. தமிழர்களின் தாயகமான இணைந்த வடக்குக் கிழக்கு என்று பேசப்படும்போதெல்லாம், தமக்கும் தாயகம் வேண்டும் என்கிற கோரிக்கைகளை முஸ்லீம்கள் முன்வைத்தே வந்திருக்கிறார்கள். இக்கோரிக்கையின் பின்னால் முஸ்லீம் பெரும்பான்மைப் பிரதேசங்களை உள்ளடக்கி ஒரு முஸ்லீம் பிராந்தியத்தை உருவாக்குவது தான் என்றபோதிலும், பெரும்பாலும் இக்கோரிக்கைகள் தமிழரின் தாயக‌க் கோட்பாட்டினை சிதைக்கும் முகமாகவே அரசிலிருந்த முஸ்லீம் அமைச்சர்களான அஷ்ரப், ஹக்கீம், ஹிஸ்புள்ளா போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்தது. குறிப்பாக ஹிஸ்புள்ளா போன்ற முஸ்லீம் அடிப்படைவாதிகள் கிழக்கை முற்றாக முஸ்லீம் மயப்படுத்துவதன் ஊடாக வடக்குக் கிழக்கு இணைந்த தாயகம் எனும் கோட்பாட்டினைச் சிதைப்பதே தனது தலையாய நோக்கம் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார். இதனைத் தனக்குச் சார்பாகப் பாவித்த பேரினவாதம், தமிழர்கள் கேட்கும் தாயகத்தினுள் முஸ்லீம்களுக்கும் பங்கு வேண்டும் என்று கேட்பதால் எம்மால் எதனையும் தரமுடியாது என்று கையை விரித்து விட்டது. இது அரசியல் சார்ந்தது.

ஆனால், தம்மில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதியினைத் தாருங்கள் என்று கேட்பது எமது கோரிக்கையினைப் பலவீனப்படுத்தும் என்று நாம் நம்பவில்லை. ஏனென்றால், தமிழர்களும் கொல்லப்பட்டார்கள், முஸ்லீம்களும் கொல்லப்பட்டார்கள், ஆகவே இரண்டும் சமனாக்கப்பட்டிருக்கிறது என்று நீதி கூறப்போவதில்லை. இரண்டுமே விசாரிக்கப்படல் அவசியம். குறிப்பாக கிழக்கில் முஸ்லீம்கள் மீது கருணா தன்னிச்சையாக நடத்திய படுகொலைகள் விசாரிக்கப்படுவது அவசியமானது. அதனாலேயே இவ்விசாரணைகள் நடத்தப்படுதல் வேண்டும் என்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்+

இதே போன்ற ஒரு போராட்டத்தினை மட்டு-அம்பாறை வாழ் தமிழர்களும் முன்னெடுக்க வேண்டும். முஸ்லிம் ஊர்காவல்படையினர், காடையர்கள் மற்றும் சாதாரண முஸ்லிம் பொதுமக்களாலும் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நன்னிச் சோழன் said:

இதே போன்ற ஒரு போராட்டத்தினை மட்டு-அம்பாறை வாழ் தமிழர்களும் முன்னெடுக்க வேண்டும். முஸ்லிம் ஊர்காவல்படையினர், காடையர்கள் மற்றும் சாதாரண முஸ்லிம் பொதுமக்களாலும் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோர வேண்டும்.

