Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேடையில் நின்றபடி வினோத சைகைகள் செய்தார் பெனாசிர் படுகொலைக்கு உதவியாளர் உடந்தையா? தலைமறைவானவரை பாகிஸ்தான் போலீஸ் தேடுகிறது

Featured Replies

(தினத்தந்தி)

பெனாசிர் பேசிய பொதுக்கூட்ட மேடையில் நின்ற அவரது உதவியாளர் வினோதமான சைகைகளை செய்ததாக இப்போது தெரிய வந்து உள்ளது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். இதனால் பெனாசிர் கொலையில் அவருக்கு தொடர்பு உண்டா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

புதுப்புது தகவல்கள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பெனாசிர் கடந்த டிசம்பர் 27-ந் தேதி ராவல்பிண்டி நகரில் தேர்தல் பிரசாரத்தின் போது படுகொலை செய்யப்பட்டார். பொதுக்கூட்ட மேடையில் பேசிவிட்டு காரில் ஏறி அமர்ந்த அவர் தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது மனித வெடிகுண்டும் வெடித்தது. இதுவரை பாகிஸ்தான் போலீசார் நடத்திய விசாரணையில் பெனாசிரை கொன்றது யார்? என்பது பற்றி இதுவரை உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

பெனாசிர் கொல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ படங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால் புதுப்புது தகவல்கள் வெளியாகின்றன.

பெனாசிரின் உதவியாளர்

இப்போது புதிதாக அதிர்ச்சிïட்டும் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. பெனாசிர் ராவல்பிண்டி பொதுக்கூட்டத்தில் பேசிய போது எடுக்கப்பட்ட வீடியோ படத்தை உள்ளூர் டி.வி. ஒன்று ஒளிபரப்பியது. அதில் புதிதாக ஒரு காட்சி இடம்பெற்று உள்ளது.

பொதுக்கூட்ட மேடையில் பெனாசிர் பேசிக்கொண்டு இருந்த போது அவருக்கு இடதுபுறம் அவரது உதவியாளர் காலித் ஷாகின்ஷா என்பவர் நின்று கொண்டு இருக்கிறார். அவர் தனது கைகளால் சில வினோதமான சைகைகளை செய்து கொண்டு இருக்கிறார். அதாவது தனது விரல்களை குரல்வளைக்கு குறுக்காக வைத்தபடி கழுத்தை அறுப்பது போன்று அவர் சைகை செய்வது போல் அந்த காட்சி உள்ளது.

புரியாத புதிர்

உள்ளூர் டி.வி. ஒளிபரப்பிய வீடியோ படத்தில் இந்த காட்சி இடம் பெற்று உள்ளது. மேடையில் நின்றபடி அவர் ஏன் இவ்வாறு செய்தார்? என்பது புரியாத புதிராக உள்ளது. அவரது இந்த வினோத செயல் சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதாகவும் இதை ஒதுக்கிவிட முடியாது என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் பெனாசிர் பேசி முடித்ததும் ஷாகின்ஷா மேடையை விட்டு விருட்டென்று இறங்கி பெனாசிரின் குண்டு துளைக்காத காருக்குள் சென்று அமர்ந்து கொண்டார் என்றும் பெனாசிருக்காக அவர் காரின் கதவை திறந்துகூட வைக்கவில்லை என்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர்.

முதலில் காருக்குள் செள்றது ஏன்?

வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பேசி முடித்துவிட்டு பெனாசிர் காருக்குள் சென்று அமர்ந்த பின்னர் கடைசியாகத்தான் ஷாகின்ஷா அதில் ஏறுவார் என்றும் சில சமயம் காரில் இடம் இல்லாவிட்டால் அவர் காரில் நின்றபடி தொங்கிக் கொண்டு செல்வார் என்றும் அந்த ஊழியர்கள் தெரிவித்தனர். அப்படிப்பட்ட ஷாகின்ஷா, பெனாசிர் படுகொலை செய்யப்பட்ட தினத்தன்று மட்டும் முன்னதாகவே காருக்குள் சென்று அமர்ந்தது ஏன்? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.

பெனாசிர் படுகொலைக்கு பின் ஷாகின்ஷா இஸ்லாமாபாத்தில் உள்ள பெனாசிரின் இல்லத்தில் 2 நாட்கள் தங்கி இருந்தார். சிந்து மாகாணத்தில் உள்ள பெனாசிரின் சொந்த ஊரான நாதிரோவில் நடந்த இறுதிச் சடங்கில் கூட ஷாகின்ஷா கலந்து கொள்ளவில்லை. 3-வது நாள் தான் அவர் அங்கு சென்றார். இந்த விவரங்களையும் அந்த தனியார் டி.வி. வெளியிட்டது.

தலைமறைவு

இதற்கிடையே ஷாகின்ஷா தற்போது தலைமறைவாகி விட்டார். எனவே அவரது செயல்பாடுகள் விசாரணை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரை பிடித்து விசாரித்தால் பெனாசிர் படுகொலை பற்றிய முக்கிய துப்பு கிடைக்கலாம் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி ஊழியர்கள் கருதுகிறார்கள்.

