Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தைமூர்(East Timor) அதிபர் உயிர் தப்பினார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தைமூர் அதிபர் உயிர் தப்பினார்

Monday, 11 February, 2008 10:48 AM

.

டிலி, பிப்.11: கிழக்கு தைமூர் அதிபர் ஜோஸ் ஹார்டாவுக்கு எதிராக நடைபெற்ற கொலை முயற்சியில் அவர் காயங்களோடு உயிர் தப்பினார்.

.

இந்தோனேஷியா அருகே உள்ள கிழக்கு தைமூர் கடந்த 2002 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இந்தோனேஷியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற கிழக்கு தைமூர் அதிபராக ஜோஸ் ரமோஸ் ஹார்டா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவருக்கு எதிராக போராளிகள் குழு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இக்குழுவை சேர்ந்த ரெய்னாடோ என்பவர் இன்று காலை அதிபரை கொல்ல முயன்றார். இரண்டு கார்களில் கூட்டாளிகளோடு வந்த அவர், அதிபரின் வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

அதிபரின் பாதுகாவலர் அவர்களை நோக்கி பதிலுக்கு சுட்டனர். இந்த மோதலில் ரெய்னாடோ கொல்லப்பட்டார். அதிபர் லேசான காயங்களோடு உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

malaisudar.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராடி விடுதலைபெறும் நாடுகளின் சாபக்கேடு.....

எம் நாட்டிலும் வந்து சேர்ந்திடக்கூடா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தைமூர் அதிபர் கவலைக்கிடம்

.

Tuesday, 12 February, 2008 10:58 AM

.

திலி, பிப்.12: கொலை முயற்சியில் காயமடைந்த கிழக்கு தைமூர் அதிபர் ஆஸ்திரேலிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

.

கிழக்கு தைமூர் நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்தோனேஷியா அருகே பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிழக்கு தைமூர் நாட்டின் அதிபர் ஜோஸ் ரமோஸ் ஹோர்ட்டா மீது நேற்று கலகக்காரர்கள் கொலை முயற்சி மேற்கொண்டனர். இதில் அவர் துப்பாக்கி காயங்களோடு உயிர் தப்பினார்.

அதிபருக்கு உடனடியாக தலைநகர் திலியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் மேல்சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்டார். ஆஸ்திரேலியாவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொலை முயற்சி தாக்குதலை அமெரிக்க அதிபர் புஷ் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பான் கி மூன் உள்ளிட்ட உலக தலைவர்கள் கடுமையாக கண்டனம் செய்துள்ளனர்.

இதனிடையே கிழக்கு தைமூரில் தற்காலிக அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள வின்சென்ட் குட்டேரஸ், அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்

malaisudar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.