Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பிடம் மீண்டும் பாடம் படிக்கத் தயாராகும் இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பிடம் மீண்டும் பாடம் படிக்கத் தயாராகும் இந்தியா

-உதயன்

இருபது வருடத்துக்கு முந்திய அரசமைப்பின் பதின்மூன் றாவது திருத்தத்தை மஹிந்தரின் அரசு இப்போது தூக்கிப் பிடித்துத் தலையில் வைத்துக் கொண்டாடுவதன் பின்ன ணியில், நமது அயல் வல்லாதிக்க நாடான இந்தியாவின் நேரடி யான பங்களிப்பும், தலையீடும், செல்வாக்கும் காரணமாக உள்ளனவா என்று கேள்வி எழுப்பியுள்ள ஜே.வி.பியின் தலை வர் சோமவன்ஸ அமரசிங்க, இது குறித்து புதுடில்லி தெளிவு படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

"இந்தோ ஆசிய செய்திச் சேவை' என்ற இந்திய ஊடகம் ஒன் றுக்கு அளித்த செவ்வியிலேயே இந்தக் கேள்வியை அவர் எழுப்பி, பதிலைக் கோரியிருக்கின்றார்.

1987 இல் தனது அழுத்தம் மூலம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கொழும்பு அரசின் மீது பலவந்தமாகத் திணித்ததும் அதன் அடிப்படையில் அந்த அரசைக் கொண்டு 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை வலோற்காரமாக ஏற்படுத்தியதும் இந்தியாவே என்று பழைய சம்பவங்களை நினைவுபடுத்தியுள்ள ஜே.வி.பி. தலைவர், அதே அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை ஜனாதிபதி மஹிந்தரின் தற்போதைய அரசும் மீண்டும் தூக்கிப் பிடித்துத் தலையில் வைத்துக் கொண்டாடுவதற்கும் திரும்பவும் இந்திய அழுத்தம் ஏற்பட்டுள்ளதுதான் காரணமா என்ற சந்தேகத்துடன் கேள்வி எழுப்புவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது.

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தை உன்னிப்பாகக் கவனித்து, அது தொடர்பான தனது பிரதிபலிப்புகளை இப்போது சர்வதேச சமூகம் பகிரங்கமாக வெளிப்படுத்தத் தொடங்கியுள்ள சூழ்நிலையில், சர்வதேச சமூகத்துக்கு "காதில் பூச்சுற்றும் வேலையாக' அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோருகின்றது சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு. கொழும்பின் அந்த நாடகத்தை சர்வதேச சமூகம் கண்டும் காணாமலும் இருப்பது போல புறமொதுக்கி ஏளனம் செய்துள்ளது.

ஆனால் இந்தியா மட்டுமே விழுந்தடித்து, அந்த நாட கத்தை வரவேற்று, அது அதிகாரப் பகிர்வுக்கான முதல் நட வடிக்கை என்று சிலாகித்துப் பகிரங்கமாகக் கருத்து வெளியிட்டிருக்கின்றது. இதைப் பார்க்கும்போது இந்த நாடகத்தின் பின் னணி இயக்கம் இந்தியாவாக இருக்கலாமா என்று ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க போன்றோர் கேள்வி எழுப் புவதில் நியாயம் உள்ளது போலவே தெரிகிறது.

இப்பத்தியில் ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியுள்ள ஒரு விடயம் இங்கு கவனிக்கத்தக்கது.

அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தம் ஏற்கனவே அரசமைப்பில் சட்டரீதியாக இடம்பெற்று உள்ளது. யாருடைய ஆலோசனையும், சிபார்சும் இன்றி ஜனாதிபதியே தாம் நினைப்பாராயின் தம்பாட்டிலேயே அதனை நடைமுறைப்படுத்த முடியும்.

சரி. இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து அதனை நடைமுறைப்படுத்துவது என்ற தீர்மானத்துக்கு வந் திருந்தால் கூட, அந்த அரசமைப்புத் திருத்தம் இருபது ஆண்டு களுக்கு முன்னர் உருவாகுவதற்குக் காரணமாக இருந்த நாடு என்ற முறையிலும், அயல் வல்லாதிக்க நாடு என்ற முறையி லும் அந்த நகர்வை இந்தியா வரவேற்றிருக்கலாம். அப்படியும் நடக்கவில்லையே........!

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகி யன இந்த அனைத்துக் கட்சிக் கூட்டமைப்பின் மேற்படி முடி விலோ, செயற்பாட்டிலோ சம்பந்தப்படவேயில்லை.

ஆக பதினான்கு கட்சிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று (மேலக மக்கள் முன்னணி) இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக ஒப்பமிடவில்லை. எஞ்சிய பதின் மூன்றில் பன்னிரண்டு கட்சிகள் ஜனாதிபதி மஹிந்தரின் அரசுக்குள்ளும் அமைச்சரவைக்குள்ளும் அங்கம் வகிப்பவை. அந்த மிச்சமான ஒரு கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட போன மாதம் வரை அரசுக்குள் இருந்ததுதான்.

