Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராமர் போய் இராவணன் வந்தார்...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பம் அடுத்த சர்ச்சை...

ராமர் போய் இராவணன் வந்தார்...!

ராமர் கோயில் ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கி யிருக்க, இப்போது இராவணன் கோயில் விவகாரம் புதிதாக முளைத்து, வடஇந்தியாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரில் மார்வார் கோட்டையைச் சுற்றியுள்ள மலைப்பகுதி -& சாந்த் போல். இங்குள்ள முக்கிய சாலை ஓரம் புதிதாக கட்டப்பட்டு வரும் நவ்ரத்தன் கோயில் வளாகம் சில ஆண்டுகளாக பொதுமக்களை பெரிதும் ஈர்த்து வருகிறது. காரணம், இதன் உள்ளே இருக்கும் சிவன், அனுமன், விநாயகர் உட்பட 13 வகையான கோயில்கள் மட்டுமல்ல, புதிதாக இராவணனுக்கு இரண்டு சிலைகள் அமைத்து தனியாக ஒரு கோயில் கட்டப்படுவதால்தான்!

‘மஹாதேவ் அமர்நாத் விகாஸ் பரியாவரன் சமிதி’ என்ற பெயரிலான ஒரு டிரஸ்ட்டின் சார்பில் கமலேஷ்குமார் தாவே என்பவர்தான் இராவணன்

கோயிலைக் கட்டி வருகிறார், கூடவே இந்தக் கோயிலின் தலைமைப் பூசாரியாகவும் இருக்கிறார் தாவே.

இராவணன் கோயிலுக்கான அதிகாரபூர்வ மான அறிவிப்பு சமீபத்தில் கோயில் சார்பில் வர, அவ்வளவுதான்... ‘இராவணனுக்குக் கோயில் கட்டக்கூடாது’ என வி.ஹெச்.பி. மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகள் போராட் டத்தில் இறங்கியுள்ளன.

சிவலிங்கத்துக்கு முன் அமர்ந்து அபிஷேகம் செய்வது போல் ஆறடி உயரம் மற்றும் ஒன்றரை டன் எடையில் தயார் செய்யப்பட்ட இராவணன் சிலையை கடந்த மாதம் தசரா பண்டிகையின் போது ஜோத்பூரில் ஸ்தாபிக்க முயன்றார்கள். அப்போது தான் இந்தக் கோயிலைக் கட்ட அனுமதிக்கக் கூடாது எனக் கோரி, பஜ்ரங்தள் மற்றும் வி.ஹெச்.பி-- யினர் ஜோத்பூரில் ஆர்ப் பாட்டம் நடத்தினர். பிறகு, ஜோத்பூர் மாவட்ட வளர்ச்சிக் கமிஷனர் கிரண் சோனி குப்தா விடம் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து ‘முறையான அனுமதி பெற வில்லை’ எனக் கூறி இராவணன் சிலை அமைப்பது தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது.

இதுகுறித்து இராவணன் கோயிலை கட்டிவருபவரும், ஜோத்பூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தின் அதிகாரிகளுள் ஒருவருமான கமலேஷ்குமார் தாவேவை நேரில் சந்தித்துப் பேசினோம்.

‘‘ஜோத்பூரில் ஆட்சி நடத்தியது மண்டோக் சாம் ராஜ்யம். இதன் இளவரசியான மண்டோதரியைத்தான் இராவணன் மணம் முடித்திருந்தான். ராஜஸ்தானில் மாப்பிள்ளைகளைக் கடவுளுக்கு இணையாக வணங்கும் வழக்கம் உண்டு. மேலும், லட்சக்கணக்காண நூற்றாண்டுகளுக்கு முன் தென் இந்தியாவிலிருந்து இங்குக் குடியமர்ந்த நாங்கள் பஞ்ச திராவிடர்களில் ஒருவரான சிர்மாலி பிரிவின் முத்கல் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள். எங்களின் மூதாதை யர்களில் ஒருவர்தான் சிவபிராமணனான இராவணன். எனவே, பல வகையான கோயில்கள் உள்ள இந்த வளாகத்தில், இராவணனுக்கும் ஒரு கோயிலைக் கட்ட முடிவு செய்தேன். ஆனால், இராமாயணத்தில் வில்லனாக இராவணனைக் கருதும் இந்து அமைப்புகள், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.

