Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3-வது திருமணம் செய்த தவறை உணர்ந்து விட்டேன் திவ்யாவை விட்டு விலக தயார் என்கிறார், சுருட்டு சாமியார் போலீஸ் விசாரணையில் புதிய திருப்பம்

Featured Replies

"3-வது திருமணம் செய்த தவறை உணர்ந்துவிட்டேன். திவ்யாவை விட்டு விலக தயாராக இருக்கிறேன்'' என்று போலீசாரிடம் சுருட்டு சாமியார் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சுருட்டு சாமியார்

சென்னையை அடுத்த உள்ளகரம்-புழுதிவாக்கம் பகீரதி நகரில், துர்கா அறக்கட்டளை மற்றும் மதுரை வீரன் கோவில் நடத்தி வருபவர் பழனிச்சாமி (வயது 45). சுருட்டு சாமியார் என்று அழைக்கப்பட்ட இவர் அங்கு குறி சொல்லி வந்தார். அவருக்கு சந்திரா மற்றும் மணிமேகலை என 2 மனைவிகள் உள்ளனர்.

இந்த நிலையில், ஓமியோபதி டாக்டரான திவ்யாவை 3-வது திருமணம் செய்து கொண்டார். தனக்கு தெரியாமல் 3-வது திருமணம் செய்து கொண்டது குறித்தும், சாமியார் பழனிச்சாமி பற்றியும் முதல் மனைவி சந்திரா, போலீசில் சரமாரி புகார்களை தெரிவித்தார்.

சிறையில் அடைப்பு

பரங்கிமலை துணை கமிஷனர் வரதராஜ× உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் ஜெகபர்சாலி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகரன் கொண்ட தனிப்படையினர் தப்பி ஓடிய சுருட்டு சாமியார் பழனிச்சாமியை கடந்த 23-ந் தேதி அச்சரப்பாக்கம் அருகே மடக்கி பிடித்தனர். பின்னர் சிறையில் அடைத்தனர்.

ஆசிரம இடம் மற்றும் பல தகவல்கள் குறித்து விசாரிக்க சுருட்டு சாமியாரை 31-ந்தேதி மாலை 3 மணி வரை போலீஸ் காவலில் வைத்து, சாமியாரை விசாரிக்க மாஜிஸ்திரேட்டு ராமநாதன் அனுமதி வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, மடிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து சுருட்டு சாமியார் பழனிச்சாமியை போலீசார் விசாரித்து வந்தனர். நேற்று 3-வது நாளாக போலீசாரிடம் சாமியார் வாக்குமூலம் கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விலக தயார்

எந்த தவறும் செய்யாமல் நான் கடந்த 10 நாளாக மனவேதனையுடன் உள்ளேன். இந்த சம்பவத்தால் எனது குடும்பம் அவமானத்தால் குலைந்து போய்விட்டது. 3-வது திருமணம் செய்தது தான் நான் செய்த பெரிய தவறு. எனது குடும்ப நலன் மற்றும் திவ்யாவின் நலன் கருதி அவரை விட்டு விலகவும் தயாராக உள்ளேன்.

எனது குழந்தைகள் படிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர். அவர்களது நலன் காக்க இந்த முடிவை எடுக்கிறேன். எனது அறக்கட்டளையில் சேர்க்க வேண்டும் என சிலர் வற்புறுத்தினார்கள். நான் மறுத்ததால் போலீசில் பொய்யான தகவல்களை தந்து சிக்கவைத்தனர். மதுரைவீரன் சாமி தவறு செய்தவர்களை தண்டிப்பவர்.

இவ்வாறு சுருட்டு சாமியார் கூறினார்.

போலீசார் விசாரணை நடத்தியபோது பழனிச்சாமி கதறி அழுதார்.

மேலும், இந்த வழக்கில் சாமியார் பழனிச்சாமியின் முதல் மனைவி சந்திராவிடம் போலீசார் 2 மணி நேரம் விசாரித்தனர். பின்னர் சந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:-

வாபஸ்?

எனது கணவர் நல்லவர் தான். எனது விருப்பத்தின்பேரில் தான் மணிமேகலையை 2-வது திருமணம் செய்தார். திவ்யாவை 3-வது திருமணம் செய்து கொண்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போலீசில் புகார் செய்தேன். திவ்யா போன்ற பெண்கள் இதுபோல் முடிவு எடுக்கக்கூடாது. குறி சொல்லும் சாமியார்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். எனது கணவர் மீது தந்த புகாரை வாபஸ் பெறுவது குறித்து விரைவில் முடிவு எடுப்பேன்.