ஆக, அரசுத் தரப்புக் கட்சிகள் கூடி சட்டத்தில் அரசமைப்பில் உள்ள சில விடயங்களை நடைமுறைப்படுத்தும்படி அரசை அரசுத் தலைவரை கோரியிருக்கின்றன.

அதாவது, இருபது வருடங்களுக்கு முந்திய அரசமைப்புத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை இப்போது நடைமுறைப்படுத்துவது என்ற இணக்கம் அரசுக்குள் வந்திருக் கிறது. கவனிக்கவும் அரசுக்குள்தான் வந்திருக்கிறது. அவ் வளவே. தேசிய ரீதியில் அந்த இணக்கப்பாடு வரவேயில்லை. பிரதான எதிர்க்கட்சிகள் இதனை ஒரு பெரிய விடயமாக அலட் டிக்கொள்ளக்கூட இல்லை.

அது மாத்திரமல்ல. அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத் தத்தில் கூறப்பட்ட அதிகாரப் பகிர்வை, தமிழர் தாயகத்தை வடக்கு, கிழக்கு எனத் தான் பிரித்து உருவாக்கிய மாகாணங் களுக்கு முழு அளவில் வழங்கும் எண்ணமோ, எத்தனமோ ஜனாதிபதி மஹிந்தரின் அரசுக்கு இல்லவே இல்லை என்பதும் வெளிப்படையாகத் தெரியும் அம்சம். சட்டம் ஒழுங்கு, உயர் கல்வி, பெருந்தெருக்கள், காணி போன்ற முக்கிய அதிகாரங் களை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிப்பதில்லை என்பதில் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தில் சிக்கிக் கிடக்கும் கொழும்பு அரசு உறுதியாக உள்ளது.

இவ்வளவும் இருக்க இவற்றையெல்லாம் கவனத்தில் எடுக் காமல் அரசுக் கட்சிகள், அரசுத் தலைமையிடம் விடுத்த ஒரு கோரிக்கையைப் பெரிய விடயமாக அர்த்தப்படுத்துவது போல "அது ஒரு முதல் நடவடிக்கை' என்று இந்தியா புகழாரம்சூட்டி விழுந்தடித்து வரவேற்றமை உண்மையில் சந்தேகத்தை ஏற்படுத்துவதுதான்.

ஜே.வி.பி. தலைவர் கேட்ட அதே சந்தேக வினா தமிழர்கள் மனதிலும் ஓடுகின்றது. இந்தச் சந்தேகத்தைத் தெளிவுபடுத்த இந்தியா கடமைப்பட்டுள்ளது.

லட்சத்துக்கும் அதிகமான இந்தியத் துருப்புகள் இலங்கை மண்ணை ஆக்கிரமித்து அத்தகைய செயற்பாடுகள் மூலம் கொடுத்த அழுத்தத்தை அடுத்து அந்த வலோற்காரத்தைச் சமாளிப்பதற்காக அரசமைப்புக்குத் தான் கொண்டுவந்த 13 ஆவது திருத்தத்தைக் கூட, இதுவரை நடைமுறைப்படுத் தாமல் இந்தியாவுக்குக் கஞ்சி காட்டியுள்ளது இலங்கை.

அதுபோன்ற மற்றொரு இந்திய அழுத்தத்துக்குத் திரும் பவும் இப்போது கஞ்சி காட்ட முயல்கிறது கொழும்பு. அதற் கான நாடகம்தான் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் பெயரால் இப்போது அரங்கேறுகிறது.

இதில் துன்பியல் நிகழ்வு என்னவென்றால், இந்த நாட கத்தின் கதை மற்றும் இயக்கத்துக்குக் காரணமான இந்தி யாவே, இந்த நாடக நடிப்பில் ஏமாறப் போவதுதான். அதைப் புரியாமல் அந்த நாடக "ஸீனை' வரவேற்கிறது இந்தியா!

-உதயன்

என்ன கந்தப்பு சொல்லிறீங்கள்? விளங்க இல்ல?

இந்தியா எப்பவும் தண்ட சுயநலம் பற்றி இயங்கிக்கொண்டு இருக்கிது. இதுக்கு நாங்கள் என்ன செய்யுறது? எங்கட கண்ணுக்கு இந்தியா சிறீ லங்காவிட்ட பாடம் படிக்கிறமாதிரி இருக்கலாம். ஆனா, இந்தியாவிண்ட மண்டையுக்கு என்ன இருக்கிது எண்டு அவேக்குத்தான் தெரியும்.

