Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நுகேகொட சம்பவம் நிகழவில்லை எனில் பாடசாலைச் சிறுமிகளைப் படுகொலை செய்ததை அனைத்துலகம் கண்டித்திருக்குமா?: ஒஸ்லோவில் கூட்டமைப்பு நா.உ.கள்

Featured Replies

சிறிலங்கா தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான நுகேகொடவில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படவில்லை எனில் வன்னியில் பாடசாலைச் சிறுமிகளை சிறிலங்கா இராணுவம் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்ததை அனைத்துலகம் கண்டித்திருக்குமா? என்று நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

சிறிலங்கா தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான நுகேகொடவில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படவில்லை எனில் வன்னியில் பாடசாலைச் சிறுமிகளை சிறிலங்கா இராணுவம் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்ததை அனைத்துலகம் கண்டித்திருக்குமா?

நியாமான கேள்விதான் ஆனால் புத்திசாலித்தனமான கேள்வியா என்று தெரியவில்லை! ஏனெனில் இங்கு யாழ்களத்தில் கூட சிலர் இதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள விரும்பியிருக்கவில்லை!

அத்துடன் கண்டித்தால் மட்டும் போதுமா என்ற கேள்வியும் எழுகிறது!

கண்டனங்களை மதிக்காத விடத்து நடவடிக்கை எடுக்க வேண்டாமோ?

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

இறைமை உள்ள ஓர் அரசு தனது இறைமையைக் காக்கச் செய்யும் விடயங்களை பிற இறைமையுள்ள நாடுகள் கண்டிக்க முன்வரமாட்டா என்பதை ஏன் புரியாமல் இருக்கிறோம்?

இறைமையுள்ள சிறிலங்காவைக் காக்க இன்னும் உதவிகள்தான் செய்வார்கள்.. கண்டிக்க மாட்டார்கள்..

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இவ்வகையான இராணுவதாக்குதல் குறித்து மேலதிக விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் சொல்லி தமது வகைதுறைவளங்களை வீணாக்காமல் மேற்குலகின் அரசியல் நிலைப்பாட்டில் காத்திரமான மாற்றங்களை கொண்டுவரக்கூடிய வகையில் எமது அனைத்து வளங்களும் ஒன்று குவிக்கப்பட வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் பாரிய பணி சர்வதேச நாடுகளில் இன்னும் ஆற்றிமுடிக்கப்படாமல் உள்ளது என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

தமிழ் ஊடகங்கள் தொடர்ந்து பல தவறுகளை விட்டு வருகிறார்கள்.

-1- கருணா குழு (karuna group) என்று இன்றும் அழைப்பது. துணை இராணுவக் குழு (paramilitary) என்ற சொல்லாடலை தவறாது தொடர்ச்சியாக (consistent)பயன்படுத்துவதில் என்ன வில்லங்கம் செய்தி எழுதிறவைக்கு இருக்கு என்று விளங்கவில்லை. இந்த விடையத்தில் தமிழ்நெற்றும் பல தடவை தொடர்ந்து தவறு விடுகிறது.

-2- தமிழ்டநெற்றின் படி இன்று ஒஸ்லோவில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி சொல்லியது ""If there was no attack in Nugegoda on November 28, would the IC have condemned the Claymore attack on school-girls in Vanni the previous day?," many ask us, questioning the morale, Mr. Jeyanandamoorthy said." ஆனால் அதற்கும் ஒரு படிமேலே போய் புதினம் தனது வழமையான பாணியில் மொழிபெயர்த்துள்ளது.

"நுகேகொட சம்பவம் நிகழவில்லை எனில் பாடசாலைச் சிறுமிகளைப் படுகொலை செய்ததை அனைத்துலகம் கண்டித்திருக்குமா?: ஒஸ்லோவில் கூட்டமைப்பு நா.உ.கள்" - புதினம்

அதாவது ஜெயானந்தமூர்த்தி சொன்னது "தென்பகுதியில் தாக்குதல் நடத்தாவிட்டால் சர்வதேசம் பள்ளிச் சிறார்கள் மீதான கண்ணிவெடித் தாக்குதலைக் கண்டித்திருக்குமா? இந்தக் கண்டிப்பின் நியாயத்தன்மை எப்படியானது என்று தம்மிடம் பலர் கேட்கிறார்கள்" என்று. மக்களின் பிரதிநிதியான ப.உ ஜெயானந்தமூர்த்தி மக்கள் சிலரின் உணர்வலையை சொன்னதை ஜெயானந்தமூர்த்தியின் கருத்தாகவோ தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கருத்தாகவோ ஏன் புதினம் மொழிபெயர்க்கிறது?

அதாவது புதினத்தின் மொழிபெயர்ப்பின் படி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நுகேகொட குண்டுத்தாக்குதலை நியாயப்படுத்தி அங்கீகரிக்கிறது என்கிறது. இதுக்கும் வந்து யாரும் வியாக்கியானம் எழுதுங்கோ புதினம் காறர் ரெம்ப கஸ்டப்பட்டு தாயகத்தில களமுனைச் செய்தியாளர் வைச்சு செய்தி எடுத்து விடுகிறார் அதில ஏதே தெரியாமல் சின்ன தப்பு நடந்து போச்சு முட்டையில முடிபுடுங்காதேங்கோ என்று :lol:

நம்மடை சமாதானம் அண்ணையும் சந்தர்ப்பம் பார்த்து வந்து அது "இராணுவத்தாக்குதல்" அதைப்பற்றி ஆய்வு செய்யிறதை விட்டுட்டு ஆக வேண்டியதை பாருங்கோ என்று றெம்ப உருக்கமாக அறிவுரை கூறுறார் :lol:

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்காலபோவான்,

எல்லாம் சரி, யாரிந்தச் சமாதானம் அண்ணை ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.