Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

M.I.A. மாயா

Featured Replies

  • தொடங்கியவர்

கதிர்காமர் தன்னை ஈழ தமிழர் என்று வெளிப்படுத்துவதில்லை அதை அவர் விரும்பியதும் கிடையாது.

  • Replies 59
  • Views 7.4k
  • Created
  • Last Reply

கதிர்காமர் தன்னை ஈழ தமிழர் என்று வெளிப்படுத்துவதில்லை அதை அவர் விரும்பியதும் கிடையாது.

ஏன் மிக அண்மையில் சுனாமி நிவாரணத்துக்கு உதவி செய்த பிரித்தானிய மக்களுக்கு நன்றி சொல்ல பிரித்தானியா வந்த போது பிபிசியில் ஒரு பேட்டியின் போது உலகத்துக்கே சொன்னாரே நானும் தமிழன் தான்...இலங்கைத்தமிழன் தான் என்று...!!!!!!!!!! :wink: :( :P

  • தொடங்கியவர்

அவர் பொதுவாக வெளிப்பட்டுத்த்துவதில்லை தமிழராக பார்க்க படுவதும் இல்லை. நீங்கள் மாயாவை பார்க்க தமிழராக தெரியவில்லை என்று சொன்னீர்கள் அதை ஏன் என்று சொல்லுங்களேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப குருவியாருக்கு மாயா (பெண்) மேல். கடுப்பா இல்லை அவரது படைப்புக்கள் மேலையா இல்லை மாயா ஈழத்தை இழுத்து தனக்கு ஆதாயம் தேடுறா என்றியளா..?? :wink:

அவர் பொதுவாக வெளிப்பட்டுத்த்துவதில்லை தமிழராக பார்க்க படுவதும் இல்லை. நீங்கள் மாயாவை பார்க்க தமிழராக தெரியவில்லை என்று சொன்னீர்கள் அதை ஏன் என்று சொல்லுங்களேன்

பின்ன...ஒரு மேற்கத்தேய பொப் உலக உறுப்பினராத் தெரியுறத ஒரு உருவத்தை ஈழத்தமிழராத் தெரிவதாகப் பொய்யா சொல்லச் சொல்லுறீங்க...!

ஈழத்தமிழன் ஒன்றும் பொபுக்குள்...அடையாளம் தேடவில்லை...! அவனுக்கென்று ஒரு தனித்துவம் இருக்கு என்பதைச் சொல்ல...இவர்களைப் போல ஆயிரம் ஆயிரம் மாணவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டி இருந்தது...! அதுவரை நூற்றுக்கணக்கில் ஈழத்தமிழர்கள் புலத்தில் எத்தனையோ உயர் அந்தஸ்துகளில் இருந்தும் ஈழத்தமிழனுகென்று உலகில் ஒரு அடையாளத்தை அளிக்க முடியவில்லை...புரிந்து கொள்ளுங்கள்...!

கடந்த 25 வருடகால போரியல் வரலாறு தந்த துன்பச் சுமைகளின் விளைவே ஈழத்தமிழன் என்ற உலக அடையாளம்...! அதை பொப்புக்குள் வைத்துச் சீராட்டுவதாக கூறி தனி நபர் ஒருவர் பொப் அடையாளம் தேடுவதை... நீங்கள் ஈழத்தமிழர் அடையாளமிடுவதாகச் சொல்வது போல் வேடிக்கை உலகில் எதுவும் இருக்க முடியாது....! :wink: :idea:

இப்ப குருவியாருக்கு மாயா (பெண்) மேல். கடுப்பா இல்லை அவரது படைப்புக்கள் மேலையா இல்லை மாயா ஈழத்தை இழுத்து தனக்கு ஆதாயம் தேடுறா என்றியளா..?? :wink:

மாயாவில் (மியாவில்) எந்தத் தப்பும் இல்ல...அவர் தனது திறமைக்கு ஏற்ப அதை வெளிப்படுத்த முயல்கிறார்...அதைப் பாராட்டத்தான் வேண்டும்..ஊக்கிவிக்கத்தான் வேண்டும்...ஒரு தனி நபர் முயற்சியாக... ஈழத்தமிழ் பாரம்பரியத்தைக் கொண்டதுக்காக அல்ல...!

