Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முஷாரப் கதி என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஷாரப் கதி என்ன?

Tuesday, 19 February, 2008 01:50 PM

.

இஸ்லாமாபாத், பிப்.19: பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெனாசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் நவாஸ் ஷெரீப் கட்சி அதிக இடங்களை வென்றுள்ளன.

.

எதிர்க்கட்சிகளுக்கு கூட்டாக பெரும்பான்மை பலம் கிடைத்திருப்ப தால் முஷாரப் கதி என்னவாகும் எனும் கேள்வி எழுந்துள்ளது. புதிய பிரதமராக யார் பொறுப்பேற்க கூடும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முஷாரப் ஆதரவு பெற்ற ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு இடையே பாகிஸ்தானில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

வன்முறை அச்சத்தால் பலர் வாக்களிக்க வரவில்லை. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே இன்று காலை வெளியான அதிகாரபூர்வமற்ற முடிவுகளின்படி எதிர்க்கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன. நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக்என் கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய இரண்டும் அதிக இடங்களை வெல்லும் நிலையை பெற்றுள்ளதாக தெரிகிறது.

முஷாரப் ஆதரவு பெற்ற ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கியூ பின்னடைவை சந்தித்துள்ளது. நேற்றிரவு அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி நவாஸ் ஷெரீப் கட்சி 35 இடங்களையும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 30 இடங்களையும் பெற்றிருந்தன.

ஆனால் இன்று காலை அறிவிக்கப் பட்ட முடிவுகளில் பாகிஸ்தான் மக்கள் கட்சி முந்தி உள்ளது. அக்கட்சி 68 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நவாஸ் ஷெரீப் கட்சி 62 இடங்களில் வென்றுள்ளது. எனினும் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

பெனாசிர் படுகொலையை அடுத்து பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு அனுதாப அலை வீசும் என்று பரவலாக கருதப்பட்ட நிலைக்கு மாறாக நவாஸ் ஷெரீப் கட்சி பெனாசிர் கட்சிக்கே நிகரான இடங்களை வென்றுள்ளது.

தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந் துள்ளது. அக்கட்சி 27 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. சுயேட்சை கள் 22 இடங்களை வென்றுள்ளன.

முன்னாள் பிரதமர் சவுத்ரி, சுஜாத் உசேன், முன்னாள் கல்வி அமைச்சர் சுபைதா ஜலால், முன்னாள் பஞ்சாப் முதல்வர் பர்வேஸ் இலாகி உள்ளிட்ட முக்கிய ஆளும் கட்சி வேட்பாளர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு பாதகமாக அமைந்துள்ள நிலையிலும் அதிபர் முஷாரப் தேர்தல் முடிவுகள் தமக்கு திருப்தி அளிப்பதாக கூறியுள்ளார்.

வாக்குறுதி அளித்தபடி நியாயமான முறையில் தேர்தலை நடத்தியிருப்பதாக கூறிய அவர், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அக்கட்சியோடு இணைந்து பணியாற்ற தயார் என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் ரஷித் குரேஷி தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் பிரச்சனையில்லாமல் சுமூகமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும் கூட்டாக பெரும் பான்மை பலம் பெற்றுள்ளன.

முஷாரப்பை ஆதரித்து வந்த எம்.கியூ.எம் கட்சியும், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து புதிய ஆட்சியில் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளது.

இதனால் அதிபர் முஷாரப்பின் கதி என்னவாகும் எனும் கேள்வி எழுந்துள்ளது. அவர் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்பாரா அல்லது எதிர்க்கட்சிகளுக்கு பணிந்து பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறுவாரா போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இதனிடையே புதிய பிரதமராக பொறுப்பேற்க போவது யார்? என்பது பற்றியும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான கணக்குகள் போடப்பட்டு வருகின்றன.

மறைந்த பெனாசிர் புட்டோவின் கணவர் ஜர்தாரி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிட கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

பாகிஸ்தான் அரசியல் சட்டத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவர் பிரதமராக பதவியேற்றால் 6 மாதங்களுக்குள் தேர்தலை சந்திக்க வேண்டும்.

malaisudar.com

அநேகமாக பெனாசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் நவாஸ் ஷெரீப் கட்சி ஆகியன கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முன் வரலாம். ஆனாலும் யார் பிரதமராவது என்பதில் இழுபறி நிலை ஏற்படக்கூடும். அதில் ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டு நவாஸ் ஷெரீப் பிரதமராகலாம். இவர்களின் கட்சிகளுக்கு கிடைத்த பெருண்பான்மையை வைத்து முஷாரப்பை பதவி விலகச் செய்ய இவர்கள் முயற்சிப்பார்கள்.

ஆனால் முஷாரப் பதவி விலகினால் அதன் பின் பல வழக்குகளை அவரும் சந்திக்க வேண்டி வரும். அதனால் அவர் மீண்டும் அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தி ஆட்சியை நீக்கி தற்காலிகமாக தானே ஒரு அரசை அமைக்க முன் வரலாம். அல்லது பதவியிலிருந்து விலகி அமெரிக்காவின் உதவியுடன் அங்கு சென்று அரசியல் அகதியாக வாழ முற்படலாம். எதற்கும் என்னாகும் என்பது சில நாட்களில் தெரிந்தவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.