Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியா, சர்வதேச சமூகம் இலங்கை மீது அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும். தவறின் வாயை மூடுவதே நல்லது.- சுரேஷ் பிரேமச்சந்திரன்

Featured Replies

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களது உறவினர்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஜனநாயகம், தனி மனித உரிமை, நாடாளுமன்ற சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட வேண்டும், என அறிக்கை விடும் சர்வதேச அமைப்புகள் இதனை செய்ய முடியா விட்டால் இந்தியா உட்பட சர்வதேச அமைப்பபுகள் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்.

இவ்வாறு த.தே.கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா சுரேஷ் பிரேமச்சந்திரன் காட்டமாக கூறினார்.

நேற்று நாடாளுமன்றக் கூட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும்:-

வரவு செலவு திட்ட இரண்டாவது வாசிப்பின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பனர்களின் உறவினர்களை கடத்தி வாக்கெடுப்பில் கலந்து கொள் விடாமல் தடுத்தவர்கள், டிசம்பர் 14ம் திகதி நடைபெறவுள்ள இறுதி வாக்கெடுப்பில் கலந்து கொள்பவதைத் தடுக்க நடாடாளுமன்ற உறுப்பினர்களையும் கடத்தி தடுத்து வைக்கலாம். இலங்கை அரசு அதனைத் தடுக்கும் நிலையில் இல்லை.

எனவே, இந்தியா உட்பட சர்வதேச சமூகம் இவ்வாறான சம்பவம் மீண்டும் ஏற்படாமல் தடுக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அதனையும் மீறி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், உறவினர்களும் கடத்தப்பட்டால் ஜனநாயகம், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அறிக்கை விடும் சர்வதேச சமூகம் வாயை மூடிக் கொள்ள வேண்டும்.

அவர்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பேசும் அருகதையை இழந்து விட்டதாகக் கருதுகிறோம்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் அரச பொலிஸார் காவல் கடமையில் இருக்கும் போதே அங்கு சென்ற துணைப்படையினர் நாடாளுனமன்ற உறுப்பினரின் மருமகனைக் கடத்திச் சென்றனர். இதோடு நின்று விடவில்லை. எமது உறுப்பினர்களான தங்கேஸ்வரி, அரியநேத்திரன் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அங்கு கடமையிலிருந்த பொலிசாரை அகற்றியுள்ளனர். அதன் பின்னர் அங்கு சென்ற துணைப்படையினர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இவை அனைத்தும அரச மேலிடத்தின் உத்தரவின் பேரில் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரின் மேற்பார்வையின் கீழேயே இடம் பெற்றுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதைத் தடுப்பதற்காக உறவினர்களைக் கடத்தியவர்கள் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களைளுயும் கடத்தித் தடுத்து வைக்க இடமுண்டு. உரிய நேரத்தில் இக்கடத்தல் தொர்பாகவும் துணைப்படையினரின் அராஜகம் தொடர்பாகவும் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அறிவித்தோம். ஆனால் அவர்களால் கடத்தியவரை விடுவிக்க எந் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கான தைரியமும் இல்லை.

எனவே இந்தியாவும் சர்வதேச அமைப்புகளும் இவ்வாறன கடத்தல்களைத் தடுக்க இலங்கை அரசுக்கு அழுதம் கொடுக்க வேண்டும் என சர்வதேச அமைப்புகளுக்கு கோரிக்கை விடுகின்றோம். என்றார்.

நன்றி சுடர் ஒளி

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களது உறவினர்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஜனநாயகம், தனி மனித உரிமை, நாடாளுமன்ற சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட வேண்டும், என அறிக்கை விடும் சர்வதேச அமைப்புகள் இதனை செய்ய முடியா விட்டால் இந்தியா உட்பட சர்வதேச அமைப்பபுகள் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்.

நன்றி சுடர் ஒளி

தமிழர் தரப்பு தன்னையும் தன் மக்களையும் தமது எல்லைகளுக்குட்பட்ட நிலப் பரப்புகளையும் பர்துகாக்கும் வலிமையுடன் உள்ளது என்பதை இந்தியாவிற்கும் சர்வதேசத்திற்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் .

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்து. அதே போல இந்தியா இல்லாமல் ஆகாது என்று தலையில் தூக்கி வைத்து ஆடும் கைங்கரியத்தையும் ஈழத்தமிழர்கள் கைவிட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகச் சொன்னீர்கள் ஜுச்டின். இந்தியாவை இன்னும் நாம் நம்பிக்கொண்டு இருப்பதால் எமக்கு இழப்புகள் அதிகமாகுமே தவிர குறையப்போவதில்லை. ஏனென்றால் இந்தியா எமது எதிரியின் பக்கம் சாய்ந்து நீண்ட நாளாயிட்டுது. இந்தியாவிடமிருந்துதான் எதிரி நவீன ராடர்களையும், விமான உதிரிப்பாகங்களையும், ஆழ்கடல் ரோந்துக்கப்பல்களையும், பங்கர்களை அழிக்கும் குண்டுகளையும் வாங்கியிருக்கிறான். இவற்றில் பெரும்பாலானவை இலவசமாகக் கிடைத்தவை.......................நாங்கள் இன்னும் இந்தியாவை நம்பிக்கொண்டு இருக்கிறோம் கழுத்தில் இந்தியா கொடுக்கும் கயிறு இறுக்கிக்கொண்டு இருக்கும்போதும் !!!

நல்ல கருத்து. அதே போல இந்தியா இல்லாமல் ஆகாது என்று தலையில் தூக்கி வைத்து ஆடும் கைங்கரியத்தையும் ஈழத்தமிழர்கள் கைவிட வேண்டும்.

தங்களை விட ஆக்கள் இல்ல என்ட நினைப்பு (இந்தியாக்கு)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.