Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தினசரி தூறல்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விகடகவி said:

வெளிச்ச வீடுகள்
பார்த்து
இருண்டு
போகிறது மனது
ஒரே ஒரு நாள்
உயரம் தொடர்ந்தாளே
என்னோடு!

 

வாவ் சூப்பர்....! tw_blush:

உண்மையாகவே உடலை உரசி மனசை வருடிச் செல்கின்றது வாசனை. அபாரம்....!

  • Replies 513
  • Views 102k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வந்தும் வராததுமாக
இரவு கூட
தூங்க.. என்
இதயம் மட்டும்
ஏனோ தூங்காமல்
கிடைக்காது என்று
தெரிந்தும்
இருட்டுக்குள்
கண்ணை விட்டு
தேடிக்கொண்டிருக்கிறது
உன்னை..

நீ ..விடியல்
கொண்டு வந்து
இரவு மூடி வைத்துபோன
வெளிச்சம் போல

எனக்குள் உட்கார்ந்து
பிரகாசிக்கிறாய்
உன்னால்தான்
உண்ணவோ
உறங்கவோ
முடியாமல்..சுத்தி
சுழல்கிறேன்..
ஊரே பரிகாசித்தும்
உன்னன்பை 
யாசிக்கிறேன்..
..
வாசித்து அறிவாயென
கண்ணிமைகள் திறந்து வைத்தும்
நேசிக்க மறுத்துவிட்டு
நெடுந்தூரம் போனாயே
வழி அறிந்தாலும் வரமாட்டாய்
வலி அறிந்தாலும் வரமாட்டாய்..

வழமை போல
காதல் கவியாகி 
குப்பை செல்லும்
கண்கள் வலியாகி
தூங்கச்செல்லும்

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போல
காதல் கவியாகி 
குப்பை செல்லும்
கண்கள் வலியாகி
தூங்கச்செல்லும்

வலியுள்ள கண்களால் தூங்க முடியாது கவிஞரே......!

கண்கள் வலியாகி கண்ணீர் சொரியும் .... சரியாய் வரும் என நினைக்கின்றேன்....!  tw_blush:

 

  • தொடங்கியவர்

மன்னிக்கவும் நான் கடன் வாங்கமாட்டேன்tw_blush:tw_blush: lol

நன்றி சுவி 
கருத்து பிழையை திருத்தியமைக்கு 

 

வழமை போல
காதல் கவியாகி 
குப்பை செல்லும்

கண்கள் வலியாகி
தூக்கம் கொல்லும்

  • கருத்துக்கள உறவுகள்

அபாரம் கவிஞரே .... நான் சொல்லியதை விட உங்கள் வரி மிக வலிமையாய் உள்ளது.....!  tw_blush:

  • தொடங்கியவர்

நன்றி 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

காற்றே நீ
டாவின்சி
கை தவழ்ந்த
தூரிகையையா..
நீல வானம் மேல்
வெண்முகிலை கலைந்து-இப்படி
வரைந்திருக்கிறாயே
அழகோவியம்!!!

  • 1 month later...
  • தொடங்கியவர்

மழை பெய்ய 
வீட்டுக்குள் ஒழுக்கு..

பாத்திரங்கள் 
போதாமல்

அம்மா கவிழ்த்துவிட்டார்
தலையில் ஆளுக்கு
ஒன்றாய்..

ஏழைகள் கண்ணீரும்
காயும்போது..
வானமும் கூடியழும்!

  • கருத்துக்கள உறவுகள்

ம்....நல்லது, ஒழுக்குகள் அதிகமாகும் போது குடையாக பாத்திரங்கள்.அருமை.....!  tw_blush:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மதமும் ஜாதியும்
சித்தம் சேர்ந்து
பிரம்மை ஆனதடா

