Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாப்பிள்ளை மீது பரபரப்பு புகார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிள்ளை மீது பரபரப்பு புகார்

Monday, 19 November, 2007 02:31 PM

.

சென்னை, நவ. 19: அமெரிக்காவில் வரதட்சணை கொடு மைக்கு ஆளாகி, ஓடும் காரிலிருந்து தள்ளிவிடப்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ள தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என அப்பெண்ணின் தந்தை செபாஸ்டின் கூறியுள்ளார்.

.

இன்று சென்னையில் நிருபர்களை சந்தித்த செபாஸ்டின் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி கண்ணீர் மல்க கூறியதாவது: என் பெயர் செபாஸ்டின். நான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள் ளேன். என் மனைவி பெயர் ஒபிலியா. அவர் ஓய்வு பெற்ற ஆசிரியை. எங்களுக்கு ஸ்டான்லி ஜெரால்டு, ஜெஸ்டின் வசுந்தர ராஜ் என்ற இரண்டு மகன்களும், ஸ்மலின் ஜெனிட்டா என்ற மகளும் உள்ளனர்.

நாங்கள் திருச்சி, பாலக்கரையில் வசித்து வருகிறோம். என் மகள் ஜெனிட்டா (வயது 23) எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அப்பொழுது நாங்கள் இணைய தளம் மூலம் எங்கள் மகளுக்கு வரன் தேடிக் கொண்டிருந்தோம்.

அப்பொழுது அமெரிக்காவில் இன் போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கிறிஸ்து டேனியல் என்பவர் பற்றி தகவல் கிடைத்தது. திருச்சி காட்டூர் புரத்தில் அவர்களது குடும்பம் வசித்து வந்தது. கிறிஸ்து டேனியலின் தந்தை பெயர் சேவியர். தாயார் பெயர் செல்லம்.

அவர்க ளுக்கு நீமா என்ற ஒரு மகள் உள்ளார். அவர் தனது கணவருடன் அமெரிக்காவில் வசித்து வந்தார். என் மகள் ஜெனிட்டாவிற்கும், கிறிஸ்து டேனிய லுக்கும் திருமணம் செய்வதென்று நிச்சயம் செய்தோம். இருவீட்டாரும் கலந்து பேசி 50 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் வரதட்சணையாக தர ஒப்புக் கொண்டேன்.

நாங்களும் கல்யாணப் பத்திரிகை அடித்து உறவினர் அனைவருக்கும் கொடுத்தோம். அந்த சமயத்தில் கிறிஸ்து டேனியலின் பெற்றோர் எங்களை அழைத்து மேலும் 25 சவரன் நகையும், ரூ.4 லட்சம் ரொக்கப் பணமும் தந்தால் தான் திருமணம் நடைபெறும் என கூறினர். இதற்கு நான் மறுத்துவிட்டேன்.

அதற்கு அவர்கள், அப்படியென்றால் திருமணம் நடைபெறாது என மிரட்டினர். கல்யாணப் பத்திரிகை அடித்து ஊரெல் லாம் கொடுத்த பிறகு திருமணத்தை நிறுத்தச் சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று நான் கேட்டேன். பிறகு மேலும் ஒரு லட்சம் மட்டும் வரதட்சணை யாக தர ஒப்புக் கொண்டேன். ரூ.2 லட்சம் செலவு செய்து மிகவும் ஆடம்பரமாக திருமணத்தை நடத்தி னேன்.

28.8.2006 அன்று எனது மகளுக்கும், கிறிஸ்து டேனியலுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணமான ஒரே வாரத்தில் டேனியல் அமெரிக்கா சென்றுவிடடார். என் மகள் அவரது மாமியார் வீட்டில் தங்கியிருந்தார்.

அங்கு அவர் தங்கியிருந்த மூன்று மாத காலமும் சொல்லொணாத கொடுமை களுக்கும், சித்ரவதைகளுக்கும் ஆளானார். இதுபற்றி தொலைபேசியில் எங்களிடம் அவர் பேசும்போதெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் இந்தியா திரும்பிய டேனி யல், எனது மகளை அமெரிக்கா அழைத்து செல்வதாக கூறினார். 25.3.2007 அன்று டேனியலுடன் அமெரிக்கா சென்றார். அவர்களுடன் டேனியலின் தாயாரும் அமெரிக்கா சென்றார்.

முதலில் அடிக்கடி தொலைபேசியில் எங்களை தொடர்பு கொண்டு ஜெனிட்டா பேசி வந்தார். பின்னர் நீமாவின் கொடுமைகளுக்கு ஆளாகி தொலை பேசியில் பேசுவது படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் ஒக்கியோ என்ற இடத்திலிருந்து கிரீன் வெல் என்ற இடத்திற்கு டேனியல் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

அங்கு அவர்கள் காரில் செல்லும் போது எனது மகளை அடித்து, உதைத்து ஓடும் காரிலிருந்து கீழே தள்ளியுள்ளனர். படு காயம் அடைந்த எனது மகள் யாரோ ஒருசிலரால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் மருத்துவமனைக்கு சென்ற டேனியல், இந்தியாவிலிருந்து யார் தொடர்பு கொண்டு பேசினாலும் ஜெனிட்டா அடிபட்டிருப்பது பற்றி தகவல் தெரிவிக்கக் கூடாது என் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெனிட்டாவின் பெற்றோர் என்று யாரோ சிலரை செல்போனில் மருத்துவர்களிடம் பேச வைத்து ஆள் மாறாட்டம் செய்துள்ளார். மருத்துவமனையில் ஜெனிட்டா சேர்க்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பிறகு அங்கிருக்கும் எங்களது நண்பர்கள் ஜெனிட்டா பற்றி தகவல் கொடுத்தனர்.

