Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் ஒரு நோய்: குருட்டுத்தனமானது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

50152606eq7.png

காதல் ஒரு நோய் போன்றது மட்டுமன்றி குருட்டுத்தனமாகவும் செயற்படத் தூண்டுகிறது என்று சொல்கின்றன அறிவியல் ஆய்வுகள்.

காதல் ஆணைப் பெண்ணாக்கிறது பெண்ணை ஆணாக்கிறது

காதல் ஏற்பட்ட ஆண்களுக்கு ஆணியல்புக்குரிய ரெஸ்ரரொஸ்ரெறோன் (testosterone) ஓமோனின் அளவு இயல்பை விடக் குறைவடைய அவனிடம் பெண்ணியல்பு அதிகரிக்கப்பெறுவதாகவும் பெண்களில் ஓமோனின் அளவு அதிகரிப்பதால் ஆணியல்பு அதிகரிக்கப் பெறுவதாகவும் இத்தாலிய University of Pisa வைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

They found that men had lower levels of testosterone than normal, while the women had higher levels of the hormone than usual.

"Men, in some way, had become more like women, and women had become like men," Donatella Marazziti of the University of Pisa told New Scientist magazine.

இதனால் தான் என்னவோ தற்போதெல்லாம் காதலித்த பின்னும் திருமணம் ஆன பின்னும் ஆண்கள் பெண்களுக்கு இலகுவாக அடங்கிப் போய் விடுறாங்களோ என்னவோ..?!

காதல் குருடானது

University College London இல் இடம்பெற்ற பிறிதொரு ஆய்வின் பிரகாரம் காதல் குருட்டுத்தனமானதே என்றும் விஞ்ஞானிகள் சொல்கின்றனர். தமிழில் எப்பவோ சொல்லிட்டார்கள். ஆனால் விஞ்ஞானிகள் இப்போதுதான் சமீபத்திய ஆண்டில் இதைக் கண்டறிந்துள்ளனர்.

காதல் வயப்பட்டவர்களின் மூளையின் நடுநிலைச் சுற்றுடன் தொடர்புடைய சில முக்கிய செயற்பாடுகள் பிந்தங்கி விடுவதால் இவர்களால் தீவிரமாக சிந்தித்து முடிவெடுக்க முடியாத நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர். இதனால் தான் காதல் வயப்பட்டவர்கள் இலகுவாக ஏமாற்றப்படும் அளவுக்கு தமது இணையின் தவறுகளைக் கண்டும் காணாமலும் இருந்து விடுகின்றனராம்.

'Love is blind'

They found that the neural circuits that are normally associated with critical social assessment of other people are suppressed when people are in love.

They said the findings may explain why some people are often "blind" to their partner's faults.

இந்த இரண்டு ஆய்வுகளும் காதல் உடலில் சில ஆபத்தான விளைவுகளை உருவாக்கிறது என்பதைக் காட்டி நிற்கின்றன எங்கின்றனர் உயிரியல் விஞ்ஞானிகள்.

இதைவிட இவற்றுக்கு முந்தைய ஒரு ஆய்வில் இருந்து காதல் வயப்பட்டவர்களில் செறோரொனின் (serotonin) அளவு குறைவடைந்து இருப்பதுடன் இது obsessive compulsive disorder உள்ளவர்களில் உள்ள செறோரொனின் அளவை ஒத்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தான் காதலர்கள் சில சந்தர்ப்பங்களில் அவர்களின் துணை பற்றி obsess ஆக இருக்கின்றனரோ என்றும் விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.

the researchers said the finding may explain why people who are in love can sometimes obsess about their partner.

மூலம்: http://kuruvikal.blogspot.com/

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் தாத்தா லோகத்தில எத்தனையோ பேர் லவ் பண்ணுறாங்க அவை எல்லாம் இதை வாசிக்க தொடங்கினா அவையின்ட கதி என்ன ஆகிறது :huh: ...ஏன் தாத்தா காதல் மேல உவ்வளவு வெறுப்பு.. :blink:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"காதல் ஒரு நோய் அதற்கு பரிகாரம் காதலியின் கைகள்" :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் தாத்தா லோகத்தில எத்தனையோ பேர் லவ் பண்ணுறாங்க அவை எல்லாம் இதை வாசிக்க தொடங்கினா அவையின்ட கதி என்ன ஆகிறது :huh: ...ஏன் தாத்தா காதல் மேல உவ்வளவு வெறுப்பு.. :blink:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"காதல் ஒரு நோய் அதற்கு பரிகாரம் காதலியின் கைகள்" :wub:

இது எனது கட்டுரையல்ல. அறிவியலாளர்களின் ஆய்வு முடிவின் படி எழுதப்பட்டு இணையத்தில் இருந்து எடுத்தது..!

