Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜ.நாவின் மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கையில் நியமிக்க வேண்டும் - மனித உரிமை கண்காணிப்பகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜ.நாவின் மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கையில் நியமிக்க வேண்டும் - மனித உரிமை கண்காணிப்பகம்

1/4/2008 1:51:47 PM

வீரகேசரி இணையம் - இலங்கையில் ஜக்கிய நாடுகள் சபை மனித உரிமை கண்காணிப்பு குழுவினை நிறுவ வேண்டுமென நியுயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் 2002ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடன் செய்து கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது எனவே நோர்வே போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர் இலங்கையிலிருந்து வெளியேறுவர் அவ்வாறு வெளியேறும் பட்சத்தில் மனித உரிமை மீறல்கள் , துஷ்பிரயோகங்களை கண்காணிப்பு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என அவ் நியூ யோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது .

யுத்த நிறுத்த ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படுமாயின் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினர் பணிகள் ஸ்தம்பிதமானடையும் கண்காணிப்பு குழுவினர் மனித உரிமை மீறல்கள் துஷ்பிரயோகங்களை கண்காணித்தனர் .

எனவே தற்போது ஜ,நா மனித உரிமை கண்காணிப்பு குழுவின் தேவை அவசியமானதொண்றாக காணப்படுகிறது என அவ் மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பணிப்பாளர் எலைன் பியர்சன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்

ஜ.நாவின் மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கையில் நியமிக்க வேண்டும் - மனித உரிமை கண்காணிப்பகம்

[Friday January 04 2008 10:20:21 AM GMT] [யாழினி]

இலங்கையில் ஜக்கிய நாடுகள் சபை மனித உரிமை கண்காணிப்பு குழுவினை நிறுவ வேண்டுமென நியுயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் 2002ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுடன் செய்து கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது எனவே நோர்வே போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர் இலங்கையிலிருந்து வெளியேறுவர் அவ்வாறு வெளியேறும் பட்சத்தில் மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்களை கண்காணிப்பு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படுமாயின் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினர் பணிகள் ஸ்தம்பிதமானடையும் கண்காணிப்பு குழுவினர் மனித உரிமை மீறல்கள் துஷ்பிரயோகங்களை கண்காணித்தனர்.

எனவே தற்போது ஜ,நா மனித உரிமை கண்காணிப்பு குழுவின் தேவை அவசியமானதொண்றாக காணப்படுகிறது என அவ் மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பணிப்பாளர் எலைன் பியர்சன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்த கண்காணிப்பு, மனித உரிமை கண்காணிப்பு அனைத்தும் வெறும் கண்துடைப்பு. இவையனைத்தும் ஏகாதிபத்திய நாடுகளதும் வல்லரசுகளினதும் இருப்பை எமது பிரதேசங்களில் எதுவிதத்திலும் தக்கவைத்துக்கொள்வதற்கான திட்டங்களேகளேதவிர தமிழ்மக்களுக்கு நன்மை பயக்கும் ஏற்பாடுகளல்ல. மேற்படி கண்காணிப்புக் குழுக்களுக்கு தட்டிக்கேட்கும் அதிகாரமில்லாமல் எதையும் அவர்களால் செய்யமுடியாது. கண்காணிப்பு, அறிக்கை விடுதல் மற்றும் புள்ளிவிபரம் சேகரித்தல் இவையெல்லாம் அவர்களின் சொந்த பயன்பாடுகளுக்காகவே நடைமுறைப்படுத்தப் படுகின்றது. சிங்கள அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேறியதற்குக்கூட இவர்களால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.

சிங்கள அரசின் தொடர் போர் முன்னெடுப்புகளுக்கும், அடக்குமுறை, ஆட்கடத்தல், தமிழர் நிலங்களில் அத்துமீறிய ஆக்கிரமிப்பு மற்றும் அனைத்து அரச அராஜகங்களுக்கும் போர் நிறுத்த ஒப்பந்தம் தடையாயிருப்பதை தவிர்ப்பதற்காகவே அதிலிருந்து விலகிக்கொண்டது.

அடுத்தகட்டமாக 16-01-08 அன்று போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த கையோடு விடுதலைப்புலிகள் மீது தடையை அறிவித்து அவர்களது வெளியுலக தொடர்பை அறுத்து அவர்களை தனிமைப்படுத்துவதும் அதன் திட்டங்களில் ஒன்று. பின்னர் தான் நினைத்தபடி கிழக்கில் தேர்தலொன்றை தனக்குச் சாதகமான முறையில் நடத்திமுடிப்பதும் நடக்கும். போர்பறை தட்டியபடி எமது தாய்நிலமண்ணின் வாசல்படிவரை வந்து நிற்கும் எதிரி இதற்காக இக்காலகட்டத்தை தெரிவு செய்தது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இனிமேல் இனவெறி அரசு வன்னிமீதும் ஏனைய தமிழர் பிரதேசம் எங்கணும் இறுக்கமான பொருளாதார தடையைப் போட்டு மக்களை நரகவாழ்க்கைக்குள் தள்ளி அடிபணிய வைக்கவும் இன்னும் ஒரு படி மேலே போய் வன்னிப்பிரதேசத்தை இராணுவ முற்றுகைக்குள் கொண்டுவந்து விடுதலைப்புலிகளின் தலைவர்களை வேட்டையாட முயற்சிப்பதுதான் அதன் நோக்கமென ஊகிக்கலாம். இவ்வாறான நடவடிக்கைகளில் இனிமேல் நிகழப்போகும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள், உயிர் உடமை அழிவுகள் அனைத்தும் சிறிலங்காவின் உள்நாட்டுப் பிரச்சினை என்ற போர்வையில் சர்வதேச சமுகத்தின் பார்வையிலிருந்து திட்டமிட்டமுறையில் மறைக்கப்பட்டுவிடும்.

இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்களை கண்காணிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தனது கண்காணிப்பாளர்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.