Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ததேகூ ஐ பாதீட்டைக்கு எதிராக வாக்களிக்க வேண்டாம் என துணை இராணுவக்குழு எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதன் 12-12-2007 01:55 மணி தமிழீழம் [சிறீதரன்]

ததேகூ ஐ பாதீட்டைக்கு எதிராக வாக்களிக்க வேண்டாம் என துணை இராணுவக்குழு எச்சரிக்கை

மட்டக்களப்பில் இயங்கும் துணை இராணுவக்குழுவினர் செவ்வாய்கிழமை தமிழ்தேசியக் கூட்டமைப்பின் உறவினர்களை கடத்தி எதிர்வரும் 14ம் திகதி இடம்பெறும் பாதீட்டின் மூன்றாம் வாசிப்பில் அரசுக்கு எதிராக வாக்களிக்கவேண்டாமென எச்சரித்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை இத்துணைப்படையினர் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் அவர்களது சகோதரர் பி.சிறிகந்தசியா நாடாளுமன்ற உறுப்பிர் கே.தங்கேஸ்வரியின் செயலர் இரா நாகலிங்கம், தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் சகோதரியின் மருமகன் அருணாசலம் சிவபாலன் ஆகியோரே கடத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.

திருமதி.தங்கேஸ்வரியின் செயலர் திரு.நாகலிங்கம் ஒய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் எனவும் ஜெயானந்தமூர்தியின் உறவினர் அருணாசலம் சிவபாலன் ஒருபிள்ளையின் தந்தை எனவும் அரியநேந்திரனின் மூத்த சகோதரர் நான்கு பிள்ளைகளின் தந்தை எனவும் கிராம அலுவலராக பணியாற்றுவபர் எனபதுவும் குறிப்பிடத்தக்கது.

இவர்களை சனிக்கிழமை உயிருடன் பார்ப்பதாக இருந்தால் பாதீட்டில் அரசுக்கு சார்பாக வாக்களிக்குமாறு கேட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

அரசின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கை குறித்து த.தே.கூ சர்வதேச தூதுவர்களிடம், ஐ.நா. சபையிலும் முறையிட வேண்டும். அதுவரை நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும்.

Edited by சாணக்கியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் கடத்தப்பட்டுள்ளனர்(மேலதிக இணைப்பு)

வீரகேசரி இணையம்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்தவர்கள் மட்டக்களப்பில் நேற்று கடத்தப்பட்டுள்ளனர். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

அதேவேளை எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொண்டால் கடத்தப்பட்டவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டதாக சுரேஷ் பிரேமசந்திரன் பாரளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். இதனால் இன்று பாராளுமன்றத்தில் குழப்பமான நிலைமை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடத்தப்பட்டவர்கள் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் அவர்களது சகோதரர் பி.சிறிகந்தசியா, பராளுமன்ற உறுப்பிர் கே.தங்கேஸ்வரியின் செயலர் இரா.நாகலிங்கம், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் சகோதரியின் மருமகன் அருணாசலம் சிவபாலன் ஆகியோரே கடத்தப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரியின் செயலர் திரு.நாகலிங்கம் ஒய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் எனவும் ஜெயானந்தமூர்தியின் உறவினர் அருணாசலம் சிவபாலன் ஒருபிள்ளையின் தந்தை எனவும் அரியநேந்திரனின் மூத்த சகோதரர் நான்கு பிள்ளைகளின் தந்தை எனவும் கிராம அலுவலராக பணியாற்றுவபர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து உரையாற்றிய சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம்.லொக்குபண்டார இவ் விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரை அழைத்து பேசவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆறு எம்.பிக்கள் வெளிநாட்டில் பட்ஜெட் வாக்கெடுப்பின்போது பிரசன்னமாவரா?

[Wednesday December 12 2007 08:25:17 AM GMT] [யாழ் வாணன்]

வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை மறுதினம் நாடாளுமன்றில் நடக்கவிருக்கையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆறு எம்.பிக்கள் தற்சமயம் வெளிநாட்டில் இருக்கின்றார்கள்.

வாக்கெடுப்பில் பங்குபற்றுவதற்காக அவர்கள் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் நாடு திரும்பி விடுவார்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

வாக்கெடுப்பின்போது வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது எனத் தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தீர்மானித்துள்ளது.