அதுசரி காதல் நோய்க்கு எப்படி காதலியின் கைகள் மருந்தாகும். காதலியின் கையில எவ்வளவு கிருமிகள் இருக்கும். எத்தினை பேருக்கு கொடுத்த கையோ யாரறிவார். முதலில் அந்தக் கையைப் பிடிக்க முதல் பினோல் ஊத்திக் கழுவுங்க..! இல்லைன்னா கிருமி தொத்திடும்...! :wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

காதல் நோய்க்கு எப்படி காதலனின் கைகள் மருந்தாகும்.

காதலனின் கையில எவ்வளவு கிருமிகள் இருக்கும். எத்தினை பேருக்கு கொடுத்த கையோ யாரறிவார். முதலில் அந்தக் கையைப் பிடிக்க முதல் பினோல் ஊத்திக் கழுவுங்க..! இல்லைன்னா கிருமி தொத்திடும்...! :blink::huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் நோய்க்கு எப்படி காதலனின் கைகள் மருந்தாகும்.

காதலனின் கையில எவ்வளவு கிருமிகள் இருக்கும். எத்தினை பேருக்கு கொடுத்த கையோ யாரறிவார். முதலில் அந்தக் கையைப் பிடிக்க முதல் பினோல் ஊத்திக் கழுவுங்க..! இல்லைன்னா கிருமி தொத்திடும்...! :blink::huh:

நான் பார்த்த அளவில ஆண்கள் தான் காதலிமார் மேல கை போடுறது.. கொஞ்சுறது.. கையைப் பிடிக்கிறது. எல்லாம் தூய அன்பில இல்ல. காரியம் ஆகிறத்துக்காக. காதலிகள் உசார் பாட்டியள். அவையள் எப்பவும் வாங்கிறதில குறியா இருப்பினமே தவிர கொடுக்கிறதில கொஞ்சம் கஞ்சல் தனம் தான். ஆனால் நோய் விசயத்தில மட்டும் கொடுக்கிறதில கெட்டிக்காரர். :wub::wub:

Edited by nedukkalapoovan

நான் பார்த்த அளவில ஆண்கள் தான் காதலிமார் மேல கை போடுறது.. கொஞ்சுறது.. கையைப் பிடிக்கிறது. எல்லாம் தூய அன்பில இல்ல. காரியம் ஆகிறத்துக்காக. காதலிகள் உசார் பாட்டியள். அவையள் எப்பவும் வாங்கிறதில குறியா இருப்பினமே தவிர கொடுக்கிறதில கொஞ்சம் கஞ்சல் தனம் தான். ஆனால் நோய் விசயத்தில மட்டும் கொடுக்கிறதில கெட்டிக்காரர்.

நல்ல அனுபவம் போலை. வாழ்க்கையிலை நல்லது கெட்டது போல காதலிலையும் நல்லது கெட்டது இருக்கத்தான் செய்யும். நாம்தான் கவனமாக நடந்து கொள்ளவேண்டும். எம்மை ஒருவர் ஏமாற்றினார் என்பதற்காக மொத்த இனத்தையும் எப்படிக் குற்றம் சாட்டமுடியும்? அதற்காகப் பெண்கள் ஏமாற்றுவதில்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் அதிகம் ஏமாற்றுவது ஆண்களே. காதலிப்பதற்கு வெளிநாட்டுப் பெண் வேண்டும். ஆனால் கல்யாணம் செய்வதற்கு மட்டும் ஊரிலையிருந்து பெண் எடுக்கவேண்டும். வெளிநாடுகளில் திருமணம் முடித்திருக்கும் ஆண்கள் பலருக்கு ஏற்கனவே கேர்ள்பிரண்ட்ஸ் இருந்திருக்கிறது. முக்கியமாக, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் படித்த ஆண்கள் படிக்கும்போது, பெண்களோடு (வெள்ளைக்காரர்களையும் சேர்த்துத்தான்) நன்றாகச் சுற்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கல்யாணம் முடித்ததோ வேறு பெண்களை. :wub::lol:

