Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முழுமையான யுத்தம் என்பது புலிகளின் ஏமாற்று வித்தை

Featured Replies

முழுமையான யுத்தம் என்பது புலிகளின் ஏமாற்று வித்தை

[17 - January - 2008] [Font Size - A - A - A]

விடுதலைப் புலிகள் அமைப்பு கிழக்கிலும் மன்னாரிலும் தமது கட்டுப்பாட்டிலிருந்த பெரும்பகுதி பிரதேசங்களை மட்டுமல்ல, அவர்களின் முன்னணித் தலைவர்களாகிய அரசியற்பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் , புலனாய்வுப் பிரிவின் இரண்டாவது தலைவர் சாள்ஸ் போன்ற முக்கிய தலைவர்களைக் கூட இழந்துவிட்டது. இவ்வாறு பெரும் பிரதேசப் பரப்பையும் முன்னணித் தலைவர்களையும் பாதுகாக்க முடியாத புலிகள் இயக்கத் தலைமைத்துவம் அரச படையினருடனான ஒரு முழுமையான யுத்தத்துக்குச் செல்ல முடியாத அளவுக்கு பலமற்ற நிலையிலேயே உள்ளது. இந்த நிலையில் அரச படையினருக்கு எதிராக புலிகள் ஒரு யுத்தத்தை ஆரம்பிக்க முடியாது எனவும் அதற்கான ஆட்பலமோ , ஆயுதபலமோ புலிகள் இயக்கத்திற்கு இல்லை என்பது மேற்படி அண்மைக்கால பரந்த பிரதேச இழப்புகளும் தலைவர்களின் இழப்புகளும் எடுத்துக் காட்டுவதாகவும் பாதுகாப்புப் படைத்தரப்பின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் கடந்த 11 ஆம் திகதி தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அரச முப்படையினர் கிழக்குப் பிரதேசங்களை புலிகளிடமிருந்து மீட்பதற்கான பாரிய யுத்த நடவடிக்கைகளைத் தொடங்கிய போது, புலிகள் இயக்கத்துக்கு அந்த யுத்தத்திற்கு முகம் கொடுக்கக்கூடிய ஆயுதபலமோ , ஆட்பலமோ கிழக்கில் இல்லாததால் படையினருடன் மோதுவதற்காக வேறு பிரதேசங்களிலிருந்து முக்கிய புலிகளின் படையணிகளைக் கொண்டு வந்தனர். எவ்வாறாயினும் கிழக்கில் ஒரு சதுர அடி நிலத்தையேனும் பாதுகாக்க புலிகளால் முடியவில்லை. அத்துடன், கிழக்கில் படையினருடான யுத்தத்தை வழிநடத்தி வந்த புலிகள் இயக்க முன்னணித் தலைவர்கள் பத்துப்பேர் அந்த மோதல்களில் அரச படையினரால் கொல்லப்பட்டனர். புலிகளுக்கு ஆயுதபலமும், ஆட்பலமும் போதிய அளவு இருந்திருந்தால் சம்பூர் தொடக்கம் தொப்பிகல வரை நடந்த யுத்தத்தில் அரசபடையினருடன் மோதல்களை மேற்கொண்டிருக்க முடியும். ஆனால், அந்தக் களமுனைகள் எதிலும் புலிகள் இயக்கத்தால் போராட முடியாமல் தந்திரோபாய பின்வாங்கல் என்று கூறி யுத்தமுனைகளிலிருந்தும் மேற்படி பிரதேசங்களிலிருந்தும் தப்பியோடினர்.