இது மிகவும் அவசியமானது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

நீங்கள் கூறுவது புரிகிறது. தமிழர்களின் தாயகமான இணைந்த வடக்குக் கிழக்கு என்று பேசப்படும்போதெல்லாம், தமக்கும் தாயகம் வேண்டும் என்கிற கோரிக்கைகளை முஸ்லீம்கள் முன்வைத்தே வந்திருக்கிறார்கள். இக்கோரிக்கையின் பின்னால் முஸ்லீம் பெரும்பான்மைப் பிரதேசங்களை உள்ளடக்கி ஒரு முஸ்லீம் பிராந்தியத்தை உருவாக்குவது தான் என்றபோதிலும், பெரும்பாலும் இக்கோரிக்கைகள் தமிழரின் தாயக‌க் கோட்பாட்டினை சிதைக்கும் முகமாகவே அரசிலிருந்த முஸ்லீம் அமைச்சர்களான அஷ்ரப், ஹக்கீம், ஹிஸ்புள்ளா போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்தது. குறிப்பாக ஹிஸ்புள்ளா போன்ற முஸ்லீம் அடிப்படைவாதிகள் கிழக்கை முற்றாக முஸ்லீம் மயப்படுத்துவதன் ஊடாக வடக்குக் கிழக்கு இணைந்த தாயகம் எனும் கோட்பாட்டினைச் சிதைப்பதே தனது தலையாய நோக்கம் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார். இதனைத் தனக்குச் சார்பாகப் பாவித்த பேரினவாதம், தமிழர்கள் கேட்கும் தாயகத்தினுள் முஸ்லீம்களுக்கும் பங்கு வேண்டும் என்று கேட்பதால் எம்மால் எதனையும் தரமுடியாது என்று கையை விரித்து விட்டது. இது அரசியல் சார்ந்தது.

ஆனால், தம்மில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதியினைத் தாருங்கள் என்று கேட்பது எமது கோரிக்கையினைப் பலவீனப்படுத்தும் என்று நாம் நம்பவில்லை. ஏனென்றால், தமிழர்களும் கொல்லப்பட்டார்கள், முஸ்லீம்களும் கொல்லப்பட்டார்கள், ஆகவே இரண்டும் சமனாக்கப்பட்டிருக்கிறது என்று நீதி கூறப்போவதில்லை. இரண்டுமே விசாரிக்கப்படல் அவசியம். குறிப்பாக கிழக்கில் முஸ்லீம்கள் மீது கருணா தன்னிச்சையாக நடத்திய படுகொலைகள் விசாரிக்கப்படுவது அவசியமானது. அதனாலேயே இவ்விசாரணைகள் நடத்தப்படுதல் வேண்டும் என்கிறேன்.

இந்த விசாரணை தேவை என்பதைவிட ...தமது அரசியல் இருப்பு பாதுகாக்கக்ப் படவேண்டும் என்ற முசுலிம் அரசியல்வாதிகளின் தூண்டலே தற்சமயம் உடனடியாக ...இந்த விசாரணைத் தூண்டல் ...இதனை செய்து குழப்பியடிப்பதன் மூலம் அரசுடன் அண்டுவதே இவர்களின் நோக்கம் ...இதற்கு இம்மக்கள் பகடைக்காய்கள்...சிலவேளைதமிழருக்கான ஏதோ தீர்ப்புவந்தால் ..அதை வைத்தே இவர்கள் வாதிடமுடியும்...ஆனால் அவர்கள் விசாரணை கேட்பது .. நீங்கள் குறிப்பிட்ட அரசியல்வாதிகளின் சுயநலம் கருதி என்பது என்னுடைய கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

எப்போழுதெல்லாம் தமிழர்களுக்கு சாதகமான சூழல் உருவாகிறதோ அப்பொழுதெல்லாம் இந்த *** ****** தமது சுயரூபத்தை காட்ட தொடங்கி விடுவார்கள்.....

