Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருட்டு பயலைக் காட்டு ஆத்தா - தேங்காய் பூசாரி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

‘‘எங்க ஊருல தொடர்ந்து ஆடுங்க திருட்டு போயிட்டே இருக்கு. திருடனை கண்டுபிடிக்கறதுக்காக

‘தேங்கா பூசாரி’யை கூட்டிட்டு வர ஆள் போயிருக்காங்க.

நீங்க வந்து நேர்ல பாத்து நியூஸ் எழுதுங்களேன்...’’ இப்படி விநோத அழைப்பு

ஒன்று சேலம் மாவட்டம் மாரியம்மன்கோயில் புதூர் என்ற கிராமத்து வாசகரிடமிருந்து

வர, எதிர்பார்ப்போடு புறப்பட்டோம்.

p40aja3.jpg

சேலம் மாவட்டம் வாழப்பாடியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் உள்வாங்கியிருக்கும்

குக்கிராமம்தான் மாரியம்மன்கோயில் புதூர்.

முதலில், ஆடுகளைப் பறிகொடுத்த பெருமாளிடம் பேச்சுக் கொடுத்தோம்.

‘‘எங்க ஊரே விவசாயத்தை நம்பிதாங்க இருக்கு. காட்டுல மேட்டுல சுத்தும்போது

பூச்சி பொட்டு தீண்டிப் புடக் கூடாதுங்குறதுக்காக எங்க குலதெய்வத்துக்கு ஆட்டு

கெடா நேந்து விடுவோம். நானும் நாலு வருஷமா ரெண்டு கெடா வளர்த்து வந்தேன்.

நல்லா கொழுகொழுனு வளர்ந்திருந்துச்சு.

போன வாரத்துல அந்த ஆடுங்களை காணோம். தொடர்ந்து ஒரு வாரமாவே இப்படி

அடுத்தடுத்து ஆடுங்க திருட்டு போயிட்டே இருக்கு. எல்லாமே சாமிக்கு நேந்து

விட்டதுங்க. ஏதாவது சாமி குத்தமாயிடுமோன்னு எங்களுக்கு பயமா இருக்கு.

திருடனைக் கண்டுபுடிக்க விழுப்புரத்துல இருந்து தேங்காய் உருட்டி பூசாரி

வர்றாராம்’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே...

ஊருக்குள் ஒரு மினி பஸ் வந்துநின்றது. அதில் ஊர்க்காரர்கள் புடைசூழ வந்து

இறங்கினார் ‘தேங்காய் பூசாரி’. சுமார் அறுபது வயது இருக்கும். நரைத்த தலை.

மழுக்க ஷேவ் செய்த முகம். நெற்றியில் பட்டை. வெளிர் மஞ்சள் நிறச்சட்டை.

வெள்ளை வேட்டி. இடுப்பில் ஒரு துண்டு. கையில் டைட்டன் வாட்ச். இதுதான்

தேங்காய் பூசாரி!

ஊருக்கு மத்தியில் உள்ள கோயிலுக்குப் பக்கத்தில் அமர்ந்துகொண்ட பூசாரி,

‘‘மட்டை உரிச்ச, ஆனா நாறெல்லாம் முழுசா உரிக்காம ஒரு தேங்காயை கொண்டு

வாங்க...’’ என்று உத்தரவு போட்டார். தான் கொண்டு வந்திருந்த பையிலிருந்து

மஞ்சள், குங்குமம், கற்பூரம், பத்தி, வாழைப்பழம், பொரிகடலை என பூஜைப்

பொருட்களையும் வெளியே எடுத்து வைத்தார்.

அதற்குள் மட்டை உரித்த தேங்காய் வந்து சேர, அந்த தேங்காய்க்கு மஞ்சள்

பூசி, குங்குமம் வைத்தார். பிறகு அதற்கு கற்பூர ஆராதனை காட்டி, இடுப்பில்

செருகி வைத்திருந்த ஒரு தகட்டை எடுத்து மடித்து, நூல் ஒன்றில் கோத்து அதில்

கட்டி விட்டார். சாம்பிராணியை புகைய விட்டு, ‘ஓம்... தேங்காய் சாமி... க்ரீம்...

க்ரீம்...’ என மந்திரம்(?) சொல்ல ஆரம்பிக்க... ஊர்க்காரர்கள் பயபக்தியோடு

கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள்.