இவ்வாறு சந்திரா கூறினார்.

திவ்யாவிடம் விசாரணை

மேலும், திவ்யாவின் தந்தை போஜராஜ் மற்றும் தாயார் ஆகியோர், வக்கீல் சிவஞானத்துடன் விசாரணைக்கு வந்தனர். இவர்களிடம் சுமார் 2 மணி நேரம் தனி அறையில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அதன்பின்னர் 3-வது மனைவி திவ்யாவிடம் தனியாக விசாரித்தனர். திவ்யா வருவதை கண்ட அவரது பெற்றோர் கண்கலங்கினார்கள். பெற்றோர் அழுவதை கண்ட திவ்யாவும் அழுதார். திவ்யாவிடம் அவரது பெற்றோர் பேசினார்கள். ஆனால் திவ்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

மிரட்டவில்லை

போலீஸ் விசாரணை முடித்துக்கொண்டு வெளியே வந்தார். அப்போது திவ்யா நிருபர்களிடம் கூறுகையில், ``என்னை யாரும் மிரட்டவில்லை. அவசரப்பட்டு எதுவும் கூற விரும்பவில்லை. இப்போது நான் மனநிலை சரியில்லாமல் உள்ளேன். ஒரு வாரத்தில் முக்கிய முடிவு எடுப்பேன். வேறு எதுவும் கேட்காதீர்கள்'' என கூறினார்.

பின்னர் ஒரு ஆட்டோவில் ஏறி சாமியார் முதல் மனைவியின் மகன் கச்சியப்பனுடன் சென்றார்.

நல்ல முடிவு

பின்னர் வக்கீல் சிவஞானம் கூறுகையில், ``திவ்யா ஆசிரமத்தை விட்டு விலகி பெற்றோருடன் வருவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு எடுப்பதாக கூறினார். நல்ல முடிவு எடுப்பார் என்று அவரது பெற்றோர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்'' என்றார்.

5 நாள் போலீஸ் விசாரணைக்கு வந்த சாமியாரை 3 நாள் மட்டும் போலீசார் விசாரித்தனர். பின்னர், சாமியாரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சுருட்டு சாமியார் உடல்நிலை குறித்து பரிசோதனை செய்தனர். அதன் பின்னர் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறைச்சாலைக்கு அழைத்து சென்றனர். சாமியார் மற்றும் அவரது மனைவிகள் போலீஸ் நிலையத்திற்கு வந்த தகவல் காட்டு தீ போல் பரவியது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை சுற்றி நின்று பார்த்தனர்.

viparam.com

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் மனம் கலங்க வேண்டாம்! சுருட்டுச் சாமியார் புரட்டுச் சாமியாராக மாறினாரேயொழிய இன்னும் திருட்டுச் சாமியாராக மாறவில்லை. :):D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்ச இளிச்சவாயள் இருந்தால் நானும் சாமியாராய் மாறலாம் போலை இருக்கு :) அதோடை என்ரை வீட்டுக்குப்பக்கத்திலை ஒரு பெரிய மரமும் நிக்குது :D

  • கருத்துக்கள உறவுகள்

சுருட்டு சாமியார் தன்னுடைய குற்றங்களை உணர்ந்து மன்னிப்புகேரியதாலும் தன்னுடைய இரு மனைவிகளையும் சந்தோஷமாக வைத்திருப்பார் என்று உறுதி கூறியதாலும் அவரை உடணடியாக விடுதலை செய்யுமாறு எமது புதிய சாமியார்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக தமிழக காவல்துறைக்கு பரிந்துறை செய்கின்றோம்.மேலும் 3 முறை க்கு மேல் திருமணம் செய்கின்ற சாமியார்களை கைதுசெய்யும் தமிழக காவல்துறையை வன்மையாக கண்டிப்பதுடன் ஒருவர் எத்தனை தடைவைகள்வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்கின்ற சாமியார்களின்; கனவுகளை நிறைவேற்றி அடுத்த தேர்தலில் சாமியார்களதும் பக்த கோடிகளதும் பொன்னான வாக்குகளை அள்ளிச்செல்லுமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு

தலைவர்

பு.சா.பா.இ :icon_idea::D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.