இதன் பின்னர் 27.9.2007 அன்று நான் அவசரம் அவசரமாக அமெரிக்கா சென்றேன். மருத்துவமனையில் எனது மகள் மட்டும் அனாதைபோல் படுக்கையில் இருந்தார். மாப்பிள்ளையும், அவரது வீட் டாரும் அங்கு வரவேயில்லை. நான் என் மகளை இந்தியா அழைத்து வந்து விட்டேன்.

இதற்கிடையில் தனது மனைவிக்கு விபத்து ஏற்பட்டிருப்பதாக கூறி டேனியல், இந்தியாவில் இருக்கும் இன்போசிஸ் ஊழியர்களிடம் ரூ.3 லட்சம் வரை வசூல் செய்துள்ளார். அந்த பணத்தையும் தனது அம்மாவின் வங்கிக் கணக்கில் சேர்த்துள்ளார்.

தற்போது என் மகள் ஆறரை மாத கர்ப்பி ணியாக உள்ளார். கடந்த பத்து தினங்க ளுக்கு முன்பு அவருக்கு சுயநினைவு வந்தது. அப்போது தனக்கு நடந்த கொடு மைகளை கூறி ஜெனிட்டா அழுதார். பின்னர் மீண்டும் கோமா நிலைக்கு சென்று விட்டார். சுயநினைவு திரும்பவதும், போவதுமாக இருந்து வருகிறார்.

இதற்கிடையில் அமெரிக்கா செல்வ தற்கு முன்பு எனது மகள் எங்களுக்கு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில் தனது கணவருக்கும், அவரது தாயாருக்கும் தகாத உறவு இருப்பதாகவும், அதனை தான் கண்டித்ததாலேயே தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் எழுதியிருந்தார் (கடிதத்தின் நகலை செபாஸ்டின் நிருபர்களிடம் காண்பித்தார்).

பேராசை பிடித்து வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்திய டேனியலுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும். எனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். எனது மகளை கொடுமைப் படுத்திய அவரது கணவர் டேனியல், மாமியார் செல்லம், நாத்தனார் நீமா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு செபாஸ்டின் கூறினார்.

http://www.maalaisudar.com/newsindex.php?i...mp;%20section=1

எங்கட கலைஞனா இப்படி செய்தது...??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கட கலைஞனா இப்படி செய்தது...??

கலைஞன் இல்லைங்க ஒரு ஆண் செய்தது :lol:

என்ன கொடுமை இது அமெரிக்காவிலை இருந்து கொண்டும் சீதனமா என்னால முடியல :D இப்படி எல்லாம் ஆண்கள் இருக்கிறார்களா எங்கே நெடுக்ஸ் தாத்தா..........!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"காசு இன்றைக்கு போகும் நாளைக்கு வரும் உயிர் போனா வருமா"

கலைஞன் இல்லைங்க ஒரு ஆண் செய்தது

கறுப்பி அக்கா அப்ப நம்ம கலைஞன் வந்து ஆண் இல்லையா மறுபடி என்னை குழப்பியாச்சு!! :lol:

பெண்வீட்டார் பொன்முட்டையிடும் வாத்து என நினைச்சிட்டார்கள் போலும்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா மாப்பிள்ளை வேணுன்னு போகைக்க யோசிக்கனும். அதைவிட்டிட்டு.. பேராசைப்பட்டு வசமா மாட்டுப்பட்டிட்டு.. ஆண்கள் மீது குற்றம் சாட்டி என்ன பயன்..!

பெண்கள் பேராசையை குறைச்சு நிதானமான சிந்திச்சா இவற்றைத் தவிர்க்கலாம். பேராசை நிராசையானதும் ஆண்களைத் திட்டி பிரயோசனமில்ல. பெண்கள் புத்திசாலித்தனமா நடக்க அறிவை வளர்த்துக்கிறதும் அதன் படி வாழுறதும் தான்... இதுக்கு தீர்வு. எல்லாம் அவங்க கையிலதான் இருக்கு. ஆண்கள் கையில எதுவுமில்ல..! :rolleyes:

இப்படியான ஆண் கிடைப்பின் பெண்ணுக்கு துணிச்சல் தைரியம் வேணும். நானாக இருந்தால் ஏதோ ஒரு வழியில் கொலை செய்துடுவேன். என்னையல்ல. என்னை கொடுமைப்படுத்துவோரை. முக்கியமாக கல் என்ற கணவனை

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான ஆண் கிடைப்பின் பெண்ணுக்கு துணிச்சல் தைரியம் வேணும். நானாக இருந்தால் ஏதோ ஒரு வழியில் கொலை செய்துடுவேன். என்னையல்ல. என்னை கொடுமைப்படுத்துவோரை. முக்கியமாக கல் என்ற கணவனை

கொஞ்சம் யோசிச்சு தான் இனி நடக்க வேண்டும். :rolleyes::rolleyes::rolleyes:

எங்கட கலைஞனா இப்படி செய்தது...??

