Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமது கண்ணுக்கெட்டிய தூரத்தில் கிளிநொச்சி இருப்பதாக கூறுகின்றார் கெஹெலிய.

Featured Replies

கிளிநொச்சி, தமது கண்ணுக்கெட்டிய தூரத்திலிருப்பதாக தெரிவித்த அமைச்சா கெஹலிய, பிரபாகரனின் பின் சென்றால் தமிழ் மக்களின் விடுதலையை த.தே.கூட்டமைப்பினால் ஒரு போதும் வென்றெடுக்க முடியாதெனவும் குறிப்பிட்டார்.

வியாழன் அன்று பாராளுமன்றில் அவசரகால சட்ட நீடிப்புப் பிரேரணைக்கு பதிலளித்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது :-

'நாட்டின் தற்போதுள்ள போர்ச் சூழல் நிலக்கான முழுப் பொறுப்பையும் பிரபாகரனே ஏற்கவேண்டும். கடந்த கால சகல பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்தமைக்கும் புலிகளே பொறுப்பு.

மனச்சாட்சியுடன் சிந்திக்கும் த.தே.கூட்டமைப்பு எம்.பி.க்கள் பிரபாகரன் அரசியல் தீர்வில் நாட்டமற்றவரென்பதை ஏற்றுக்கொள்வார்கள். புலிகளுக்கு இச் சபையில வக்காலத்து வாங்காவிட்டால் கூட்டமைப்பு எம்.பி.க்களினால் உயிர் வாழ முடியாது.

பயங்கரவாதத்தை ஒழிக்க எதனைச் செய்ய வெண்டுமோ அத்தனை செயற்பாட்டையும் இவ்வரசாங்கம் மேற்கொள்ளும். 364 நாள் பங்கருக்குள் ஒழிந்திருந்து விட்டு ஒரு நாள் வெளிவரும் பிரபாகரன் தமிழ் மக்களுக்காக உளறுவார். எனினும், இந் நாட்டு தமிழ் மக்கள் தெளிவாக உள்ளனர். தமிழ்த் தலைவர்களை படுகொலை செய்த பிரபாகரன் இன்று நிர்க்கதியான நிலைக்கு தள்ளபட்டள்ளார். கிளிநொச்சியை அண்மித்துள்ளோம். கிளிநொச்சி எமது கண்ணுக்கெட்டிய தூரத்திலுள்ளது.

பிரபாகரன் என்பவரை இந்நாட்டில் தீர்மானமெடுக்க அனுமதிக்க முடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்க இந் நாட்டு மக்கள் தயாராக விருக்கிறார்கள். 20 வருட காலமாக தமிழ் மக்களை இருட்டில் வைக்கவே அவர் முயலுகின்றார். அதனை நாம் முறியடிப்போம்.

பிரபாகரன் எனும் கொலையாளிக்குப் பின்னால் சென்று இத் த.தே.கூட்டமைப்பு எம்.பி.க்களினால் ஒருபோதுமே விடுதலையை வென்றெடுக்க முடியாது. எனவே, அவர்கள் தமத அரசியல் பாதையை மாற்றியமைக்க வேண்டும் இதன் மூலமே தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க் முடியுமென்பதை அவர்கள் உணரவேண்டும்". என்றார்.

நன்றி தினக்குரல்

கெஹலிய எப்போதும் கேலியாகவே பேசுவார். ஆனாலும் தமிழ் மக்களைப் பற்றி நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

தொலைக்காட்சியில தெரியுதாமா? :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணுக்கு எட்டிய தூரம் எண்டால் ஒருக்கால் பொடி நடையாகப் போய் வாறது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

364 நாள் பங்கருக்குள் ஒழிந்திருந்து விட்டு ஒரு நாள் வெளிவரும் பிரபாகரன் தமிழ் மக்களுக்காக உளறுவார்

இனிவரும் 364 நாட்களும் இலங்கையில் என்ன நடைபெறப்போகுதென்பதே

கார்த்திகை 27 இல் தீர்க்க தரிசன உளரல் (மாவீரர்தினஉரை)

................................................................................

................................................................................

.

..................................................

பிரபாகரன் என்பவரை இந்நாட்டில் தீர்மானமெடுக்க அனுமதிக்க முடியாது

ஒருநாள் உரைக்கே றம்புக்கல இப்புடி உலறுறார்

இந்தியாவே கலங்கிப்பேயிருக்க நீங்கள் எம்மட்டுக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

கக்கக்க போhh

கண் றொம்ப தான் கிளியரா இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
:unsure: பாவம் கெகலியே.... எதோ கிரிபத்கொடேக்குப் பக்கத்திலதான் கிளிநொச்சி இருக்குதண்டு யாரோ சொல்லிப் போட்டினம் போல. கிளிநொச்சியில இருந்து அடிவாங்கிக் கொண்டு ஓடின அவற்ற தளபதிகளைக் கேட்டால் சிலவேளை தெரிந்து கொள்ளலாம்.

பிரபாகரன் என்னும் கொலையாளியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் போது நீங்கள் ஐயா எந்த பங்கருக்குள் இருந்தனீங்கள்.

"தமிழ் மக்கள் தெளிவாகவேயுள்ளனர்." அதனைம் இந்த கெக்கெலியதான் சொல்லியுள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரன் என்னும் கொலையாளியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் போது நீங்கள் ஐயா எந்த பங்கருக்குள் இருந்தனீங்கள்.

அந்த நேரம் இவர் எந்தவிதமான அதிகாரமும் இல்லாத யூ என்பி எம்பியாக இருந்தவர். இவர் ஐக்கியதேசியக் கட்சியிலிருந்து பல்டி அடித்த ஒருவர். சிலவேளை கேலியவுக்கு மகிந்த ஆட்சியின் பின்னர் தான் அறிவுக் கண்ணன் திறந்ததோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.