Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Digital Desk 1

13 Sep, 2025 | 12:38 PM

image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது. யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் விரைவில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பலப்பிட்டிய பிரதேசத்தில் தபாலகமொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான கொள்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய, தேசிய வரி வருமான திணைக்களம், மதுவரி திணைக்களம், சுங்க திணைக்களம் உள்ளிட்டவை தமக்கான இலக்கிற்கு அப்பால் இலாபமீட்டியுள்ளன. மறுபுறம் அநாவசிய செலவுகளை குறைத்திருக்கின்றோம். இவற்றின் ஊடாக வரவு – செலவு திட்டத்தின் இடைவெளியை படிப்படியாக சமநிலைப்படுத்த முயற்சிக்கின்றோம்.

உலகின் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சியைக் காண்பிக்க தவறியுள்ள போதிலும், இலங்கை அதனை செய்து காண்பித்துள்ளதாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. 2021, 2022, 2023ஆம் ஆண்டுகளில் வங்குரோத்தடைந்திருந்த நாடு இன்று இந்நிலைமையை அடைந்துள்ளது. வரிவருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதற்கமையவே, கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றக் கூடிய சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியினர் இதற்கு வாக்களித்திருக்க முடியும்.

ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. மாறாக இந்த விடயத்தை மறைப்பதற்காக மறுநாள் சபையில் வேறொரு விடயத்துக்காக கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். அதேபோன்று வெகுவிரைவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்துவதற்கான சட்டமும் நிறைவேற்றப்படும். அதற்கான சட்ட வரைபு தயாரிக்கப்பட்டு வருகிறது என  சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/224980

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் விரைவில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

2/3 பெரும்பான்மை இருக்கிறபடியால் எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

இதுக்கு பெரிதாக மார்தட்ட வேண்டிய அவசியம் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

2/3 பெரும்பான்மை இருக்கிறபடியால் எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

இதுக்கு பெரிதாக மார்தட்ட வேண்டிய அவசியம் இல்லை.

அண்ணை, சலுகைகளுக்காக இல்லாமல் சேவை செய்யக்கூடியவர்கள் எதிர்காலத்தில் நாடாளுமன்றம் வருவார்கள் என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

அண்ணை, சலுகைகளுக்காக இல்லாமல் சேவை செய்யக்கூடியவர்கள் எதிர்காலத்தில் நாடாளுமன்றம் வருவார்கள் என எண்ணுகிறேன்.

வேட்புமனு தாக்கல் செய்யவே இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் எத்தனையோ கோடிகளை கொடுத்தே பெறுகிறார்கள்.

அவர்கள் நிலை என்னாவது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

வேட்புமனு தாக்கல் செய்யவே இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் எத்தனையோ கோடிகளை கொடுத்தே பெறுகிறார்கள்.

அவர்கள் நிலை என்னாவது?

இலங்கையில் உழைக்க வருபவர்கள் முதலீடு செய்து உழைக்கிறார்கள் என ராஜித ஒரு முறை சொன்னவர் அண்ணை.

இம்முறை என்பிபி புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கியதே!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இம்முறை என்பிபி புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கியதே!

உண்மை தான் மற்றைய கட்சிகள் என்ன செய்யப் போகின்றனரோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

வெகுவிரைவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்துவதற்கான சட்டமும் நிறைவேற்றப்படும். அதற்கான சட்ட வரைபு தயாரிக்கப்பட்டு வருகிறது என  சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

என்ன இது ! இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்த போகின்றதா இந்த அரசு ?ஓய்வூதியம் அநாவசிய செலவா டொனால்ட் ரம் , எலொன் மஸ்க் கொள்கைகளாக உள்ளதே அடுத்த கட்டமாக இலங்கை அரச வேலை செய்பவர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

அண்ணை, சலுகைகளுக்காக இல்லாமல் சேவை செய்யக்கூடியவர்கள் எதிர்காலத்தில் நாடாளுமன்றம் வருவார்கள் என எண்ணுகிறேன்.

உண்மை ஏராளன்

5 hours ago, ஈழப்பிரியன் said:

2/3 பெரும்பான்மை இருக்கிறபடியால் எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

இதுக்கு பெரிதாக மார்தட்ட வேண்டிய அவசியம் இல்லை.

அமெரிக்கன் தாத்தா

முன்னாள் MPக்களுக்கு எதற்காக ஓய்வு ஊதியம் கொடுக்க வேண்டும்

அவர்களும் சாகும் வரை காலாட்டிக் கொண்டு இருந்து மக்களை மேலும் மேலும் ஏமாற்றவா ?

அவர்கள் செய்த தொழில் சார்ந்த ஒய்வு ஊதியம் கிடைப்பதே அவர்களுக்கு ஒரு வரம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விளங்க நினைப்பவன் said:

என்ன இது ! இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்த போகின்றதா இந்த அரசு ?ஓய்வூதியம் அநாவசிய செலவா டொனால்ட் ரம் , எலொன் மஸ்க் கொள்கைகளாக உள்ளதே அடுத்த கட்டமாக இலங்கை அரச வேலை செய்பவர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவார்கள்

வேறு அரசு மாறிவிட்டால் ஓய்வூதியம் போன்ற சலுகைகள் திரும்ப வரலாம்.

அரச ஊழியரின் சம்பளத்தில் ஓய்வூதியத்திற்கு என பணம் கழிக்கப்பட்டே 60 வயதின் பின் வழங்குகிறார்கள். எதிர்காலத்தில் தனியார் நிறுவனங்கள் போல மொத்தமாக வழங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

வேறு அரசு மாறிவிட்டால் ஓய்வூதியம் போன்ற சலுகைகள் திரும்ப வரலாம்.

ஓய்வூதியம் வரவேண்டும்.

9 hours ago, ஏராளன் said:

அரச ஊழியரின் சம்பளத்தில் ஓய்வூதியத்திற்கு என பணம் கழிக்கப்பட்டே 60 வயதின் பின் வழங்குகிறார்கள். எதிர்காலத்தில் தனியார் நிறுவனங்கள் போல மொத்தமாக வழங்கலாம்.

ஓம் இலங்கையில் அரச ஊழியர்களுக்கு மட்டும் தான் ஓய்வூதியம் கிடைக்கும் என்று நானும் அறிந்திருக்கிறேன்.

நடைபெறுவது ஜேவிபி அநுரகுமார திசாநாயக்க ஆட்சி. ஓய்வூதியம் வேண்டாம் நாம் ஓய்வூதியம் இல்லாமல் வேலை செய்ய தயார் என்று தமிழ் அரச ஊழியர்கள் ஊர்வலம் போனாலும் போவார்கள் 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.