ஆனால் அவரை ஈழத்தமிழன் என்றும் ஈழத்தமிழருக்கு பொப் உலகில் அடையாளமிடும் தேவதை என்றும்..அவரின் அடையாளந்தான் புலத்தில் ஈழத்தமிழனுக்கு அடையாளம் என்றும்...அதுவே ஈழத்தமிழருக்கு புலத்தில் அடையாளமிட உதவும் என்றும் அவர் ஒரு ஈழத்தமிழ் இரட்சகர் என்பது போலவும் பல்வேறு போலித்தோற்றங்கள் காட்டுவதையே எதிர்க்கின்றோம்...! இவை அவசியமில்லாதவை..கலையைக் கலையாக உணரத்தெரியாத தன்மையின் வெளிப்பாடாகவே இவற்றைக் காண்கிறோம்...இது ஈழத்தமிழரைத் தரந் தாழ்த்தும் செயல்கூட.....! :wink: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் அவரை ஈழத்தமிழன் என்றும் ஈழத்தமிழருக்கு பொப் உலகில் அடையாளமிடும் தேவதை என்றும்..அவரின் அடையாளந்தான் புலத்தில் ஈழத்தமிழனுக்கு அடையாளம் என்றும்...அதுவே ஈழத்தமிழருக்கு புலத்தில் அடையாளமிட உதவும் என்றும் அவர் ஒரு ஈழத்தமிழ் இரட்சகர் என்பது போலவும் பல்வேறு போலித்தோற்றங்கள் காட்டுவதையே எதிர்க்கின்றோம்...! இவை அவசியமில்லாதவை..கலையைக் கலையாக உணரத்தெரியாத தன்மையின் வெளிப்பாடாகவே இவற்றைக் காண்கிறோம்...இது ஈழத்தமிழரைத் தரந் தாழ்த்தும் செயல்கூட.....!

_________________

எங்கள் கருத்துக்கூட இது தான் :wink: :idea:

  • தொடங்கியவர்

ஏன் மிக அண்மையில் சுனாமி நிவாரணத்துக்கு உதவி செய்த பிரித்தானிய மக்களுக்கு நன்றி சொல்ல பிரித்தானியா வந்த போது பிபிசியில் ஒரு பேட்டியின் போது உலகத்துக்கே சொன்னாரே நானும் தமிழன் தான்...இலங்கைத்தமிழன் தான் என்று...!!!!!!!!!! :wink: :( :P

கதிர்காமர் தன்னை இலங்கைத் தமிழர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டாரே ஒழிய ஈழத்தமிழர் என்றல்ல

கதிர்காமர் தன்னை இலங்கைத் தமிழர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டாரே ஒழிய ஈழத்தமிழர் என்றல்ல

இலங்கைக்கு இன்னொரு பெயர் தான் ஈழம்..........அது முழு இலங்கையையும் குறிப்பதாக தான் நினைக்கிறேன். :wink: :idea:

பொப் இசையே மேற்கத்திய இசைதானே? அதற்கேற்ற உடைகளை அணிந்தவுடன், ஈழத்தமிழர் என்ற அடையாளம் அழிந்துவிடும் என்று எவ்வாறு கூறமுடியும்?

காற்சட்டை போட்டு துப்பாக்கி ஏந்தி போராடாமல்.. கொடுக்கு கட்டி வாள் துாக்கினால்தான் ஈழப் போராட்டம் என்று கூறுவதுபோலிருக்கிறது! :( :P

அருளர் என்று பாடல் சீடீக்கு பெயர் வைச்சிருக்காங்க.. சில சேதிகளை போராட்டத்துக்கு சார்பாக சொல்லுறாங்க.. அந்த கருத்துக்கள் பொப் இரசிகர்களை சென்றடைவதற்கு ஏதுவாக இருக்கிறாங்க.. அந்த வகையில் அவருக்கு உற்சாகம் கொடுப்போம்.. :P

ஆனால் அவரை ஈழத்தமிழன் என்றும் ஈழத்தமிழருக்கு பொப் உலகில் அடையாளமிடும் தேவதை என்றும்..அவரின் அடையாளந்தான் புலத்தில் ஈழத்தமிழனுக்கு அடையாளம் என்றும்...அதுவே ஈழத்தமிழருக்கு புலத்தில் அடையாளமிட உதவும் என்றும் அவர் ஒரு ஈழத்தமிழ் இரட்சகர் என்பது போலவும் பல்வேறு போலித்தோற்றங்கள் காட்டுவதையே எதிர்க்கின்றோம்...! இவை அவசியமில்லாதவை..கலையைக் கலையாக உணரத்தெரியாத தன்மையின் வெளிப்பாடாகவே இவற்றைக் காண்கிறோம்...இது ஈழத்தமிழரைத் தரந் தாழ்த்தும் செயல்கூட.....!

