Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘ரீமிக்ஸ்’ பாடல்களைக் கேட்டுக் கொந்தளிக்கும் புலைமைப்பித்தன்.

Featured Replies

pulimaipihthanqu8.png

ழைய பாடல்களை ‘ரீமிக்ஸ்’ செய்வது தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட இசை அமைப்பாளர்கள் மீது வழக்குத் தொடர்வேன்’ என்று தனது ஆதங்கத்தை ‘அய்யா வழி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் வெளிப்படையாகவே சீற்றத்தோடு வெளிப்படுத்தி, ஒரு புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் பாடலாசிரியர் புலமைப்பித்தன். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாடகம், சினிமா, அரசியல் ஆகிய தளங்களில் இயங்கி வரும் இவர், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியவர். அவரிடமே பேசினோம்.

உங்களுக்கு ‘ரீமிக்ஸ்’ பாடல்கள் மீது அப்படி என்ன கோபம்?

‘‘ ‘ரீமிக்ஸ்’ செய்வதன் மூலம் அந்தப் பாடல்களை உருவாக்கிய படைப்பாளிகளைக் கேவலப்படுத்துகிறார்கள். ஒரிஜினல் பாடலில் உள்ள அழகைக் கெடுத்து காட்டுமிராண்டித்தனமான இசையைச் சேர்க்கிறார்கள். அப்படி சேர்க்கப்படும் இசை, சுத்தியலால் எதையோ அடிப்பது போல் உள்ளது. தாஜ்மஹால் மீது தார் பூசும் செயல்தான் இது. என்றைக்கு கீபோர்ட் வந்ததோ, அன்றைக்கே இசை இங்கே நாசமாகப் போய் விட்டது.’’

உங்களை வருத்தப்படச் செய்த ‘ரீமிக்ஸ்’ பாடல்கள் எவை?

‘‘எல்லா ‘ரீமிக்ஸ்’ பாடல்களுமே அசிங்கமாகத்தான் இருக்கின்றன. சமீபத்தில், ‘அழகிய தமிழ் மகன்’ படம் பார்த்தேன். அதில், ‘சொர்க்கம்’ படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் உருவான ‘பொன்மகள் வந்தாள்’ என்ற பாடலை ஏ.ஆர். ரஹ்மான் ‘ரீமிக்ஸ்’ செய்துள்ளார். இந்தப் பாடல் ஒரே இரைச்சலாக இருக்கிறது. சிவாஜி கணேசன் நடித்த பாடல் காட்சியில், இப்போது விஜய்யைப் பார்க்க சகிக்கவில்லை. டி.எம்.சௌந்திர ராஜன் பாடிய ஒரிஜினல் பாடலை இப்போது ஆண்மையே இல்லாத குரலில் ஒருவர் பாடியுள்ளார்.

அருணகிரிநாதரின் சந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட அந்தப் பாடலை, இப்படிக் கெடுத்து வைத்திருக்கிறார்கள். மொத்தத்தில், ‘பொன்மகள் வந்தாள்’ பாடலை ‘ரீமிக்ஸ்’ செய்து சிவாஜி கணேசன், எம்.எஸ்.வி., டி.எம்.எஸ். ஆகியோரை கேவலப்படுத்துகிறார்கள்.’’

‘ரீமிக்ஸ்’ பாடல்கள் மீது இவ்வளவு கோபப்படுகிறீர்கள். ஆனால், சம்பந்தப்பட்ட எம்.எஸ்.வி. போன்றவர்கள் இதுவரை எந்தக் கண்டனமும் தெரிவிக்கவில்லையே?

‘‘ ‘உங்கள் பாடல்களை இப்படிக் கெடுக்கிறார்களே’ என்று எம்.எஸ்.வி.யிடம் நான் கேட்டபோது, அவர், ‘சொல்லத்தான் தவிக்கிறேன். உள்ளத்தால் துடிக்கிறேன். வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றித் தவிக்கிறேன்’ என்று அவரது பாடலையே சோகமாகப் பாடிக் காட்டி தனது வருத்தத்தை என்னிடம் வெளிப்படுத்தினார். அவருக்காகவும்தான் நான் இப்போது பேசுகிறேன்’’

ஆனால், ரசிகர்களிடையே வரவேற்பு உள்ளதால்தானே ‘ரீமிக்ஸ்’ பாடல்களை உருவாக்குகிறார்கள்?