இரத்தம் பார்த்து
இரத்தம் பார்த்து
மரத்துப்போனதடா

இதயம் இல்லா
மனிதர்கூட்டம்
அதிகம் உள்ளதடா

மதவெறுப்புக்காகவா
இந்த உலகமும்
மௌனம் கொள்ளுதடா

மனிதநேய உரிமைகள்
பேசும் மேசைகள்
மௌனிகளானதடா

பூவும் பிஞ்சும்
குறுதியில் எரிந்திட
என்னுயிர் நோகுதடா

இவ்வலிகளை அன்று
ஈழத்தில் தந்த 
வடுக்கள் உள்ளதடா

எந்த இனம் அழுதாழும்
தானும் அழுவதே-நம்
தமிழர் இதயமடா

  • 1 month later...
  • தொடங்கியவர்

வண்ணப்பூக்கள் கலந்து வார்த்த என் வாசதேவதை..-நீ 
வாரந்தோறும் வாசல் வந்தால் வாழ்வே தேன்மழை..
உன் வட்டவிழிகள் சுட்டு நெஞ்சு காயமானதே..
என் கிட்ட வந்து முத்தமிட்டால்
காயமாறுமே..
பூவைப் போல பூவை -
நீ யாரோ செய்த பாவை..
பாவை பார்த்த பார்வை
இதயம் பள்ளமானதே..
மலரில் நடக்கும் மலரே..
உன்பாதம் கமலச்சுவடே..
அதை ஏந்த ஏங்கி..
ஏங்கி ஏங்கி சாகிறேனே...
தென்றல் உரசும் தென்றல் -
நீதேவலோக மின்னல் என்னைத் தீண்டிச்சென்றதாலே 
நானும் ஆனேன் வள்ளல் 
வார்த்தை வள்ளல்..

  • கருத்துக்கள உறவுகள்

பிரதோஷம் போல் மாதத்தில் சிலமுறை வந்தாலும் 

மனசு நிறைய மணம் வீசும் கவிதைகள் சந்தோசம்.....!

வாழ்த்துக்கள் கவிஞரே....! tw_blush:

  • 1 month later...
  • தொடங்கியவர்

என் கடவுள் வீட்டு
மண்ணிஎன் கடவுள் வீட்டு
மண்ணில் ஒரு கைப்பிடி
எதிரி எடுத்துப்போனான்
அவல் ஒரு கைப்பிடி

எதிரி எடுஎன் கடவுள் வீட்டு
மண்ணில் ஒரு கைப்பிடி
எதிரி எடுஎன் கடவுள் வீட்டு
மண்ணில் ஒரு கைப்பிடி
எதிரி எடுத்துப்போனான்
அவனுக்கு தெரிகிறது-கரிகாலன் மண் பெருஎன் கடவுள் வீட்டு
மண்ணில் ஒரு கைப்பிடி
எதிரி எடுத்துப்போனான்
அவனுக்கு தெரிகிறது-கரிகாலன் மண் மைத்துப்போனான்

அவனுஎன் கடவுள் வீட்டு
மண்ணில் ஒரு கைப்பிடி
எதிரி எடுத்துப்போனான்
அவனுக்கும் தெரிகிறது
கரிகாலன் மண் பெருமை க்கு தெரிஎன் கடவுள் வீட்டு
மண்ணில் ஒரு கைப்பிடி
எதிரி எடுத்துப்போனான்
அவனுக்கு தெரிகிறது-கரிகாலன் மண் பெருமைகிறது-கரிகாலன் மண் பெத்துப்போனான்

அவனுக்கு தெரிகிறது-கரிகாலன் மண் பெருமை

என் கடவுள் வீட்டு
மண்ணில் ஒரு கைப்பிடி
எதிரி எடுத்துப்போனான்
அவனுக்கும் தெரிகிறது
கரிகாலன் மண் பெருமை 

  • 1 month later...
  • தொடங்கியவர்

நீ நடந்து போகின்ற
சாலையோரத்தில் 
மரங்கள் இருக்கின்றன
உனை ரசித்து
பூக்கள் சொரிகின்றன
நீ கடந்து போகிறாய்

நீ கடந்து போகின்ற
பாதையில்
பட்டாம்பூச்சிகள் உன்
அழகைப் பார்த்து
படபடக்கின்றன
நீ கடந்து போகிறாய்

உனைப் பார்த்து
குயில்கள் கூவி
மகிழ்கின்றன
நீ கடந்து போகிறாய்

அழகியே..
அங்கே ஓர் இளைஞன்
தினசரி
மரமாய்ப் பூச்சொரிந்தும்
குயிலாகி குதூகலித்தும்
பட்டாம்பூச்சியாய்
படபடத்தும்
உனக்காய் காத்திருக்கிறான்
பார்த்தாயா..
நீ கவனித்தும் கூட
இருக்கலாம்..ஆனால்
பாவம் அவன்தான்
புரிந்துகொள்ளவில்லை
அந்த பட்டாம்பூச்சிகள் போல்
அந்தக்குயில்கள் போல்
அந்த மரங்கள் போல்
அவனும் கடந்து போகின்ற
ஒன்றுதான் என்று!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.