இந்தப் பலமற்ற நிலை காரணமாகவே அண்மையில் புலிகள் இயக்க முன்னணித் தலைவர் புலித்தேவன் அரசபடையினருக்கு எதிராக புலிகள் இயக்கம் முழுமையான யுத்தத்தை ஆரம்பிக்கும் என்று கூறப்படுவதை மறுத்துள்ளார். குறைந்தது தமிழ்ச்செல்வன், சாள்ஸ் உட்பட மிக முக்கிய தலைவர்களைக் கூட பாதுகாக்க முடியாத புலிகள் இயக்கத் தலைமைத்துவம் முழுமையான யுத்தம் ஆரம்பிக்கப்படுமென அண்மையில் கூறியிருப்பது தமிழ் மக்களை ஏமாற்றும் பிரசாரமன்றி வேறல்ல என மேற்படி சிரேஷ்ட இராணுவத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு புலிகள் இயக்கத்தின் அறிவித்தலைப்போலவே இயக்கத்துக்கு பல்வேறு வழிகளிலும் உதவிசெய்துள்ள சில அரச சார்பற்ற நிறுவனங்களும் புலிகள் இயக்கம் அரசபடையினருடன் முழுமையான யுத்தத்தைச் செய்யக்கூடிய வல்லமையும் படைபலமும் இருப்பதாகக் கூறியுள்ளன.

புலிகளுடன் சேர்ந்து மேற்குறிப்பிட்ட அரசு சார்பற்ற நிறுவனங்களும் தமிழ் மக்களை ஏமாற்ற முயற்சி செய்கிறது என்பதையே இது காட்டுகிறது என மேற்படி இராணுவத் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ராணுவத்தளபதி முழுமையான யுத்தமெண்டாலென்ன அரைகுறை யுத்தமெண்டாலென்ன ஏன் அலட்டிக்கொள்ள வேணும். யுத்தம் எந்தமாதிரி வந்தாலும் அதைத் தமிழர்கள் எதிர் நோக்கத்தானே வேணும். தொடங்கப் போறது அவையதான். அவை முழுமையாத் தொடங்கினாத் தமிழரும் அதுக்கேத்த மாதிரி அதை எதிர் நோக்குவினம். எல்லாத்தையும் காலம்தானே நிர்ணயிக்கப்போகுது. ஆயுத பலமும் ஆட்பலமும் அததுக்கு ஏற்றமாதிரித்தானே நிர்ணயிக்;கபடவேணும். முதலில உங்களால முழுமையான ஒரு யுத்தத்தை ஆரம்பிக்க முடியுமா எண்டு பாருங்கோ. அதுக்குப் பிறகு தமிழர் அதை எதிர்நோக்குவினமா இல்லையா எண்டத அறியலாம். இப்ப நடக்கப் போறது ஜீவ மரணப்போராட்டம். இதில வென்றால் தமிழனுக்குத் தமிழீழம் நிச்சயம். தோற்றால் இலங்கையில தமிழனமே இல்லாமற் போயிரும். மிச்சம் ஆபத்தான நிலைமை. அதனால அரசாங்கத்துக்குத்தான் ஒரு முழுமையான யுத்தத்தை நடத்தி தமிழினத்தைப் பூண்டோடு அழிக்கிறது ஏலுமான காரியமா எண்டு ஆராயவேண்டிய பொறுப்பு இருக்குது. முடிஞ்சாச் செய்து பாருங்கோ. ஏற நனைஞ்சவனுக்குக் கூதலுமில்லக் குளிருமில்ல. தலைக்குமேல வெள்ளம் வந்தால் சாணென்ன முழமென்ன. வீணா ஆப்ப இழுத்துப் போட்டியள் விதை நெருங்கி அவஸ்தைப்படக்குள்ளதான் செய்த தவறு புரியும்.

இதில உண்மையிருக்கலாம் இல்லாதிருக்கலாம், அதுக்காக யுத்தம் செய்துதான் முடிவெடுக்கவேனுமென்றில்ல. முன்னம் சொன்னவர் சொன்னது சரிதான், இது தமிழர் களின் வாழ்வா சாவா போராட்டம். இதில் கோட்டை விட்டால்கைலாசம்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முழுமையான யுத்தம் என்பது புலிகளின் ஏமாற்று வித்தை

[17 - January - 2008] [Font Size - A - A - A]

இவ்வாறு புலிகள் இயக்கத்தின் அறிவித்தலைப்போலவே இயக்கத்துக்கு பல்வேறு வழிகளிலும் உதவிசெய்துள்ள சில அரச சார்பற்ற நிறுவனங்களும் புலிகள் இயக்கம் அரசபடையினருடன் முழுமையான யுத்தத்தைச் செய்யக்கூடிய வல்லமையும் படைபலமும் இருப்பதாகக் கூறியுள்ளன.

