Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல கோடி பில்லியன் டாலர் கனிமவள தீவு இலங்கைக்கு கிட்டுமா?

அமெரிக்காவின் அண்மைய நகர்வுகள் இதை நோக்கியா?

அப்பாவி சுவிசை அமெரிக்கா களமிறக்கியுள்ளதா?

இந்தியா என்ன செய்யப் போகிறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு காலமும் இந்தியாவிற்கு மதிப்பளித்து அல்லது இந்தியாவின் மீது கரிசனை காட்டியதெல்லாம் போதும்.

அமெரிக்காவே வருக வருக.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

பல கோடி பில்லியன் டாலர் கனிமவள தீவு இலங்கைக்கு கிட்டுமா?

பிச்சை காசு தான் கிடைக்கும் . வழக்கம்போல் மீனுக்கு வாளும் பாம்புக்கு தலையும் காட்ட முடியாதளவுக்கு அமெரிக்கா வாலை ஓட்ட நறுக்கி விட்டுத்தான் உதவியே கொடுத்து உள்ளது கொஞ்சம் பணம் கிடைத்தாலும் சிங்களம் தென்னாசிய அரசியல் தன்ரை குடும்பியில் என்பது போல் இடற தொடங்கும் இது உள்ளே வந்தவங்களும் விளங்கும் வேற வழியே கிடையாது தமிழர் பகுதியில் நாலு புத்தர் சிலை வைத்து கபடி கபடி விளையாட வேண்டியதுதான் .

10 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தியா என்ன செய்யப் போகிறது?

அந்த கனிம வளத்தை கையாள கூடிய அளவுக்கு இந்தியா வளரவில்லை என்கிறார்கள் வழக்கம் போல் அணில் ஏற விட்ட கேஸ் தான் அநேகமா நம்ம அரசியல்வாதிகளிடம் மகஜர் ஒன்று வாங்கி கொண்டு இருப்பார்கள் .

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

பிச்சை காசு தான் கிடைக்கும்

பெருமாள் பிச்சைக் காசே இலங்கைக்கு போதுமானதே.

7 hours ago, பெருமாள் said:

அந்த கனிம வளத்தை கையாள கூடிய அளவுக்கு இந்தியா வளரவில்லை என்கிறார்கள் வழக்கம் போல் அணில் ஏற விட்ட கேஸ் தான் அநேகமா நம்ம அரசியல்வாதிகளிடம் மகஜர் ஒன்று வாங்கி கொண்டு இருப்பார்கள் .

இந்தியா வளர்ந்த நாடுகளின் உதவியுடன் எடுக்கலாம்.

14 hours ago, குமாரசாமி said:

அமெரிக்காவே வருக வருக.

சீனனைப் பிடிக்கலையோ?

பலாலியில் அமெரிக்க விமானம் இறங்கியது முதல்கொண்டு ஏதோ தமிழனுக்காகவே அமெரிக்க விமானம் இறங்கியது போல கொண்டாடுகிறார்கள்.

எந்த நாடு வந்தாலுமே தனது நலத்துக்காக அரசுடனேயே சேர்ந்தியங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

பெருமாள் பிச்சைக் காசே இலங்கைக்கு போதுமானதே.

ஊரிலை நல்லதண்ணி கிணத்துக்காரன் கையில் திடீர் என்று பணம் கிடைத்தால் என்ன செய்வான் ?

நாலு பக்கமும் சுவர் இரண்டு ஆள் உயரத்துக்கு வைத்து அந்த நல்ல தண்ணியை தான் மட்டுமே அனுபவித்து கொண்டாடுவான் .

அப்படி ஆகா ஓகோ எனும் அளவுக்கு சிங்களம் பெரும் பணக்காரனா மாற கனிம மலை வெட்டுபவர்கள் விடுவார்களா ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தியா வளர்ந்த நாடுகளின் உதவியுடன் எடுக்கலாம்.

உரிமை உள்ளவர்கள் இலங்கை அருகில் உள்ளது சிங்களவர்கள் கிந்தி பாட்டை ரசித்து கொண்டாடுவார்களே தவிர நம்பி நம்ம வடகிழக்கு தமிழர்களின் கண்மூடித்தனமாய் விசுவாசம் போல் ஏமாற மாட்டார்கள் தங்களின் இந்திய அரசியலில் மிக தெளிவாய் இருப்பார்கள் .

உதாரணத்துக்கு இந்திய அரசின் உசுபேத்தளில் நம்மவர் திருகொணோஸ்வரருக்கு மிகபெரிய காண்டா மணி இங்கிலாந்தில் வைத்து செய்து அங்கு கொண்டு சென்றார்கள் கடைசியில் சிங்கள அரசு மறுப்பு தெரிவிக்க கொண்டு போன மணி சேமிப்பு கிடங்கில் கிடக்கு . இப்படி டெல்லியின் இயலாமை வெள்ளிடைமலை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

பலாலியில் அமெரிக்க விமானம் இறங்கியது முதல்கொண்டு ஏதோ தமிழனுக்காகவே அமெரிக்க விமானம் இறங்கியது போல கொண்டாடுகிறார்கள்.