உண்மையில், இராவணன் சீதையை தூக்கிச் சென்றதைத் தவிர வேறு எந்தத் தவறும் செய்யவில்லை. எங்களைப் பொறுத்தவரை அது ஒரு தவறு அல்ல. காரணம், நம் சகோதரியின் மூக்கை யாராவது அறுத்தால் நாம் பார்த்துக் கொண்டிருப்போமா? ஒரு பாசமுள்ள சகோதரனாக இரா வணன் செய்ததில் எந்தத் தவறும் இல்லை. இத்தனைக்கும் அவர் ஒரு பெண்ணின் மீது தன் சுண்டு விரல்கூட பட்டு விடக் கூடாது என சீதையை சுற்றி இருந்த பூமியுடன் சேர்த்துத்தான் அவரைத் தூக்கிச் சென்றார். சிறந்த ஜோதிடரான இராவணனுக்கு தாம், இராமரால் கொல்லப்பட்டு சொர்க்கம் செல்வோம் என முன்கூட்டியே தெரிந்து இருந்தது. கடவுளுக்குக் கோயில் கட்ட நாம் யாரிடமும் அனுமதி வாங்கத் தேவை இல்லை. இதை எப்படியும் கட்டி முடிக்காமல் விட மாட்டேன்’’ என ஆவேசப்பட்டார்.

ஜோத்பூர் நகர வி.ஹெச்.பி. தலைவரான பேராசிரியர் பவானிலால் மாத்தூரிடம் பேசியபோது, ‘‘இராவணன் என்பவன் தீவினையின் சின்னம். அதனால்தான் அவனது கொடும்பாவியை தசராவில் எரிக்கிறோம். இராவணன் ஒரு அறிஞனாக இருந்திருக்கலாம். ஆனால், அவனும் அரக்க வம்சத்தில் வந்தவன்தான். அவனைப்போல் அரக்கர்களுக்கு பொது இடங்களில் கோயில் கட்டி வழிபடுவது சரியல்ல. நாட்டில் 99 சதவிகித மக்கள் இராவணனை ஒரு அரக்கனாக நினைத்து தூற்றும் போது, இங்கு அவனுக்காக கோயில் கட்டுவதை நாம் அனுமதிக்க முடியாது. எனவேதான் கோயில் கட்டுவதை எதிர்க்கிறோம். ‘தாவே’ சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இராவணனின் வழி வந்தவர்கள் எனத் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். வேண்டுமானால் இராவணனைத் தங்களது வீட்டில் வைத்துப் பூஜித்துக் கொள்ளட்டும். இந்தக் கோயிலைக் கட்ட எந்த நீதிமன்றம் சென்றாலும், அந்த வழக்கைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்’’ என கோபம் காட்டினார்.

ஆனால், கோயிலைக் கட்டியே தீருவது என்று பிடிவாதமாக இருக்கிறார் கமலேஷ்குமார். இராவணன் பற்றி எழுதப்பட்ட பல நூல்களையும் படித்து ஆய்வு செய்து, மூன்றரைக்கு இரண்டரை அளவுகளில் மார்பிள் கல்லில் பத்துத் தலைகள் மற்றும் இருபது கைகளுடன் இராவணன், கைலாசத்துக்குச் செல்வது போன்ற இன்னொரு சிலையை ஜெய்பூரில் செதுக்க ஆர்டர் செய்துள்ளார். இதற்கு மாடலாக, சிவகாசியில் பல ஆண்டுகளுக்கு முன் அச்சடிக்கப்பட்ட ஒரு இராவணன் போஸ்டரை வைத்திருக்கிறார்.