Edited by Thamilachchi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அனுபவம் போலை. வாழ்க்கையிலை நல்லது கெட்டது போல காதலிலையும் நல்லது கெட்டது இருக்கத்தான் செய்யும். நாம்தான் கவனமாக நடந்து கொள்ளவேண்டும். எம்மை ஒருவர் ஏமாற்றினார் என்பதற்காக மொத்த இனத்தையும் எப்படிக் குற்றம் சாட்டமுடியும்? அதற்காகப் பெண்கள் ஏமாற்றுவதில்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் அதிகம் ஏமாற்றுவது ஆண்களே. காதலிப்பதற்கு வெளிநாட்டுப் பெண் வேண்டும். ஆனால் கல்யாணம் செய்வதற்கு மட்டும் ஊரிலையிருந்து பெண் எடுக்கவேண்டும். வெளிநாடுகளில் திருமணம் முடித்திருக்கும் ஆண்கள் பலருக்கு ஏற்கனவே கேர்ள்பிரண்ட்ஸ் இருந்திருக்கிறது. முக்கியமாக, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் படித்த ஆண்கள் படிக்கும்போது, பெண்களோடு (வெள்ளைக்காரர்களையும் சேர்த்துத்தான்) நன்றாகச் சுற்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கல்யாணம் முடித்ததோ வேறு பெண்களை. :wub::lol:

நான் பாம்பைக் கண்டா பிடிச்சு விளையாடுவன். ஆனால் பெண்களை கண்டால் 16 அடி தள்ளித்தான் நிற்பன். எனவே இதில எனது அனுபவம் எதுவுமில்ல. கண்ணால் கண்டதைச் சொன்னேன்.

பல்கலைக்கழகத்தில் படிக்கிறவையை நீங்க ஒட்டுமொத்தமா ஒரே மாதிரிப் பார்க்கக் கூடாது. பல்கலைக்கழகங்களில தான் பல தப்புத்தண்டாக்கள் நடக்குது. அதை ஏற்றுக் கொள்ளுறன். ஆனால் எல்லாரும் அப்படியென்றில்ல. உதில தப்புப் பண்ணிறதில பெண்கள் குறைஞ்சவை எண்டில்ல. நானறிய பல பெண்கள் ஆண்களோட வலிய போய் சுற்றித் திரிந்திட்டு.. கழற்றிவிட்ட நிகழ்வுகள் பல..! இது புலம்பெயர் நாட்டில் என்று மட்டும் நினைக்காதேங்கோ.. சிறீலங்காவிலும் தான். எனக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றிய உள்விவகாரங்கள் பற்றி தெரியாது.

புலம்பெயர்ந்த ஆண்களை நான் ஒரு வகையில பாராட்டுவன். அவை புலம்பெயராத பெண்களைத் திருமணம் செய்து அவைக்கு பாதுகாப்பளிக்கினம். புலம்பெயர்ந்த பெண்களில் எத்தனை பேர் புலம்பெயராத ஆண்களை திருமணம் செய்யினம் ஊருக்குப் போய்..???! அவைக்கு உங்கின வெள்ளைக்காரன் ஸ்ரைலில மாப்பிள்ளை கேட்டா.. அதுக்கு என்ன செய்யேலும். வெள்ளைக்காரன் போல.. ரைம் பாஸ் பண்ணிட்டு.. ரா ரா காட்ட வேண்டியதுதான் வேற என்ன செய்யச் சொல்லுறியள்..! முதலில பெண்களின்ர மனநிலை மாறனும். போற இடத்தில கொண்டை முடியுற உந்தச் சிந்தனை இல்லாம திடமான கொள்கை ஒன்றை வகுத்து வாழ்ப்பழகினா.. நிச்சம் எந்த ஆணும் ஏமாற்றமாட்டான். இல்ல என்றா ஆண்களுக்கும் பெண்களைக் கழற்றிவிட அதிக நேரம் எடுக்காது. :o:o