‘‘என்கிட்ட இருக்கிற சக்தியை வச்சி, ஆத்தாவை இந்தத் தேங்காய்க்குள்ள

அடக்கியிருக்கேன். ஊருல இருக்கிற நல்ல மனுஷனுங்க நாலு பேரு வாங்க.

இந்த ஆத்தாவை (தேங்காயைதான்!) நடு ரோட்டுல கொண்டு போய் வச்சி, நாலு

பேரும் சேர்ந்து கையால உருட்டி விடுங்க. அந்தத் தேங்காய் எந்த வூட்டுக்கு

முன்னாடி போய் நிக்குதோ அந்த வீட்டுலதான் திருட்டுப் பய இருக்கான்’’ என்று

சொன்ன பூசாரி, ‘‘ம்... உருட்டுங்க, உருட்டுங்க. ஆத்தா! திருட்டு பயலைக்

காட்டு ஆத்தா...’’ என குரல் கொடுத்தபடியே வந்தார்.

p41aec7.jpg

அந்த நால்வரும் தேங்காயை வேகமாய் உருட்டி விட, க்ளைமாக்ஸாய்... அது

ஒரு வீட்டு வாசல் பக்கம் போய் நின்றது. ‘‘இந்த வூட்டுலதான் திருடன் இருக்கான்’’

என்று பூசாரி சொல்ல, அந்த வீட்டுக்காரர் கடுப்பாகி விட்டார். ‘‘யோவ்! மரியாதையா

போயிடு. இல்ல, நடக்குறதே வேற’’ என்று கத்த, ஊர்க்காரர்கள் தங்களுக்குள்

கிசுகிசுத் தபடியே, பூசாரி உத்தரவுப்படி மீண்டும் தேங்காயை உருட்ட ஆரம்பித்தார்கள்.

அது மறுபடியும் இன்னொருவர் வீட்டில் போய் நின்றது.

‘‘சாமி... எங்க வீட்டுலதான் ஆடே திருடு போச்சு’’ என்று அந்த வீட்டுக்காரர்

அதிர்ச்சியாடு சொல்ல, ‘என்னடா இப்படி காமெடியாகிப் போச்சே...’ என்ற ரீதியில்

நெற்றியை சுருக்கிய பூசாரி, ‘‘ஆத்தா உன்னை ஆடு திருடு போன வீட்டைக் காட்டச்

சொல்லலை. ஆடு திருடினவன் வீட்டைத்தான் காட்டச் சொன்னேன். காட்டு, ஆத்தா

காட்டு...’’ என்று சமாளித்தார். இப்படியே உருட்டி விட்ட தேங்காய் நாலைந்து

வீட்டுக்குப் போக, அதிலும் ஆடு திருட்டுக் கொடுத்தவர்களின் வீடுகளும் இருக்க...

அவர்கள் ஏகத்துக்கும் உஷ்ணத்தைக் காட்டவே, 'ஆத்தா' ரிவர்ஸ் கியரில் வர

ஆரம்பித்தாள்.

இதனால் கொஞ்சம் கலங்கிப் போன பூசாரி, ‘‘இதோ பாருங்க... ஆத்தா காட்டுன

வீடுகள்ல யாரோ ஒருத்தருதான் ஆடு திருடியிருக்கீங்க. இன்னும் ஒருவாரத்துல

அதை ஒத்துக்குங்க. இல்லேன்னா, ரத்த வாந்தியெடுத்து செத்துடுவீங்க’’ என்று

எச்சரித்துவிட்டு, உருட்டி வந்த தேங்காயை நடுரோட்டில் போட்டு உடைத்தார்.

தேங்காய் பூசாரியிடம் பேச்சுக் கொடுத்தபோது, ‘‘தேங்கா பூசாரினா விழுப்புரத்துல

தெரியாதவங்களே கிடையாது. எங்க அப்பா காலத்துல இருந்தே நாங்க இதே

தொழில்தான் செஞ்சிட்டு இருக்கோம். தேங்கா பூசாரிகிட்ட வந்தா எப்படியும்

திருடனை புடிச்சிடலாம்னு எல்லோருக்குமே தெரியும். பல தடவை போலீஸ்காரங்களே

திருடனை கண்டுபிடிச்சி தரச்சொல்லி என்கிட்ட வந்திருக்காங்க. என்னோட

தேங்கா தப்பா வழி காட்டுனதே இல்லை. இன்னைக்குக்கூட சரியாத்தான் காட்டியிருக்கு.

