Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

23 Sep, 2025 | 03:26 PM

image

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து இந்தியாவின் டில்லிக்கு பயணம் செய்த விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து கொண்டு பயணித்த 13 வயதுடைய ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

விசாரணைக்குப் பிறகு, குறித்த சிறுவன் அதே விமானத்தில் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

காபூலிலிருந்து புறப்பட்ட கேஏஎம் (KAM) விமானம், இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

அப்போது, விமானத்தின் சக்கரப் பகுதிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமாகத் திரிந்த ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர் கண்டனர். அவனை விசாரித்தபோது, தான் விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து வந்ததாகத் தெரிவித்தான்.

சிறுவன் ஒளிந்திருந்த பகுதியைச் சோதனையிட்டபோது, அங்கு ஒரு சிறிய ஒலிபெருக்கி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், விமானம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், எந்தவிதமான சதிச் செயல்களும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.

விசாரணைக்கு பின்னர், அந்தச் சிறுவன் மீண்டும் அதே விமானத்தில் ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

https://www.virakesari.lk/article/225836

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து இந்தியா வந்த 13 வயது ஆப்கன் சிறுவன்

ஆப்கானிஸ்தான், தாலிபன், காபூல், விமான பயணம், லேண்டிங் கியர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன் விமானத்தின் லேண்டிங் கியரில் அமர்ந்து டெல்லி வரை பயணித்துள்ளார்.

23 செப்டெம்பர் 2025, 07:02 GMT

புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன், டெல்லிக்கு வந்த விமானம் ஒன்றின் லேண்டிங் கியரின் மேல் பக்கத்தில் ஒளிந்துகொண்டு டெல்லி வரை பயணித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவன் அதே விமானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

பிடிஐ செய்தியின்படி, டெல்லி விமான நிலையத்தில் உள்ள காம் ஏர்லைன்ஸ் விமான குழுவினர் ஒரு சிறுவன் விமானத்தின் அருகே நடந்து சென்றதை கவனித்துள்ளனர்.

அவர்கள் உடனடியாக விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். அந்த சிறுவன் விசாரணைக்காக மூன்றாவது முனையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

விசாரணையில் அந்த சிறுவன் ஆப்கானிஸ்தானின் குந்துஸ் (Kunduz) மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

காபூல் விமான நிலையத்திற்குள் நுழைந்து விமானத்தின் பின்பக்கத்தில் உள்ள சென்ட்ரல் லேண்டிங் கியர் பகுதியை அடைந்ததாக விசாரணை அதிகாரிகளிடம் சிறுவன் தெரிவித்துள்ளார் என பிடிஐ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காபூல் விமான நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய கேள்விகள்

ஆப்கானிஸ்தான், தாலிபன், காபூல், விமான பயணம், லேண்டிங் கியர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காபூல் விமான நிலையத்தில் காம் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறும் பயணிகள் (கோப்புப்படம்)

சோதனையின் போது காம் ஏர்லைன்ஸின் பாதுகாப்பு அதிகாரிகள், லேண்டிங் கியர் பகுதியில் சிறுவனுடையதாக கருதப்படும் ஒரு சிறிய சிவப்பு நிற ஒலிபெருக்கியை கண்டுபிடித்ததாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

விசாரணைக்குப் பிறகு, எந்த சதித்திட்டமும் இல்லையென தீர்மானிக்கப்பட்ட நிலையில் விமானம் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. சிறுவனின் பெயரும் அடையாளமும் வெளியிடப்படவில்லை.

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசு இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் தாலிபன் அரசின் எல்லையோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா ஃபரூக்கி இந்தச் சம்பவம் பற்றி விசாரித்து வருவதாக பிபிசியின் பஷ்டோ சேவையிடம் தெரிவித்தார்.

"விமான நிலையத்தின் ஓடு பாதை சிறப்பு பாதுகாப்பின் கீழ் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எந்தச் சந்தர்ப்பத்திலும் அதிகாரிகள் உட்பட யாரும் ஓடுபாதைக்குள் நுழைய முடியாது. ஒருவேளை யாராவது ஓடுபாதைக்குள் நுழைந்தால் அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டு சோதனை தொடங்கப்படும். விமான நிலையம் முழுவதும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்." எனத் தெரிவித்தார்.