_________________

8) 8) கூலாகுங்கள் குருவி.. நீங்கள் சொன்னமாதிரி கொஞ்சகாலம்

பொறுத்திருந்து தான் பார்ப்போமே? :wink:

பொப் இசையே மேற்கத்திய இசைதானே? அதற்கேற்ற உடைகளை அணிந்தவுடன், ஈழத்தமிழர் என்ற அடையாளம் அழிந்துவிடும் என்று எவ்வாறு கூறமுடியும்?

காற்சட்டை போட்டு துப்பாக்கி ஏந்தி போராடாமல்.. கொடுக்கு கட்டி வாள் துாக்கினால்தான் ஈழப் போராட்டம் என்று கூறுவதுபோலிருக்கிறது! :lol: :P

அருளர் என்று பாடல் சீடீக்கு பெயர் வைச்சிருக்காங்க.. சில சேதிகளை போராட்டத்துக்கு சார்பாக சொல்லுறாங்க.. அந்த கருத்துக்கள் பொப் இரசிகர்களை சென்றடைவதற்கு ஏதுவாக இருக்கிறாங்க.. அந்த வகையில் அவருக்கு உற்சாகம் கொடுப்போம்.. :P

ஏதோ அண்ணா...புகழ் கிடைச்சதும் ஈழத்தை மறைக்காமல் மறக்காமல் விட்டாச் சரி...! நாங்கள் இவர்களை நம்பத் தயார் இல்லை....! இவரை வெறும் பொப் உலக உறுப்பினராகவே காண்கிறோம்...! :wink: :( :idea:

  • தொடங்கியவர்

இலங்கைக்கு இன்னொரு பெயர் தான் ஈழம்..........அது முழு இலங்கையையும் குறிப்பதாக தான் நினைக்கிறேன். :wink: :idea:

இலங்கையைக் குறிப்பதற்கான இன்னொரு பெயர்தான் ஈழம் என்பது தெரியும். தமிழீழம் என்பது வடக்குக் கிழக்கு இலங்கைப்/ஈழப் பிரதேசத்தைக் குறிப்பது. ஆனால் இன்றைய போராட்ட அரசியலில் ஈழத்தமிழர் என்கின்ற சொற்பதம் பொருளுணர்ந்தே பயன்படுத்தப்படுகிறது. அதனை உணர்ந்தபடியால் தான் கதிர்காமர் தானும் இலங்கைத் தமிழர் என்கின்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.

அதுதவிர மாயா தன்னை ஈழத்தமிழராய் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் என்பதைத் தான் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறதே ஒழிய, மாயாதான் ஈழத்தமிழரை உலக அரங்கில் அடையாளப்படுத்துகிறார் என்று சொல்லப்படவில்லை. கட்டுரையை திரும்பவும் வாசியுங்கள் அது நன்கு புலப்படும்.

ஆனால் அவரை ஈழத்தமிழன் என்றும் ஈழத்தமிழருக்கு பொப் உலகில் அடையாளமிடும் தேவதை என்றும்..அவரின் அடையாளந்தான் புலத்தில் ஈழத்தமிழனுக்கு அடையாளம் என்றும்...அதுவே ஈழத்தமிழருக்கு புலத்தில் அடையாளமிட உதவும் என்றும் அவர் ஒரு ஈழத்தமிழ் இரட்சகர் என்பது போலவும் பல்வேறு போலித்தோற்றங்கள் காட்டுவதையே எதிர்க்கின்றோம்...!

அதுதவிர மாயா தன்னை ஈழத்தமிழராய் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் என்பதைத் தான் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறதே ஒழிய, மாயாதான் ஈழத்தமிழரை உலக அரங்கில் அடையாளப்படுத்துகிறார் என்று சொல்லப்படவில்லை. கட்டுரையை திரும்பவும் வாசியுங்கள் அது நன்கு புலப்படும்
:idea: :idea:

கட்டுரைகள் எதுவும் மாயாவை ஈழத்தமிழரின் ரட்சகர் என்று சொல்லவில்லை.....அவரின் அடைகையை அவர் ஈழத்தமிழரின் பிரச்சனையும் கருத்திலேடுக்கிறார். அவருண்டு தன்பாடுண்டு என இருக்கவில்லை என்பதையே சுட்டுகிறன. அவரை யாரும் தலையில் வைத்து கொண்டாடவும் இல்லை. அவரது போக்கு அல்லது அவரது பிரபல்யம் தேர்ந்து கொண்ட வழி தனிப்பட் ரீதியில் யாருக்கும் பிடிக்காது இருக்கலாம்.

