Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும்

Featured Replies

மகேஸ்வரனின் கொலைக்கு ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும் எனும்

கோஸத்தோடு இறுதி ஊர்வலம்

2114MaheshwaranFuneral_J.jpg

இன்று வெள்ளவத்தையிலுள்ள மகேஸ்வரனின் இல்லத்திலிருந்து பி.ப.2.30 மணிக்கு

தொடங்கிய மரண ஊர்வலம் கனத்தை வரை வந்து சேர்வதற்கு 4 மணித்தியாலங்கள் எடுத்தது.

அனைத்து மத வழிபாடுகளின் பின்னர் பெரும் திரளான மக்கள் கலந்து கொள்ள

அவரது இறுதிக்கிரியைகள் இடம் பெற்றன.

இந் நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க , மங்கள சமரவீர, எஸ்.பீ.திஸாநாயக்க , ரவூப் ககீம் ,மனோ கணேசன் , குமார் ரூபசிங்க , சுனந்த தேசப்பிரிய ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

தமிழர் இயக்கங்களும்

தமிழர் கட்சிகளும் எங்கே?

  • கருத்துக்கள உறவுகள்

மாமனிதர் ரவிராஜ் அவர்களின் இறுதிச் சடங்கிலும் (கொழும்பில் நடந்த நிகழ்வுகளில்... யாழ்ப்பாணத்தில் நடந்தவை பற்றி முழுவிபரம் தெரியாது.) மூவின மக்களும் கலந்து கொண்டனர்.

அமரர் தி.மகேஸ்வரனின் ஊர்வலத்திலும் மூவின மக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் என்ன வேறுபாடென்றால்.. ரவிராஜ்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் எம்பி. மகேஸ்வரன் சிங்கள ஐ தே க கொழும்பு மாவட்ட எம்பி. இருவரும் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்துள்ளனர். இருவருக்கும் தமிழர்கள் சிரம்தாழ்த்தி அஞ்சலி செய்துள்ளனர்.

Edited by nedukkalapoovan

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மக்கள் தங்கள் எதிர்ப்பையும் சோகத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பெரும்பான்மை கட்சியை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக தமிழர்களின் இதயத்தை வென்ற ஒரு நல்ல மனிதனுக்கு மரியாதையையோ அஞ்சலியோ செலுத்தத்தவறியவர்கள், மக்களிடமிருந்து விலகியே நிற்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மக்கள் தங்கள் எதிர்ப்பையும் சோகத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பெரும்பான்மை கட்சியை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக தமிழர்களின் இதயத்தை வென்ற ஒரு நல்ல மனிதனுக்கு மரியாதையையோ அஞ்சலியோ செலுத்தத்தவறியவர்கள், மக்களிடமிருந்து விலகியே நிற்கின்றனர்.

நீங்கள் கூட்டணியினரை சாடுகின்றீகள் என நினக்கிறேன்.கட்சி வேற்றுமை பார்க்காமல் தமிழருக்கு சேவை செய்தவர் என்ற வகையில் மகேஸ்வரனின் மரண சடங்கில் கலந்து கொண்டிருக்கலாம்.யார் தான் கூட்டணியினரை மதிக்கிறார்கள்? இச்சடங்கில் கலந்து கொள்ளாது கூட்டணியினர் தங்களுக்குள் உள்ள சிறு வட்டத்தை மேலும் சிறிதாக்கி விட்டார்கள் என்றே என்னால் நோக்க முடிகிறது.

  • தொடங்கியவர்

மகேஸ்வரன் ஐதேகட்சியில் இருந்தவராக இருக்கலாம்

அல்லது

வேறு எந்த விதத்திலும் இருக்கலாம்

இருந்தாலும் தமிழர்கள் அல்லல்படும் போது

சுயநல நோக்கோடு அரசியலில் ஈடுபட்டவர் என சிலர் குறை கூறினாலும்

பாதிக்கப்பட்ட தமிழருக்காக குரல் கொடுத்த ஒரு மனிதன்!

தமிழர் பிரச்சனைகளை பகிரங்கமாக பேசியதால் படு கொலை செய்யப்பட்ட ஒரு அரசியல்வாதி!

அந்த வகையில் தமிழருக்காக அரசியல் செய்வதாகக் கூறுவோர் மெளனம் காத்தது

தமிழர் சார்பாக இனி பேசுவோரை மெளனம் காக்கவே வைக்கும்?

நாட்டில் பெரும்பாலான மக்கள் தமது சோகத்தை வெளிப்படுத்தியே இருக்கிறார்கள்

இருந்தாலும்

அது மட்டும் போதுமா எனும் கேள்வி மனதில் எழவே செய்கிறது?

for--l.jpg

அவரது மரண ஊர்வலத்தில் மக்கள்

மகேஸ்வரனின் மரண ஊர்வல ஒளித் தொகுப்பு

Edited by AJeevan

பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குகளால் அரங்கத்திற்கு வந்த கூட்டணியினர் உயிர்ப்பயத்திலும் உறவினர் பாசத்திலும் தலைமறைவாயிருந்த போது, கொழும்பில் துன்பப்பட்ட வடகிழக்குத் தமிழருக்காய் வீதியிலிறங்கி அதுவும் எத்தனையோ உயிரச்சுறுத்தல் இருந்த போதும் போராடியவர் என்ற வகையில் அமரர் மகேஸ்வரன் போற்றப்பட வேண்டியவர். அவர் எந்கக் கட்சியிலிருந்தார் என்பது அவசியமல்ல. அவர் தன் இனத்திற்காக என்ன செய்தார் என்பதை நோக்குமிடத்து அவர் உயர்ந்தவராகவே தெரிகின்றார். கூட்டணியின் குரல் அமரர் ரவிராஜூடன் அடங்கிவிட்டது. மீதமிருந்த ஒரு குரலும் அடக்கப்பட்டு விட்டது. இனி குரல் கொடுப்போர் யார்?

Edited by Janarthanan

  • தொடங்கியவர்

இனி வாய் திறப்போர் நிலை இதுதான்..............?

ஐரோப்பிய ஒன்றியத் தூதரின் பாதுகாப்புடன் மனோ மீண்டும் நாட்டிலிருந்து வெளியேறினார்

04 - January - 2008

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. தி.மகேஸ்வரனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நாடு திரும்பிய மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான மனோகணேசன் நேற்று வியாழக்கிழமை இரவு நாட்டை விட்டு வெளியேறினார்.

மனோகணேசனுக்கான பாதுகாப்பை அரசு பெருமளவில் குறைத்ததையடுத்து அவர் கடந்த வாரம் நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார்.

எனினும், மகேஸ்வரனின் படுகொலையை அடுத்து நேற்று முன்தினம் புதன் கிழமை மாலை நாடு திரும்பிய மனோகணேசன் மகேஸ்வரனின் நேற்றைய இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த நிலையில் அவர் நேற்றிரவு மீண்டும் நாட்டிலிருந்து வெளியேறினார்.

பாதுகாப்பு வெகுவாகக் குறைக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் யூலியன் வில்சன் நேற்றிரவு மனோகணேசனின் வீட்டிற்கு வந்து அவரைத் தனது குண்டு துளைக்காத வாகனத்தில் கட்டுநாயக்கா விமானநிலையத்திற்கு அழைத்துச் சென்று வழியனுப்பி வைத்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.