Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Digital Desk 1

09 Sep, 2025 | 12:32 PM

image

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் ஒரு பகுதியாக குளங்கள் தூர்வாரப்படவேண்டும் : அதற்கான பொறிமுறை உருவாக்குவது தொடர்பில்   கலந்துரையாடல் இடம்பெற்றது.

யாழ். மாவட்டத்திலுள்ள குளங்களை தொடர்ச்சியாக தூர்வாருவது தொடர்பான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பிலும், பரீட்சார்த்தமாக தூர்வாருதலை உடனடியாக நடைமுறைப்படுத்தவது தொடர்பாகவும் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  தலைமையில்  திங்கட்கிழமை(நேற்று)  நடைபெற்றது. 

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் ஒரு பகுதியாக குளங்கள் தூர்வாரப்படவேண்டும் என்றும் அதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராய்வதே கலந்துரையாடலின் நோக்கம் என குறிப்பிட்ட ஆளுநர் அது தொடர்பில் துறைசார் அதிகாரிகளிடமிருந்து ஆலோசனைகளை எதிர்பார்ப்பதாக  தெரிவித்தார் . 

குளத்தை தூர்வாருதல் தொடர்பான பொறிமுறை நீண்ட காலத்தைக் கொண்டதாகக் காணப்படுவதாகவும், இதனால் தன்னார்வலர்கள் இந்த முயற்சியில் பங்கெடுக்க வந்தாலும் அவர்களும் சலிப்படைவதாகவும், கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் அரசாங்க நிதியில்லாமல் இதைச் செயற்படுத்துவதற்கு பல்வேறு நிதி வழங்கும் தரப்புக்கள் தயாராக இருந்தாலும் அனுமதிக்கான பொறிமுறை சிக்கலுக்குரியதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், இன்னும் சில வாரங்களில் மழை காலம் ஆரம்பித்தால் இந்தப் பணிகளை தொடர முடியாது என்றும், ஏற்கனவே அனுமதி கோரப்பட்ட கந்தரோடை குளத்தையாவது தூர்வாருவதற்கான அனுமதிகள் உடனே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

கந்தரோடை குளத்தை தூர்வாருவதற்கான அனுமதி வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களத்தால் உடனடியாக வழங்கப்படும் என்றும், அகழப்படும் மண்ணை கொண்டு செல்வதற்கான அனுமதி பிரதேச செயலாளரால் வழங்கப்படும் எனவும் இந்தப் பணியை விரைவாக ஆரம்பித்து குளங்கள் தூர்வாருதல் தொடர்பில் தன்னார்வலர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது. 

யாழ். மாவட்டத்தில் கமநல சேவைகள் திணைக்களத்தின் கீழேயே அதிகளவு குளங்கள் உள்ள நிலையில் அவற்றின் கீழ் தூர்வாருவதற்கு உடனடியாக அனுமதிகள் வழங்கக் கூடியவற்றுக்கு அனுமதி வழங்குமாறும் ஏனையவற்றை தூர்வாருவதற்கான முன்னுரிமைப் பட்டியலை தயாரித்து உரிய நியாயப்படுத்தலுடன் தலைமையகத்துக்கு அனுப்புமாறும் கலந்துரையாடலின் போது ஆலோசனை வழங்கப்பட்டது. 

மேலும் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளரின் கீழ், குளங்களை தூர்வாருதலுடன் தொடர்புடைய சகல திணைக்களங்களையும் ஒருங்கிணைத்து கலந்துரையாடலை நடத்தி இதற்கான நிரந்தரப் பொறிமுறையை உருவாக்குமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார். 

இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், கமநலசேவைகள் உதவி ஆணையாளர், பிரதி விவசாயப் பணிப்பாளர், நீர்பாசனப் பொறியியலாளர்கள், குளங்களைத் தூர்வாரும் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/224612

வெளிநாடுகளில் மழை நீரை வடிகால்கள் மூலம் ஒதுக்குப் புறமான இடங்களுக்குக் கொண்டு சென்று இதற்கெனெ பிரத்தியோகமாக உருவாக்கப்பட்ட பெரும் குழிகளுக்குள் நிரப்புவார்கள். இக் குழிகள் இலகுவாக நீரை வற்ற வைத்து அதனை நிலத்தடிக்குக் கொண்டு செல்லும்.