இன்னும் ஒரு வாரத்துல உண்மை வெளியே வரும். அப்போ என்னை யாருனு

தெரிஞ்சுக்குவீங்க’’ என்று சமாளித்தபடி அமைதியாகி விட்டார்.

வாழப்பாடி காவல் நிலைய ஆய்வாளர் முத்தழகுவிடம் பேசியபோது, ‘‘அந்த ஊருல

ஆடு திருட்டு போன விஷயமே எனக்கு இப்பதான் தெரியும். யாரும் என்கிட்ட புகாரே

கொடுக்கலை. சாமியாரு வந்து தேங்காயை உருட்டிக் கண்டுபிடிக்கிறதா

பேசிக்கிட்டாங்க. அந்த சாமியாரு யாரு என்னனு விசாரிச்சிட்டு இருக்கோம்.

கம்ப்யூட்டர், இன்டர்நெட்னு ஒரு பக்கம் உலகம் எங்கேயோ போயிட்டு இருக்கு.

இவங்க என்னடானா மந்திரவாதி, சாமியார்னு போயிட்டு இருக்காங்க. இவங்களை

எப்படி திருத்தறதுனே தெரியலை சார்...’’ என்று வருத்தத்தோடு சொன்னார்.

ஆறுதலாகவும், தேறுதலாகவும், பயமுறுத்தாத அணுகுமுறையோடு போலீஸ்

இருந்துவிட்டால்... அப்பாவி மக்கள் ஏன் இந்த மாதிரி 'மாங்கா தேங்கா'

சாமிகளையெல்லாம் நாடி ஓடப் போகிறார்கள்!

www.vikatan.com/jv

Edited by pepsi

அடபாவிங்களா இந்த வேல்ட் எங்கையோ போய் கொண்டு இருக்கு நீங்க என்னுமா தேங்காயை உருட்டி ஆட்டை கண்டுபிடிக்கிறீங்க முடியல...........!!

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ் -

":கேட்கிறவன் கேணையனா இருந்தா தேங்காய் ஏரோபிளேன் ஒட்டும்"

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலின் சுண்டல்......

தேங்காய மனுஷனால உருட்ட முடியுமு; ஆனா? தேங்காயால மனுஷன உருட்ட முடியுமா?

சுண்டலின் சுண்டல்......

தேங்காய மனுஷனால உருட்ட முடியுமு; ஆனா? தேங்காயால மனுஷன உருட்ட முடியுமா?

அட என்ன ஒரு அறிவு சுண்டல் அண்ணாவிற்கு.......... :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு மட்டும் தெரியும் நீ........

உனக்கு மட்டுமே தெரியும் நான்!!இதய துடிப்புகள் மட்டுமே எம் வார்த்தை...........!!

ஜம்மு பேபி!!

":கேட்கிறவன் கேணையனா இருந்தா தேங்காய் ஏரோபிளேன் ஒட்டும்"

ஜம்மு பேபி பஞ் -

:lol::):o

showletternu4.gif

கு.சா தாத்தா சினிமா படத்தில யாரும் சொன்னா கையை தட்டுவீங்க :lol: பாவம் பேபி மேல படத்தில இருக்கிற நாயிற்கும்,பூனைக்கும் இந்த டயலக்கை போட்டா இப்படி எல்லாம் சொல்லுறீங்க நேக்கு அழுகை........அழுகையா வருது :D !!ஆனாலும் தாத்தாவை போய் கே.........யன் என்று நான் சொல்லுவனோ! :lol: !

அப்ப நான் வரட்டா!!

:lol: என்ன தேங்காய் சாமியார் திருடனை கண்டுபிடிச்சிட்டாரே? அவற்ரை விலாசம் வேண்டும், வேலையில யாரே என்ர பவர்பக்கை திருடிப்போட்டாங்கள்

"ஆனாலும் தாத்தாவை போய் கே.........யன் என்று நான் சொல்லுவனோ!"

அப்பிடிப் போடு அரிவாளை! :lol:

சுண்டலின் சுண்டல்......

தேங்காய மனுஷனால உருட்ட முடியுமு; ஆனா? தேங்காயால மனுஷன உருட்ட முடியுமா?

