Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது: யுக்ரைன் ஜனாதிபதி திட்டவட்டம்

10 December 2025

4be209b0-d4fb-11f0-949c-45d05c88eada.png

யுக்ரைன் அமைதித் திட்டத்திற்கு பதிலளிக்க ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது என யுக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

ரஷ்யா மற்றும் யுக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருவதால், இரண்டு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

அதற்காக, அமெரிக்கா பரிந்துரைக்கும் அமைதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவுக்கு சாதகமான அம்சங்கள் இருப்பதாக யுக்ரைன் ஜனாதிபதி தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகிறார். 

அத்துடன், அமைதி திட்டத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி ட்ரம்ப், யுக்ரைனுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். 

இந்த நிலையில், ரஷ்யா தங்களிடம், நிலத்தை விட்டுக் கொடுக்குமாறு வலியுறுத்தி வருவதாக யுக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 

ஆனால், தாங்கள் எதனையும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்றும் அதற்காகவே தாங்கள் போராடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன், யுக்ரைனின் சட்டம், அதன் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டம் எந்த சலுகைகளையும் அனுமதிக்காது என்பதால், நிலத்தை விட்டுக்கொடுப்பதற்கு தங்களுக்கு தார்மீக உரிமை இல்லை என்று யுக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

https://hirunews.lk/tm/435093/ukraine-cannot-cede-land-to-russia-presidential-plan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, கிருபன் said:

யுக்ரைன் அமைதித் திட்டத்திற்கு பதிலளிக்க ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது என யுக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

உக்ரேனுக்கு இன்றைய அவசர தேவை ஜனாதிபதி தேர்தல்.

சர்வாதிகாரி செலென்ஸ்கி ஆட்சியிலிருந்து துரத்தப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

உக்ரேனுக்கு இன்றைய அவசர தேவை ஜனாதிபதி தேர்தல்.

சர்வாதிகாரி செலென்ஸ்கி ஆட்சியிலிருந்து துரத்தப்பட வேண்டும்.

மைதான் புரட்சி என்ற மக்கள் புரட்சி மூலம் "ரஷ்ய சார்பு ஜனாதிபதியை பதவி நீக்கினார்கள்" என்று முறையிட்டபடியே, ஒரு போர்க்கால உக்ரைன் ஜனாதிபதியை துரத்த வேண்டுமென்றும் சொல்கிறீர்கள்! flip flop கொள்கை😎?

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2025 at 23:05, குமாரசாமி said:

உக்ரேனுக்கு இன்றைய அவசர தேவை ஜனாதிபதி தேர்தல்.

சர்வாதிகாரி செலென்ஸ்கி ஆட்சியிலிருந்து துரத்தப்பட வேண்டும்.

செலன்ஸ்கி மீது தற்போது பலருக்கு வன்மம் ஏற்பட்டுள்ளது, உக்கிரேனியர்களே அவரது சகாக்களின் ஊழலின் பின்னர் மேற்கு ஊழலின் அடிப்படையாக கொண்டு உக்கிரேனுக்கான ஐரோப்பிய ஒன்றிய இணைவு மற்றும் உதவிகளில் தடங்கல் ஏற்படலாம் என அவரின் மீது வெறுப்பை காட்டுகிறார்கள், ஆனால் செலன்ஸ்கி ஒரு அங்குல நிலத்தினையும் விட்டு கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.

அமெரிக்க புதிய கொளகையினடிப்படையில் மீண்டும் அமெரிக்காவினை தன்பக்கம் இழுப்பதற்காக இரஸ்சியாவில் சீனாவின் பங்கு பற்றி பேசியுள்ளார்.

போரின் மூலமோ அல்லது இராஜதந்திர ரீதியிலோ சூழ்நிலைக்கேற்ப தகவமைப்பு செய்ய முயற்சிக்கும் அதே நேரத்திலே தனது அடிப்படை கொள்கையிலிருந்து சிறிதும் பின்வாங்காத தலைவராக உள்ளார்.

ட்ரம்ப் அடிக்கடி செலன்ஸ்கியினை திறமையான சேல்ஸ்மன் என கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை செலன்ஸ்கி ஊழலில் ஈடுபட்டதாக எந்த குற்றச்சாட்டும் வரவில்லை என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, vasee said:

செலன்ஸ்கி மீது தற்போது பலருக்கு வன்மம் ஏற்பட்டுள்ளது, உக்கிரேனியர்களே அவரது சகாக்களின் ஊழலின் பின்னர் மேற்கு ஊழலின் அடிப்படையாக கொண்டு உக்கிரேனுக்கான ஐரோப்பிய ஒன்றிய இணைவு மற்றும் உதவிகளில் தடங்கல் ஏற்படலாம் என அவரின் மீது வெறுப்பை காட்டுகிறார்கள், ஆனால் செலன்ஸ்கி ஒரு அங்குல நிலத்தினையும் விட்டு கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.

