Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெளிநாட்டில் முற்றம் கூட்டியோர் தூதரக அதிகாரிகளாக உள்ளனர் - இராஜதந்திர அதிகாரிகள் இன்று போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுகின்றனர். ஜே. வி. பி. பிரசார செயலாளர்

Featured Replies

வெளிநாட்டில் முற்றம் கூட்டியோர் தூதரக அதிகாரிகளாக உள்ளனர் - இராஜதந்திர அதிகாரிகள் இன்று போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுகின்றனர். ஜே. வி. பி. பிரசார செயலாளர்

வெளிநாடுகளில் முற்றம் கூட்டிக்கொண்டிருந்தவர்கள் நமது நாட்டில் தூதரக அதிகாரிகளாக உள்ளனர். இராஜதந்திர அதிகாரிகள் இங்கு போதைப்பொருளைப் பாவிக்கின்றனர் என ஜே.வி.பி. யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச எம். பி. குற்றஞ்சாட்டினார்.

யுனிசெப் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம தெரிவித்த விளக்கத்திற்கு பதிலளித்த விமல் வீரவன்ச எம். பி. மேலும் கூறியதாவது

யு.எஸ்.எய்ட். அதிகாரி போதைப்பொருள் பாவனை தொடர்பாக கைது செய்யப்பட்ட தமது மகளை பொலிஸ் நிலையத்துக்கு சென்று இராஜதந்திர கடவுச்சீட்டைக் காட்டி விடுதலை செய்துள்ளார்.

இராஜதந்திர விசேட சலுகைகள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் மூலமாகவே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கு மாறாக இராஜதந்திர விஷேட சலுகைகள் தொடர்பாக பொலிஸ் நிலையத்துக்கு சென்று சட்டத்தின் செயற்பாட்டைத் தடுப்பதற்கு முயல்கின்றார்கள்.

இதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. எமது நாடு கடந்த பல ஆண்டுகளாக பிரச்சினையில் உள்ள சூழ்நிலையை பயன்படுத்தி வெளிநாட்டவர் எம்மை தமது விருப்பத்தின்படி நடத்துவதற்கு முயல்கின்றனர். வெளிநாடுகளில் வீட்டு முற்றங்கூட்டி பணிவிடை புரிந்துகொண்டிருந்தவர்கள் இங்கு குறித்த நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதரக அதிகாரிகளாக வருகின்றனர்.

இராஜதந்திர அதிகாரிகள் இன்று போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு அவர் சொன்னார்.

http://www.tamilwin.net/

மாதன முத்தாக்களை சமாளிக்க.....இராஜதந்திரிகள் தேவையில்லை

வீட்டு முற்றங்கூட்டுறவங்களே போதும் :D

கோம்பை வழிச்சவங்கள் எல்லாம் பெரிய பெரிய அமைச்சர்களாகும்போது இது என்ன பெரிய விசயம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ படித்த சமுதாயத்தில் இருந்து வந்த படித்த மேதாவி சொல்ல நாங்கள் கேட்க வேண்டிய காலமாய் கிடக்கு. :lol:

ரோட்டு கூட்டுறவர் படிச்சு பெரிய ஆளா வரமுடியாதா? :lol::D

  • தொடங்கியவர்

ரோட்டு கூட்டுறவர் படிச்சு பெரிய ஆளா வரமுடியாதா? :lol::D

இவர் வீரவன்சவுக்கு வெளிநாட்டில வேல செய்யிறதுக்கு விசா குடுக்கிறாங்களில்லையாம். அதுதான் புலம்பல்.

ஊரில் கசாப்புக்கடை வைச்சிருந்தவங்கள் எல்லாரும் பாதுகாப்பு அமைச்சில பணிபுரியும் போது. றோட்டு கூட்டுறவன் எவ்வளவோ மேல் என்பது உந்த மாதனமுத்துக்கு எங்கே தெரியப்போகுது.

பிரித்தானியாவின் முன்னணி ஆங்கல ஏடு ஒன்றில் வந்த ஆக்கம் ஒன்றில் பிரிகேடியர் தமிழ்செல்வன் பற்றியும் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டிருந்தது. இது நம்மவர்களில் சிலரது கவனத்தையும் விமர்சனத்தையும் தான் பெற்றிருந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.