தேங்காயால மனுசர உருட்டமுடியாது ஆனா மண்டையில போடலாமெல்லா

:D என்ன தேங்காய் சாமியார் திருடனை கண்டுபிடிச்சிட்டாரே? அவற்ரை விலாசம் வேண்டும், வேலையில யாரே என்ர பவர்பக்கை திருடிப்போட்டாங்கள்

கவிஅக்கா பவர்பக் மட்டும் தான் காணம போயிருக்கு :lol: உந்த சாமியாரின்ட விலாசத்திற்கு போனீங்க என்றா உங்க சொத்தே காலி தான் எது வசதி!! :lol:

அப்ப நான் வரட்டா!!

அப்பிடிப் போடு அரிவாளை! :D

:D

தேங்காயால மனுசர உருட்டமுடியாது ஆனா மண்டையில போடலாமெல்லா

இது சிவா அண்ணாவின் சுண்டல்!! :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பிடிப் போடு அரிவாளை! :rolleyes:

:rolleyes::rolleyes::unsure::):(:(:D:D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

showletternu4.gif

கு.சா தாத்தா சினிமா படத்தில யாரும் சொன்னா கையை தட்டுவீங்க :( பாவம் பேபி மேல படத்தில இருக்கிற நாயிற்கும்,பூனைக்கும் இந்த டயலக்கை போட்டா இப்படி எல்லாம் சொல்லுறீங்க நேக்கு அழுகை........அழுகையா வருது :D !!ஆனாலும் தாத்தாவை போய் கேணையன் என்று நான் சொல்லுவனோ! :rolleyes: !

அப்ப நான் வரட்டா!!

:rolleyes::rolleyes::unsure::):(

:lol::):):lol::lol:

கு.சா தாத்தா நான் புள்ளி புள்ளி போட்ட இடத்தில யாரோ "ணை" வை போட்டுவிட்டாங்க நிசமா நான் இல்லை பிறகு என்னோட கோவிக்க கூடாது சொல்லிட்டேன்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சா தாத்தா நான் புள்ளி புள்ளி போட்ட இடத்தில யாரோ "ணை" வை போட்டுவிட்டாங்க நிசமா நான் இல்லை பிறகு என்னோட கோவிக்க கூடாது சொல்லிட்டேன்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

சீச்சீ இதிலை கோவிக்கிறதுக்கு என்ன இருக்குதடா செல்லம்? இப்ப என்ன விசயமெண்டால் இவ்வளவுகாலமும் நான் மட்டுந்தான் இஞ்சை கேணையனாய் இருந்தனான்.இப்பதானே தெரியுது என்னைவிட இன்னுமொரு மஹாகேணையர் ஒருத்தர் இருக்கிறார்.அவரை நினைக்க சிரிப்புசிரிப்பா வருது.அவர் யார் தெரியுமோ???அவர்தான் அரிவாளை அப்பிடிப்போடு,இப்பிடிப்போடு எண்டு சொன்னாரே அவர்தான்........அவர்களின் செயல்களும் கருத்துக்களும் எல்லாமே பெயரளவில்தான் அவர்களின் பெயரைப்போல :o:icon_idea::lol::lol:

சீச்சீ இதிலை கோவிக்கிறதுக்கு என்ன இருக்குதடா செல்லம்? இப்ப என்ன விசயமெண்டால் இவ்வளவுகாலமும் நான் மட்டுந்தான் இஞ்சை கேணையனாய் இருந்தனான்.இப்பதானே தெரியுது என்னைவிட இன்னுமொரு மஹாகேணையர் ஒருத்தர் இருக்கிறார்.அவரை நினைக்க சிரிப்புசிரிப்பா வருது.அவர் யார் தெரியுமோ???அவர்தான் அரிவாளை அப்பிடிப்போடு,இப்பிடிப்போடு எண்டு சொன்னாரே அவர்தான்........அவர்களின் செயல்களும் கருத்துக்களும் எல்லாமே பெயரளவில்தான் அவர்களின் பெயரைப்போல :lol::lol::lol::D

அப்ப செல்லத்தோட தாத்தாவிற்கு கோபம் இல்லை அதுவரைக்கும் சந்தோசம் தாத்தா!! :wub: யாரை சொல்லுறியள் கு.சா தாத்தா ஏனேன்ற 2,3 பேரின்ட கையில அரிவாள் இருக்குதல்லோ :D அது தான் ஒரே கொன்வியூசனா இருக்கு...... :D

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.