எதிர்த்து வாக்களிப்பதற்காக அன்றைய தினம் தவறாது சபைக்கு சமுகம் தருமாறும் தனது எம்.பிக்கள் அனைவரையும் அக்கட்சி பணித்திருக்கின்றது.

கட்சியின் கொறடா செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன், சிவநேசன், அரியநேத்திரன், ஜெயானந்தமூர்த்தி ஆகியோரே தற்சமயம் வெளிநாட்டில் தங்கியிருக்கின்றனர்.

அவர்கள் அனைவரும் நாளை மறுதினத்துக்கு முன்னர் நாடு திரும்பி விடுவர் என கூட்டமைப்பின் மூத்த எம்.பி. ஒருவர் நம்பிக்கை வெளியிட்டார்.

http://www.tamilwin.net/article.php?artiId...;token=dispNews

தமிழ் கூட்டமைப்பு எம்.பி.களின் உறவினர்கள் மற்றும் பிரதியேக செயலாளர் கடத்தப்பட்டுள்ளனர்

[12-12-2007 12.30pm]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் இரண்டு உறவினர்களையும், எம்.பி.யின் செயலாளருமாக மூன்று பேர் கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் கடத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பி.அரியநேந்திரன், எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஆகியோரின் உறவினர்களும், கே.தங்கேஸ்வரியின் பிரத்தியேக செயலாளருமே கடத்தப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்டவர்களின் விபரங்கள் :

எம்.பி. பி.அரியநேந்திரனின் சகோதரர் பி.சிறிகந்தசியா (மூத்த சகோதரர், நான்கு பிள்ளைகளின் தந்தை, கிராம அலுவலகர்)

எம்.பி. கே.தங்கேஸ்வரியின் பிரத்தியேக செயலாளர் இரா.நாகலிங்கம் (ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்)

எம்.பி. எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் சகோதரியின் மருமகன் அருணாசலம் சிவபாலன் (ஒரு பிள்ளையின் தந்தை)

இன்று (டிச.12) பாராளுமன்றத்தில் சுரேஸ் பிரேமசந்திரன் இந்தச் சம்பவங்கள் குறித்து பாராளுமன்ற சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இவர்கள் பிள்ளையான் குழுவினால் கடத்தப்பட்டுள்ளதாகவும், கடத்தப்பட்டவர்கள் பிள்ளையான் குழுவின் கிழக்கில் உள்ள முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், கடத்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட கடத்தல் காரர்கள், எதிர்வரும் 14ம் திகதி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தால் கடத்தப்பட்டவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என மிரட்டல் விடுத்துள்ளதாகவும் எம்.பி.சுரேஸ்பிரேமசந்திரன் சபையில் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, இதுமிகவும் அபாயகரமான நிலை எனவும், அரசாங்கம் இதற்குப் பொறுப்பு கூறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. லக்ஸ்மன் கிரியெல்ல, இன்று பாராளுமன்றத்தில் மனித உரிமைகள் தொடர்பாகவே பேசவேண்டுள்ளதாகக் கூறினார்.

இவ்வாறு ஆட்கடத்தல்களை மேற்கொண்டு வரவு செலவுத் திட்டத்தில் வெற்றிபெற முயற்சிப்பார்களேயானால், இது மிகவும் நகைப்பிற்குரிய விடயம் எனவும் குறிப்பிட்டார்.

இதன்போது உரையாற்றிய சபாநயாகர், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போதும், தமிழ் கூட்டமைப்பின் எம்.பி. கனகசபையின் உறவினர் இவ்வாறு கடத்தப்பட்டதாகக் கூறினார்.

அத்துடன், இதுதொடர்பாக உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

http://lankadissent.com/index.php?option=c...59&Itemid=1

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

த தே கூ தீவிரவாதிகள். பிள்ளையான் குழுவினர் மிதவாதிகள் :D . எப்படி அவர்களைப் பற்றி சர்வதேசத்திடம் முறையிடுவது. இந்தியா போன்ற நாடுகளுக்கு அது எரிச்சல் தாற விடயமாச்சே..!

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் வரவு-செலவுத்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கக்கூடாது என்று சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவுகளை கடத்திச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.