Edited by nedukkalapoovan

பல இளையவர்கள் காதலைத் தவறாகப் புரிந்து கொண்டு, அவஸ்தைப்படுவது உண்மைதான். அவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றி யாரும் எடுத்துரைப்பதில்லை. தங்களைச் சுற்றியிருப்பவர்கள் போய்பிரண்ட் வைத்திருப்பதைப் பார்த்து இவர்களும் போய்பிரண்ட் வைத்துக் கொள்கிறார்கள். எதிர்காலத்தைப் பற்றியோ, வாழ்க்கையைப் பற்றியோ இவர்கள் சிந்திப்பதில்லை. இவர்களை வழிநடத்துவதில்தான் இவர்களுடைய எதிர்காலம் இருக்கிறது. பருவ வயதில் இவ்வாறான எண்ணங்கள் வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், அந்தந்த பருவங்களில் அவர்களை சரியான முறையில் வழிநடத்தவேண்டும்.

புலம்பெயர்ந்த ஆண்கள், தாயகப் பெண்களைத் திருமணம் செய்வது அவர்களை ஏமாற்றவே. தாயகத்திலிருந்து வந்த பெண்கள் என்றால் இவர்கள் தனியாக வெளியில் செல்வதையோ கூத்து அடிப்பதையோ பற்றிக் கதைக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஒன்றும் தெரிய வராது. அவர்களை வீட்டிலை விட்டிட்டுத் தாங்கள் மட்டும் கூத்தடிக்கப் போய்விடுவினம். இவையின்ர கூத்துகளை அவைகள் அறிவதற்குள் அவர்களுக்கு ஓர் வாரிசு வந்து விடும். பிள்ளைகளோடு தனிய வாழத் தெரியாமல், அவர்களும் விதியே என்று வாழப் பழகிக் கொள்கிறார்கள்.

எத்தனை ஆண்கள் கொள்கைகளோடு வாழும் பெண்களைத் திருமணம் செய்யத் தயாராக இருக்கிறார்கள்? அவர்களுடைய கொள்கைகள் எல்லாம் எழுத்தோடும் பேச்சோடும்தான். தங்களுடைய வாழ்க்கை என்று வரும்போது, அவர்களும் தாயகத்திலிருந்தே பெண் எடுக்கிறார்கள். அப்படியே ஓரிருவர் திருமணம் செய்து கொண்டாலும், திருமணம் முடிந்ததும் அவர்களை அடக்கியே வைத்திருக்கிறார்கள் அல்லது அதற்கான சூழலை ஏற்படுத்துகிறார்கள்.

இது எனது கட்டுரையல்ல. அறிவியலாளர்களின் ஆய்வு முடிவின் படி எழுதப்பட்டு இணையத்தில் இருந்து எடுத்தது..!

அதுசரி காதல் நோய்க்கு எப்படி காதலியின் கைகள் மருந்தாகும். காதலியின் கையில எவ்வளவு கிருமிகள் இருக்கும். எத்தினை பேருக்கு கொடுத்த கையோ யாரறிவார். முதலில் அந்தக் கையைப் பிடிக்க முதல் பினோல் ஊத்திக் கழுவுங்க..! இல்லைன்னா கிருமி தொத்திடும்...! :D:o

ம்ம்.. ஆய்வு கட்டுரையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி தாத்தா...!! :)

இப்ப பாருங்கோ பாசமா ஒரு கை அணைக்குது என்றா அதிலையே மனிசனின்ட அரைவாசி நோய் பறந்து போகும் பாருங்கோ :lol: ...காதலியின் கையில் கிருமிகள் இருப்பது தாத்தாவின் பார்வைக்கு பட் என்ட பார்வைக்கு அந்த கிருமிகளையும் அழிக்கும் சக்தி வாய்ந்தது காதலியின் கைகள்.. :o (காதலின் கைகள்)..சோ தாத்தா சில காதலியின் கைகள் அசுத்தமாக இருக்கும் அப்படியான காதலிகளை இலகுவில இணம்கண்டு கொள்ளளாம் பாருங்கோ :wub: ..சிலரின் கை மட்டுமே எப்பவும் தூய்மையாக இருக்கும் அப்படியான ஆளை தான் காதலிக்க வேண்டும் நான் சொல்லுறது தூய்மை வந்து அன்பு...:o

