Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து நாடுகளும் அமைதி வாரியத்தில் இடம்பெற விரும்புவதாக டிரம்ப் கருத்து

January 23, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள ‘அமைதி வாரியம்’ (Board of Peace) அமைப்பிற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்வு, (ஜனவரி 22) ஸ்விட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்றது.

அப்போது பேசிய டிரம்ப், “இது மிகவும் உற்சாகமான நாள், இதற்காக நீண்ட காலமாக திட்டமிடப்பட்டது” என்று கூறினார்.

“எல்லோரும் எனது அமைதி வாரியத்தில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை உட்பட பலருடன் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

‘அமைதி வாரியம்’ உருவாக்கப்பட்டவுடன், “நாம் செய்ய விரும்புவதை ஓரளவிற்குச் செய்ய முடியும். அமைதி வாரியம் மற்றும் ஐ.நா-வின் முயற்சிகளை இணைப்பது உலகிற்கு மிகவும் தனித்துவமானதாக அமையும். இது மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான முதல் படி” என்றும் டிரம்ப் கூறுகிறார்.

தனது உரையை நிறைவு செய்யும் விதமாக, அமைதி வாரியத்திற்கான ஆவணத்தில் கையெழுத்திடுமாறு பஹ்ரைன் மற்றும் மொராக்கோ பிரதிநிதிகளுக்கு டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்தார்.

வாரியத்தின் மற்ற உறுப்பினர்கள் கையெழுத்திட அழைக்கப்படுவதற்கு முன்பு, அவர்கள் மூவரும் சிரித்துக் கொண்டே ஆவணங்களை உயர்த்திப் பிடித்தனர்.

டிரம்ப் தனது உரையின் போது, காஸாவைப் பற்றியும் பேசினார். அங்கிருந்துதான் அமைதி வாரியத்திற்கான திட்டம் தொடங்கியதாக அவர் கூறுகிறார்.

“ஹமாஸ் அமைப்பு அவர்கள் செய்வதாக உறுதியளித்ததை ‘அநேகமாகச் செய்வார்கள்’. அவர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும், அதைச் செய்யவில்லை என்றால், அது அவர்களின் முடிவாக அமையும்” என்றார் டிரம்ப்.

ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, அக்டோபர் 10 அன்று இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர்நிறுத்தம் தொடங்கியதில் இருந்து காஸாவில் குறைந்தது 466 பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

https://www.ilakku.org/trump-says-all-countries-want-to-be-on-the-peace-council/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய அமைப்பில் இணைய சீனா மறுப்பு

Nishanthan SubramaniyamJanuary 22, 2026 6:54 pm 0

டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய அமைப்பில் இணைய சீனா மறுப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய ‘போடர் ஒப் பீஸ்’ Board of Peace என்ற அமைப்பில் இணைவதற்கான அமெரிக்காவின் அழைப்பை சீனா நிராகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையை உறுதியாக ஆதரிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவலை இந்தியாவுக்கான சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Screenshot-2026-01-22-185416.png

அதில், ‘அமைதி வாரியத்தில் இணைவதற்கான அமெரிக்காவின் அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. சீனா எப்போதுமே உண்மையான பலதரப்பு வாதத்தைப் பின்பற்றுகிறது.

சர்வதேச சூழல் எவ்வாறு மாறினாலும், ஐ.நாவை மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்பு, சர்வதேச சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கு, ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளைப் பாதுகாப்பதில் சீனா உறுதியாக இருக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , உலக நாடுகளின் ஆதரவை திரட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், அந்த வாரியத்தில் இணையப் போவதில்லை என்ற முடிவை உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகத் திகழும் சீனா அறிவித்திருக்கிறது. சீனாவின் இந்த முடிவு, ட்ரம்ப்பின் முயற்சிகளுக்கு மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

https://oruvan.com/china-refuses-to-join-the-organization-launched-by-donald-trump/

  • கருத்துக்கள உறவுகள்

619295400_1024190590767326_4811998732722

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.