Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெப். 24-இல் சிறிலங்காவுக்கு ஐ.நா. சிறப்புத் தூதுவர் பயணம்

Featured Replies

சிறிலங்காவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் சிறப்புத் தூதுவர் பெப்ரவரி 24 ஆம் நாள் பயணம் மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

உவர் அங்க போய்த்தான் என்னத்த புடுங்கபோறார்? கோபி அன்னா என்றாலு தனிப்பட்ட முறையில கொஞ்சம் எங்களுக்காக அனுதாபம் மட்டும் கொண்டிருந்தார்.

பாக்கு-மூன் அய்யோ .... மன்னிக்கவும்....... பான்கி-மூனையா என்னத்தை புடுங்கபோறாரோ? ஆனாலும் 1.5 மில்லியன் டொலர் சம்பளமாம் வருசத்துக்கு.... அப்ப எதையாவது சொல்லிக்கொண்டும் செய்துகொண்டும் தானே இருக்கவேண்டும் இல்லாட்டா உவ்வளவு சம்பளத்தையும் ஞாயப்படுத்த வேணுமல்லோஒ?

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா சென்றுள்ள ஐ-நா சிறப்புத் தூதுவர் நிலமைகளை ஆராய்வார்

சிறீலங்காவில் மோதல்கள் வலுவடைந்து, பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதால், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்-கி மூன் தனது சிறப்புத் தூதுவர் ஒருவரை சிறீலங்காவிற்கு அனுப்பியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் அரசியல் விவகாரங்கள் தொடர்பான தூதுவர்களுள் ஒருவரான அங்கேலா கெயின் அம்மையாரே இன்று கொழும்பை சென்றடைந்துள்ளார்.

எதிர்வரும் 24ஆம் திகதியே இவர் சிறீலங்காவிற்கு செல்லுவார் என கடந்த 17ஆம் நாளன்று தகவல்கள் வெளியான போதிலும், இன்று அவர் கொழும்பை சென்றடைந்துள்ளார்.

சிறீலங்கா செல்லும் தூதுவர் கெயின் அங்குள்ள நிலமைகளை ஆராய்ந்து சிறப்பு அறிக்கையொன்றை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்-கி மூனிற்கு சமர்ப்பிக்க இருக்கின்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ஸவை தொலைபேசியில் தொடர்புகொண்ட பான்-கி மூன், தமது தூதுவரான் கெயின் அம்மையார் சிறீலங்கா செல்வது தொடர்பாக அறிவித்திருந்தார்.

சிறீலங்கா சென்றடையும் கெயின், சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, அரச அதிபரின் ஆலோசகர் பசில் ராஜபக்ஸ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரையும் சந்திக்க இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் தமிழர் தரப்பும் அங்கேலா கெயின் அம்மையாரைச் சந்தித்து தமது தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க வேண்டுமென, பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

சிறிலங்காவிற்கு ஒரு வார பயணமாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிச் செயலாளர் நாயகம் அங்கெலா கனே அம்மையார் இன்று புதன்கிழமை காலை தலைநகர் கொழும்பை சென்றடைந்துள்ளார்.

கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தில் தரையிறங்கிய இவரை வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் வரவேற்றனர்.

un_2.jpg

சிறிலங்காவில் தங்கியிருக்கும் காலத்தில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பல்வேறு அமைச்சர்களையும் அரசியல்வாதிகளையும் அங்கெலா கனே அம்மையார் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

வெளியுறவு அமைச்சர் ரோகித போகல்லாகம, வெளியுறவு அமைச்சின் செயலாளர் பாலித்த கோகன்ன ஆகியோரை இன்று மாலை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் தங்கியிருக்கும் காலத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தினதும் பிரதிநிதிகளையும் சந்திப்பதற்கு திட்டமிட்டிருக்கும் அங்கெலா கனே அம்மையார், நாளைய நாள் இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்களையும் அதன்பின்னர் இலங்கையில் உள்ள ஏனைய நாடுகளின் தூதுவர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவிருக்கின்றார்.

அங்கெலா கனே அம்மையாரின் இந்த பயணத்தின் போது அனைத்துக் கட்சிகளின் குழுவையும் இவர் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இலங்கை இனப்பிரச்சினை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கவலை கொண்டிருப்பதாகவும் அதன் விளைவாகவே அங்கெலா கனே அம்மையாரின் சிறிலங்காப் பயணம் அமைந்திருப்பதாகவும் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தூதரகம் தெரிவித்தது.

சிறிலங்காவில் தங்கியிருக்கும் காலத்தில் அங்கெலா கனே அம்மையார் அரசியல் சந்திப்புகளுடன் சிறிலங்காவில் நடைபெற்று வரும் அபிவிருத்திப் பணிகள் மற்றும் மனித உரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்தும் பல்வேறு தரப்பினருடனும் ஆராயவிருக்கின்றார் என்றும் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தூதரகம் தெரிவித்தது.

இதன் ஒரு கட்டமாக சிறிலங்காவில் உள்ள அனைத்துலக தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் அங்கெலா கனே அம்மையார் சந்திக்கவுள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பிற்கு செல்வதற்கும் இவர் விருப்பம் தெரிவித்திருக்கின்றார். தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்குள்ள நிலமைகளை ஆராய்வதும் அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிடுவதும் இந்த பயணத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பெரும்பாலும் எதிர்வரும் சனிக்கிழமை இவர் மட்டக்களப்பிற்கு செல்லக்கூடும் என்று கூறப்படுகின்றது.

சிறிலங்காவிற்கான பயணத்தினை முடித்துக்கொண்டு திரும்பிய பின்னர் இலங்கை நிலவரம் குறித்த அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளிக்கவிருக்கின்றார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நா. பிரதிச் செயலாளர் நாயகம் அங்கெலா கனே அம்மையார் எதிர்வரும் 26 ஆம் நாள் சிறிலங்காவை விட்டு புறப்படுகின்றார்.

-Puthinam-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.