Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மணல்காட்டில் 300 ஏக்கர் காணியை அபகரிக்க முயற்சி; எதிர்ப்பு தெரிவித்த மக்களை மிரட்டிய சிங்களவர்கள்

army-1-780x470.jpg

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்தில் முந்நூறு ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி மணல்காடு மக்களால் முறியடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

வாகனம் ஒன்றில் வந்த சிங்கள மொழி பேசுபவர்கள் தனியார் காணிகள் உட்பட அரச காணிகள் மற்றும் சமூக காடாக பிரகடனப்படுத்தப்பட்ட சவுக்கமரக்காடு உட்பட 300 ஏக்கர் காணியை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் அபகரிப்பதற்கு நில அளவை செய்வதற்கு முற்பட்டுள்ளனர்.

அங்கு காணி அளவீடு செய்வதனை அவதானித்த கிராம மக்கள் உடனடியாக அவ்விடத்திற்கு சென்று காணியை அளவீடு செய்ய விடாது தடுத்துள்ளனர்.

குறித்த சிங்கள மொழி பேசுபவர்கள் மக்களை மிரட்டும் தொனியில் செயற்பட்டுள்ள நிலையிலும் மக்களின் கடும் எதிர்ப்பினால் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

பின்னர் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு சென்று அங்கிருந்து மீண்டும் அளவீடு செய்யும் நோக்கில் மணல்காடு நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தயாராக நின்றதை அறிந்திருந்தவர்கள் செம்பியன்பற்று பிரதேசத்திலிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிராம மக்கள்,

தம்மில் பலருக்கு குடியிருக்கவே காணிகள் இல்லாத நிலை உள்ளதாகவும், இந்நிலையில் தனியர் நிறுவனம் ஒன்றிற்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரால் காணிகள் வழங்கப்பட்டமையை  எதிர்ப்பதாகவும் தெரிவித்ததுடன் ஒருபோதும் இவ்விடயத்தை அனுமதிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தனர்.

17611456310.png

17611456311.png

17611456312.png

17611456313.png

17611456314.png

https://akkinikkunchu.com/?p=345677

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுலா மேம்பாடு எனும் போர்வையில் காணியை அபகரிக்கும் முயற்சியை கைவிடவும் - மணக்காடு கிராம மக்கள் கோரிக்கை!

25 Oct, 2025 | 05:23 PM

image

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் 600 ஏக்கர் காணிகளை சுற்றுலா மேம்பாடு எனும் போர்வையில் அபகரிக்கும் முயற்சியை கைவிடுமாறு மணற்காடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சனிக்கிழமை (25) மணக்காடு கிராம மட்ட அமைப்புகள் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 

கற்கோவளத்திற்கும் மணற்காட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் 300 ஏக்கர் காணியும், மணற்காட்டுக்கும் பொற்பதி கிராமத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் 300 ஏக்கர் காணியும் சுற்றுலா தேவைகளுக்காக அபகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெற உள்ளன. இதனை உடனடியாக கைவிட வேண்டும்.

மணக்காடு கிராமத்திலுள்ள மக்கள் பலருக்கு குடியிருக்க காணியில்லாத நிலையில். தனியார்களுக்கு இவ்வாறு. காணிகளை வழங்கும் முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம்.

எனவே சம்மந்தப்பட்ட தரப்புகள் உரிய கவனமெடுத்து குறித்த 600 ஏக்கர் காணிகளை அபகரிக்கும்  நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் - என்றனர்.

https://www.virakesari.lk/article/228653

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுற்றுலா மேம்பாடு எனும் போர்வையில் காணியை அபகரிக்கும் முயற்சியை கைவிடவும் - மணக்காடு கிராம மக்கள் கோரிக்கை!

இலங்கையை யார் ஆட்சி செய்தாலும் அநியாயங்களும் அத்துமீறல்களும் தொடரும் போல் இருக்கின்றது.

மணற்காட்டிற்கு அருகில் தான் புகழ்பெற்ற குடத்தனை என்ற ஊரும் உள்ளது என்பதை கூற கடமைப்பட்டுளேன். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.