‘‘இது தவறான கண்ணோட்டம். நான், தியேட்டரில் ‘அழகிய தமிழ் மகன்’ படம் பார்த்தேன். ‘பொன்மகள் வந்தாள்’ பாடல் வரும்போது, ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து அதை வரவேற்றனர் என்பது உண்மைதான். ஆனால், இந்த வரவேற்பு அந்தப் பழைய பாடலுக்குத்தானே தவிர, இவர்கள் அசிங்கப்படுத்திய பாடலுக்குக் கிடைக்கும் வரவேற்பு அல்ல.’’

‘ரீமிக்ஸ்’ பாடல்களே கூடாது என்று சொல்கிறீர்களா?

‘‘பாரதியின் பாதிப்பில்தான் பாரதிதாசன் வந்தார். பாரதிதாசன் பாதிப்பால்தான் நான் பாட்டெழுத வந்தேன். இலக்கியத்தில் இருந்து மேற்கோள் காட்டாமல் எந்தக் கவிஞராலும் பாட்டெழுத முடியாது. மற்றவர்களின் தழுவல், தாக்கம் இருக்கலாம். அப்படியே காப்பி அடிக்கும் போக்கைத்தான் கண்டிக்கிறேன். தியாகராஜ பாகவதரின் பாதிப்பில்தான் டி.எம்.எஸ். பாடகர் ஆனார். உங்களுக்குப் பழைய பாடல் பிடித்திருந்தால் முறைப்படி அனுமதி வாங்கி, அதை அப்படியே உங்கள் படத்தில் பயன்படுத்துங்கள். அதைவிடுத்து, ‘ரீமிக்ஸ்’ என்று சொல்லி அருவருப்பை ஏற்படுத்தாதீர்கள் என்றுதான் சொல்கிறேன்.’’

புதிய படங்களை ஒன்றுவிடாமல் பார்த்துவிடுகிறீர்கள். நல்ல படைப்பாளிகளே தமிழ்த் திரையுலகில் இல்லை என்கிறீர்களா?

‘‘இன்றைக்குக் கற்பனை வற்றிவிட்டது. பெரும்பாலான படங்களில் ஹீரோவை தாதாவாகவே காட்டுகிறார்கள். ஹீரோயினை சில்க் சுமிதாவைவிட கவர்ச்சியாகக் காட்டுகிறார்கள். இவர்களுக்கு மத்தியிலும் தங்கர்பச்சான், சேரன் மாதிரியான இயக்குநர்கள் சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், இந்த ‘ரீமிக்ஸ்’ பாணியை நம்புகிறவர்கள் செய்யும் படங்கள் என்ன சாதித்து விட்டன? ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கிய ‘சிவாஜி’ சாதிக்காததை, புதுமுகம் கார்த்திக் நடித்த ‘பருத்திவீரன்’ சாதித்துவிட்டதே. நடிகர்களை மட்டும் வைத்து வெற்றி பெற முடியாது; நடிகர்களின் வெற்றிக்கு நல்ல கதைகளே காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது.’’

சத்யராஜ் நடித்து வரும் ‘தங்கம்’ என்ற படத்தில் நீங்கள் எழுதிய ‘பூமழை தூவி’ என்ற பாடலை ‘ரீமிக்ஸ்’ செய்துள்ளார்கள். இத்தனை நாள் அமைதியாக இருந்த நீங்கள் இதனால்தான் திடீரென ‘ரீமிக்ஸ்’ பாணிக்கு எதிராகப் பேசுகிறீர்களா?

(கோபமாக) ‘‘ ‘பொல்லாதவன்’ படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்த ‘எங்கேயும் எப்போதும்’ என்ற பாடலை ‘ரீமிக்ஸ்’ என்ற பெயரில் கெடுத்து வைத்துள்ளார்கள். ‘கௌரவம்’ படத்தில் இசை அமைக்க முதலில் ஒப்புக்கொண்டவர் எங்கள் மாமா (இசை அமைப்பாளர் கே.வி. மகாதேவனை திரையுலகில் இப்படித்தான் அழைக¢கிறார்கள்). அந்தப் படத்தின் கதையைக் கேட்ட பிறகு ‘சவாலும் உணர்ச்சியும் நிறைந்த இந்தப் படத்துக்கு எம்.எஸ்.வி.தான் இசை அமைக்க வேண்டும்’ என்று கூறிவிட்டு கே.வி. மகாதேவன் விலகிக் கொண்டார். அப்படிப்பட்ட எம்.எஸ்.வி.யின் பாட்டை ‘ரீமிக்ஸ்’ என்ற பெயரில் கெடுப்பதைப் பார்த்துக்கொண்டு என்னை சும்மா இருக்கச் சொல்கிறீர்களா? எனக்கும், எம்.எஸ்.வி.க்கும் நாற்பத்து மூன்று ஆண்டுகால நட்பு. நான் அவரை மறந்துவிட்டால் நான் இறந்துவிட்டதாக அர்த்தம். அவரது படைப்புகளைக் கேவலப்படுத்துவது தொடர்ந்தால், நான் எங்கு வேண்டுமானாலும் சென்று முறையிடுவேன்.’’