சிறுவன் விமானத்தை அடைந்தது காபூல் விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

"விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் எப்போதும் எச்சரிக்கையுடனே இருப்பார்கள். யாரையும் சட்டவிரோதமாக பயணிக்க அனுமதிக்க மாட்டார்கள்." என பிபிசியிடம் அப்துல்லா ஃபரூக்கி தெரிவித்தார்.

சிறுவன் உயிர் பிழைத்தது அதிசயம்

ஆப்கானிஸ்தான், தாலிபன், காபூல், விமான பயணம், லேண்டிங் கியர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காபூல் சர்வதேச விமான நிலையத்தின் வெளிப்புற பகுதி (கோப்புப்படம்)

இத்தகைய அசாத்தியமான செயலுக்குப் பிறகு சிறுவன் உயிர் பிழைத்தது அதிசயமாகக் கருதப்படுகிறது.

ஒருவர் விமானத்தில் ஒளிந்து கொண்டு இன்னொரு இடத்திற்கு பயணித்தது இது முதல்முறையல்ல. ஆனால் விமானத்தின் லேண்டிங் கியர் பகுதியில் ஒழிந்துகொண்டு ஒருவர் பயணித்தது இதுவே முதல்முறை ஆகும்.

ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் தீவிரமான குளிரில் அந்த உயரத்தில் உயிர் பிழைப்பது அசாத்தியமானது என வல்லுநர்களை மேற்கோள் காட்டி பிபிசி பஷ்டோ சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwy81k97g70o

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் தீவிரமான குளிரில் அந்த உயரத்தில் உயிர் பிழைப்பது அசாத்தியமானது என வல்லுநர்களை மேற்கோள் காட்டி பிபிசி பஷ்டோ சேவை செய்தி வெளியிட்டுள்ளது

இது தான் செய்தி கண்ணில் பட்டதும் நினைவுக்கு வந்தது.

(மறுவளமாக, அமெரிக்காவின் கபட தாக்கும் / குண்டுவீச்சு விமானங்கள் குறிப்பிட்ட உயரத்துக்கு கீழ் இறங்குவதை தவிர்ப்பது, ஏனெனில் அந்த உயரத்துக்கு மேல் உள்ள மிக குறைந்த வெப்பநிலை (குளிர்), ராடார் ஐ உறுஞ்சும் மற்றும் தெறிக்க வைக்கும் பூச்சை பாதுகாப்பதால். ரேடார் அலைகளின் சக்தியை உறுஞ்சுவது பூச்சில் உள்ள மூலக கூறுகள் ரேடார் அலையை வாங்கி அதிர்ந்து, ரேடார் அலை சகத்தியை வெப்பசக்தியாக மாற்றுவதால், அனல் சுற்றுப்புறசூழலின் விவெப்பநிலை மிக குறைவாக இருக்கும் போது , ரடர் அலையினால் விமானத்தில் அதன் சுற்றுப்புறத்தில் உருவாகும் வெப்பமமும் தணிக்கப்படும், அதனால் பூச்சை ரேடார் அலை பாதிப்பது மிக குறைந்த சாத்தியக்கூறுகள். அது குறிப்பாக, வெப்பரேகை ( heat signature) உருவாகுவதை தவிர்க்கும், இது முக்கியம் ஏனெனில் , வெப்பரேகை உருவாக்கினால் , அப்படியான heat signature தேடி வரும் ஏவுகணையால் விமானம் குறிவைக்கப்படலாம்)

இதை சொல்வதன் காரணம், அவ்வளவு வெப்பநிலை மிக குறைவு (அதாவது குளிர்). எவ்வாறு சிறுவன் குளிரில் உறையாமல் இருந்தது என்பது ஆச்சரியம்.

மற்றது உயரத்தில் ஒட்ஸிசன் பற்றாக்குறை.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாய் ஒருத்தரின் உதவி இன்றி இவ்வளவு தூரம் பயணிப்பது என்பது அதிசயம் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.