Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனவுகளைச் சுமந்தபடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனவுகளைச் சுமந்தபடி

தென்னங்கீற்றில் முகம் துடைத்து

திங்கள் விழும் நிலாமுற்றம்

கன்னல் தமிழ் பயின்றிட்ட

கவின் கொஞ்சும் கலைக்கூடம்

முன்னும் பின்னும் எல்லையிட்டு

முப்புறமும் கடலேரி

வான் நோக்கி உயர்ந்து

வணங்கா மண்காக்கும் கற்பகத்தரு

வைகறை மேகத்தைக் கிழித்து

வாசல் தெளிக்கும் காலைக் கதிரோன்

அந்த ஈரக் காற்றின் இதமான வருடல்

முற்றத்து வேலிகளில்

எட்டி நிற்கும் செம்பருத்தி

இரட்டை வடக் கயிற்றில்

ஊஞ்சல் கட்டி விளையாடிய வேப்பமரம்

கொத்தும் மீன்குஞ்சு

குதித்து விளையாடும் குளக்கரைகள்

இடையில் குடமசைய நடைபயிலும்

இளமங்கையர் சிரிப்பொலிகள்

மாதமொருமுறை எம்மை

மகிழ்வூட்டும் திருவிழாக்கள்

இன்றும் எம் இதயங்களில்

இனிமையான நினைவலைகள்

கனக்கும் இதயங்களின் கல்லறையாய்

இன்று காவலூர்க் காற்று

காவலூருக்கே கட்டியம் கூறிநின்ற

அந்தக் கடற்கோட்டை

இன்று காடைகளை இறக்குமதி செய்யும்

களஞ்சியசாலை

அழகும் அமைதியும் நிறைந்து

எம் ஆளுமைகளை வளர்த்த

அந்த அமைதிப் பூங்கா

இன்று ஆள்பவன் கையில்

ஒரு பிரமாஸ்திரம்

துப்பாக்கி ஓசைகள் இன்று

எம் தூக்கம் கலைக்கும் சுப்ரபாதம்

இன்றும் அங்கு மனிதர்கள் வாழ்கின்றார்கள்

இல்லை இல்லை

வாழ்வதற்காகச் சாகிறார்கள்

இன்று விடலைகளின் துள்ளல் இல்லை

மழலைகளின் மகிழ்ச்சி இல்லை

வனிதையரின் வனப்பு இல்லை

எதை எடுத்தாலும் இல்லை இல்லை

இவர் துயரத்திற்கோ எல்லை இல்லை

காலை பள்ளி சென்ற பிள்ளை

மாலை வீடு திரும்புவதும்

நிச்சயம் இல்லை

சந்தைக்குச் சென்ற தந்தை உயிர்

சொந்தமாய் திரும்புவது

இங்கு விந்தை

வெறிச்சோடிப்போன வீதி

வெளிச்சமற்ற இரவு

கந்தகக் காற்றைச் சுமந்து

கனத்துக் கிடக்கும் இதயம்

சொந்தமென்று சொல்ல எதுவுமற்ற

நொந்த மனங்கள்

எந்தையும் தாயும் கூடிக்குலவி

கொஞ்சி மகிழ்ந்த எம் சொந்த மண்

கோலமிழந்த அவலம்

எண்ணும் தோறும்

இதயம் கனக்கிறது

இரு விழியும்

ஏக்கத்தில் தவிக்கிறது

எம் தொலைந்து போன சந்தோ~ங்கள்

தூக்கத்திலும்

தலையணையை நனைக்கிறது

விடியும் பொழுதுகளில்

மலரும் ஈழமண்ணில்

சுகமான சுதந்திரக் காற்றை

சுவாசிக்கும் ஆசையை

நிரந்தரமாய் நெஞ்சில் தாங்கி

இக் கட்டிடக் காட்டிற்குள்

கனவுகளைச் சுமந்தபடி

காத்தருக்கிறோம்

Edited by Kavallur Kanmani

தலையணையை நனைக்கிறது

விடியும் பொழுதுகளில்

மலரும் ஈழமண்ணில்

சுகமான சுதந்திரக் காற்றை

சுவாசிக்கும் ஆசையை

நிரந்தரமாய் நெஞ்சில் தாங்கி

இக் கட்டிடக் காட்டிற்குள்

கனவுகளைச் சுமந்தபடி

காத்தருக்கிறோம்

இந்த வரிகள் அழகு...

வாழ்த்துக்கள்

கனவுகளோடுதான் வாழ்கின்றோம்

கனவெல்லாம் நினைவாகும்

காலம் தொலைவில் இல்லை

காத்திருப்போம்

பத்துமாதம் காத்திருந்து

பெற்றெடுத்த முத்துக்கள்தானே

நாமெல்லாம்

விடியும் பொழுதுகளில்

மலரும் ஈழமண்ணில்

சுகமான சுதந்திரக் காற்றை

சுவாசிக்கும் ஆசையை

நிரந்தரமாய் நெஞ்சில் தாங்கி

இக் கட்டிடக் காட்டிற்குள்

கனவுகளைச் சுமந்தபடி

காத்தருக்கிறோம்

இக் கட்டிடக் காட்டிற்குள்

கனவுகளைச் சுமந்தபடி

காத்தருக்கிறோம்

பலரின் கனவுகளை அல்லது ஏக்கத்தை உங்களை கவிதையில் சொல்லி சென்ற விதம் அருமை வாழ்த்துகள்..... :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதையை படித்து பாராட்டிய இனியவன் பரணி ஐமுனா அனைவருக்கும் நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.