‘ரீமிக்ஸ்’ பற்றி இவ்வளவு ஆத்திரப்படுகிறீர்கள். ஆனால், இன்றைய படங்களில் தமிழே தெரியாதவர்கள்தான் தமிழ்ப் பாடல்களைப் பாடுகிறார்கள். அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

‘‘எஸ்.பி.பி.க்குத் தாய்மொழி என்ன தமிழா? நான் எழுதிய ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடலை அவர் என்ன அழகாகப் பாடினார். ‘உச்சி வகுந்தெடுத்து’ என்ற தமிழ் கிராமியப் பாடலை அவரைவிட யார் சிறப்பாகப் பாட முடியும்? ஜேசுதாஸ் என்ன தமிழரா? இவ்வளவு ஏன்? எம்.எஸ்.வி.யே மலையாளிதானே. அவர்கள் தமிழுக்கும் தமிழ் சினிமாவுக்கும் எத்தனையோ சிறப்புச் செய்துள்ளார்களே. ஆனால், இந்தியிலும், ஆங்கிலத்திலும் தமிழ்ப் பாடல்களை எழுதி வைத்துப் பாடும் தமிழ் தெரியாத பாடகர்கள் இன்று அதிகமாக உள்ளனர். ஆங்கில உச்சரிப்பில் தமிழைப் பாடுகிறார்கள். இதனால் தமிழ் சிதைந்து, அழகு கெட்டு வருகிறது.’’

சரி இதற்கு முடிவுதான் என்ன?

‘‘முதலில், பழைய படங்களின் டைட்டிலைக் காப்பி அடித்தார்கள். பின்னர் கதையைக் காப்பி அடித்தனர். இப்போது பாடல்களை ‘ரீமிக்ஸ்’ என்ற பெயரில் கெடுக்கிறார்கள். அதுமட்டுமா, இப்போது படத்தையே ‘ரீமேக்’ என்ற பெயரில் எடுக்கிறார்கள். அப்படி வெளியான ‘பில்லா’ படத்தைப் பார்த்தேன். தொழில்நுட்ப ரீதியில் சிறந்த படம் என்று புதிய ‘பில்லா’வைச் சொல்லலாம். ஆனால், ரஜினி நடித்த ‘பில்லா’ படத்தின் சாரமோ, அழகோ இதில் இல்லை. இதில்கூட, ‘வெத்தலைய போட்டேண்டி’, ‘மை நேம் இஸ் பில்லா’ பாடல்களையும் ‘ரீமிக்ஸ்’ செய்துள்ளனர். அந்தப் பாடல்களும் சகிக்கவில்லை.

அதனால்தான் இனியும் பொறுக்க முடியாது என்கிற நிலையில் இந்த விஷயத்தில் நீதிமன்றத்துக்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன்.’’

படம் : மீடியா ராமு

வே.வெற்றிவேல்

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

எனக்கும் அழகிய தமிழ்மகன் படத்தில வந்த பொன்மகள் வந்தாள் எண்ட ரீமிக்ஸ் பாட்ட கேக்க எரிச்சலாக இருந்திச்சிது. ரஹ்மான் செய்யுறார் எண்டுறதுக்காகவோ இல்லாட்டி விஜய் நடிக்கிறார் எண்டுறதுக்காகவோ எல்லாத்தையும் கேட்டு ரசிக்க முடியவில்லை.

எண்டாலும் புதுமைப்பித்தனின் ரீமிக்ஸ்ஸே கூடாது எண்டு சொல்லிற விசயம் ஏற்றுக்கொள்ளக் கூடியதா இல்ல. மிகவும் இனிமையான ரீமிக்ஸ்ஸூகளும் இருக்கிது.