கமலேஷ்குமாரைப் போலவே மத்தியப்பிரதேச மாநிலத்தின் விதீஷாவிலும், உ.பி&யின் மீரட் மற்றும் கான்பூர் நகரத்திலும் வேறு சிலர் இராவணனுக்குக் கோயில் கட்டுவதில் முனைந்துள்ளனர். இப்போது இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கோயிலுக்கு அனுமதி கோரி நீதிமன்றம் செல்லலாமா என்று ஆலோசித்து வருகின்றனர். எனவே, இராமர் கோயில் பிரச்னையைத் தொடர்ந்து, இராவணன் கோயில் பிரச்னையும் விரைவில் நீதிமன்றம் செல்ல உள்ளது.

http://www.vikatan.com/

இப்போது இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கோயிலுக்கு அனுமதி கோரி நீதிமன்றம் செல்லலாமா என்று ஆலோசித்து வருகின்றனர்.

எதற்கும் எங்கள் யாழ்கள சபேசனுடனும் கலந்தாலோசிப்பது நல்லது.

இறுவட்டென்ன, கோவிலே வரப்போகிறது, இனியென்ன சபேசன் பாடு கொண்டாட்டம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் சில கோவில்களில் இராவணன் மலையைத் தூக்குவது போல உள்ள சிலை அமைக்கப்பட்டு வழிபாட்டிற்கும் உள்ளது. கொழும்பில் உள்ள மயூராபதி அம்மனில் அவ்வாறன சிலை உள்ளது என நினைக்கின்றேன்.

Edited by தூயவன்

மலையை தூக்கிறவர் அனுமனா இருக்கலாம்...

கிருஸ்னரும் மலையை தூக்கினவர் தானே?

இப்ப யாராவது தூக்கி இருக்கிறீங்களோ? :)

Edited by vasisutha

இராவணன் மீது சீதை கொண்ட காதலால்தான் சீதை இராவணனுடன் இலங்கைக்கு ஓடினாள். சீதையின் விருப்பிற்கிணங்கத்தான் அது நடந்திருக்க வேண்டும். அதன் பின்பு சீதை தன் பிழையையுணர்ந்த போது ராமனிடம் செல்ல முடியவில்லை. அவன் தன் பிழையையுணர்ந்ததினால்தான் இராவணன் அவளைத் தொடவில்லை. இராவணனாகத் தூக்கிவந்திருந்தால் அவள் பலாத்காரம் செய்யப்பட்டேனும் இராவணன் அடைந்திருப்பான். இராவணனின் உயரிய பண்பை இது காட்டுகிறது. ஆகவே கோயில் கட்டுவதற்கு கோட்டார் அனுமதியளிக்க வேண்டும்.

இராவணன் மீது சீதை கொண்ட காதலால்தான் சீதை இராவணனுடன் இலங்கைக்கு ஓடினாள். சீதையின் விருப்பிற்கிணங்கத்தான் அது நடந்திருக்க வேண்டும். அதன் பின்பு சீதை தன் பிழையையுணர்ந்த போது ராமனிடம் செல்ல முடியவில்லை. அவன் தன் பிழையையுணர்ந்ததினால்தான் இராவணன் அவளைத் தொடவில்லை. இராவணனாகத் தூக்கிவந்திருந்தால் அவள் பலாத்காரம் செய்யப்பட்டேனும் இராவணன் அடைந்திருப்பான். இராவணனின் உயரிய பண்பை இது காட்டுகிறது. ஆகவே கோயில் கட்டுவதற்கு கோட்டார் அனுமதியளிக்க வேண்டும்.

ஆகா அற்புதம்! அப்படிப்போடு அரிவாளை.

இராமன்>ஆரியன்

இராவணன்>திராவிடன்

அனுமன்> "றோ" - அந்த குரங்குப்புத்தி இப்பவும் இருக்கு.

Edited by muruga

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லையே!

கருத்து எழுதிப்போட்டு, இப்படி எழுதியிருக்கு என்று அறிவித்தவுடன் "கப்" என்று தணிக்கை செய்திட்டாரே பாடி.

இராமயணமோ பொய் என்று ராமசாமிப் பக்தர்கள் சொல்லும்போது அதைப் பற்றி ஞாபகப்படுத்தியதைத் தணிக்கை செய்வது நல்லா இல்லை பாடி.

Edited by தூயவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.