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்.. ஆய்வு கட்டுரையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி தாத்தா...!! :o

இப்ப பாருங்கோ பாசமா ஒரு கை அணைக்குது என்றா அதிலையே மனிசனின்ட அரைவாசி நோய் பறந்து போகும் பாருங்கோ :lol: ...காதலியின் கையில் கிருமிகள் இருப்பது தாத்தாவின் பார்வைக்கு பட் என்ட பார்வைக்கு அந்த கிருமிகளையும் அழிக்கும் சக்தி வாய்ந்தது காதலியின் கைகள்.. :o (காதலின் கைகள்)..சோ தாத்தா சில காதலியின் கைகள் அசுத்தமாக இருக்கும் அப்படியான காதலிகளை இலகுவில இணம்கண்டு கொள்ளளாம் பாருங்கோ :wub: ..சிலரின் கை மட்டுமே எப்பவும் தூய்மையாக இருக்கும் அப்படியான ஆளை தான் காதலிக்க வேண்டும் நான் சொல்லுறது தூய்மை வந்து அன்பு...:o

அப்ப நான் வரட்டா!!

நீங்கள் காதல் நோயால சரியா பாதிக்கப்பட்டிருக்கிறீங்க பேராண்டி. அதுதான் விஞ்ஞானிகள் சொன்னது போல அறிவுக் குருடா இருக்கிறீங்க.

24freak.190.jpg

http://www.nytimes.com/2006/09/24/magazine...amp;oref=slogin

இப்படத்தில ஒருவரின் கையில் இருக்கக் கூடிய நுண்கிருமிகள் பற்றிய விளக்கம் தரப்பட்டிருக்குது.

இதை எப்படி உங்கட காதலிட கையி கொல்லும். இவை தொற்றினா நீங்க தான் கொல்லப்படுவீங்க. அதிலும் பெண்கள் பல ஆபத்தான நோய்க்கிருமிகளின் காவிகள்..!

எச்சரிக்கை செய்யுறம். காதல் கிறுக்கில இருந்து விடுப்பட்டு நிஜ உலகத்துக்க வாங்க. காதல் கண்ணோட குருட்டுத்தனமாப் பார்த்தா பன்னிக்குட்டி கூட அழகாத்தான் தெரியும்..! :D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த ஆண்கள், தாயகப் பெண்களைத் திருமணம் செய்வது அவர்களை ஏமாற்றவே. தாயகத்திலிருந்து வந்த பெண்கள் என்றால் இவர்கள் தனியாக வெளியில் செல்வதையோ கூத்து அடிப்பதையோ பற்றிக் கதைக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஒன்றும் தெரிய வராது. அவர்களை வீட்டிலை விட்டிட்டுத் தாங்கள் மட்டும் கூத்தடிக்கப் போய்விடுவினம். இவையின்ர கூத்துகளை அவைகள் அறிவதற்குள் அவர்களுக்கு ஓர் வாரிசு வந்து விடும். பிள்ளைகளோடு தனிய வாழத் தெரியாமல், அவர்களும் விதியே என்று வாழப் பழகிக் கொள்கிறார்கள்.

எத்தனை ஆண்கள் கொள்கைகளோடு வாழும் பெண்களைத் திருமணம் செய்யத் தயாராக இருக்கிறார்கள்? அவர்களுடைய கொள்கைகள் எல்லாம் எழுத்தோடும் பேச்சோடும்தான். தங்களுடைய வாழ்க்கை என்று வரும்போது, அவர்களும் தாயகத்திலிருந்தே பெண் எடுக்கிறார்கள். அப்படியே ஓரிருவர் திருமணம் செய்து கொண்டாலும், திருமணம் முடிந்ததும் அவர்களை அடக்கியே வைத்திருக்கிறார்கள் அல்லது அதற்கான சூழலை ஏற்படுத்துகிறார்கள்.

பெண்களுக்கு என்று ஒரே கொள்கை இருந்தா சொல்லுங்க பார்ப்பம். அப்படி இருந்தா ஏன் வாழ மாட்டினம். அப்படி இல்லையே புலம்பெயர்ந்த பெண்கள்.