எமது நாட்டில் குளங்களின் அடியிலுள்ள சேறு நீரை நிலத்தின் கீழ் செல்லாமல் தடுக்கும். தூர் வாருதல் என்பது இந்தச் சேற்றை வெளியேற்றுவது என்று நினைக்கிறேன். இப்படிச் செய்வதால் நீர் இலகுவாக நிலத்தின்கீழ் இறங்கும் அல்லவா ? இலங்கையில் உள்ள குழங்கள் நீரைச் சேமிக்க உருவாக்கப்பட்டவை. தூர் வாருவதால் குளங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் வேறாகிறதே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

எமது நாட்டில் குளங்களின் அடியிலுள்ள சேறு நீரை நிலத்தின் கீழ் செல்லாமல் தடுக்கும். தூர் வாருதல் என்பது இந்தச் சேற்றை வெளியேற்றுவது என்று நினைக்கிறேன். இப்படிச் செய்வதால் நீர் இலகுவாக நிலத்தின்கீழ் இறங்கும் அல்லவா ? இலங்கையில் உள்ள குழங்கள் நீரைச் சேமிக்க உருவாக்கப்பட்டவை. தூர் வாருவதால் குளங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் வேறாகிறதே.

இல்லை

தூர் வாருதல் என்பது வெளியேற்றம் செய்தல் எனப் பொருள்படும்

கேணி, கிணறு, ஏரி, குளம், குட்டைகள் என்பவை குறித்த காலத்திற்கு ஒருமுறை..... கூடுதலான இடங்களில் ஒவ்வொரு வருடமும் கோடை காலங்களில் நீர் நிலை குறைந்து காணப்படும் பொது,,,, அல்லது முழுதாக வற்றி இருக்கும்போது.... நில மட்டத்தில் காணப்படும் குப்பைகள், கற்கள், சேறு என்பன அகற்றப்பட்டு சுத்தம் ஆக்கப்படும்.

இதனால் நீர் நிலைகளின் தரம் மிகவும் சுத்தமாக இருக்கும் சேற்றுப்பக்கம் செல்லும்போது ஏற்படும் ஆபத்துக்கள் குறையும்

அதைவிட குப்பைகளும் சேறும் அகற்றப்படும் பொது நீர் நிலைகளின் கொள்ளளவு அதிகரிக்கும். இப்படிப் பல நன்மைகள் உள்ளன .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

வெளிநாடுகளில் மழை நீரை வடிகால்கள் மூலம் ஒதுக்குப் புறமான இடங்களுக்குக் கொண்டு சென்று இதற்கெனெ பிரத்தியோகமாக உருவாக்கப்பட்ட பெரும் குழிகளுக்குள் நிரப்புவார்கள். இக் குழிகள் இலகுவாக நீரை வற்ற வைத்து அதனை நிலத்தடிக்குக் கொண்டு செல்லும்.

எமது நாட்டில் குளங்களின் அடியிலுள்ள சேறு நீரை நிலத்தின் கீழ் செல்லாமல் தடுக்கும். தூர் வாருதல் என்பது இந்தச் சேற்றை வெளியேற்றுவது என்று நினைக்கிறேன். இப்படிச் செய்வதால் நீர் இலகுவாக நிலத்தின்கீழ் இறங்கும் அல்லவா ? இலங்கையில் உள்ள குழங்கள் நீரைச் சேமிக்க உருவாக்கப்பட்டவை. தூர் வாருவதால் குளங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் வேறாகிறதே.

தூர்வாரமல் விட்டால் காலம் போகப் போக குளம் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.

மழை காலத்தில் கூடுதலான மழைநீரை சேமித்து வைத்திருக்கலாம்.

இல்லாவிட்டால் வாய்க்கால் வழியோடி கடலுக்குள் சங்கமித்துவிடும்.

எமது ஊரில் நிறைய குளங்கள் இருக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஊரில் இருக்கும் போது வாய்க்கால்,குளங்கள் என தூர்வாரும் பணிகளில் சிரமதானமாக முறையில் ஈடுபட்டுள்ளேன்.

ஒரு குளத்திற்கு நான்கு பக்கமும் சீமேந்து அணைகள் இருக்குமேயானால் தூர்வார வேண்டிய அவசியம் வராது. தனியே அதனை சுத்தம் செய்வதாகவும் கழிவுகளை அகற்றுவதாகவே அமையும்.

ஆனால் தூர் வாருவது என்பது வெளி மண் குளத்திலோ குட்டையிலோ மழை வெள்ளங்களாலும் அல்லது வேறு காரணங்களாலும் வந்து நிரம்புவதை வெளியேறுவதை தான் சொல்வது...

அதை விட.... சில வருடங்களிற்கு முன்னர் யாழ்களத்தில் தூர்வார்வது பற்றிய திரியில்....எப்படித்தான் குளங்களை தூர்வாரினாலும் நன்னீருக்குள் கடல் உப்பு நீர் உட்புக நூறுவீதம் சாத்தியம் உள்ளது ஒரு இணைப்பும் இணைக்கப்பட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.