:rolleyes: ஆ ஐயோ நான் சீதனம் எல்லாம் வாங்க மாட்டன்.

கலைஞன் இல்லைங்க ஒரு ஆண் செய்தது :unsure:

ஓம் சரியாச் சொன்னீங்கள். கலைஞன் எண்டிறது ஆண்பால் இல்லை தானே? பெண் கலைஞர்களை எப்பிடி சொல்லிறது? கலைஞை எண்டா? இல்லைதானே? கலைஞன் எண்ட சொல்லு ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும்.

எண்டாலும் கறுப்பி அக்கா நான் ஒரு ஆண் கலைஞன். பெண் கலைஞன் இல்லை. வதந்தி கிளப்பாதிங்கோ. :rolleyes:

கறுப்பி அக்கா அப்ப நம்ம கலைஞன் வந்து ஆண் இல்லையா மறுபடி என்னை குழப்பியாச்சு!! :rolleyes:

ஹிஹி.. எங்களிக்க சண்டை வேண்டாம். எங்களுக்க நாங்கள் இருவரும் தொடர்ந்து பெண்களாகவே இருப்போம். :):(

இப்பிடி எல்லாம் நடக்கும் எண்டு நினைச்சுத்தான் நான் எண்ட பெயர மாப்பிளை எண்டு இருந்து கலைஞன் எண்டு மாத்திப்போட்டன்.

போறவன், வாறவன் செய்யுற சேட்டைகள் எல்லாம் கடைசியில எண்ட தலையில விழப்பாக்கிது.

கொஞ்சம் யோசிச்சு தான் இனி நடக்க வேண்டும். :rolleyes::rolleyes::rolleyes:

:unsure::):(

ஹிஹி.. எங்களிக்க சண்டை வேண்டாம். எங்களுக்க நாங்கள் இருவரும் தொடர்ந்து பெண்களாகவே இருப்போம். :wub::)

இப்பிடி எல்லாம் நடக்கும் எண்டு நினைச்சுத்தான் நான் எண்ட பெயர மாப்பிளை எண்டு இருந்து கலைஞன் எண்டு மாத்திப்போட்டன்.

போறவன், வாறவன் செய்யுற சேட்டைகள் எல்லாம் கடைசியில எண்ட தலையில விழப்பாக்கிது.

இதுவும் நல்லா தான் இருக்கு குருவே எங்களுகுள் சண்டை வேண்டாம் சரி சரி எனி இதை பற்றி கேட்கவில்லை :) ........"பெண்களாக இருப்பது எவ்வளவு கஷ்டம் குருவே"!! :lol:

அப்ப நான் வரட்டா!!

இதுவும் நல்லா தான் இருக்கு குருவே எங்களுகுள் சண்டை வேண்டாம் சரி சரி எனி இதை பற்றி கேட்கவில்லை :) ........"பெண்களாக இருப்பது எவ்வளவு கஷ்டம் குருவே"!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு ஜம்மு பெண் பெயரில் இருப்பதும் கஸ்டமோ ஜம்மு? :wub:

ஜம்மு ஜம்மு பெண் பெயரில் இருப்பதும் கஸ்டமோ ஜம்மு? :wub:

அந்த கதையை ஏன் கேட்பான் இப்ப ஒகே பிளாஸ்பக்கை நினைத்து பார்த்தா நேக்கு சிரிப்பி சிரிப்பா வருது :) ..........(பிளாஸ்பக் மீண்ஸ் யாழ்களத்தில் :lol: )

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த கதையை ஏன் கேட்பான் இப்ப ஒகே பிளாஸ்பக்கை நினைத்து பார்த்தா நேக்கு சிரிப்பி சிரிப்பா வருது :lol: ..........(பிளாஸ்பக் மீண்ஸ் யாழ்களத்தில் :wub: )

அப்ப நான் வரட்டா!!

எங்களுக்கு சொன்னா நாமும் சிரிப்போம் ல்ல

எங்களுக்கு சொன்னா நாமும் சிரிப்போம் ல்ல

கறுப்பி அக்கா அது ஒரு அழகிய நிலா காலம் :wub: ஜம்மு பேபிக்கு எத்தனை லெட்டர்ஸ் வந்திருக்கும் அதை எல்லாம் இதில சொன்னா இணையவன் அண்ணா கத்தியோட வந்திடுவார் :lol: .........அது தான் சொல்லவில்லை சோ உங்கள் அனைவரிலும் சார்பில் நானே சிரித்து கொள்கிறேன்!! :)

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.