அமெரிக்க புதிய கொளகையினடிப்படையில் மீண்டும் அமெரிக்காவினை தன்பக்கம் இழுப்பதற்காக இரஸ்சியாவில் சீனாவின் பங்கு பற்றி பேசியுள்ளார்.

போரின் மூலமோ அல்லது இராஜதந்திர ரீதியிலோ சூழ்நிலைக்கேற்ப தகவமைப்பு செய்ய முயற்சிக்கும் அதே நேரத்திலே தனது அடிப்படை கொள்கையிலிருந்து சிறிதும் பின்வாங்காத தலைவராக உள்ளார்.

ட்ரம்ப் அடிக்கடி செலன்ஸ்கியினை திறமையான சேல்ஸ்மன் என கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை செலன்ஸ்கி ஊழலில் ஈடுபட்டதாக எந்த குற்றச்சாட்டும் வரவில்லை என கருதுகிறேன்.

ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனுக்கும் கொடுக்கும் நிதியினால் முக்கிய அரச பதவியில் உள்ளவர்கள் கோடீஸ்வரர்களாகி நாட்டை விட்டு வெளியேறி துபாய் போன்ற நாடுகளில் குடியேறிக்கொண்டிருக்கின்றார்கள். அண்மையில் ஒரு முக்கிய உக்ரேன் அமைச்சர் ஒருவர் பதவி விலக்கப்பட்டதும் ஊர் உலகம் அறிந்ததே. அந்த அமைச்சர் தற்போது துபாயில் இருப்பதாக செய்தி. உண்மை பொய் தெரியவில்லை. ஆனால் ஊழலால் அந்த அமைச்சர் பதவி நீக்கப்பட்டது உண்மை.இதில் செலென்ஸ்கி எவ்வளவு சுருட்டிக்கொண்டிருக்கின்றார் என்பது அவர் பதவியை விட்டு விலகிய பின்னர் தான் தெரியும்.

👉ஊழல் என்பது உக்ரேனியனியர்களுக்கு கைவந்த கலை மட்டுமல்ல. அதுதான் அவர்கள் வாழ்க்கை.👈

நேட்டோ அமைப்பு என்பது காசை கரியாக்கும் அமைப்பு. அந்த அமைப்பு ஏனைய நாடுகள் மீது செய்யும் நாசகார வேலைகளையும் அழிப்புகளையும் பங்கு போட்டுக்கொள்ளும் அமைப்பே தவிர வேறொன்றுமில்லை.

இன்றைய உலக அரசியல் சூழ்நிலையில் டொனால்ட் ரம்ப் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனுக்கும் கொடுக்கும் நிதியினால் முக்கிய அரச பதவியில் உள்ளவர்கள் கோடீஸ்வரர்களாகி நாட்டை விட்டு வெளியேறி துபாய் போன்ற நாடுகளில் குடியேறிக்கொண்டிருக்கின்றார்கள். அண்மையில் ஒரு முக்கிய உக்ரேன் அமைச்சர் ஒருவர் பதவி விலக்கப்பட்டதும் ஊர் உலகம் அறிந்ததே. அந்த அமைச்சர் தற்போது துபாயில் இருப்பதாக செய்தி. உண்மை பொய் தெரியவில்லை. ஆனால் ஊழலால் அந்த அமைச்சர் பதவி நீக்கப்பட்டது உண்மை.இதில் செலென்ஸ்கி எவ்வளவு சுருட்டிக்கொண்டிருக்கின்றார் என்பது அவர் பதவியை விட்டு விலகிய பின்னர் தான் தெரியும்.

👉ஊழல் என்பது உக்ரேனியனியர்களுக்கு கைவந்த கலை மட்டுமல்ல. அதுதான் அவர்கள் வாழ்க்கை.👈

நேட்டோ அமைப்பு என்பது காசை கரியாக்கும் அமைப்பு. அந்த அமைப்பு ஏனைய நாடுகள் மீது செய்யும் நாசகார வேலைகளையும் அழிப்புகளையும் பங்கு போட்டுக்கொள்ளும் அமைப்பே தவிர வேறொன்றுமில்லை.

