Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர் நிறுத்த ஒப்பந்தத்தை அதிகாரபூர்வமாக, உடனடியாக இரத்துச் செய்ய ஜே.வி.பி. வலியுறுத்தல்

Featured Replies

போர் நிறுத்த ஒப்பந்தத்தை அதிகாரபூர்வமாக, உடனடியாக இரத்துச் செய்ய ஜே.வி.பி. வலியுறுத்தல்

[புதன்கிழமை, 28 நவம்பர் 2007, 07:14 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் உடனடியாக அதிகாரபூர்வமாக இரத்துச்செய்ய வேண்டும் என்று ஜே.வி.பியினர் இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர்.

ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை பேசியதாவது:

பிரபாகரன் தனது உரையில் தனிநாட்டை உருவாக்கித் தருமாறு அனைத்துலகத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தேசத்துரோக செயல் ஆகக்கருதப்பட்ட போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காரணமான நோர்வே என்ற போலி சமாதான செயற்பாட்டு நாட்டிடமும் இணைத்தலைமை என்று தன்னை அடையாளப்படுத்தும் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளிடமுமே பிரபாகரன் இந்த கோரிக்கையை விடுத்திருக்கிறார்.

ஏகாதிபத்தியவாதிகளால் கிழக்கு தீமோர் பிரிக்கப்பட்டதற்குக் காரணம் எண்ணெய் வளமே.

அந்த வளத்தை சுரண்டவே இந்தோனேசியாவில் இருந்து கிழக்குத் தீமோரை பிரித்தனர்.

தற்போது சேர்பியாவுக்குச் சொந்தமான கொசோவாவையும் ஐக்கிய நாடுகள் சபை பிரிப்பதற்கு நேட்டோ என்ற ஏகாதிபத்தியமே காரணமாகும்.

இப்படி தனக்கும் தனிநாட்டை உருவாக்கி தருமாறு பிரபாகரன் ஏகாதிபத்தியவாதிகளிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

மேலும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அரசாங்கம் தகர்த்து விட்டதாகவும் அதற்கு இனிமேல் புலிகள் பதில் சொல்லத்தேவையில்லை என்றும் அவர் தனது உரையில் மறைமுகமாக கூறியிருக்கிறார்.

அதாவது போர்நிறுத்த ஒப்பந்தத்தை அரசாங்கமே தகர்த்துவிட்டதாக அவர் கூறுகிறார்.

ஆகவே அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி போர்நிறுத்த ஓப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும்.

அத்துடன் காலம் கடத்தும் ஸ்கன்டிநேவிய நாடுகளின் முதியவர்களை (போர்நிறுத்தக் கண்காணிப்பாளர்களை ) எதற்காக இன்னமும் நாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்?.

எனவே இச்சந்தர்ப்பத்திலாவது ஏற்கனவே எடுக்கத்தவறிய முக்கியமான நடவடிக்கையை எடுப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என்றார் அவர்.

புதினம்

இதற்காகத்தான் கொழும்பில் குண்டு வெடிப்புக்களோ

ஒரே குழப்பம். இவர்கள் இறுதியில் என்னதான் செய்யப்போகிறார்கள். தடைசெய், வெளியேற்று, வெட்டு, பிடுங்கு என்கிறார்களே தவிர முடிவு என்ன என்பதில் தங்களது குழப்பத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் அதைத்தானே சொல்லுகின்றோம், அதாவது போர்நிறுத்தம் என்ற போலிவேஷத்துடன் அப்பாவி மக்களை இலக்கு வைத்து கொல்லும் வெறியர்களே!

துணிவிருந்தால் போர்நிறுத்தத்தை அதிகாரபூர்வமாக நீக்கிவிட்டு வா மோதிப்பார்க்கலாம்.

மகிந்த்வுக்கு கொஞ்சமும் இரக்கமில்லை பாருங்கோ... ஜே வீ பி யும் தொடந்து கேக்கெக்க... அதை செய்யலாம் தானே....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.