புலிகளுடன் சேர்ந்து மேற்குறிப்பிட்ட அரசு சார்பற்ற நிறுவனங்களும் தமிழ் மக்களை ஏமாற்ற முயற்சி செய்கிறது என்பதையே இது காட்டுகிறது என மேற்படி இராணுவத் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மெல்லவும் முடியவில்லை மறுக்கவும் முடியவில்லை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் ஒரு முழுமையான யுத்தத்தை இரண்டிலொன்று காணுவோம் என்று தொடங்கி நடத்துவதற்கு சிறீலங்காவின் அரசாங்கத்திலுள்ளவர்கள் போல் அவ்வளவு முட்டாள்களல்ல. மீட்கப்பட்ட இடங்களைப் பாதுகாக்கும் தற்காப்பு யுத்தத்தையும் படிப்படியான மண்மீட்புப் போரையும்தான் தமிழர்கள் செய்வார்களேயொழிய ராணுவத் தளபதி சொல்வதுபோல் முழுமையான யுத்தத்தில் விட்டில் பூச்சிகளைப்போல் விழமாட்டார்கள். சிங்கள ராணுவம்தான் முழுமையான யுத்தமென்று தனது அனைத்து வளங்களையும் உபயோகித்து ஓர் பெரும் போரை ஆரம்பிக்கமுடியும்.

மூக்குடைபடமுடியும். எதற்தற்கும் காலம் பதில் சொல்லக் காத்திருக்கிறது. எல்லோரும் ஏறி விழுந்த குதிரையில சக்கிடுத்தார் ஏறிச் சறுக்கி விழுந்தாராம் எண்ட கதையாய் எல்லாம் முடியப் போகிறது. குருடனுக்குக் குருடன் வழிகாட்டிய கதையாய் இரண்டுதரம் புரட்சி பண்ணப்போய் சிறீலங்காவைக் குட்டிச்சுவராக்கித் தானும் அழிந்து போன ஜே வி பி அரசாங்கத்துக்கு அனுபவித்த அனுபவஸ்தனாய் பாடஞ்சொல்லிக்கொடுக்க அந்த மண்குதிரை நம்பி மகிந்த அரசு ஆற்றிலிறங்கிவிடடது.

இது தமிழர் களின் வாழ்வா சாவா போராட்டம்

இதில் கோட்டை விட்டால் கைலாசம்தான்.

இந்து மதத்தை சரியாகப் புரிந்தவர்களிற்கு தெரியும் புண்ணியம் செய்தவர்கள் பிறவிப் பெருங்கடலை நீங்கும் பாக்கியம் பெற்றவர்கள் தான் கைலாசம் போகலாம் எண்டு. கோட்டை விட்டு தமிழர்கள் எல்லாரும் கைலாசம் போகலாம் என்றால் குடுத்து வைச்ச இனம் தான் நாங்கள்.

தமிழன் பிறந்த நாளில் இருந்து கைலாசம் போவதற்குத்தான் தன்னைத் தயார்படுத்துறான். அதற்கு உற்றார் உறவினர்கள் பாடசாலையில் ஆசிரியர்கள் பாடவிதானம் நண்பர்கள் சமூகவட்டம் என்று எல்லாமே எந்தவித குளறுபடிகளும் இன்றி அந்த ஒரு குறிக்கோளை நோக்கித்தான் இயங்குகிறது. எனவே எல்லாரும் ஒற்றுமையாக இப்படி விசுவாசமாக விரும்புவதால் கோட்டைவிடுபடாது போய்விடும் என்ற பயம் தேவையில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.