இன்றைய உலக அரசியல் சூழ்நிலையில் டொனால்ட் ரம்ப் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

செலன்ஸ்கியின் சகாக்கள் மற்றும் செலன்ஸ்கி யூத பின்புலம் கொண்டவர்கள், சாதாரண உக்கிரேனியர்கள் தற்போது இவர்களை தமது நாட்டுக்கு எதிரானவர்களாக பார்க்கிறார்கள், உக்கிரேனியர்களின் ஒரு பகுதியினர் தாம்தான் உக்கிரேனியர்கள் என (ஒரு வித யாழ்ப்பாண மோட்டுக்குடி மனநிலை போன்ற) கருதி மற்ற சிறுபான்மை சமூக பிரதிநிதிகளை தமது நாட்டின் அச்சுறுத்தலாக கருதுகிறார்களோ (ஆதாரம் என்னிடம் இல்லை) தெரியவில்லை, ஆனால் சமூக ஊடகங்களில் அவர்களது பொறுமை இன்மை வெளிப்படுவது தெரிகிறது.

யேர்மார்க் நாட்டினை விட்டு வெளியேறியதும் அமெரிக்க தூதுக்குழுவினை சந்தித்திருந்ததாக நினைவுள்ளது (அவர் முன்னர் செய்த வேலைகள்தான்), இதன் பின்னணியில் அமெரிக்க அதிபரின் செலன்ஸ்கியினை தவிர மற்றவர்களுக்கு தனது அமைதி திட்டத்தில் உடன்பாடு உள்ளதெனும் கருத்தினை பார்க்கும் போது சில விடயங்கள் எவ்வாறு முடியலாம் என ஊகித்து கொள்ளவேண்டியதுதான்.

தம்மை மட்டுமே உக்கிரேனியர்கள் என கூறிக்கொள்ளும் தரப்பு பிரதிநிதிகள் கூட ஒருவர் (புடனோவ்) அமெரிக்க உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளவர் எனவும் (எதனால் இவர் அமெரிக்காவிடம் பணம் பெறுபவர் என கூறுகிறார்கள் என தெரியவில்லை ஆனால் நியு யோர்க் டைம்ஸ் போன்றவை இவரினை பயிற்றுவித்தது சி ஐ ஏ என உரிமை கோருகிறார்கள்).

இரஸ்சியாவிற்குள் நிகழும் தாக்குதலுக்கு அமெரிக்க மேற்கு தரப்புகளின் ஒருங்கிணைப்பாக புடனோவ் கூறப்படுகின்றார்.

மற்றவர் சலூஸ்னி, அவர் எம் ஐ 6 இன் நபர் என குற்றம் சாட்டுகிறார்கள், ஆனால் இவர் உக்கிரேனில் இல்லை, இவருக்கும் செலன்ஸ்கியிற்கும் ஆரம்ப கட்டத்திலேயே சில முரண்பாடு உள்ளதாக கருதப்படுகிறது.

உக்கிரேன் ஒரு பல அதிகாரங்களுக்கிடையேயான (இஸ்ரேலின் வகிபாகமும் இருக்கலாம்) இழுபறியில் உள்ள நாடு, இதில் ஒரு தரப்பினை மட்டும் செலன்ஸ்கி (இரஸ்சிய) எதிர்கொள்ளவில்லை.

நிச்சயமாக நீங்கள் கூறுவது போல செலன்ஸ்கியின் ஆட்சி மாற்றத்தின் பின்னரே செலன்ஸ்கியின் உண்மையான குளறுபடிகள் வெளிவரலாம்.

கிட்டதட்ட எமது நிலைக்கும் உக்கிரேனின் நிலைக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது, சண்டைக்காரனை விட சாட்சிக்காரனாலேயே பெரிய அழிவுகளை நாம் சந்தித்தோம் (இந்தியா), அதே போல உக்கிரேனின் தற்போதய நிலைக்கு உக்கிரேனின் சாட்சிக்காரர்களாகிய மேற்கு (அமெரிக்க + ஐரோப்பிய) காரணமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கினால் இரஸ்சியாவினை ஓரங்கட்ட எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்த நிலையில், இரஸ்சியா உள்ளடங்கலாக தவிர்க்க முடியாத அதிகார மையங்கள் 5 எனும் அமெரிக்க கொள்கை ஒரு விடயத்தினை எமக்கு கண்முன்னால் உள்ள உதாரணமாக காட்டுகிறது, அது பொருளாதார வளம்.

உலக தமிழர்களுக்கு இது ஒரு படிப்பினை, உலக தமிழ் அமைப்புக்கள் தமக்கான பேரம் பேசும் ஆற்றலை இதுவே வழங்குகிறது ஆனால் உலக தமிழ் அமைப்புக்களிடம் ஒரு தெளிவான பார்வை இல்லாமையாக உள்ளதே தற்போது பெரிய பிரச்சினையாக உள்ளது.

எமது பொருளாதார வளத்தினை அதிகரிப்பதுடன் நிற்காமல் தேவையற்ற குழப்பம் ஏற்படுத்து அமைக்களை களையவேண்டிய தேவையும் உலக தமிழ் மக்களுக்கு உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.