சிறீ லங்காவுக்கு முந்தி இந்தியப்படை வந்து அட்டகாசம் செய்திச்சிது. எங்களுக்கு பேரிழப்பு. தமிழரிண்ட வாழ்க்கை எல்லாம் நாசமாப்போச்சிது. ஆனா, இந்தியாவுக்கு சில ஆயிரம் இராணுவத்தினர், மற்றும் பொருள் இழப்புக்கள் போக மிச்சம் பெரிசா பாதிப்பு எதுவும் இல்ல.

நாங்கள் இந்தியா எங்களுக்கு திரும்பவும் ஏதாவது கெட்டது செய்திடும் எண்டு பயந்து பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருக்கிறம். சரி என்ன நடக்கிது பாப்பம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன கந்தப்பு சொல்லிறீங்கள்? விளங்க இல்ல?

நான் எழுதவில்லை. இது யாழ் உதயனில் வந்த ஆக்கம்.

இந்தியாவின் உண்மையான நோக்கம் என்று சில கதை விடுகிறார்கள் உண்மையாக இருக்குமா?

அதாவது விடுதலை புலிகளை இலங்கை அரசு முலம் தோக்கடிக்கவைத்து விட்டு பிறகு தான் நல்லவனாக வந்து தமிழருக்கு ஆறுதலாக பழைய ராஜீவ் ஓப்பந்தத்தை இலங்கையை வெருட்டி நடமுறை படுத்துவதே

அப்படி என்னமாக இருக்லாமா? இல்லை கதை விடுகிறார்களா?

புலிகளை முச்சாபிறகு தீர்வோ? யாருக்கு?.... புலிகளைமுடிச்சாபிறகு இலங்கை என்ன செய்யும் இந்தியா என்ன செய்யுமெண்டு அறிய ஒன்றும் ரொக்கற் விஞ்ஞானம் கற்கவேண்டியதில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு தீர்வைத் தரவேண்டிய எண்ணம் இலங்கையிடமோ அல்லது அது தலையில் வைத்துத் துள்ளித் திரியும் இந்தியாவிடமோ இல்லை.

இலங்கையைப் பொறுத்த வரையில் இந்தியாவின் ஆயுத பலத்தைப் பாவித்து தமிழர்களின் சுதந்திரத் தீயை அணைத்துவிட்டால் பிறகு இலகுவாக அவர்களை அடிமைகளாக்கி விடலாம் என்ற எண்ணம்.

இந்தியாவுக்கோ, இலங்கையின் இறமையைப் பாதுகாப்பது என்ற போர்வையில், இரண்டு மாங்காய்களை அடிக்கப் பார்க்கிறது. ஒன்று, இந்திய பார்ப்பணிய வல்லாதிக்கத்துக்கு அடிபணிய மறுக்கும் புதிய திராவிட எழுச்சியை அடக்குவது அல்லது அழிப்பது. ரெண்டாவது, தனது பிராந்திய பாதுகாப்பை இலங்கையின் தமிழின அழிப்புடன் சேர்த்து உறுதி செய்து கொள்வது.

ஆகவே இந்த இரு நாடுகளின் செயல்த் திட்டங்களிலும் தமிழனுக்குத் தீர்வு என்பது மருந்துக்குக் கூட இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரைத் தோற்கடிச்சு முடிஞ்சால் அதற்குப்பிறகு உனக்கும் பே உன்ர அப்பனுக்கும் பே எண்டு இலங்கை சொல்லிப்போடும். அது இந்தியாவுக்கு நல்லாத்தெரியும். எங்கையாவது நல்லாக் கொண்டுபோய் இக்கட்டில ரெண்டு பக்கத்தையும் மாட்ட வச்சுப்போட்டுத் தான் விரும்பின ஒரு தீர்வுத்திட்டத்த முந்தினமாதிரித் திணிச்சுப் போடலாமெண்டு இந்தியா நினைக்குது. இப்ப இந்த நிலைமைதான் உருவாக்கப்பட்டிருக்குது. அதாவது நாலாம்கட்ட ஈழப்போரில தமிழர் தாக்குப்பிடிச்சு நிக்கிற அதே நேரத்தில தமிழீழ எல்லைகளையும் முழுமையாக விஸ்தரிக்க ஏலாத ஒரு சூழ்நிலையிலதான் எங்கள இந்தியா வச்சிருக்கப் பாக்கும். அதால இலங்கையும் முழிபிதுங்கி நிக்கும். இந்தியாவுடைய பேச்சை நம்பி அதாவது ஆயுத உதவியெண்டிற மாயமானை நம்பி போரைத் தொடங்கப்போய் இப்பிடியாப் போச்சுதேயெண்டு. இந்த ஸ்ரேல்மேற் பொசிசனத்தான் சர்வதேசமும் எதிர்பார்க்குது. எப்பிடியாவது உவங்களுக்குப் புத்திவராதா எண்டு. கடைசியில வரலாறு தன்னுடைய போக்கிலதான் போகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.