Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்.பி.பி அரசாங்கம் ஆயிரம் மடங்கு சிறந்தது – ராஜபக்சர்களை குற்றம் சாட்டுகின்றார் சரத் பொன்சேகா

October 6, 2025 12:41 pm

என்.பி.பி அரசாங்கம் ஆயிரம் மடங்கு சிறந்தது – ராஜபக்சர்களை குற்றம் சாட்டுகின்றார் சரத் பொன்சேகா

கடந்த கால அரசாங்கங்களை விட தற்போதை அரசாஙம் ஆயிரம் மடங்கு சிறந்தது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஊழல் செய்பவர்களைப் பாதுகாக்காமல் இருக்க தற்போதைய அரசாங்கம் முதுகெலும்பாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ராஜபக்சக்கள் ஊழல் வலையமைப்பை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்று கட்டுப்படுத்தி வருவதாகவும், இதன் விளைவாக, நாட்டில் ஊழல் எல்லைகளை உடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிறிய குறைபாடுகள் இருந்தபோதிலும், இந்த அரசாங்கம் முந்தைய அரசாங்கங்களை விட ஆயிரம் மடங்கு சிறந்தது என்று நான் முழு மனதுடன் கூறுகிறேன்.

ஊழல் செய்பவர்களைப் பாதுகாக்காமல் இருக்க இந்த அரசாங்கம் முதுகெலும்பாக இருப்பதால், முந்தைய எந்தவொரு அரசாங்கத்தையும் விட தற்போதைய அரசாங்கம் சிறந்தது.

ஒரு திருடன் கடந்த காலத்தில் ஏதேனும் குற்றம் செய்திருந்தால், அவனிடம் பணம் இருந்தால், அவனிடம் குண்டர் சக்தி இருந்தால், பின் கதவு வழியாக அதிலிருந்து தப்பிக்க முடியும். எந்தவொரு மோசடியிலிருந்தும் அவன் தப்பிக்க முடியும்.

எனினும், மோசடி செய்பவர்கள் பின் கதவு வழியாக தப்பிக்கும் வாய்ப்பை இந்த அரசாங்கம் குறைந்தபட்சம் தடுத்து நிறுத்தியுள்ளது. சட்டத்தை செயல்படுத்தவும் தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கின்றது.

இது நூறு வீதம் வெற்றிபெறவில்லை என்றாலும், முந்தைய அரசாங்கங்களை விட ஆயிரம் மடங்கு சிறந்தது என்று நான் அச்சமின்றி சொல்ல முடியும்.

இந்த ஊழல் வலையமைப்பை இந்த நாட்டில் ராஜபக்சேக்கள் சர்வதேச அளவில் முன்னெடுத்துச் சென்று கட்டுப்படுத்தி வருகின்றனர்.

சகோதரர்கள், சகோதரிகள், தந்தைகள், மாமாக்கள் மற்றும் மகன்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஊழல் வலையமைப்பை முழுமையாகக் கட்டுப்படுத்துகிறார்கள்.

அதனால்தான் இந்த நாட்டில் ஊழல் வேலிகளை உடைத்தெறிந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://oruvan.com/the-npp-government-is-a-thousand-times-better-sarath-fonseka-accuses-the-rajapaksas/

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் திருடர்களை கைது செய்தால், தெருவுக்கு இறங்கி ஊளையிடுகிறார்கள். பாதாள உலகைச் சேர்ந்தவர்களை கைது செய்தால், அது தேவையில்லை என்கிறார்கள். போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்தால், பதறுகிறார்கள். கொலைகாரரை கைது செய்தால், அவர்களின் சொந்த வாழ்க்கையை அசிங்கப்படுத்தி விமர்ச்சிக்கிறார்கள். அப்போ; இதில் எல்லாம் இவர்களுக்கு பங்குண்டு. தங்கள் ஊழல், கொலை, களவுகளை மறைக்க பயங்கரவாதிகளை அழித்தோம் என்று மக்களை திரட்டி ஏமாற்றுகிறார்கள். சந்திரிகா சொன்னார், ராஜபக்சக்கள் திருடர் என்று. ஆனால் இவர்கள் திருடர் மட்டுமல்ல கொலை, கொள்ளை, கடத்தல், திருட்டு என்று செய்யாத வேலையே இல்லை. அரசியலுக்கு எள்ளளவும் தகுதியற்றவர்கள். தமிழரை மட்டுமல்ல, தமது அடாவடிகளை தட்டிகேட்ப்பவர்கள், விமர்ச்சிப்பவர்கள், தங்களுக்கு உதவியவர்களையே கொலை செய்து தம்மை காத்துக்கொண்டவர்கள். மக்களின் பணத்தை யார் கொள்ளையடித்தாலும் அதைப்பற்றி கணக்கெடுக்காமல், தங்கள் பணப்பெட்டியை நிரப்புவதிலேயே குறியாக இருந்தனர். அதை மக்களிடமிருந்து மறைக்க பயங்கரவாதிகள் என்கிற கதையை காட்டி தங்களை வீரர்களாக சித்தரித்தனர். யார் எதை களவெடுக்கிறார்கள், அதை எப்படி தடுப்பது என்கிற அறிவு கூட இல்லாத முட்டாள்கள். இவர்கள் தான் நாட்டை குட்டிச்சுவராக்கியவர்கள். இதில குட்டிச்சாத்தானுக்கு ஜனாதிபதி கனவு வேறு. இவர்களுக்குப்பின்னால் பல திருடர் பதுங்கி காத்திருக்கிறார்கள், இவர்கள் அடாவடி, அரசியல் சூழ்ச்சி செய்து தம்மையும் காப்பாறுவார்களென. முடியாவிட்டால், அரச சாட்சிகளாக மாறி தங்களை காத்துக்கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அரச இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு முன், அங்கிருந்த அரச உடமைகளை திருடிச்சென்று விட்டாராம் மஹிந்தா. எங்களிடம் ஒன்றுமேயில்லை என அவரது இளைய புதல்வர் புலம்புகிறார். நாமலோ தன்னிடமுள்ளதெல்லாம் தனது மனைவியின் சொத்துக்கள் என்கிறார். மஹிந்தவோ தனக்கு வசிப்பதற்கு கொழும்பில் வீடு இல்லை என மக்களைப்பார்த்து அழுகிறார். இவர்கள் தங்களது பழைய வாழ்க்கை நிலையை மறக்கவில்லை என புரிகிறது. இவர்களுடைய பாதுகாப்பு அதிகாரி, பல மில்லியன் சொத்துக்களுக்கு அதிபதி. இவர் பிச்சைப்பாட்டுப்பாடுகிறார். நாட்டில் அனிஞாயங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது குமுறுகிறார்கள், ஏன்? இவர்களுக்கெல்லாம் எஜமானர் இவர்கள். இவர்கள் நாட்டை ஆண்டார்களா? சுடுகாடாக்கி சூறையாடினார்களா? தங்கள் ஏவல் நாய்கள், தங்களை காட்டிக்கொடுப்பதற்கு முன் சுட்டுக்கொல்கிறார்கள். இவர்களுக்கு முன் முந்திக்கொள்பவர்கள் இவர்களை காட்டிக்கொடுத்து தாம் தப்புவர். எங்கள் பெற்றோர் தம் பிள்ளைகளை இழந்து தனிமையில் தவிப்பதுபோல் இவர்களும் தவிப்பார்கள். அதுதான் தர்மத்தின் வேலை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.