Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவின் நடவடிக்கைகளால் திருகோணமலையில் இந்தியாவின் பிரசன்னம் அதிகரிக்கிறது: "சண்டே ரைம்ஸ்"

Featured Replies

தமிழர் தாயகப் பகுதியான திருகோணமலையில் சிறிலங்காவின் நடவடிக்கைகளால் இந்தியாவின் பிரசன்னம் அதிகரித்து வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

திருமலையில் அதிகரிக்கும் இந்தியச் செல்வாக்கு

புலிகளுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும்

"சண்டே ரைம்ஸ்' வார ஏடு கூறுகிறது

விடுதலைப் புலிகளின் தமிழீழத் தனிநாட்டின் தலைநகர் என்று கருதப்படும் திருகோணமலையில் அதிகரித்து வரும் இந்தியாவின் செல்வாக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு பாரிய சாவாலக இருக்கப்போகின்றது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்' என்ற ஆங்கில வாரப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:

திருகோணமலையில் இலங்கை அரசின் நடவடிக்கைகளால் இந்தியாவின் பிரசன்னம் அதிகரித்துவருகின்றது.

இந்தியன் ஓயில் நிறுவனத்திடமிருந்து இலங்கை மின்சாரசபைக்கான எரிபொருட்கள் வழங்கப்படவுள்ளன.

திருகோணமலையின் நிலாவெளியில் அனல்மின் நிலையம் அமைக்க இந்தியாவும் இலங்கையும் கடந்தவாரம் முடிவு செய்துள்ளன. 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இத்திட்டத்துக்கு 25 கோடி அமெரிக்க டொலர் செலவிடப்படுகிறது. இந்திய அனல்மின் உற்பத்திக் கூட்டுத்தாபனமும் இலங்கை மின்சார சபையும் இணைந்து இப்பணியை மேற்கொள்கின்றன.

எதிர்வரும் ஏப்ரலில் இரண்டு தொகுதிகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இலங்கையில் இத்தகைய நடவடிக்கையானது இயல்பாகவே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலையில் இந்தியாவின் பிரசன்னத்தை அதிகரிக்கச்செய்யும். ஏற்கனவே திருகோணமலையில் இரண்டாம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட எண்ணெய்க் குதங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து இந்தியன் ஓயில் நிறுவனம் குத்தகைக்குப் பெற்றுள்ளது.

தமிழீழத் தனிநாட்டின் தலைநகர் எனக் கருதப்படுகின்ற திருகோணமலையில் அதிகரித்துவரும் இந்தியாவின் செல்வாக்கானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு பாரிய சவாலாக இருக்கும். இதேபோல் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை மீது கண் வைத்திருக்கும் உலக நாடுகளின் சக்திகளினது நகர்வுகளையும் இது முடிவுக்குக் கொண்டுவரும்.

அதேபோல, மன்னார் வளைகுடாப் பகுதியில் தென்னிந்தியாவிலிருந்து குழாய் மூலம் இலங்கைக்கு குழாய்வழி மின்சாரம் கொண்டுவரும் மற்றொரு திட்டமும் செயற்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பில் விவாதிக்க எதிர்வரும் வாரம் இந்தியக் குழுவினர் இலங்கைக்கு வரவுள்ளனர்.

கடந்தவாரம் வெள்ளிக்கிழமை புதுடில்லி சென்றிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இந்தியத் தரப்பினருடனான நெருக்கமான உறவு குறித்து விவாதித்தார்.

பாக்குநீரிணைப் பகுதியில் இந்தியக் கடலோரப் பொலிஸார் விடுதலைப் புலிகளின் கடல்சார் நடவடிக்கைகளை ஒடுக்க பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலமாக விடுதலைப் புலிகளுக்கான ஆயுதங்கள் மற்றும் மருந்துப்பொருட்கள் விநியோகம் தடுக்கப்படும்.

அதேபோல் இலங்கை இராணுவப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு இந்தியாவின் மராட்டிய மாநிலம் புனேயில் பயிற்சி அளித்தமையும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கிறது என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.sudaroli.com/pages/news/today/12.htm

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் வர்த்தக நோக்கங்களுக்குக் குந்தகம் ஏற்படாவகையில் ஈழவிடுதலைப்பாராட்டத்தைக் கொண்டுசெல்லவேண்டிய தேவை தமிழருக்கு உண்டு. ஆனால் இந்தியா தனது நோக்கங்களுக்காக திரு

கோணமலையில் ஈழத்தமிழரைப் பலிக்கடாவாக்க முயலுமானால் இந்தியாவின் வர்த்தக நிறுவனங்களுக்கு கம் ஓ கோ சிக்காகோ சொல்வதைவிட வேறு வழியில்லாமலும் போகலாம்.

இது சண்டே ரைம்ஸ் பார்வை மட்டுமல்ல. இலங்கை அரசின் எதிர் பார்ப்புமாகும். தமிழர் நோக்கம் பலியாக்கப்படுதல் என்ற விடயம், பலம் என்பதால் நண்பனாக்கிக் கொண்டுவிடும். விடுதலைப்புலிகளின் வெற்றிகளால்தான் இதனைச் சாதிக்க முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.