Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லஞ்சம் -ஊழலுக்கு உள்ளாகக்கூடிய நிறுவனங்களாக 10 நிறுவனங்களை மக்கள் தேர்ந்தெடுப்பு!

adminSeptember 26, 2025

Neel-ithavela.jpeg?fit=1170%2C658&ssl=1

லஞ்சம் அல்லது ஊழலுக்கு ஆளாகும் நிறுவனங்களைப் பொறுத்தவரை, நாட்டின் பொருளாதாரத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனம் சுங்கத் திணைக்களம் என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற ஒரு விரிவுரை ஒன்றின் போதே அவர் இந்தனைக் குறிப்பிட்டார்.

இலங்கை நிர்வாக வல்லுநர்கள் நிறுவனம் மற்றும் இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விரிவுரை, தேசிய வளர்ச்சிக்கான நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சி என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த நீல் இத்தவெல,

“2024 ஆம் ஆண்டில், தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை தயாரிப்பதற்காக நாங்கள் ஒரு கணக்கெடுப்பை நடத்தினோம். 

அதில், பொதுமக்கள், இலஞ்சம் அல்லது ஊழலுக்கு ஆளாகக்கூடிய நிறுவனங்களாகத் தேர்ந்தெடுத்த 10 நிறுவனங்களைப் பற்றி நான் உங்களுக்குச் கூறுகிறேன். 

முதலாவது காவற்துறை, இரண்டு அரசியல், மூன்று சுங்கம். மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை, பாடசாலை மற்றும் அமைச்சு. 

அத்துடன் காணிப் பதிவு அலுவலகங்கள், மாகாண சபைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பிரதேச செயலகங்கள், பதிவாளர் நாயக அலுவலகம் போன்றவை பொதுமக்களின் கருத்தாகும். 

இருப்பினும், பொருளாதாரத்தை முக்கியமாக பாதிக்கும் 5 நிறுவனங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். 

ஒன்று சுங்கம், இரண்டாவது நிறுவனம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி திணைக்களம். 

அதேபோன்று மதுவரித் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், மோட்டார் வாகனப் பதிவு அலுவலகம். 

அதேபோன்று மேலும் நிறுவனங்கள் உள்ளன. தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரண அதிகாரசபை, புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம். 

இது போன்ற நிறுவனங்கள் மூலம் ஊழல் பரவலாம். இது போன்ற நிறுவனங்களில் ஊழலிக்கு மேல் ஊழல் இடம்பெறுகின்றன. அவற்றின் மூலம், ஊழல் செய்பவர்களுக்கு ஒரு புகலிடம் உருவாக்கப்பட்டு, பணமோசடிக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

பின்னர், நான் குறிப்பிட்ட கணக்கெடுப்பில், ஊழல் கலாச்சாரத்திற்கு பங்களிக்கும் காரணிகளாக பொதுமக்கள் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டனர். 

நாட்டில் சரியான சட்டம் ஒழுங்கு இல்லாததே அதற்குக் காரணம். நாட்டில் ஊழல் கலாச்சாரம் உருவாகிறது. மேலும், இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறியதாக” அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலஞ்சம் ஊழல்ஆணைக்குழு

https://globaltamilnews.net/2025/220819/

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரம்காட்டி பயம்காட்டி வற்புறுத்திக் கேட்டுப் பெற்றுவதுதான் லஞ்சம் ஊழலுக்குள் அடங்கும். தவறில்லாத நன்மைபெற்று அதற்கான பிரதி உபகாரத்தை மனமகிழ்ந்து செய்வதை லஞ்ச ஊழல் என்று அடக்குவது தவறு. அடக்கினால் அது மனிதத்தைப் புண்படுத்தும் செயலாகும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.