அதாலதான் பிறந்த இடத்தில போய் பெண்ணெடுக்கினமே தவிர ஆண்கள் அவையை அடக்கி வைக்கலாம்.. தாங்கள் கூத்தடிக்கலாம் என்று எடுக்கிறதில்ல. புலம்பெயர்ந்த பெண்கள் தான் பல வகையில உலகை ஏமாற்றிக் கொண்டு தங்களையும் ஏமாற்றிக் கொண்டு கூத்தடிச்சிட்டு.. தாங்க சுதந்திரம் பெற்றவை என்று பீற்றிக் கொண்டு திரியினம். உதை எத்தனை நாளைக்குத்தான் ஆண்கள் கேட்டிட்டு இருக்கிறது. மனிசன் மனிசனா இருந்தா ஏன் இந்தப்பாடு. :wub:

பெண்களுக்கு கொள்கை வாறதை எந்த ஆண்கள்தான் விடுகினம்? அப்படியே மீறி ஏதாவது கொள்கையை அவள் வெளியில் சொன்னால் அதை முளையிலேயே கிள்ளி விடுகிறார்கள். எனக்குத் தெரிந்து, எத்தனையோ பெண்கள் சிறிய வயதில் பல கொள்கைகளை வளர்த்திருக்கிறார்கள். ஆனால், அவற்றிற்கு முதல் எதிரிகளே அவர்களது குடும்பம்தான். அப்படியே மீறி, கொஞ்சம் முன்னேறினாலும் இந்த சமூகம் விடுமா? எத்தனை கதைகளைக் கட்டி விடும்? பெண்கள் எதனைச் செய்வதாக இருந்தாலும் போராட்டமின்றிப் பெறமுடியாது. அப்படிப் போராடுவதற்குள் அவளுக்கு அந்தக் கொள்கையே வெறுத்துவிடும். இதுதான் நடைமுறை. எந்தவொரு விடயத்தையும் அவர்களது நிலையிலிருந்து பார்த்தால்தான் விளங்கும். உலகத்தில் சாதனைகள் செய்த பெண்களின் வரலாற்றை எடுத்துப் பாருங்கள். எல்லோருமே ஆண்களுடன் போராடித்தான் சாதிக்கவேண்டியிருந்தது. யாருமே இலகுவில் சாதித்து விடவில்லை.

விபரம் தெரியாத வயதிலேயே கட்டுப்பாடு என்று வீட்டிலை அடைச்சு வைக்கிறார்கள். சொந்தக்கார ஆண்களோடு கதைப்பதே தவறு என்று வளர்க்கிற சமூகத்திலை எங்கே கொள்கை என்று வெளிக்கிடுவது? எப்படித்தான் படித்தாலும், கடைசியிலை கல்யாணம்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு என்று எவன் கையிலையாவது கொடுத்து விடுவார்கள். அதிலையும் சம்பந்தப்பட்ட பெண்ணின் விருப்பு வெறுப்புகளை கருத்தில் எடுத்துக் கொள்வதில்லை. பொருத்தம் சரிவந்தால் போதும். உடனே கல்யாணத்தை முடித்து விடுவார்கள். இதுதான் புலம்பெயர் பெண்களுக்கும் நடப்பது. பெண்கள் கொஞ்சமாவது சந்தோசமாக இருப்பது, அவர்கள் படிக்கும் காலங்களில்தான். அதிலையும் ஒருவனை நம்பிக் காதலித்தால், நல்லாக் காதலித்துவிட்டு, வேற பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வார்கள். பிறகு அவளின் கதி? வீட்டிலை பார்க்கிற மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்யவேண்டியதுதான். மொத்தத்தில் பெண்களுக்கு விமோசனமே கிடையாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சி.. உங்களைதை விட இது அதிகம் யதார்த்தமா இருக்கும் பாருங்க....

