Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனி 29-12-2007 01:34 மணி தமிழீழம் [சிறீதரன்]

போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்

தாய்மண்ணிற்காக தமது இன்னுயிர்களை ஈந்த போராளிகளின்விபரங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளனர்.

மன்னார் முள்ளிக்குளம் களமுனையில், நேற்று சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதல்களின் பொழுது, வீரவேங்கை சீரரசன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த கணபதிப்பிள்ளை சுபராஜ் என்ற போராளி களப்பலியாகியுள்ளார்.

கடந்த புதன்கிழமை மன்னார் மாவட்ட யுத்த களமுனையில் நிகழ்ந்த மோதல்களில் லெப்.கேணல் நிலவன் என்றழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த அல்பிரட் தங்கராசா டென்சில் ஜெனஸ்கோ என்ற போராளியும், அதே நாளில் மணலாறு களமுனையில் இடம்பெற்ற மோதல்களின் பொழுது, லெப்ரினன்ட் வர்ணகீதன் என்றழைக்கப்படும், மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த கணபதிப்பிள்ளை ராஜேஸ்வரன் என்ற போராளியும் களப்பலியாகினர்.

அன்றைய நாளில் மன்னார் மாவட்டத்தில் நிகழ்ந்த மோதல்களில், கடற்புலி கப்டன் ஈகைத்தீ என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த எட்மன்ட் பீரிஸ் நிரூபன், கடற்புலி லெப்ரினன்ட் அகப்புலவன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த ஜெகராசா சதீஸ், கடற்புலி 2ஆம் லெப்ரினன்ட் சந்தன அறிவன் என்றழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலை மதன்ராஜ், கடற்புலி 2ஆம் லெப்ரினன்ட் கோதைக்கொற்றவன் என்றழைக்கப்படும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த தெய்வேந்திரம் வசந்தராசன், கடற்புலி 2ஆம் லெப்ரினன்ட் செந்தமிழரசு என்றழைக்கப்படும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த நவனேஸ்வரன் மதிரூபன் கடற்புலி 2ஆம் லெப்ரினன்ட் அகக்கதிர் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த சந்திரகுமார் பிரணவன், 2ஆம் லெப்ரினன்ட் ஈழத்திண்ணன் என்றழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை சேர்;ந்த மோகன் ஜெகதீஸ் ஆகிய போராளிகள் வீரச்சாவை அணைத்துக் கொண்டுள்ளனர்.

அதே நாளில் நெடுந்தீவுக் கடலில் சிறீலங்கா கடற்படையின் டோறா வேகப் பீரங்கிக் கலம் ஒன்றை மூழ்கடித்த சமரில், கடற்கரும்புலி லெப்.கேணல் கலையரசி என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த செல்வராசா ஜசிந்தா, கடற்கரும்புலி லெப்.கேணல் சங்கரி என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த அகத்தின் ஜெயசுகந்தினி, கடற்கரும்புலி மேஜர் மதிமுகிலன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த பூராசா இன்பராசா, கடற்கரும்புலி மேஜர் ஈழவீரன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த தங்கவேலு சயந்தன், கடற்புலி கப்டன் தப்தகி அல்லது இந்து என்றழைக்கப்படும், திருமலை மாவட்டத்தை சேர்ந்த அஜந்தன் விஸ்வரஞ்சினி ஆகிய போராளி தமது இன்னுயிர்களை ஈந்துள்ளனர்.

இதனிடையே, கடந்த 23ஆம் நாளன்று மன்னார் மாவட்ட யுத்த களமுனையில் இடம்பெற்ற மோதல்களின் பொழுது, 2ஆம் லெப்ரினன்ட் அமுதன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த தம்பிராஜா கஸ்ரோராஜா என்ற போராளி களப்பலியாகியுள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

வீரசாவடைந்த வீரமறவர்கட்கு வீர வணக்கங்கள்.

கடலில் காவியமான எம் காவியநாயகர்களுக்கு வீரவணக்கம்

தாய்மண்ணிற்காக தம்முயிர்களை ஈந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீர மறவர்களுக்கு வீரவணக்கங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.