சில ஆங்கிலப்பாடல்கள தமிழ் பாடல்களோட கலந்த ரீமிக்ஸ் பாட்டுக்கள் கேக்க சூப்பரா இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

புதுமைப்பித்தன் அவர்கள் புலம்பி என்ன ஆகப்போகிறது. சரக்கிருந்தால் தானே வெளியே வரும். இல்லாவிட்டால் என்ன செய்வது? பானையிலிருந்தால்தானே அகப்பையில் வரும். :(

பழைய இசையமைப்பாளர்கள் இயக்குனர் மற்றும் பாடலாசிரியருக்கு முன்னால் மெட்டமைத்துக்காட்டுவார்கள். இன்று என்ன நடக்கிறது? இயக்குனர் குறுவட்டைக்கொடுத்து இதே மாதிரிப் பண்ணுங்கள் என்கிறார். இசையமைப்பாளர் அதையும் இன்னும் பல வட்டுக்களையும் தூக்கிக்கொண்டு அறைக்குள் ஓடி கதவை அடைத்துக்கொள்கிறார். இரவிரவாக உழைக்கிறார். :D பிறகு மெயிலில் பல மெட்டுக்களை அனுப்புகிறார். இயக்குனர் ஒன்றை தெரிவு செய்து பாடலாசிரியரிடம் அனுப்புகிறார். அவரும் பல ஆங்கில அகராதிகளைப் புரட்டி வார்த்தைகளையிட்டு நிரப்புகிறார்.

பிறகு இசையமைப்பாளர் இன்னும் பல குறுவட்டுக்களில் ஆராய்ச்சி செய்து இடையீட்டு இசைகளைக் கோர்க்கிறார். போதாததுக்கு வாத்தியக்கலைஞர்களிடம் அவர்கள் கற்பனைக்கு வாசிக்கச் சொல்லிக் கேட்டு அவற்றையும் இணைக்கிறார். போதாக்குறைக்கு ராப், ரெகே வகை இசைகளையும் செருகி பல தமிழர்களின் அப்பாமார் ஆபிரிக்கரோ என சந்தேகம் கொள்ள வைக்கிறார். அப்படிப்பட்ட எமது இசையமைப்பாளர்களுக்கு இப்போது ரீமிக்ஸ் ஒரு வரப்பிரசாதமாகிவிட்டது. பின்னி எடுக்கினம்..!

இபோது வளர்ந்துள்ள கிளப் கலாசாரத்துக்கு இவ்வகை ரீமிக்ஸிசைதான் தோது என்பதால் இவ்வகை இசை இப்போதைக்கு முடிவுக்கு வராது. தண்ணியைப்போடவேண்டியது, ரீமிக்ஸ் பாட்டை அலறவிட வேண்டியது, பிறகென்ன.. ஒரே குத்தாட்டம்தானே.. :(

இல்லை. எல்லாப்பாட்டயும் அப்பிடி சொல்ல ஏலாது. ஏன் பழைய பாட்டுக்களிலையும் சும்மா ஒப்பாரிகள் இருக்கிதுதானே? இந்த ஒப்பாரிகள கேட்டுப்போட்டு அழுதுகொண்டு வாழ்க்கை வெறுத்து இருக்கிறதையும் பார்க்க, குத்துப்பாட்டுக்கள கேட்டுக்கொண்டு கொஞ்ச நேரம் கால் நோக நல்லாத் துள்ளினா நல்ல நித்தாவாவது வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை. எல்லாப்பாட்டயும் அப்பிடி சொல்ல ஏலாது. ஏன் பழைய பாட்டுக்களிலையும் சும்மா ஒப்பாரிகள் இருக்கிதுதானே? இந்த ஒப்பாரிகள கேட்டுப்போட்டு அழுதுகொண்டு வாழ்க்கை வெறுத்து இருக்கிறதையும் பார்க்க, குத்துப்பாட்டுக்கள கேட்டுக்கொண்டு கொஞ்ச நேரம் கால் நோக நல்லாத் துள்ளினா நல்ல நித்தாவாவது வரும்.

கனைஞன்,

எல்லா காலங்களிலும் நல்ல பாடல்களும் வந்திருக்கு சரியில்லாத பாட்டுக்களும் வந்திருக்கு. ஆனால் இந்தக்காலத்தில் திறமைகளில் ஒரு தேக்கம் உள்ளது. அதையே குறிப்பிட விரும்பினேன். மற்றும்படி பாடல்சுவை அவரவர் தனி விருப்பங்களைப் பொறுத்தது.