ஆண்கள் கொஞ்சமாவது சந்தோசமாக இருப்பது, அவர்கள் படிக்கும் காலங்களில்தான். அதிலையும் ஒருத்தியை நம்பிக் காதலித்தால், நல்லாக் காதலித்துவிட்டு, வேற ஒரு ஆணைக் கல்யாணம் செய்து கொள்வார்கள். பிறகு அவனின் கதி? தாடி தண்ணி பார் பப்...கிறுக்கு...! மொத்தத்தில் ஆண்களுக்கு விமோசனமே கிடையாது. :huh:

நீங்கள் சொல்வது சரிதான். பெண்கள் ஏமாற்றுவதில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால், அதிகம் ஏமாற்றுவது ஆண்கள்தான். நீங்கள் பெண்களிடமிருந்து முற்றுமுழுதாக ஒதுங்கியிருப்பதால்தான் உங்களுக்குப் பெண்களின் விடயங்கள் பற்றித் தெரியவில்லை. இருபாலாரிடமும் சமமாகப் பழகுபவர்களால்தான் இதற்குரிய சரியான கருத்தைக் கூற முடியும். ஆகவே, முதலில் பெண்களிடமும் பழகிப் பாருங்கள். அதற்குப் பிறகு உங்கள் கருத்தைக் கூறுங்கள். :mellow::D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நெடுக்குசாமி இப்படியெல்லாம் கட்டுரைகள். மலரண்ணியின் காதல் பொய்த்துவிட்டதா? :mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நெடுக்குசாமி இப்படியெல்லாம் கட்டுரைகள். மலரண்ணியின் காதல் பொய்த்துவிட்டதா? :lol:

இது எனது கட்டுரையல்ல. ஆராய்ச்சி முடிவுகள் அடங்கியதன் சுருக்கம். :D

மலரண்ணின்னா..??! :unsure::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலர் அண்ணி? ஆரப்பா ?அவ எங்கை?நெடுக்குசாமி என்ன விளையாட்டு இது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலர் அண்ணி? ஆரப்பா ?அவ எங்கை?நெடுக்குசாமி என்ன விளையாட்டு இது?

இது என்ன அநியாயமா இருக்குது. என்னைக் கேட்டால்... மலரண்ணி மலர் வனத்தில இருப்பாவாக்கும்..! :unsure::rolleyes:

Edited by nedukkalapoovan

இது என்ன அநியாயமா இருக்குது. என்னைக் கேட்டால்... மலரண்ணி மலர் வனத்தில இருப்பாவாக்கும்..! :lol::lol:

தாத்தா...அப்பவே நினைத்தனான் இப்படி எல்லாம் நடக்கும் என்று அது சரி என்ட பாட்டியை எனக்கு காட்டவே இல்லை தாத்தா :lol: ...ஏன் தாத்தா பாட்டியை கொண்டு போய் மலர்வனத்தில விட்டு போட்டு வந்துட்டியள் போய் கூட்டி கொண்டு வாங்கோ :( ...இல்லாட்டி பாட்டி தான் கோவித்து கொண்டு மலர்வனம் போயிட்டாவோ வேண்டும் என்றா நான் கெல்ப் பண்ணட்டே தாத்தா... :lol:

"மலரே ஒரு வார்த்தை பேசு

இப்படிக்கு நெடுக்ஸ் தாத்தா"

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா...அப்பவே நினைத்தனான் இப்படி எல்லாம் நடக்கும் என்று அது சரி என்ட பாட்டியை எனக்கு காட்டவே இல்லை தாத்தா :lol: ...ஏன் தாத்தா பாட்டியை கொண்டு போய் மலர்வனத்தில விட்டு போட்டு வந்துட்டியள் போய் கூட்டி கொண்டு வாங்கோ :lol: ...இல்லாட்டி பாட்டி தான் கோவித்து கொண்டு மலர்வனம் போயிட்டாவோ வேண்டும் என்றா நான் கெல்ப் பண்ணட்டே தாத்தா... :lol:

"மலரே ஒரு வார்த்தை பேசு

இப்படிக்கு நெடுக்ஸ் தாத்தா"

அப்ப நான் வரட்டா!!

கண்ணா.. பேராண்டி..என்ன நினைச்சியள் அப்பவே..! நீங்க நினைக்கிறது தான் தப்பு ராசா.

மலரண்ணி மலர் வனத்தில தானே இருப்பா. குருவி குழாம் என்று..! நமக்கெல்லாம் அது பற்றித் தெரியாது. கேள்விப்பட்டிருக்கம் மலர் வனத்தில மலர் இருக்கும்..குருவி அணில் பட்டாம்பூச்சி துப்பி..போன்றனவும் இருக்கும் என்று..! :(:lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.