Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத் தமிழர்கள் விரும்புவது என்ன என்பது பற்றி சர்வதேச ஊடகங்கள் கவலைப்படுவது இல்லை: யேர்மனிய பேராசிரியர் சாடல்

Featured Replies

ஈழத் தமிழர் பிரச்சனையில் சர்வதேச ஆங்கில ஊடகங்களின் போக்குகள், தமிழர் தாயகத்தில் புலிகளின் நிர்வாகப் பகுதி மற்றும் சிறிலங்கா ஆக்கிரமிப்பு பகுதி மக்களின் வாழ்க்கை, சிறிலங்கா மற்றும் தமிழீழத்தின் ஊடக செயற்பாடுகள் ஆகியவை பற்றி சென்னையில் நடைபெற்ற கருத்துரிமை மீட்பு மாநாட்டில் யேர்மன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும் தெற்காசிய நிலைமைகள் தொடர்பிலான ஆய்வாளருமான டக்மர் எல்மன் விளக்கமளித்தார்.

தொடர்ந்து வாசிக்க

உண்மைதான் இந்தியா தனது பிராந்திய ஆளுமையை நலைநாட்ட முயல்கிறது. அதற்கு இலங்கை பலியாகின்றது. அதற்காக ஈழத்தமிழர் பிரச்சனையை இந்தியா பயன்படுத்துகின்றது. தமிழர்களின் சுயநிர்ணயத்தின் தேவையை உணர்ந்து மேற்கத்தேய ஊடகங்கள் அதனை வெளிப்படுத்துமானால் அவை தமிழரின் தீர்விற்கு நன்மை பயக்கும் விடயம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்கள் விரும்புவது என்ன - யேர்மனிய பேராசிரியர்

28.01.2008 / நிருபர் குளக்கோட்டன்

ஈழத் தமிழர் பிரச்சனையில் அனைத்துலக ஆங்கில ஊடகங்களின் போக்குகள், தமிழர் தாயகத்தில் புலிகளின் நிர்வாகப் பகுதி மற்றும் சிறிலங்கா ஆக்கிரமிப்பு பகுதி

மக்களின் வாழ்க்கை, சிறிலங்கா மற்றும் தமிழீழத்தின் ஊடக செயற்பாடுகள் ஆகியவை பற்றி சென்னையில் நடைபெற்ற கருத்துரிமை மீட்பு மாநாட்டில் யேர்மன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் தெற்காசிய நிலைமைகள் தொடர்பிலான ஆய்வாளருமான டாக்மர் எல்மன் விளக்கமளித்தார்.

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை "கண்டனமும் இரங்கலும் தேசத்துரோகமா?" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்துரிமை மீட்பு மாநாட்டில் டாக்மர் எல்மன் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழ் எழுத்து வடிவம்:

போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த பிறகு, நானும் எனது கணவரும் தொடர்ந்து வன்னிப் பகுதிக்குச் சென்று வருவது வழக்கம்.

2005 ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பயணம் இலகுவாகவே இருந்தது. ஆனால் 2007ஆம் ஆண்டு செப்ரெம்பரில் நாங்கள் சென்றபோது, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

கடுமையான சோதனைகள், கெடுபிடிகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஓமந்தையில் கடுமையான சோதனைகளைக் கடந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசதத்துக்குள் நாங்கள் நுழைய இருந்தபோது, சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஒரு பெண், எங்களது கடவுச்சீட்டை வாங்கிப் பரிசோதித்துவிட்டு, பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி பெற்றால்தான், தமிழர் பகுதிக்குள் நுழைய முடியும் என்று கூறிவிட்டார்.

பல மைல் தூரம் திரும்பி வந்து, பாதுகாப்புத்துறை அலுவலகங்களில் அதிகாரிகளைச் சந்தித்து நீண்ட போராட்டத்துக்குப் பிறகு நாங்கள் உள்ளே நுழையும் அனுமதி கிடைத்தது.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கிளிநொச்சிக்கு எங்களுக்கு பழக்கமான தொண்டு நிறுவன உதவியுடன் நுழைந்தோம். கிளிநொச்சியில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.

அதே

ஒற்றை நெடுஞ்சாலை-

தோட்டத்தில் குடியிருப்புக்கள்-

கிராமத்துக் கடைகள்-

குண்டும் குழியுமான சாலைகள்-

2006 இல் ஒரு சிலர் உந்துருளி வாகனங்களில் பயணித்தனர்.

இப்போது எல்லோருமே ஈருருளியில் பயணம்-

பெரும்பாலானோர் நடைபயணம்.

கடுமையான எரிபொருள் பற்றாக்குறை-

ஆனால் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அரிசி தாராளமாக கிடைக்கிறது-

பருப்பு கிடைப்பதில்லை.