எந்த நாடு வந்தாலுமே தனது நலத்துக்காக அரசுடனேயே சேர்ந்தியங்கும்.

இவ்வளவு காலமும் இந்தியன் இருந்து எங்களுக்கு என்ன செய்தார்கள் ?

எவன் வந்தாலும் அவனின் சுய நலத்துக்கே வருவான் இலங்கையின் பூர்வ குடி நாங்கள் என்று கடைசியில் எங்களின் இருப்பே பறி போகிறது அதை இந்தியா ரசித்து கொண்டு இருக்கு தமிழ்நாட்டில் தமிழர்கள் டாஸ்மார்க்கில் விழுந்து கிடக்கிறார்கள் .வடகிழக்கில் இருப்பே பறி போகையில் எவன் வந்து எம்மை சாட்டி அரசியல் செய்தால் அதை பிடித்து கொண்டு மேலே போவதுதான் சாணக்கியம் .

பழிவாங்கும் இந்திய படங்களை பார்த்து இன்னும் இன்னும் அழிந்து கொண்டு இருக்கிறோம் நல்லகாலம் ஜப்பான்காரன் அணுகுண்டு வீச்சுக்கு பின் அத்தகைய படங்களை பார்க்கவில்லை அவர்களை யார் அழித்தார்களோ அவர்களின் உதவியின் ஊடே வளர்ந்து காட்டி கொண்டார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

நம்ம அரசியல்வாதிகளிடம் மகஜர் ஒன்று வாங்கி கொண்டு இருப்பார்கள் .

அநேகமாக தமிழ் அரசியல் வியாதிகள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு, வடக்கில் மக்கள் இந்திய தூதுவராலயத்திற்கு எதிராக செய்த ஆர்ப்பாடத்திற்கு, அமெரிக்காவின் நகர்விற்கு மன்னிப்பு கேட்டு ஆறுதல் சொல்வார்கள். அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? எடுத்ததற்கெல்லாம் இந்தியாவுக்கு பயணம் செய்து மந்திராலோசனை செய்வது தடுபடும். இனி இவர்களுக்கு அரசியல் கையை மீறிப்போன ஒன்று. ஜதார்த்ததை புரியாமல் ஆடியதால் இல்லையில்லை ஏமாற்றியதால் வந்த வினை. தமிழர் இனி வேறொரு வல்லரசின் அடிமைகள் அவ்வளவே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

எந்த நாடு வந்தாலுமே தனது நலத்துக்காக அரசுடனேயே சேர்ந்தியங்கும்.

கிந்தியன் என்றும் தன் இனம் சார்ந்து சிந்திப்பான். அதில் தமிழர்களுக்கு விடிவில்லை. தமிழ் நாட்டிலேயே தமிழை அழிக்க முனைபவன்.இந்த வகையில் கிந்தியன் ஈழத்தமிழர்களுக்கு தேவையில்லாத ஆணி. இது ஒரு ஈழத்தமிழனின் 60 வருட அனுபவம்.

8 hours ago, ஈழப்பிரியன் said:

சீனனைப் பிடிக்கலையோ?

பலாலியில் அமெரிக்க விமானம் இறங்கியது முதல்கொண்டு ஏதோ தமிழனுக்காகவே அமெரிக்க விமானம் இறங்கியது போல கொண்டாடுகிறார்கள்.

எந்த நாடு வந்தாலுமே தனது நலத்துக்காக அரசுடனேயே சேர்ந்தியங்கும்.

அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆதாயம் இல்லாமல் செட்டி ஆற்றோடு போவாரா என்பதற்கமைய.....கிந்தியா கூட தன் அரசியல் ஆதாயம் இல்லாமலா அன்று தொடக்கம் இன்று வரைக்கும் தமிழர்களை பகடைக்காய்களாக நகர்த்திக்கொண்டிருக்கின்றது? அதனால் ஈழத்தமிழர்கள் நிர்க்கதியானார்களே தவிர வேறொன்றுமில்லை. இன்றுவரைக்கும் அது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

நிலைமை இப்படி இருக்க...... ஈழத்தமிழினம் தொடர்ந்தும் கிந்தியனின் உதவிக்கரத்தை எதிர்பார்த்து அழியக்கூடாது.

பெருமாளும் என் கருத்தையே பிரதிபலிக்கின்றார்.நன்றி பெருமாள்.

சிங்கள இனம் யார்பக்கமோ எந்த அரசியலோ எனக்கு அக்கறையில்லை.

ஈழ இனத்தை பொறுத்தவரை அடுத்த தெரிவு அமெரிக்காகாவாக இருக்க வேண்டும்.சிங்களம் விகாரைகள் கட்ட நினைக்கும் இடத்திலும், சிங்கள இராணுவம் இருக்கும் இடத்திலும் அமெரிக்க இராணுவம் இருக்கட்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.