ஓட்டப்பந்தயத்தில் ஓடும் வீராங்கனை தமிழரின் கலாச்சார உடையுடன் ஓடு என கேட்பது எவ்வளவு அபத்தமானதோ அதேயளவு அபத்தமானது தான் பொப் இசையில் நுளைந்த ஓருவரின் உடையை விமர்சிப்பதுமிருக்கும். அதே போன்றே அவரது பெயரை வேறு விதமாக எழுத முற்படுவதுமிருக்கும்.

இப்ப என் சந்தேகத்தையும் கேட்கலாமெண்டு நினைக்கின்றேன். மேலத்தேச பொப்பிசைப்பாடகிகளின் பாட்டை எத்தனை பேர் இரசித்தீர்கள் அவர்களின் அங்க அசைவுகளை எத்தனை பேர் இரசித்தீர்கள். பொதுவாகவே பொப்பிசைப் பாடகிகள் தமது ஆடைக் குறைப்பினாலேயே இரசிகர்களை கவரப்பார்க்கின்றார்கள். உச்சக்கட்டதஇதில் மேலாடைகளை முற்றாக களைந்தெறிந்து மகா தரிசனங்கள் கொடுத்தவர்களுமுண்டு. எனவே பெரும்பான்மையான இரசிகர்கள் ஒரு பொப்பிசைப் பாடகியின் பாடலை இரசிக்கின்றார்களென்றால் அவவின் உடம்பை வைத்துத்தான்.இந்த நிலையில் ஒரு பாடகி பாடும் போது அவவின் பின்னனியில் என்ன போகின்றதென்பதை எத்தனை பேர் கவனிப்பார்கள் அவவின் முன்னனியிலல்லவா கவனமெல்லாமிருக்கும்.

:roll: 8) :roll: 8)

இப்ப என் சந்தேகத்தையும் கேட்கலாமெண்டு நினைக்கின்றேன். மேலத்தேச பொப்பிசைப்பாடகிகளின் பாட்டை எத்தனை பேர் இரசித்தீர்கள் அவர்களின் அங்க அசைவுகளை எத்தனை பேர் இரசித்தீர்கள். பொதுவாகவே பொப்பிசைப் பாடகிகள் தமது ஆடைக் குறைப்பினாலேயே இரசிகர்களை கவரப்பார்க்கின்றார்கள். உச்சக்கட்டதஇதில் மேலாடைகளை முற்றாக களைந்தெறிந்து மகா தரிசனங்கள் கொடுத்தவர்களுமுண்டு. எனவே பெரும்பான்மையான இரசிகர்கள் ஒரு பொப்பிசைப் பாடகியின் பாடலை இரசிக்கின்றார்களென்றால் அவவின் உடம்பை வைத்துத்தான்.இந்த நிலையில் ஒரு பாடகி பாடும் போது அவவின் பின்னனியில் என்ன போகின்றதென்பதை எத்தனை பேர் கவனிப்பார்கள் அவவின் முன்னனியிலல்லவா கவனமெல்லாமிருக்கும்.

:roll: 8) :roll: 8)

இந்த மியாவுடைய ஒரு பாடலைக் காணவும் கேட்கவும் கிடைத்தது... அதில் ஈழக்குறிகள் என்பது பின்னணிச் சித்திரங்களாக வந்து போகிறது...பாவம் தமிழும் சித்திரத்தோடு சித்திரமாக சித்திரவதைப்படுகிறது... ஈழம் பற்றி அறியாத ஒருவர் இந்தப் பின்னணிச் சித்திரங்களை உற்றுக் கவனித்து சில தகவல்களைப் பெறுவார் என்று அதைப் பார்த்த போது தோன்றவேயில்லை...உச்சரிக்கப்ப

உச்சரிக்கப்படும் ஆங்கிலமும்...மூன்றாம் நிலை ஆங்கில மொழி உச்சரிப்பாக இருக்கிறது.. வன்னா பின்னா

அதென்ன குருவி வன்னா பின்னா? :P

You wanna war??! உந்த வன்னாவுக்கு ஆங்கிலத்தில என்ன அர்த்தமோ... சரளமாக ஆங்கிலம் பேசுறவையை அவர்கள் பேசும் முறையைக் கொண்டு.. 3 நிலைப்படுத்தலாம்...ரொனி பிளேயர் போல அரசியல்வாதிகள் செய்தியாளகள் கல்வியலாளர்கள் பேசும் ஆங்கிலம்... மேற்குடி நடுத்தர குடும்பங்கள் பேசும் ஆங்கிலம்...ஊத்தை வெள்ளை, ஊத்தைக்காப்பிலி, இந்திய வம்சவாரிசுகள்..இதுகள் பேசுறது மூன்றாம் நிலை ஆங்கிலம்...அதுகள் தான் வின்னா பின்னா...போடுறது...ஏ மா...(காய் மான் என்றதை) எண்டுங்கள்...! இந்த வகைப்படுத்தலில் இருந்து மியா எந்த வகை என்று அறிஞ்சுக்கோங்க...! :wink: :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் பிரிச்சிடுவாங்களே.. பிரிச்சிடுவாங்க.. :evil:

ம் பிரிச்சிடுவாங்களே.. பிரிச்சிடுவாங்க.. :evil:

நாங்களா எதுவும் பிரிக்கல்ல.. நடைமுறையைச் சொன்னம்...! ஏன் கோவிக்கிறீர்கள்..! :wink: :P

  • 3 weeks later...

http://http://www.asianpacificpost.com/new...rticle/406.html

Daughter of Tamil Tigers roars to the top of the hip-hop charts

May 5, 2005

Tamil Tiger burning bright

Maya Arulpragasam, daughter of Tamal Tigers roars to the top of the hip-hop charts

As the daughter of a militant Tamil freedom fighter, Maya Arulpragasam had a childhood unlike those of most budding pop stars. In 1983, when she was seven and living in her native Sri Lanka, civil war broke out. Her memories of the time remain vivid.

“People are fighting, your mum‘s crying, the army‘s returned, your dad‘s missing, your cousin‘s dead,“ she says. “What do you do? You can‘t play out in the street ‘cause it‘s dangerous. I used to sit and draw.“ Arulpragasam‘s mother escaped to London with her three children in 1986. Their new home was a poverty-stricken public housing estate, but the middle child wasn‘t going to let anything stop her from pursuing her creative ambitions.

“In England your opportunities are predetermined by what class you‘re in,“ she says. “Coming from Sri Lanka, I just didn‘t give a shit. I was like, ‘No one‘s going to plonk me in the middle of somewhere and expect me to live like the dirtiest, poorest person in town‘, you know what I mean? I just didn‘t want to be a victim.“

She talked her way into Central Saint Martins College of Art and Design in south London, where she studied film and fine art. A series of incidents led her to switch creative fields to music.

Maya Arulpragasam

The cool older guys who lived next door on the estate had turned her on to the ferocious hip-hop of Public Enemy and NWA in her early teens. After art school, she worked and became friends with Elastica frontwoman Justine Frischmann.

Through her, Arulpragasam met the provocative punkette Peaches, who inspired her to buy a Roland MC-505 drum machine. A holiday in the Caribbean gave her the final push.

“I kind of just wanted to work out why I wasn‘t musical,“ she says. “Cause so many people used to say that to me: ‘How come you‘re really, sort of, tone deaf? You can dance and stuff like that, you obviously love music, but … you‘re really bad at it‘. People wouldn‘t even let me sort of hum and stuff around them.”

Ironically, those very people may be having trouble stopping themselves from humming to Arulpragasam‘s debut collection of infectious beats and rhymes, which she recorded under the name M.I.A.

Her album Arular was named after her father‘s activist handle. It‘s a brew of the political and the funky, as heavily influenced by the dance-hall sounds of the Caribbean as by Arulpragasam‘s unusual, intense upbringing: a call to arms with crisp beats, fuzzy bass effects and unshakeable melodic hooks.

%7Boption%7D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்து இணைக்கப்பட்டுள்ளது.

  • 2 months later...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாயா அருள் பிரகாசம் என்ற தமிழ் பெண் ராப் இசைத்துறையில் மேர்க்கூரி இசை விருதுக்கு நியமிக்கப்பட்டுள்ளார. பிரித்தானியாவில் வெளிவந்த சிறந்த இசைக்கு வழங்கப்படும் இந்த விருதுக்கு ஒரு தமிழ் பெண் தெரிவுசெய்யப்பட்டமை ஒரு சாதனேயே! வெற்றிபெற வாழ்த்துக்கள்.! இன்று லண்டனில் வெளிவரும் இலவச ஆங்கிலப்பத்திரிகையான மெற்றோவில் இந்த பெண்ணின் படம் முன்பக்கததை அலங்கரித்தது. பத்து வயதில் புலம் பெயர்ந்து வந்த இந்த நங்கைக்கு அப்போது தெரிந்தது 5 ஆங்கில வாரத்தைகள் தான். தற்போது ஆங்கிலத்தில் ரப் பாடி அதை விருது பெற நியமிக்குமளவிற்கு வந்தது நிச்சயம்ஒரு சாதனைதான்!

http://www.miauk.com/

http://www.bbc.co.uk/music/mercurys/

தகவலுக்கு நன்றி...ஷான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.