திறமைத்தேக்கம் உள்ளதால் வெளியே வருவதையெல்லாம் கேட்டு ஏதாவது ஒரு வகையில் ரசிக்க வேண்டிய நிலை. பொண்டாட்டி சரியா சமைக்காவிட்டாலும் நல்லம் நல்லம் எண்டு சொல்லித்தானே சாப்பிடுறனியள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

ரெம்பவும் பிசியாயிருக்கிற ரகுமான் போன்றோருக்கு அதிகம் மூளையைப் பாவிக்காமல் இப்படி அடுத்தவன்ர கற்பனைக்குத் தரகுவேலை பார்த்து துட்டுச் சேர்ப்பது ஈசியாக இருக்குதாக்கும்!!! :D:(

எனக்குதெரிந்து.

M.S.விஸ்வநாதன் அவர்களே A.R.றஹ்மான் நல்லாபண்ணியிருக்கார்என்று ஒருபத்திரிக்கையில்பாராட்டி இருக்கிறார் :(

மற்ற இசையமைப்பாளர்கள்தான்பாடலை கெடுப்பதாகவும் :D

அண்மையில் வந்த"பில்லா" படப்பாடலை தனக்கு போட்டுக்காண்பிக்கஅனுகியபோ துஅதை தவிர்த்ததாககூறியுள்ளார் :(

இளையராஜா கூட சில நேரங்களில், கடனே என்று பாடல்கள் போட்டதுண்டு. ஆனால் இப்போது கன பாடல்கள் அந்தவகையைச்சேர்ந்துள்ளது வருத்தப்படவைக்கிறது.

ரீமிக்சை நல்லவகையில் செய்தால் பரவாயில்லை என்பது என் கருத்து. ஆனால் அது தான் ஒரே வழி என்று அடிக்கடி வந்தால் அலுப்படிக்கத்தான் செய்யும்.

என்னை மிகவும் எரிச்சலடையவைப்பது சில பாடகர்களின் உச்சரிப்பு. தமிழ் வளர்ப்பு சங்கங்கள் ஒன்றும் செய்யக்காணம்.

  • தொடங்கியவர்

புலைமைப்பித்தனின் கோபத்தை வெறும் புலம்பல் என்று ஒதுக்கிவிட முடியாது. ‘ரீமிக்ஸ்’ பாடல்களில் சில நல்ல பாடல்கள் வந்திருப்பதும் மறுப்பதற்கில்லை. ஆனால் ‘ரீமிக்ஸ்’ என்ற பெயரில் பல பழைய நல்ல பாடல்கள் ராப்இசை கலந்து சீரழிக்கப்படுவது தான் வேதனையளிக்கின்றது. உதாரணமாக ‘‘ தொட்டால் பூமலரும்’’என்ற பாடல் ‘ரீமிக்ஸ்’ பாடலாக வெறும் இசைவடிவம் மட்டும் மாற்றப்பட்டு அதன் நிஜம் மாறாது பாடலாகி வந்தது இரசிக்க முடிந்தது. ஆனால் ‘‘பொன்மகள் வந்தாள்’’பாடல் நிஜத்தன்மையும்மாறி ராப் கலந்து சிதைக்கப்பட்டு அப்பாடல் இரசிக்கும் படியாக அமையவில்லையென்பது உண்மையே. பழைய ‘‘பொன்மகள் வந்தாள்’’பாடலை புதிய ‘ரீமிக்ஸ்’ ‘‘பொன்மகள் வந்தாள்’’பாடலால் ஏணி வைத்தும் எட்ட முடியவில்லை என்பதே பொருந்தும். ‘ரீமிக்ஸ்’ பாடல்கள் எப்போதாவது அருமையாக வந்தால் அதனை இரசிக்க முடியும். அவையே அடிக்கடி வர ஆரம்பித்தவிட்டால் ஒரு கட்டத்தில் எல்லோருக்கும் திகட்டிவிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விவேக் வழங்கும் புதிய RemiX பாடல்

http://clipsharetv.com/view_video.php?view...964b07152d234b7

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருத்தோலை வளர்வதை கண்டு காவோலைக்கு வயிறு எரிகிறது. கால மாற்றத்தில் இது எல்லாம் சகஜம். பழைய பொன்மகள் வந்தாள் பாடல் எனக்கும் பிடிக்கும். இதுவும் புடிக்கும். எது புடிக்கலையோ அதை விட்டுட்டு புடிச்சதை கேளுங்கப்பா. ஓவராத்தான் அழும்பு பண்ணாம.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.