Edited by நியானி
இழிவான வார்த்தைப் பிரயோகம்

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி ..... கிழக்கிலிருந்து தமிழர்கள் தங்கள் சொந்த வீடுகள் பிரதேசங்களை விட்டு விரட்டப்பட்டார்கள், அவர்களின் கோயில்கள், காணிகளை பறித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதியை தனது அதிகாரத்தினால் மாற்றி, முஸ்லீம் வியாபார நிலையங்களை அமைத்தேன் என்று வீராப்பு பேசுகிறார் ஹிஸ்புல்லா. அங்கே முஸ்லீம் ஊர்காவற் படை, சிங்கள இராணுவப்படை இவ்வளவையும் தாண்டி முஸ்லிம்களை புலிகள் தாக்கினார்கள் என்றால் இவர்களது இராணுவப்படை, பலம் என்ன செய்தது? ஏன் அவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டார்கள் என்றொரு கேள்வி எழுகிறது. புலிகளை சீண்டி மிகுதியை எதிர்பார்த்தபடி தாம் அரங்கேற்றி, புலிகளின் தலையில் கட்டி புலிகளை பெலவீனப்படுத்தும் செயல் இது. சியா முஸ்லிம்கள் இராணுவத்தோடு செய்த அடடூழியம். தமிழரை கொன்ற ஊர்காவற் படையினர் இன்னும் உலாவருகின்றனர், அவர்களை பிடித்து விசாரித்தால் உண்மை வெளிவரும். இரண்டு போலீசாரை சுட்டும் வெட்டியும் ஆயுதங்களை எடுத்து விட்டு புலிகளின் தலையில் கட்டியவர்கள். ஏன் பலரை கொன்று விட்டு புலிகளின் தலையில் இராணுவமே போட்டது. எல்லாம் வெளிவரத்தான் போகுது. வெளிப்படாமல் மறைந்திருக்கும் இரகசியம் ஒன்றுமில்லை. உண்மைகள் வெளிவரும் காலமிது.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நியாயமான கோரிக்கை, பாதிக்கப்பட்ட இரண்டு சமூகங்களுக்கும் நீதி வழங்கும் பொதுவான பொறுப்பு இலங்கை அரசிற்கே உண்டு, அதே நேரம் முஸ்லீம்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனும் கோரிக்கைகளும் நியாமான கோரிக்கைதான் அதற்கும் இலங்கை அரசே பொறுப்பு.

இது மேலும் மேலும் இலங்கை ஆட்சியாளர்களை நெருகடிக்குள்ளாக்கும், அடிப்படையில் தாயக கோரிக்கையினையும் போராட்டத்தினையும் பலவீனமாக்க குடியேற்றங்களையும் அதே நேரம் இரு சமூகத்திற்கிடையே திட்டமிட்ட பிளவுகளை உருவாக்கிய இலங்கை அரசே இதற்கான முழுப்பொறுப்பினை ஏற்க வேண்டும், இதில் பலிக்கடாக்களாக்கப்பட்ட இரு சமூகங்களையும் குற்றவாளியாக்க முடியாது.

இதில் இலங்கை அரசினால் நேரடியாக ஒரு சமூகம் பாதிக்கப்பட்டுள்ளது மற்ற சமூகம் மறைமுகமாக இலங்கை அரசினால் பாதிக்கப்பட்டுள்ளது, முஸ்லீம்களின் இந்த நியாமான கோரிக்கை மேலும் மேலும் எமக்கு பலம் சேர்க்கும் ஒரு முயற்சியாகவே இருக்கும், இங்கு கூறுவது போல தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டதிற்கெதிரான போராட்டத்தினை நீர்த்து போக செய்யாது மறுவளமாக உறுதி சேர்க்கும்.

இது இலங்கை அரசிற்கு ஒரு புதிய தலையிடியினை உருவாக்கலாம், இல்லாத ஒரு அமைப்பின் மீது வைக்கப்படும் குற்றசாட்டாக இது இருக்க போவதில்லை மாறாக இலங்கை அரசின் அனைத்து நிர்வாக பிரிவுமே இலங்கையில் பாதிக்கப்பட்ட இரு சிறுபான்மை பிரிவினர்களின் இழப்புகளுக்கும் காரணம் கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த இரண்டு பிரதான கட்சிகளுமே அதற்கு காரணம், அவர்களே குற்றவாளிகள்.

இது ஓடிப்போன சிங்கத்தினை வாலில் கட்டி வந்த நரியின் கதை போன்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.