மக்கள் பட்டினி கிடக்கவில்லை.

கடுமையாக தொடர்ந்தும் உழைக்கிறார்கள்.

தொண்டு நிறுவனங்கள் மக்களோடு இணைந்து பல்வேறு தொழில் வாய்ப்புத் திட்டங்களையும் அமுல்படுத்தி வருகின்றன.

தையல், கோழி வளர்ப்பு போன்ற குடிசைத் தொழில்களுக்கான பயிற்சிகள் தரப்படுகின்றன. சிறிலங்கா அரசாங்கத்தால் "தமிழர் புனர்வாழ்வுக் கழகம்" தடை செய்யப்பட்டு விட்டதால், தொண்டு நிறுவனங்களின் சேவை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமெரிக்கா கூட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதியை முடக்கிவிட்டது. நாங்கள் கிளிநொச்சியில்- கடந்த செப்ரெம்பரில் பயணம் செய்த போது நல்லவேளையாக பெரிய அளவில் தாக்குதல் எதுவும் நிகழவில்லை. இரவு நேரங்களில் வானத்தில் சிறிலங்காவின் 'கிபீர்" வானூர்திகள் பலத்த சத்தத்துடன் பறந்து கொண்டிருந்தன.

மன்னாரில் ஒரு குடும்பத்தினர் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று, கண்ணிவெடித் தாக்குதலுக்கு உள்ளாகி 9 பேர் இறந்ததாக விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன், எங்களிடம் கூறினார்.

வன்னிப் பகுதிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் பாரிய வேறுபாடுகள் நிலவுவதை நாங்கள் பார்க்க முடிந்தது.

யாழ்ப்பாண நிலைமை

யாழ்ப்பாணம் முழுமையாக சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மக்கள் அச்சத்துடனும் விரக்தியுடனும் அல்லற்படுகின்றனர். உறவினர்கள் சிலரை நாங்கள் சந்தித்தோம்.

தங்களுடைய குழந்தைகளின் படிப்புக்காகவே உயிர் வாழ்கிறோம் என்று கூறினார்கள். ஊரடங்குச் சட்டத்தினால் பெரும்பாலான நேரங்களில் வீடுகளிலே முடங்கிக் கிடக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே செல்வதற்கான "உரிமைச் சீட்டு" - சிறிலங்கா இராணுவத்திடமிருந்து பெற வேண்டும். அதைப் பெறுவது மிக மிகக் கடினம்.

யாழ்ப்பாணத்திலிருந்து, வானூர்தி சேவை ஒவ்வொரு நாளும் இயங்கினாலும் வானூர்தி பயணச் சீட்டு வாங்கியவர்களுக்குக் கூட, யாழ்ப்பாணத்தை விட்டு செல்லும் "உரிமைச் சீட்டு" மறுக்கப்படுவதாக கல்லூரி முதல்வர் ஒருவர் எங்களிடம் கூறினார்.

நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு பயணம் செய்தபோது,

உணவுப் பொருள் பற்றாக்குறை, அவ்வளவு மோசமாக இல்லை

என்றாலும்

விலைவாசி கடுமையாக உயர்ந்திருந்தது.

எரிபொருள் பற்றாக்குறை கடுமையாகவே இருந்தது.

வழிநெடுக, சிறிலங்கா இராணுவத்தினரின் திடீர் சோதனைகள்,

முன்னறிவிப்பின்றி சாலைகளில் வழியைத் தடுத்தல்

என்பன வழக்கமாயிருந்தன.

மிகவும் கவலைப்படக்கூடிய விடயம், நாளாந்தம் இளைஞர்கள் கடத்தப்படுவதும் படுகொலை செய்யப்படுவதும்தான்.

"உதயன்" நாளேட்டின் ஆசிரியர் இத்தகவல்களை எம்மிடம் தெரிவித்தார்.

இந்தக் கடத்தல்- படுகொலைகள் ஆகிய குற்றங்களைச் செய்வோர் யார் என்பது சிறிலங்கா இராணுவத்துக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவர்கள் மீது வழக்கோ, கைது நடவடிக்கையோ எதுவும் கிடையாது. யாழ்ப்பாணத்தில் நடக்கும் இந்தக் கொடூர நிகழ்வுகள்- கொழும்பு நகரத்தில் வாழும் தமிழர்களை அச்சத்தில் உறையச் செய்கின்றன.

எந்த முறையான காரணமும் இல்லாமல்- யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவரை இராணுவம் அண்மையில் கைது செய்தது. பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர்- இராணுவத்திடம் அந்த மாணவரை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். அந்த மாணவர் விடுதலை செய்யப்பட்டாலும் அவர் மிகக் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

புலிகளின் பிரதேசத்துக்கு வெளியே....

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.