பெனாசிருக்கு பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ரகுமான் மாலிக்கின் சிபாரிசு பேரில்தான் ஷாகின்ஷாவை பெனாசிர் வேலைக்கு அமர்த்தி உள்ளார். தலைமறைவான அவர் தற்போது எங்கு இருக்கிறார்? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ஸ்காட்லாந்து யார்டு போலீஸ்

இதற்கிடையே, பெனாசிர் படுகொலை பற்றி முஷரப் அரசு நடத்தி வரும் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்ற புகார் எழுந்ததை தொடர்ந்து, விசாரணைக்கு உதவுமாறு இங்கிலாந்து நாட்டின் ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு அதிபர் முஷரப் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று 5 பேர் கொண்ட ஸ்காட்லாந்து யார்டு துப்பறியும் போலீஸ் குழு ஒன்று நேற்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வந்தது. அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருக்கும் அந்த குழுவினர் நிருபர்களை சந்திக்க மறுத்து விட்டனர்.

அவர்கள் பாகிஸ்தான் உள்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து, பெனாசிர் படுகொலை தொடர்பாக இதுவரை நடந்துள்ள விசாரணை பற்றிய விவரங்களை கேட்டு அறிய இருக்கிறார்கள். பெனாசிர் படுகொலை செய்யப்பட்ட ராவல்பிண்டி லியாகத் பாக் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய இருக்கிறார்கள். மேலும் பெனாசிரின் பிரேத பரிசோதனை அறிக்கையையும் அவர்கள் கேட்பார்கள் என தெரிகிறது.

சர்தாரி கோரிக்கை

பெனாசிர் படுகொலை பற்றி ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவரது கணவர் ஆசிப்அலி சர்தாரி, ஐ.நா.கமிஷன் விசாரணை நடத்த வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுத்து உள்ளார்.

பெனாசிர் கொலை செய்யப்பட்ட சிறிது நேரத்தில் அந்த இடத்தில் உள்ள தடயங்கள் எல்லாம் அழிந்து போய் விட்டதால், ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் பெரிதாக எதுவும் சாதித்து விட முடியாது என்று பாகிஸ்தான் அரசியல் விமர்சகர்கள் சிலர் தெரிவித்து உள்ளனர்.

3-வது தடவை

விசாரணைக்காக ஸ்காட்லாந்து யார்டு துப்பறியும் போலீசார் பாகிஸ்தானுக்கு வருவது இது 3-வது தடவை ஆகும்.

ராவல்பிண்டியில் பெனாசிர் படுகொலை செய்யப்பட்ட அதே இடத்தில் தான் 1951-ம் ஆண்டு பாகிஸ்தானின் முதல் பிரதமரான லியாகத் அலி கான் சுட்டுக் கொல்லப்பட்டார். அதுபற்றி விசாரணை நடத்துவதற்காக அப்போது ஸ்காட்லாந்து துப்பறியும் போலீசார் பாகிஸ்தானுக்கு வரவழைக்கப்பட்டனர். ஆனால் விசாரணையை முடிக்கும் முன்னரே அவர்களை பாகிஸ்தான் அரசு அங்கிருந்து வெளியேற்றியது.

அதன்பிறகு, 1996-ம் ஆண்டு கராச்சி நகரில் பெனாசிரின் தம்பி கொல்லப்பட்ட போதும் விசாரணைக்காக ஸ்காட்லாந்து யார்டு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அப்போதும் அவர்கள் விசாரணையை முடிக்கும் முன்னரே இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இப்போது 3-வது முறையாக வந்துள்ள ஸ்காட்லாந்து யார்டு போலீசாரின் விசாரணை முழுமை பெறுமா? பெனாசிரை கொன்றவர்கள் அடையாளம் கண்டு பிடிக்கப்படுவார்களா? என்பது போகப்போகத்தான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

பெனாசிர் கொலையில் வேலைக்காரருக்கு தொடர்பு இருக்குமா என்று சந்தேகம்

[06 - January - 2008] [Font Size - A - A - A]

இஸ்லாமாபாத்:பெனாசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டதில் அவருடைய வேலைக்காரர் காலித் ஷாஹின்ஷாவுக்குத் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் பாகிஸ்தான் மக்கள் கட்சியினருக்கு ஏற்பட்டிருக்கிறது.பெனாசிரின

ம்ம்ம் இதை கண்டுபிடிக்க ஸ்கோட்லன்ட் ஜார்ட்டால எல்லாம் முடியாது யாழ்கள மெம்பர்சை தான் அனுப்ப வேண்டும் :) .....என்னாமா கண்டு பிடிப்பார்கள் தெரியுமோ என்னவோ தாங்கள் பக்கத்தில இருந்து பார்த்த மாதிரி அல்லவா சொல்லுவார்கள் :) சோ பாகிஸ்தான் அரசு இவர்களின் உதவியை நாடி இருக்கலாம் மிஸ் பண்ணிட்டீனம் பெட்டர் லக் நேஸ்ட் டைம்.... :D

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.